எங்கிட்ட நிறைய பேர் கேட்டுட்டாங்க., " ஏன்டா நீ இப்படி மொக்க போட்டு எங்க உயிரை வாங்குற ..?" நான் என்ன வேணும்னா அப்படி செய்யுறேன். நான் ஏன் இப்படி மொக்க போடுறேன். நிச்சயமா உங்களுக்கு சொல்லியே ஆகணும். சரி வாங்க என்னோட STDகுள்ள போலாம்.
நான் அப்ப இரண்டாவது படிச்சிட்டிருந்தேன். ஒரு நாள் கனவுல ரொம்ப பயங்கரமான உருவம் ஒண்ணு வந்தது. எனக்கு ரொம்ப பயமா போச்சு.
" யார் நீ " அப்படின்னு கேட்டேன்.
" நான் தான் மொக்கை , இப்ப உன்ன பிடிக்கப் போறேன் " அப்படின்னான்..
உடனே நான் " தயவு செய்து என்னை பிடிச்சிடாத , எனக்குப் பயமா இருக்கு , விட்டுடு " அப்படின்னு சொல்லிட்டே கட்டில்ல நகர்ந்து படுத்தேன். ஆனா கீழே விழுந்துட்டேன். அப்புறம் அப்படியே மயங்கிப்போயிட்டேன்.
அடுத்த நாள் காலைல யாரோ எழுந்தரிசுப் பாக்குறப்போ என்னோட கால்ல பலமா கட்டி வச்சிருந்தாங்க. என்னனு கேட்டேன் .
" நேத்து நீ கட்டில்ல இருந்து கீழ விழுந்துட்ட , அதனால உன்னோட கால் உடைஞ்சு போச்சு" அப்படின்னாங்க. சரி அப்படின்னு விட்டுட்டேன். அப்ப என்னோட கை மேல ஒரு கொசு வந்து உட்கார்ந்தது. அத பார்த்த உடனே எங்க அம்மா கொசு வர்த்தி சுருள் எடுத்து பத்த வச்சா போய்டும் அப்படின்னு சொன்னாங்க.
ஆனா நான் சொன்னேன் " அம்மா ,' கொசுக்களுக்கு அனுமதியில்லை ' அப்படின்னு ஒரு பேப்பர்ல எழுதி தொங்க விட்டா கொசு உள்ள வராதுல " அப்படின்னு சொன்னேன்.
இத கேட்டதுமே எங்க அம்மா அடடா பையன் கீழ விழுந்ததுல பயந்துட்டான் போல அப்படின்னு என்னை கூட்டிட்டுப் போய் தாயத்து கட்டி விட்டாங்க.
வீட்டுக்குள்ள வந்ததுமே நான் சொன்னேன் " அம்மா நான் சொன்னது தப்புத்தான் , பேப்பர்ல எழுதி வச்சாலும் கொசு உள்ள வந்திரும் "அப்படின்னேன்.
இத கேட்ட உடனே எங்க அம்மாவுக்கு சந்தோசம்.
நான் மறுபடியும் சொன்னேன் " படிக்காத கொசுவா இருந்தா உள்ள வந்திடும்ல !" இத கேட்டதும் எங்க அம்மாவுக்கு மறுபடியும் டென்ஷன். ஏன்னா நான் அதுவரைக்கும் அவ்வளவு அறிவாளியா(!?!) பேசினது இல்ல. அப்புறம் அப்படியே அந்த நாள் ஓடிப்போச்சு.
அந்த அன்னிக்கு மறுபடியும் ஒரு கனவு. அதுல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தாங்க . அவுங்க கிட்ட கேட்டேன் " யார்க்கா நீங்க ..? "
" நான்தான் மொக்கை " அப்படின்னாங்க. அத கேட்ட உடனே எனக்கு ஒரே சிரிப்பு .
" கி கி (சிரிப்பு) போங்க்கா. மொக்கை அவன் குண்டா பன்னி மாதிரி பேயாட்டமா இருப்பான் , நீங்க பொய் சொல்லுறீங்க ."
அதுக்கு அவுங்க சொன்னாங்க " இல்லப்பா நான் ஒருத்தர பிடிக்கர வரைக்கும் அப்படித்தான் தெரிவேன் , ஆனா பிடிச்சிட்டா இப்படி அழகா தெரிவேன் " அப்படின்னாங்க. நான் சொன்னேன் " ஆனா நீங்கதான் என்னை பிடிக்கவே இல்லையே ..? "
" நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க.
நாட்கள் நகர்ந்தன.நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டிருந்தேன். என் மொக்கை போடும் திறமையும் கூடவே வளர்ந்தது.அடிக்கடி நான் மொக்கை போடுவது அதனால் நான் வாங்கிக்கட்டிகொள்வதும் , கனவில் அவன் அல்லது அவள் ( மொக்கை ) வருவதும் வழக்கமானது. நான் 5 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்ப எங்க வாத்தியார் மழை எப்படிப் பெய்யுது அப்படின்னு பாடம் நடத்திட்டிருந்தார். ஆனா நானும் இன்னொரு பையனும் பேசிட்டிருந்ததப் பார்த்த அவர் " டேய் என்னடா பேசுறீங்க " அப்படின்னார்.
" சார் மழை சாமி கும்பிடறதால தான் பெய்யுது அப்படின்னு சொல்றான் சார் " அப்படின்னு என்னோட பிரென்ட் போட்டுக்கொடுத்திட்டான்.
" எப்படிடா சாமி கும்பிட்டா மழை வரும் " அப்படின்னு என்னை மிரட்டினார்.
"சார் சாமி வானத்துக்கு மேல ட்ரம்ல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க.நாம சாமி கும்பிடும் போது அவுங்க ட்ரம்ல இருக்குற தண்ணிய ஊத்துவாங்க. அதுதான் மழை. அப்புறம் தண்ணி இருக்குற ட்ரம் தீர்ந்ததும் அதைய உருட்டி விட்டுருவாங்க. அப்படி உருட்டி விடுற ட்ரம் மோதுறதுதான் இடி ,அது இரும்பு ட்ரம்மா இருந்தா அது மோதும் போது தீப்பொறி வரும்ல அதுதான் மின்னல் " அப்படின்னு நான் முடிச்சதும் என் முதுகுல இடி விழுந்தது.
வேற யாரு வாத்தியார்தான் " நான் இங்க காட்டு கத்து காத்திட்டிருக்கேன் , நீ இங்க கதை சொல்லிட்டிருக்கியா ..? " அப்படினார்.ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.
அப்புறம் 8 வகுப்பு படிக்கும்போது .... ( போதுமா ..? ) சரி விடுங்க. இன்னிக்கு இது போதும். ஆனா நான் என்னோட கதைய தொடர்ந்து சொல்லுவேன். அப்புறமா இந்த பதிவிற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு அது என்னனா ,
நம்ம ஜீவன்பென்னி அண்ணா இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தார். " மொக்கையப் போட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே பாவம் அத விட்டுடுங்க ......புண்ணியமாப்போகும் " . இந்த கம்மெண்ட படிச்சதுமே எனக்கு பல்பு எரிஞ்சது. மொக்கை அப்படின்னு தனியா ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்.? அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்.
நான் அப்ப இரண்டாவது படிச்சிட்டிருந்தேன். ஒரு நாள் கனவுல ரொம்ப பயங்கரமான உருவம் ஒண்ணு வந்தது. எனக்கு ரொம்ப பயமா போச்சு.
" யார் நீ " அப்படின்னு கேட்டேன்.
" நான் தான் மொக்கை , இப்ப உன்ன பிடிக்கப் போறேன் " அப்படின்னான்..
உடனே நான் " தயவு செய்து என்னை பிடிச்சிடாத , எனக்குப் பயமா இருக்கு , விட்டுடு " அப்படின்னு சொல்லிட்டே கட்டில்ல நகர்ந்து படுத்தேன். ஆனா கீழே விழுந்துட்டேன். அப்புறம் அப்படியே மயங்கிப்போயிட்டேன்.
அடுத்த நாள் காலைல யாரோ எழுந்தரிசுப் பாக்குறப்போ என்னோட கால்ல பலமா கட்டி வச்சிருந்தாங்க. என்னனு கேட்டேன் .
" நேத்து நீ கட்டில்ல இருந்து கீழ விழுந்துட்ட , அதனால உன்னோட கால் உடைஞ்சு போச்சு" அப்படின்னாங்க. சரி அப்படின்னு விட்டுட்டேன். அப்ப என்னோட கை மேல ஒரு கொசு வந்து உட்கார்ந்தது. அத பார்த்த உடனே எங்க அம்மா கொசு வர்த்தி சுருள் எடுத்து பத்த வச்சா போய்டும் அப்படின்னு சொன்னாங்க.
ஆனா நான் சொன்னேன் " அம்மா ,' கொசுக்களுக்கு அனுமதியில்லை ' அப்படின்னு ஒரு பேப்பர்ல எழுதி தொங்க விட்டா கொசு உள்ள வராதுல " அப்படின்னு சொன்னேன்.
இத கேட்டதுமே எங்க அம்மா அடடா பையன் கீழ விழுந்ததுல பயந்துட்டான் போல அப்படின்னு என்னை கூட்டிட்டுப் போய் தாயத்து கட்டி விட்டாங்க.
வீட்டுக்குள்ள வந்ததுமே நான் சொன்னேன் " அம்மா நான் சொன்னது தப்புத்தான் , பேப்பர்ல எழுதி வச்சாலும் கொசு உள்ள வந்திரும் "அப்படின்னேன்.
இத கேட்ட உடனே எங்க அம்மாவுக்கு சந்தோசம்.
நான் மறுபடியும் சொன்னேன் " படிக்காத கொசுவா இருந்தா உள்ள வந்திடும்ல !" இத கேட்டதும் எங்க அம்மாவுக்கு மறுபடியும் டென்ஷன். ஏன்னா நான் அதுவரைக்கும் அவ்வளவு அறிவாளியா(!?!) பேசினது இல்ல. அப்புறம் அப்படியே அந்த நாள் ஓடிப்போச்சு.
அந்த அன்னிக்கு மறுபடியும் ஒரு கனவு. அதுல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தாங்க . அவுங்க கிட்ட கேட்டேன் " யார்க்கா நீங்க ..? "
" நான்தான் மொக்கை " அப்படின்னாங்க. அத கேட்ட உடனே எனக்கு ஒரே சிரிப்பு .
" கி கி (சிரிப்பு) போங்க்கா. மொக்கை அவன் குண்டா பன்னி மாதிரி பேயாட்டமா இருப்பான் , நீங்க பொய் சொல்லுறீங்க ."
அதுக்கு அவுங்க சொன்னாங்க " இல்லப்பா நான் ஒருத்தர பிடிக்கர வரைக்கும் அப்படித்தான் தெரிவேன் , ஆனா பிடிச்சிட்டா இப்படி அழகா தெரிவேன் " அப்படின்னாங்க. நான் சொன்னேன் " ஆனா நீங்கதான் என்னை பிடிக்கவே இல்லையே ..? "
" நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க.
நாட்கள் நகர்ந்தன.நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டிருந்தேன். என் மொக்கை போடும் திறமையும் கூடவே வளர்ந்தது.அடிக்கடி நான் மொக்கை போடுவது அதனால் நான் வாங்கிக்கட்டிகொள்வதும் , கனவில் அவன் அல்லது அவள் ( மொக்கை ) வருவதும் வழக்கமானது. நான் 5 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்ப எங்க வாத்தியார் மழை எப்படிப் பெய்யுது அப்படின்னு பாடம் நடத்திட்டிருந்தார். ஆனா நானும் இன்னொரு பையனும் பேசிட்டிருந்ததப் பார்த்த அவர் " டேய் என்னடா பேசுறீங்க " அப்படின்னார்.
" சார் மழை சாமி கும்பிடறதால தான் பெய்யுது அப்படின்னு சொல்றான் சார் " அப்படின்னு என்னோட பிரென்ட் போட்டுக்கொடுத்திட்டான்.
" எப்படிடா சாமி கும்பிட்டா மழை வரும் " அப்படின்னு என்னை மிரட்டினார்.
"சார் சாமி வானத்துக்கு மேல ட்ரம்ல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க.நாம சாமி கும்பிடும் போது அவுங்க ட்ரம்ல இருக்குற தண்ணிய ஊத்துவாங்க. அதுதான் மழை. அப்புறம் தண்ணி இருக்குற ட்ரம் தீர்ந்ததும் அதைய உருட்டி விட்டுருவாங்க. அப்படி உருட்டி விடுற ட்ரம் மோதுறதுதான் இடி ,அது இரும்பு ட்ரம்மா இருந்தா அது மோதும் போது தீப்பொறி வரும்ல அதுதான் மின்னல் " அப்படின்னு நான் முடிச்சதும் என் முதுகுல இடி விழுந்தது.
வேற யாரு வாத்தியார்தான் " நான் இங்க காட்டு கத்து காத்திட்டிருக்கேன் , நீ இங்க கதை சொல்லிட்டிருக்கியா ..? " அப்படினார்.ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.
அப்புறம் 8 வகுப்பு படிக்கும்போது .... ( போதுமா ..? ) சரி விடுங்க. இன்னிக்கு இது போதும். ஆனா நான் என்னோட கதைய தொடர்ந்து சொல்லுவேன். அப்புறமா இந்த பதிவிற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு அது என்னனா ,
நம்ம ஜீவன்பென்னி அண்ணா இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தார். " மொக்கையப் போட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே பாவம் அத விட்டுடுங்க ......புண்ணியமாப்போகும் " . இந்த கம்மெண்ட படிச்சதுமே எனக்கு பல்பு எரிஞ்சது. மொக்கை அப்படின்னு தனியா ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்.? அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்.