tag:blogger.com,1999:blog-82624038210570551602024-03-14T02:52:42.082+05:30கோமாளி.!செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-12629418792566539502020-07-23T16:03:00.005+05:302020-07-23T16:08:44.818+05:30தொடர்பற்றவை<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; color: #050505; font-family: "segoe ui historic", "segoe ui", helvetica, arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">பேஸ்புக்கில், டிவிட்டரில் எழுதி எல்லோரும் இங்கிதம் இல்லாமல் சிரித்து வைத்த பதிவுகளை அமேசான் நிறுவனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது பிறந்தநாளில் கிண்டில் நூலாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: white; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="color: #050505; font-family: inherit;">அவ்வப்போது நகைச்சுவை என்று நினைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு.</div><div dir="auto" style="color: #050505; font-family: inherit;"><br /></div><div dir="auto" style="color: #050505; font-family: inherit;">தொடர்பற்றவை மின்னூலிற்கான இணைப்பு.</div><div dir="auto" style="color: #050505; font-family: inherit;"><br /></div><h2 style="text-align: left;"><a href="https://read.amazon.in/kp/kshare?asin=B08BYXB78W&id=xz776ixsxjc37ff5ndra7cwowi&ref_=r_sa_glf_b_0_hdrw_ss_CAu4AAA&fbclid=IwAR263W9DIPVRQZ36C3-jdEbqP_KECMZ9meYEj74axL5ZqR1C_adL0HdPGIM" target="_blank"><b><i><font color="#38761d" face="inherit">தொடர்பற்றவை</font></i></b></a></h2><div dir="auto" style="color: #050505;"><font face="inherit"><br /></font></div><div dir="auto" style="color: #050505; font-family: inherit;"><br /></div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-43431857708484058062016-03-01T21:24:00.000+05:302016-03-01T21:24:15.190+05:30shortfundly.com<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்கவோ செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. தன் கதையைக் கேட்கும் அந்த இன்னொரு மனிதனையோ, மனிதக் கூட்டத்தையோ எங்கே போய்த் தேடுவது? இப்படி நிறைய ஃபேக்டுகளை எழுதிக் கொண்டே போய் கடைசியில் நீங்களாகவே கண்ணை உருட்டி முறைத்து என்னதான் சொல்ல வர்ற என்று கேட்பதற்கும் முன்பாக நான் சொல்லவருகின்ற மேட்டர் குறும்படங்கள் குறித்தானது. யார்கிட்டயாச்சும் இத சொல்லியே ஆகனும் என்று ஒரு கதை உருவாகிவிட்ட பின்பு அதனை ஒரு குறும்படமாக உருவாக்கி எல்லோருக்கும் தெரிந்த யூ-ட்யூபில் போட்டுவைக்கலாம். ஆனால், எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள்? எங்கிருந்து காசு கொடுத்துப் பார்வையாளர்களைக் கூட்டிவந்து வித்தை காட்டுவது? இப்படியான குழப்பங்களுக்கான பதில்தான் <a href="http://shortfundly.com/">Shortfundly.com</a>!</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<span style="background-color: white; color: #222222;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குறும்படங்களுக்கான ஒரு கச்சிதமான மேடையாக shortfundly தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பொதுவாக சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் எந்தவொரு குறிப்பிட்ட படைப்பும் ( அது எழுத்து வடிவமோ, வீடியோ வடிவமோ ) எத்தனை பேரைச் சென்றடைகிறது என்பது அதனைப் பகிரும் நபரின் பிரபலத்தைப் பொறுத்த விசயம். புதிதாக சோசியல் மீடியாக்களில் நுழைந்திருக்கும் எவருக்கும் உடனேயே ஆயிரம் ஃபாலோயர்களோ, ஃபேஸ்புக்கில் நூறு லைக்குகளோ கிடைத்துவிடாது. அதற்கெல்லாம் நிறைய மொய் வைக்க வேண்டும். நீங்கள் என்னதான் அட்டகாசமாக எழுதினாலும் அதனைப் படித்து நன்றாக இருப்பதாக நாலு பேரிடம் சொல்லும் அளவிற்காவது சில ஃபாலோயர்கள் வேண்டும்தானே? அப்படியான ஒரு ஃபாலோயருமே இல்லாவிட்டால் நீங்கள் எத்தனைதான் செலவு செய்து, ஹாலிவுட்டிலிருந்து டெக்னீசியன்களைக் கூட்டி வந்து, வெறித்தனமாக ஒரு குறும்படத்தை எடுத்திருந்தாலும் யார் பார்ப்பார்கள்? எப்படி அந்தப் படத்தினை நாலு பேர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது?</span></span><br />
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஃபேஸ்புக்கில் பர்சனலாகச் சொல்லலாம். நீங்கள் அப்படிப் பர்சனலாகச் சொல்லும் நபர் அதற்குப் பிறகு உங்களை ப்ளாக் செய்துவிடுவார். வாட்சப்பில் வந்து பாருங்கள் என்று கூப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், நம் காண்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் எத்தனை MB டேட்டா தீரும் என்று கணக்கிட்டுச் சொல்வதற்காக CA முடித்த கணக்காயர்களைப் பக்கத்திலேயே வைத்துக் கணக்கிட்டு ஒவ்வொரு ஸ்மைலியையும் தலையை வெட்டி, காலை வெட்டி அனுப்பிக் கொண்டிருக்கும் சிக்கனச் சிகரங்கள். ஆகவே, அவர்கள் வந்து அந்தப் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்வதற்குள்ளாக நமக்கு இந்த சிஸ்டமே சரியில்லை மச்சி என்ற எண்ணம் மனத்தில் வேறூன்றியிருக்கும். </span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு படைப்பாளன் தனது படைப்பினை நாலு பேரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இத்தனை இடையூறுகளா என்று வெகுண்டெழுந்து <a href="http://shortfundly.com/" style="color: #1155cc;" target="_blank">shortfundly.com</a> தளத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். நாலு பேர் என்ன நாலு பேர், நாங்க நாலாயிரம் பேர் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறோம் பாக்குறியா, பாக்குறியா என்று சிங்கம் சூர்யாவைப் போல கர்ஜித்துக் கொண்டே shortfundly தளத்தினைக் குறும்படங்களுக்கென்றே பிரத்யேகமாக அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள்.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கடந்த 2014, அக்டோபர் மாதத்தில் துவக்கப்பட்ட இந்தத் தளத்தில் இந்திய மொழிகள் பலவற்றிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட 25,000 குறும்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. எத்தனை இயக்குனர்கள், நடிகர்கள், டெக்னீசியன்கள் இருக்கிறார்கள் பாருங்கள். எல்லோருக்கும் சரியான வாய்ப்புக்கள் கிடைத்தால் மொத்த ஆஸ்கார் அவார்டையும் Fedex கொரியரில் போட்டு, இந்தியாவிற்கு எடுத்துவந்துவிடலாம். எழுநூறுக்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளார்கள். ஒருநாளைக்குச் சராசரியாக பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் இந்தத் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">Youtube என்று வீடியோக்களுக்கென்றே தனித்தொரு தளம் இருக்கும்போது எப்படி இந்தத் தளத்தின் வழியாக அதிகப் பார்வையாளர்களைப் பெற முடியும் என்று தோன்றலாம். யூ-டியூப் குறும்படங்களுக்கு மட்டுமானதில்லை. தவிரவும், யூ-டியூப் அதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு வீடியோக்களையும் பர்சனலாகப் ப்ரமோட் செய்வதில்லை. யூ-டியூபைப் பொறுத்தவரையிலும் கடலுக்குள் வீசப்பட்ட ஒரு துளி மழை நீராக உங்களின் குறும்படங்கள் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆனால், shortfundly தளத்தில், அதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு வீடியோவையும் தனித்தனியாக சோஷியல் மீடியாக்களில் ப்ரமோட் செய்கிறார்கள். பதிவேற்றப்பட்டு ஒரே நாளில் குறைந்தபட்சம் நூறு நபர்களாவது உங்களது குறும்படத்தைப் பார்வையிடுவார்கள் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இந்தத் தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறும்படங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் குவித்து வைப்பதே. யாருமே எனது குறும்படங்களைப் பார்க்காவிட்டாலும் சரி, நான் குறும்பட விழாக்களுக்கு அனுப்பி, அவார்டு வின்னிங் குறும்படம் என்று யூ-ட்யூபில் போட்டு, ஆயிரம் லைக்குகளை அள்ளிவிடுவதென்று முயற்சித்துக் கொண்டிருப்பேருக்கும் இவர்களிடம் ஒரு சீப்பு இருக்கிறது. அதாவது, எப்பொழுது, எங்கே குறும்படங்களுக்கான போட்டிகள் நடக்கின்றன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் இவர்கள் தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், shortfundly தளத்தில் பதிவு செய்து கொண்ட குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்பட விழாக்கள் குறித்துத் தனி மெயிலும் அனுப்பப்படுகிறது. அதனால் உங்களது மூளையின் RAM மெமரியைக் கழட்டி வைத்துவிட்டு, 30 நாட்களில் ஆஸ்கார் வாங்குவது எப்படி என்ற புத்தகத்தைத் திருப்தியாகப் படிக்கலாம்.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இவையெல்லாவற்றையும் விட காசு பணம் துட்டு விசயத்திலும் கொஞ்சம் உதவ முடியும் என்கிறார்கள். crowd funding மூலமாக உங்களின் குறும்படத்தைப் பெரும்படமாக உருவாக்கவோ, அல்லது குறும்படங்களுக்கான இயக்குனர்களை, தயாரிப்பாளர்களைப் பெறவோ நாங்கள் ஒரு பாலமாக இருப்போம் என்றும் நம்பிக்கை தருகிறார்கள். குறும்படங்களில் வேலை தேடுவோரும் கூட இங்கே தங்களுக்கான வேலைகளைத் தேடிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆக, உங்களிடம் இருக்கும் கதையைக் குறும்படமாக எடுத்துவிட்டீர்களானால் போதும். அடுத்தடுத்த காரியங்களைக் கனகச்சிதமாகச் செய்ய <a href="https://www.shortfundly.com/">shortfundly.com </a>உள்ளது!</span></div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-5435712623698614772016-02-12T20:02:00.000+05:302016-02-12T20:02:09.403+05:30சிமோனிலா கிரஸ்த்ரா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். பெயரிடப்படாத சிறுகதை என்கிற கதை மட்டும் சிறுகதைத் தொகுப்பிற்காகப் புதிதாக எழுதியிருப்பார் போலும். பார்வதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இரண்டாவது படைப்பான இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.<br />
<br />
மாதவனின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் மொழியைக் கையாளும் விதம். மிக இயல்பாகவும், எளிமையாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருக்கும் அவரது மொழிநடை அடிக்கடி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.<br />
<br />
சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றிரண்டு கதைகளை நான் ஏற்கெனவே வாசித்திருந்தாலும் மொத்தமுள்ள 15 கதைகளில் 13 கதைகள் எனக்குப் புதியவை. ஏற்கெனவே வாசித்த இரண்டு கதைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். அதே சுவாரஸ்யம். முடிவு தெரிந்தும் திரும்பவும் பார்க்கும் படத்தினைப் போல அதே வசீகரத்துடன் இழுத்துச் செல்லும் அந்த மொழிநடைக்காகவே மறுபடியும் படித்தேன்.<br />
<br />
சிறுகதைகள் பல்வேறு தளங்களில், வகைமைகளில் எழுதப்படுகின்றன. முன்னுரையில் வா.மு.கோமு குறிப்பிட்டிருந்ததைப் போலவே கிட்டத்தட்ட பதினைந்து கதைகளுமே வெவ்வேறு தளங்களை மையமாகக் கொண்டவையாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு வகையிலுமே நிச்சயம் பாராட்டத்தக்க கதையாக அந்தக் கதைகள் அமைந்திருப்பதாகவே தோன்றியது.<br />
<br />
ஒரு பழங்கதை, கருக்கல், பெயரிடப்படாத சிறுகதை, சிமோனிலா கிரஸ்த்ரா, ஜெமியின் காதலன் ஆகிய கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். நிச்சயம் சலிப்பினைத் தராதவையாக இருக்கும். என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுகதைகளில் ஒரு பழங்கதையும், பெயரிடப்படாத கதையும் எப்பொழுதும் நினைவிலிருக்கும்.<br />
<br />
கருக்கல் கதையில் வரும் எளிய மனிதர்களும், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கான பிரச்சினைகளும், சட்டென வெளியேற முடியாத இயல் வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியும், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் கையறு மனநிலையும், அதில் மாட்டிக் கொண்டாலும் அன்பானவர்களுக்காக எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்கிற செல்வியின் மன நிலையும் அன்பாலான உலகத்தைக் காட்டுகிறது.<br />
<br />
சம்சாரி மற்றும் கலந்துரையாடல் ஆகிய கதைகள் கதைத் தொகுப்பிற்கான திருஷ்டிக் கழிப்பிற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். மீதமுள்ள 13 கதைகளும் நிச்சயம் ஒரு அட்டகாசமான வாசிப்பிற்கானவை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கதை சொல்லல் முறையில் புதுப்புது வடிவங்களை முயற்சித்து, அதில் வாசிப்பாளர்களை ’அட’ போட வைக்கும் மாதவனின் எழுத்து பாராட்டப்பட வேண்டியது.<br />
<br />
ஏற்கெனவே படிக்காதவர்கள் இந்த (<a href="https://docs.google.com/forms/d/1KbXWjWyvjgA9Ksb54pbZTIAgSVkou_fASmrDatkUq6M/viewform?c=0&w=1">சிமோனிலா கிரஸ்த்ரா</a> ) இணைப்பில் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். ஏற்கெனவே படித்தவர்கள் மறுபடியும் வாங்கிப் படிக்கலாம். அல்லது உங்களது நண்பர்களுக்குப் பரிசாக அனுப்பலாம். ஒரு நல்ல எழுத்தாளரை உங்களின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி உங்களுக்கும், ஒரு நல்ல எழுத்தைப் படித்த மகிழ்ச்சி உங்கள் நண்பர்களுக்கும் ஏற்படும் என்பதை மிகத் தைரியமாகவே, மிகு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.<br />
<br />
<br /></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-77981696131645913402016-01-30T21:33:00.000+05:302016-01-30T21:35:11.527+05:30டிஃபன் பாக்ஸ்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: 13.6px;">சரியாகப் பதினொரு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவமனை அதுதானென்று மகள் சொன்னாள். எங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு ப்ராஜக்டினை முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை இரண்டே வாரங்களில் முடிவடைந்துவிடும் போலத்தான் இருக்கிறது.</span><br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" மொத்தமா எவ்ளோ பேசிருக்க?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
"எட்டு லட்சம்ப்பா"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
"அட்வான்ஸ் கொடுத்துட்டாங்களா?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
"போனவாரத்துலயே 2 லட்சம் கொடுத்துட்டாங்க. ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா மீதிப் பணத்தைத் தந்துடறதா சொல்லிருக்காங்க"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
இரண்டு வாரங்களில் எட்டு லட்சத்திற்கு அப்படியென்ன ப்ராஜெக்ட், அதுவும் மனநல மருத்துவமனையில்? நானும் என் மகளும் பெரிய பெரிய மருத்துவ உபகரணங்களை விற்பதிலோ அல்லது வேறெதேனும் மருந்துக் கம்பனிகளிலோ வேலை பார்க்கவில்லை. இத்தனைக்கும் என் மகளும் நானும் சேர்ந்து செய்யும் முதல் ப்ராஜெக்ட் இதுதான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக எனக்கு இந்த டிஃபன் பாக்ஸ் கிடைத்து, அதைக் கொண்டு இப்படியும் சம்பாதிக்கலாமென்று தெரியவந்ததிலிருந்து இப்போது வரைக்கும் நான் ஒருவன் மட்டுமே இந்த பிசினஸைச் செய்துவருகிறேன். இதை பிசினஸ் என்று கூறமுடியாதுதான். சேவையென்று கூறலாம். யாரோ ஒருவருக்குப் பயன்பட்டாலும் அது சேவைதானே?</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
அப்படியென்ன சேவை இது? என்னிடம் ஒரு டிபஃன் பாக்ஸ் இருக்கிறது. இதை ஒரு மூன்று அமாவாசைகள் மூடி வைத்திருந்துவிட்டு, மூன்றாவது அமாவாசை அன்று நண்பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாகத் திறந்தோமானால் யார் அதைத் திறக்கிறார்களோ அவர்கள் முழுப் பைத்தியமாகிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம். உண்மைதான். இது வரையிலும் எத்தனையோ நபர்களை இப்படிப் பைத்தியமாக மாற்றியிருக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களாக நானும் என் குடும்பமும் செல்வச் செழிப்பாக வாழ்ந்து வருவதற்கு இந்த டிபஃன் பாக்சின் அதிசயச் சக்திதான் காரணம். டிபஃன் பாக்சைத் திறக்கிறவர் பைத்தியமாகிவிடுவார் என்பதையே நம்பமுடியாதுதான். ஒரு பேச்சுக்கு அதனை நம்பினாலும், இப்படிக் கெட்ட சக்தியைக் கொண்ட ஒரு அதிசயப் பொருளைக் கொண்டு எப்படிச் சம்பாதித்து வாழ முடியும்? உண்மையில், நல்ல பலன்களைத் தரும் அதிசயப் பொருளாக இது இருந்திருந்தால் கூட இத்தனை சம்பாதித்திருப்போமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. நம் ஊரில் அடுத்தவனின் வளர்ச்சியில் சிரிப்பவர்களைக் காட்டிலும், வீழ்ச்சியில் சிரிப்பவர்கள்தானே அதிகம்? நம்மூரில் மட்டுமில்லை. உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுமே இப்படித்தான். பொறாமையும் மனித மனத்தில் விளைகிற விசயம்தானே?</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
நாங்கள் போய்க்கொண்டிருக்கும் இந்தப் ப்ராஜெக்டும் கூடப் பொறாமையால் உருவானதுதான். இந்த நகரத்தில் இருக்கும் மிக முக்கியமான, மிகப் பிரபலமான மனநல மருத்துவரான இவரைப் பைத்தியமாக்கிவிடுவதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் எட்டு லட்சம் ரூபாய் பிசினஸ் பேசியிருக்கிறோம். எங்களிடம் இருக்கும் இந்த டிபஃன் பாக்ஸைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. நாங்கள் இப்படியொரு சேவையைச் செய்கிறோம் என்று மட்டும் ஒரு சிலருக்குத் தெரியும். எங்களிடம் சொல்லிவிட்டால், அவர்கள் காட்டும் அந்தக் குறிப்பிட்ட நபரை மூன்று மாதங்களுக்குள்ளாக எப்படியும் பைத்தியமாக்கிவிடுவோம் என்பது மட்டுமே எங்களின் க்ளையண்டுகளுக்குத் தெரியும். எப்படிப் பைத்தியமாக்குகிறோம் என்பதோ, எதனால் அவர்களின் எதிரிகள் பைத்தியமாகிறார்கள் என்பதோ என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எங்களிடம் ஏதோ அதிசயச் சக்தி இருக்கிறது என்று மட்டும் பேசிக்கொள்கிறார்கள். பில்லி, சூனியம், பேய், பிசாசு வேலைகளாக இருக்குமென்றும் கூடச் சிலர் சந்தேகிப்பதுண்டு. ஆனால், டிபஃன் பாக்ஸைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
ஒரு ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாங்கள் யாரைப் பைத்தியமாக்க ஒப்புக் கொண்டோமோ அவர்களுடன் எப்படியாவது நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவோம். இந்த டிபஃன் பாக்ஸின் அதிசயச் சக்தி வேலை செய்ய வேண்டுமானால் மூன்று அமாவாசைகள் வரையிலும் காத்திருக்க வேண்டும். அதற்காகத்தான் ஒரு ப்ராஜெக்டை ஒப்புக் கொண்டதிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு கேட்பது. அந்த மூன்று மாத காலத்திற்குள் எங்களது டார்கெட்டுடன் நாங்கள் நெருக்கமாகிவிடுவோம். அந்த மூன்றாவது அமாவாசை தினத்தன்று பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாக எங்களது டார்கெட்டை எப்படியாவது அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்குமாறு செய்துவிடுவோம். அப்படித் திறந்துவிட்டால் போதும். எங்களின் ப்ராஜெக்ட் முடிவடைந்துவிடும். அந்த டிபஃன் பாக்ஸைத் திறந்த அந்த நபர் அன்றிலிருந்து முழுப் பைத்தியம்தான். கடந்த ஏழு வருடங்களாக டிபஃன் பாக்ஸைத் திறந்துவிட்ட எல்லா மனிதர்களுமே இப்போது வரையிலுமே பைத்தியமாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சில தடவைகள் மட்டும் எங்களின் திட்டம் பலிக்காமல் போயிருக்கிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட நாளில் நாங்கள் எங்களது டார்கெட்டைச் சந்திக்க முடியாமல் போனதாலோ அல்லது வேறெதேனும் காரணங்களாலோ அப்படி நேர்ந்ததுண்டு. அப்படி ஆகிவிட்ட சமயங்களில் அடுத்த மூன்றாவது மாதம் வரையிலும் காத்திருந்து சில ப்ராஜெக்ட்டுகளை முடித்திருக்கிறோம். அதனால்தான் எங்களின் சேவைக் கட்டணம் இப்பொழுதெல்லாம் லட்சங்களில் போய்க் கொண்டிருக்கிறது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் ப்ராஜெக்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக எங்களுக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஏனென்றால், அந்த டிபஃன் பாக்ஸிற்குச் சக்தி கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறபடியால் எப்படியும் ஏதேனுமொரு ப்ராஜெக்ட் கிடைக்குமென்று காத்திருந்தோம். அப்படியாகக் கடந்த வாரத்தில் கிடைத்ததுதான் இந்த மனநல மருத்துவரது ப்ராஜெக்ட். இந்த நகரத்தில் இருக்கும் மற்றொரு மனநல மருத்துவர்தான் எங்களது க்ளையண்ட். எங்களது நகரத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய மனநல மருத்துவர் அவர். அவர் சொல்லித்தான் இவரைப் பைத்தியமாக்குவதற்காக, முழு அமாவாசை நாளான இன்று, டிபஃன் பாக்ஸுடன் கிளம்பிவிட்டோம்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
************</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
கதை சொல்லியின் மகளான நான் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பாக எங்களது டார்கெட் என்று கதை சொன்னவர் கூறிய, இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவரைச் சந்தித்தேன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" எனக்கு எதும் பிரச்சினை இல்ல டாக்டர். எங்க அப்பாவுக்குத்தான்"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" என்ன பிரச்சினை? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அது வந்து... அவருக்கு என்னமோ ஆகிடுச்சு டாக்டர். திடீர் திடீர்னு என்னென்னமோ ஒளர்றாரு.."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" என்ன ஒளர்றாரு? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அடிக்கடி ஏதோ டிபஃன் பாக்ஸைப் பத்திச் சொல்றாரு.."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" டிபஃன் பாக்ஸைப் பத்தியா? உங்க வீட்டுல டிபஃன் பாக்ஸ் எதுவும் காணாம போயிடுச்சா? தெளிவா, பொறுமையா சொல்லுங்க."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அதில்ல டாக்டர். அவர்கிட்ட எதோ டிபஃன் பாக்ஸ் இருக்கிறதாகவும், அதைத் திறக்கிறவங்க பைத்தியம் ஆகிடுவாங்கன்னும் சொல்லுறாரு டாக்டர். அடிக்கடி வீட்டுல இருக்கிற ஒரு டிபஃன் பாக்ஸை எடுத்து வந்து முன்னாடி நீட்டி, இதத் திறந்திடாத, திறந்துட்டா பைத்தியம் பிடிச்சுக்கும்னு சொல்றார். குறிப்பா அமாவாசைல அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்கறவங்க பைத்தியம் ஆகிடறதாகவும், அத வச்சு நாம மத்தவங்க கிட்ட அவங்களோட எதிரிகளைப் பைத்தியம் ஆக்குறதுக்கு பணம் வாங்கிக்கலாம்னு சொல்றார். எனக்கு ஒரே பயமா இருக்கு. பைத்தியம் ஆகிட்டு வர்றாரோன்னு டென்சனா இருக்கு டாக்டர்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" ரொம்பவே கவனமா பாத்துக்க வேண்டிய கன்டிசன்தான். எத்தன நாளா இப்படி நடந்துக்கிறாரு?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" இப்ப ஒரு ரண்டு மாசமாத்தான் . அந்த டிபஃன் பாக்ஸை வச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சதாகவும், அதன் மூலமா நாங்க வசதியா வாழ்றதாகவும் சொல்றார். அந்த டிபஃன் பாக்ஸோட அந்த கெட்ட சக்தி மூலமா ஏழெட்டு வருசமா இப்படி நிறையப் பேரைப் பைத்தியமாக்கினதாகவும், அத ஒரு பிசினசாகவே செஞ்சுட்டு வர்றதாகவும் அடிக்கடி ஒளர்றாரு டாக்டர். அவரு பைத்தியமாகிட்டாரா டாக்டர்?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டிய சிச்சுவேசன்தான். இப்படியே விட்றாதீங்க. எங்க இருக்கார் அவர்? ஏன் கூட்டிட்டு வரலையா? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" வீட்லதான் டாக்டர் இருக்காரு. இப்படி சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங்குக்குப் போகனும்னு கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டார் டாக்டர்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" வேற எதாச்சும் சொல்லிக் கூட்டிட்டு வரப் பாருங்க. பேசண்ட்ட நேர்ல பார்த்து விசாரிச்சாத்தான் என்னால எதுவும் சொல்லமுடியும். நேர நேரத்துக்கு சாப்பாட்டுக்கிறாரா? சரியா தூங்குறாரா?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" சாப்பாடு, தூக்கமெல்லாம் நார்மலாத்தான் இருக்கு டாக்டர். ஆனா, ஏன் இப்படிப் பண்ணுறார்னுதான் தெரியல. ரொம்ப பயமா இருக்கு டாக்டர்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்குக் காலைல அவரைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நாலஞ்சு நாள் இங்க இன்பேசண்ட்டா வச்சு கவனிச்சுக்கிட்டா சரி பண்ணிடலாம். இதவிட மோசமான கேசெல்லாம் பாத்திருக்கோம்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" நாளைக்குக் கூட்டிட்டு வர்றது சிரமம் டாக்டர். என்னதான் க்ளினிக் வாசல் வரைக்கும் வந்தாலும், அதுக்கு அப்புறம் தெரிஞ்சுட்டு, எங்கிட்ட சண்டைப்போட்டுட்டு திரும்பிப் போய்டுவார் . இதுக்கு முன்னாடி ஒரு தடவ வேறொரு சைக்யாட்ரிஸ்ட் கிட்டப் போகும்போது அப்படித்தான் நடந்துக்கிட்டாரு."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அவர அப்படியேவும் விட முடியாதே? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" மயக்க மாத்திரை, தூக்க மாத்திரை எதுவும் கொடுத்து தூக்கிட்டு வந்துடலாமா டாக்டர்? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அந்த லெவலுக்கெல்லாம் போக வேண்டாம். ஒன்னு பண்ணுங்க. அவரு வழிலையே போய் கூட்டிட்டு வாங்க. அவர் எதோ டிபஃன் பாக்ஸ்ஸ வச்சு பைத்தியமாக்கி சம்பாதிக்கறதா ஒளர்றாருன்னு சொன்னீங்கள்ல, அப்படி ஒருத்தரப் பைத்தியமாக்கனும்னு சொல்லி, அந்த டிபஃன் பாக்ஸையும் எடுத்து அவர் கைல கொடுத்துட்டு இங்க கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன். டோன்ட் வொர்ரி"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அப்படியே சொன்னாலும் அவர் அமாவாசை அன்னிக்குத்தான் அந்த டிபஃன் பாக்ஸோட சக்தி வேலை செய்யும்னு சொல்லி, அமாவாசையன்னிக்குப் போலாம்னு சொல்லுவார் டாக்டர்." </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அப்டியா. இருங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அமாவாசை வருதான்னு பார்ப்போம். இல்லன்னா தூக்க மாத்திரை கொடுத்து தூக்கிட்டு வந்துடலாம். உங்களுக்குப் பின்னாடி இருக்கிற காலண்டர்ல எப்போ அமாவாசைன்னு பாருங்க."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" இன்னும் ஒரு வாரத்துல அமாவாசை வருது டாக்டர். ஃப்ரைடே"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" குட். அப்போ ஒன்னும் பிரச்சினையில்லை. ஃப்ரைடே அன்னிக்கே கூட்டிட்டு வாங்க. மயக்கப்படுத்திக் கூட்டிட்டு வர்றது பெரிசில்ல. ஆனா, அதனாலயே அவர் மேலும் பயந்துக்கலாம். அதுக்காகத்தான் இப்படி."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
"தேங்க் யூ டாக்டர். நீங்கதான் அவரோட டார்கெட்டுனு சொல்லித்தான் கூட்டிட்டு வரப்போறேன். தப்பா நினைச்சுக்காதீங்க டாக்டர். எனக்கு வேற வழி தெரியல"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" டோன்ட் வொர்ரி. இந்த மாதிரி நாங்க நிறையப் பார்த்திருக்கோம்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
******</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
எவ்வளவு பெரிய மருத்துவமனை! எத்தனை எத்தனையோ மனநலம் குன்றியவர்களைத் தேற்றி அனுப்பியவரென்று பெயரெடுத்தவர். பாவம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரே பைத்தியமாகப் போகிறார். இத்தனை நாளும் எத்தனையோ மனிதர்களை இந்த டிபஃன் பாக்ஸைத் திறக்க வைத்துப் பைத்தியமாக்கியிருக்கிறேன். ஆனால், இன்று மட்டும் ஏனோ கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும். காசு வாங்கியாயிற்றே. அடுத்தது எங்கள் டோக்கன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" குட்மார்னிங் டாக்டர். இவர்தான் எங்க அப்பா"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" வாங்க வாங்க. ப்ளீஸ் சிட் டவுன். என்ன விசயம்? "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" தெரில டாக்டர். அப்பாதான் உங்களப் பார்க்கனும்னு சொன்னார். " </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
என் மகள் டாக்டரிடம் ஏதோ சைகை செய்யவும், அவரும் தலையசைத்துக் கொண்டு என்னிடம், " சொல்லுங்க சார், என்ன விசயம்?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அது வந்து... எதுக்கு உங்களப் பார்க்கனும்னு சொன்னேன்னா... வந்து வந்து.. மறந்துடுச்சு.."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" நல்லா யோசிச்சுப் பாருங்க."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" ஒரு நிமிசம் டாக்டர். உங்களப் பார்க்கனும்னு தோணினவுடனே ஒரு காகிதத்தை எடுத்து எதுக்காகப் பார்க்கனும்னு நினைக்கிறேன்னு ஒரு பேப்பர்ல எழுதினேன். அத எங்க வச்சேன்? பாக்கெட்லயும் காணோம். ஆ, இந்த டிபஃன் பாக்ஸ்ல வச்சேன். இருங்க திறந்து எடுத்துப் பார்க்கிறேன்."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" ஹவ் ஸ்வீட் யூ ஆர். வெரி ப்ரேவ்" என்று கூறிக் கொண்டே என் மகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிக் கொள்கிறார். பாவம். இப்பொழுது இந்த டிபஃன் பாக்ஸை அவரிடம் நீட்டித் திறக்கச் சொல்லப் போகிறேன். அப்புறம் முழுப் பைத்தியம்தான்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" என்னால் திறக்க முடியல டாக்டர். நீங்க திறந்து பாருங்களேன்"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" குடுங்கப்பா நான் திறக்கறேன்... "</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
"நோ.. டாக்டர் தான் திறக்கனும். உங்கிட்டவெல்லாம் காட்டமாட்டேன்.."</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
என் மகள் டாக்டரைப் பார்க்க, டாக்டரும் என் மகளைப் பார்த்து மீண்டும் கண் ஜாடையில் பொறுமையாக இருக்கச் சொல்கிறார். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" குடுங்க சார். நானே திறந்து பார்க்கிறேன்... அவ்ளோ டைட்டாவா இருக்கு..?"</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
******</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் செய்தியைப் பார்க்க நேரிட்டது. எங்கள் நகரின் பிரபல மனநல மருத்துவர் என்று பெயரெடுத்த அந்த மருத்துவர் கடந்த இரண்டு தினங்களாக வினோதமாக நடந்து கொள்வதாகவும், என்ன காரணமென்றே தெரியாமல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, நகரின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13.6px;">
" அப்பா, நம்ம ரண்டு பேரும் சேர்ந்து பண்ணின முதல் ப்ராஜெக்ட் க்ரேட் சக்ஸஸ். பேலன்ஸ் ஆறு லட்சம் கிரெடிட் ஆகிடுச்சு. அந்த டிபஃன் பாக்ஸ வழக்கம்போலவே அன்டர்கிரவுண்ட்ல வச்சுப் பூட்டிட்டேன். அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சு, மூனு மாசம் ஆகுற வரைக்கும் அது அங்கயே இருக்கட்டும்." என்று சிரிக்கிறாள் மகள்.</div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-86867499668082986092016-01-29T20:59:00.001+05:302016-01-29T20:59:08.683+05:30ஓவியம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">சமீபமாகத்தான் இந்த வீட்டினை நல்ல விலை கொடுத்து வாங்கினான். வாங்கியதிலிருந்தே வித்தியாசமாகச் சில நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. வாங்கிவைத்திருக்கும் திண்பண்டங்களில் குறிப்பாக முறுக்குகள் மட்டும் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. இதுவரையிலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறுக்குகள் காணாமல் போயிருக்கும். இவன் ஒரு முறுக்குப் பிரியன் என்பதால் முறுக்குகளை மட்டுமே வாங்கி ஸ்டாக் வைத்திருந்தான். வேறெந்தத் திண்பண்டங்களையும் வைத்திருப்பதில்லை. பிடிக்கவும் பிடிக்காது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இவற்றையெல்லாம் தின்பது எலியோ, புலியோ, குரங்கோ அல்ல. சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் ஒரு ஓவியம். ஆச்சர்யமாக இருக்கிறதா? அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் முறுக்கினைக் கையில் வைத்திருப்பது போன்ற அந்த ஓவியம் இவனது அலமாரியில் இருந்து முறுக்குகளைத் திருடித் தின்று கொண்டிருந்தது. யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? நம்புவது கூடப் பிரச்சினையில்லை. யாரிடமாவது போய் “ என் ரூம் செவுத்துல இருக்கிற ஒரு படம் முறுக்க எடுத்துத் திங்குதுங்க” என்று சொன்னால் சிரிக்கமாட்டார்களா?</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஆனால், அதுதான் உண்மை. உண்மையை யார் நம்புகிறார்கள்? அது அலமாரியில் வைக்கப்படும் முறுக்கினைத் தின்றுவிடுகிறது என்பது தெரிந்ததும் வேறு இடத்திற்கு மாற்றினான். எங்கு மாற்றினாலும் முறுக்கென்று அந்த அறைக்குள் வந்தால் அது அந்த ஓவியத்திற்காகத்தான் இருந்தது. முறுக்குகளுக்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ பூர்வஜென்மத் தொடர்பு இருக்க வேண்டும்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அந்த ஓவியம் வேறெதையும் செய்யவில்லை. முறுக்கினை மட்டும் திருடித்தின்றது. மற்றபடி பேசவோ, பாடவோ, கேர்ள்ஃபிரண்டுக்கு போன் செய்யவோ இல்லை. ஓவியத்தை அழித்துப் பார்த்தான். கட்டிடத்தை இடித்தாலும் இந்த ஓவியம் மட்டும் காற்றில் அதே இடத்தில் அதே உருவத்தில் இருக்கும்போலத் தெரிந்தது. இந்த வீட்டினை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு வாடகை வீட்டிற்காவது போய்விடவேண்டுமென்று நினைத்தான். உடனே எப்படி?</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">வீட்டினை விற்கும் வரைக்கும் இங்கேயே இருந்துதானே ஆகவேண்டும். அதுவரைக்கும் தனக்கு இருக்கும் முறுக்குத் தின்னும் ஆசையினைக் கைவிடுவதற்காக வேறு திண்பண்டங்களைத் தேடிப்போனான். முறுக்கினை அடுத்து இவனுக்குப் பிடித்த திண்பண்டமென்றால் அது லட்டுதான். </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">சில லட்டுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால் அந்த ஓவியத்தின் கையில் இப்பொழுது முறுக்கிற்குப் பதிலாக லட்டு இருந்தது.</span></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-24295472634429555882016-01-03T19:09:00.000+05:302016-01-03T19:09:38.080+05:30இறக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;">இப்படியெல்லாம் நடக்குமா என்ன? சாதாரணமாகச் சொல்லப்போனால் முடியை வளரவைப்பதற்கே ஒவ்வொருவரும் எத்தனையோ பிரயாசைகளைச் செய்துவரும் சூழலில் வெட்டித்தனமாகக் கற்பனை செய்ததற்கே இப்படி நேர்ந்துவிடுமா? நேர்ந்துவிட்டதே! இதைத் தலையெழுத்து என்று சொல்லி விலக்கிவிடமுடியுமா என்ன? விலக்கிவிடுவதானால் விலகிவிடலாமே? இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் இப்படியொரு கற்பனையை நான் ஏன் செய்யப்போகிறேன்? கற்பனைகள் நம் கட்டுப்பாட்டில் நிகழ்வதில்லை என்றாலும் ஒரு முயற்சியாவது செய்து கவனத்தைத் திருப்பியிருக்கமாட்டேனா? ஒரு நிமிடக் கற்பனை என் வாழ்க்கையையே பணயமாய்க் கேட்கிறதே?</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;">அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது எனக்கு? ஒன்றுமில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. சொல்கிறேன் கேளுங்கள். அதற்கு முன்னர் நீங்களும் ஒரு கற்பனைக்குள் வரவேண்டும்.</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;">பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகத்தானே காத்திருப்பார்கள் என்று கேட்கலாம். எல்லோரும் அப்படியல்ல. சரி விடுங்கள். அந்தப் பேருந்து நிறுத்தத்திலேயே உங்களுக்கு மிக அருகிலேயே ஒரு அழகான பெண்ணும் நிற்கிறார். அழகென்றால் நீங்கள் கதைகளிலும், வர்ணனைகளிலும் படித்த அந்த அழகான பெண். இப்போது உங்கள் உடலில் உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு, அந்த உந்துதலினால் என்னென்னவோ கற்பனைகளைச் செய்கிறீர்கள். என்னென்ன கற்பனைகள் என்று என்னைக் கேட்டால்? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கற்பனை செய்கிறீர்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்டவைகளையும், நமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளாலும் நாம் விரும்பியதை அடையமுடியாத நிலையில் நமது ஆசைகளைக் கற்பனைகளின் வழியாகத்தானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனைகளிலும் ஒரு வசதியிருக்கிறது. உண்மையில் நடப்பவைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் கற்பனையில் ஏற்படவாய்ப்பில்லை. இதைத்தான் கற்பனையின் பலமென்று நான் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்குமென்று நானா கண்டேன்? </span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;">பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் கண்ட பெண் சில மாதங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்து, நீங்கள் அன்று செய்த கற்பனையினால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறினால் அப்போது என்ன செய்வீர்கள்? “எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று பாடிக்கொண்டு, ஆரஞ்சு மிட்டாயும், கல்கண்டும் வாங்கி வருவோர் போவோரிடம் கொடுப்பீர்களா ? அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இதனைக் கற்பனை செய்யவும் முடியுமா? நான் ஏன் அப்படிக் கற்பனை செய்யப்போகிறேன்? நான் ஒழுக்கமானவன் என்றுதானே இப்போது சிந்திக்கிறீர்கள்? நானும் கூடத்தான் ஒழுக்கமானவன்.</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;">இந்தியக் கலாச்சாரத்தில் ஒழுக்கமானவன் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தானே உள்ளது? ஆணோ பெண்ணோ திருமணம் வரையிலும் கன்னித்தன்மையுடன் இருப்பது மட்டும்தானே நமக்குக் கூறப்படும், போதிக்கப்படும் ஒழுக்கவியல் நெறிமுறைகள்? காமம் குறித்துப் பேசக்கூடாது, அது தவறென்று சொல்லவேண்டும், உள்ளூர விரும்பினாலும் வெளி உலகில் காமத்தில் எனக்கு ஈடுபாடில்லை என்று கூறிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தாலே ஒழுக்கமானவன்/ள் என்ற முத்திரைக்குத் தகுதியாகிவிடுகிறோம் இல்லையா? மற்றபடி பொது இடங்களில் எச்சில் துப்பலாம், மலக் கழிக்கலாம், குப்பைகளைக் கண்ட இடத்திலும் வீசி எறியலாம், பொதுச் சுவர்களில் கிறுக்கி வைக்கலாம், பூசணிக்காய்களையும், மதுக்குடுவைகளையும் நடு ரோட்டில் உடைத்துவைக்கலாம். இதெல்லாம் ஒழுக்கமானவன் என்கிற எனது முத்திரைக்கு எந்தவிதத்திலும் பங்கம் விளைவிக்காது. இதுதானே நமது கலாச்சாரம்? இதிலும் காதலர்களை முறைத்துப்பார்ப்பதும், வீட்டிலிருந்து தள்ளிவைப்பதும், அவர்களது உரிமைகளைப் பறிப்பதும், சாதி மாறியோ மதம் மாறியோ திருமணம் செய்துகொண்டவர்களை கொன்றுவிடுவதும் கூட அதி உயர் ஒழுக்கசீலர்கள் அல்லது கலாச்சாரக் காவலர்கள் என்ற முத்திரையைப் பெறத்தானே? இந்தியாவில் இதைவிடவும் ஒருத்தன் ஒழுக்கமானவனாக இருந்துவிடமுடியுமா? இதையெல்லாம் பின்பற்றும் நானும் ஒழுக்கமானவன்தான். இப்பொழுது எதற்கு ஒழுக்கத்தைப் பற்றிய பேச்செல்லாம். நான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு சிறு கற்பனையால் என் வாழ்க்கைதான் நரகமாகப் போகிறதே?</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஏன் எனக்கு மட்டும் இவ்விதம் நேர்ந்தது? இது எல்லோருமே கற்பனை செய்து பார்க்கிற ஒன்றுதான். கற்பனை செய்கையில் வானம் ஒரு புண்ணியதேசமாகத் தோன்றியது. ஆனால் கற்பனை உண்மையான போது மொத்த உலகமும் எனக்கு அந்நியமாகப் போய்விட்டதே? எப்படி இந்த உலகத்தினை எதிர்கொள்ளப்போகிறேன்?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆமாம். எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. </div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இது ஏதோ உவமையென்று நினைத்துவிடவேண்டாம். உவமைகளிலும், உருவகங்களிலும் மட்டுமே படிக்கிற இந்த வாக்கியம் இப்பொழுது என் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. உண்மையிலேயே எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. இதுதான் என் சோகத்திற்கும் இந்தப் புலம்பல்களுக்கும் காரணம்.</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இறக்கை முளைத்தால் பறக்க வேண்டியதுதானே, எதற்காகப் புலம்பித் திரிகிறான் என்றா நினைக்கிறீர்கள்? கற்பனை செய்துகொண்டிருக்கையில் இறக்கை இருந்தால் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று உங்களைப் போலத்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாக முளைத்துவிட்ட பிறகு இது பெரும் சுமையாக அல்லவா தெரிகிறது. இறக்கைகள் சுமையென்று கூறவில்லை. இறக்கை முளைத்ததால் என் வாழ்க்கையே சுமையாகப் போனதாகக் கூறுகிறேன்.</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
நேற்று இரவு தூங்கப் போகும்போதுதான் இந்தக் கற்பனை எனக்குள் உதித்தது. எனக்கும் குருவிகளுக்கு இருப்பதைப் போல இறக்கைகள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குமென்று நினைத்துக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். வானத்தில் பறப்பது என்பது எத்தனை இனிமையானதாக இருக்க வேண்டும்? பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டாம்; ஏன் என் இறக்கைகளை முதலீடாகக் கொண்டு நானே கூட ஒரு அதி விரைவுத் தபால் துறையினைத் துவங்கி என் வாழ்க்கையினை ஓட்டிவிடலாம் என்றுகூட நினைத்தேன். இதற்காகவே தூங்கும்போது வழக்கமாகக் கடவுளிடம் கேட்கும் சாதாரண வரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு “எனக்குக் குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டும்” என்று கும்பிட்டுக் கொண்டு தூங்கச் சென்றேன். </div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
என் வாழ்க்கையில் கடவுளிடம் கேட்ட எதுவுமே நிறைவேறியதில்லை. நானும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வேண்டும் என்ற வரத்தினைத் தவிர வேறெந்த வரத்தையும் கேட்டதில்லை. அது ஒருபோதும் நிறைவேறியதும் இல்லை. ஒருவேளை கடவுளே கூட பரீட்சையில் மதிப்பெண் பெறாததால் அவரது பெற்றோர்களுக்குப் பயந்து, உலக வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கடவுளாக மாறியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். </div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இறக்கை வேண்டுமென்று கேட்டதெல்லாம் ஏதோ ஒரு மயக்கநிலையில்தான். தினமும் சாமி கும்பிடவேண்டுமென்பது அம்மாவின் அறிவுரை. “ என்னனு சாமி கும்பிடறது?” என்று என் சின்ன வயதில் நான் கேட்ட கேள்விக்கு “ நல்லாப் படிக்கணும்னு கும்பிடு” என்ற பதில் கிடைத்தது. அதையே கடந்த பதினேழு வருடங்களாக இன்றுவரையிலும்... இல்லை நேற்றுவரையிலும் கடைப்பிடித்துவந்தேன். கடவுள் மீது எனக்கு அவ்வளவு பெரிய மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் அம்மாவின் அறிவுரைக்காக இதனைச் செய்துவந்தேன். நல்லாப் படிக்கணும் என்று இத்தனை நாட்களாக நான் கேட்ட வரத்திற்கு எந்தப் பதிலும் இல்லாமல், நேற்றுப் புதிதாகக் கேட்ட வரத்தினை உடனே கொடுத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? ஒருவேளை சுயமாகக் கேட்கும் வரங்களை மட்டும் கொடுப்பதென்பது கடவுள் உலகின் கொள்கைகளா?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆனாலும் இந்தக் கடவுள் செய்திருக்கும் செயல் நகைக்கத்தக்க செயலாகவல்லவா இருக்கிறது? ஒரு கணிப்பொறியைப் போலவோ இல்லை எந்திரத்தைப் போலவோதானே இப்பொழுது செய்திருக்கிறார். அவருக்கு உண்மையில் மூளையில் ஏதேனும் கோளாறா அல்லது கடவுள் என்பதே ஒருவித இயற்கை எந்திரமா? பின்னே, குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டுமென்றால் அதே அளவில் இரண்டு இறக்கைகளை என் தோள்பட்டையில் முளைக்கவைத்திருப்பதன் நோக்கம் என்ன?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
குருவிகளைப் போன்ற இறக்கை வேண்டுமென்றால் நீங்கள் என்னவென்று புரிந்துகொள்வீர்கள்? குருவிகளைப் போலப் பறப்பதற்கு இறக்கை வேண்டுமென்று கேட்பதாகத்தானே புரிந்துகொள்வீர்கள்? ஆனால் கடவுள் செய்திருக்கும் இந்தக் கூத்தை என்னவென்பது? என் இரண்டு தோள்பட்டைகளிலும் சிட்டுக்குருவிக்கு இருக்கிற இறக்கையின் அளவிற்கு இரண்டு இறைக்கைகள் முளைத்துள்ளன. தூரத்திலிருந்து பார்த்தால் என் தோளில் இரண்டு பல்லிகள் எட்டிக் குதிப்பதற்காக காத்திருப்பதைப் போலத் தோன்றும். அட, பறப்பதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் வெயில் காலங்களில் இதை விசிறியாகவாவது பயன்படுத்தியிருப்பேனே? இப்போது முளைத்திருக்கும் இந்த இறக்கையால் எனக்கு என்ன பயன்? பயன் இல்லாவிட்டாலும் தொலைகிறது. இதனால் எனக்கு ஏற்படப்போகும் தொல்லைகளைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இப்பொழுது அதிகாலை ஐந்து மணியாகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் எனது அன்றாட வேலைகளைத் துவங்கியாகவேண்டும். அன்றாட வேலைகளென்றால் படிப்பது, குளிப்பது, பள்ளிக்குக் கிளம்புவது இவைதான். ஆனால் இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை நான் யாரிடம் போய்ச் சொல்லுவேன்? யாருக்கு இது புரியப்போகிறது?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் என்ன செய்வார்கள்? அழுவார்கள். குழம்பிப்போவார்கள். மருத்துவரிடம் கூட்டிச் செல்வார்கள். மருத்துவருக்கு என்ன தெரியும்? அவர் என்னிடம் என்னவெல்லாம் கேட்பார்? காய்ச்சலடிக்கையில் எப்படி இருக்கிறதென்பதைக் கூட என் அப்பாதான் மருத்துவரிடம் சொல்லுவார். இப்பொழுது கேட்கப்போகும் கேள்விகளுக்கு என் அப்பாவுக்கும் கூட பதில் தெரியாதே? பின்னே, அவருக்குத்தான் இறக்கை முளைத்ததில்லையே? அப்பாவை விடுங்கள்; மருத்துவருக்கு மட்டும் இறக்கை முளைத்திருப்பது குறித்து என்ன தெரிந்திருக்கப் போகிறது? கால்நடை மருத்துவர் என்றால் கூட இறக்கைகளைப் பற்றி எதையேனும் படித்திருப்பார். இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இறக்கைகளை வெட்டிவிட முயற்சிக்கலாம். ஆனால் இறக்கையை வெட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்? இது உடனடியாகச் செய்கிற காரியமும் இல்லவே?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
மருத்துவரிடம் போவது மட்டுமல்ல எனது பிரச்சினை. அத்துடன் முடிந்துவிடுமானால் விட்டுவிடலாம். அதனையடுத்து இந்தச் செய்தி அதிவிரைவாகப் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று உலகெங்கிலும் பரவிவிடுமே? உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கையில் காகிதத்தையும், ஒலிவாங்கியையும் எடுத்துக் கொண்டு “ உங்களுக்கு இறக்கை முளைச்சதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? “ என்ற ஒரே கேள்வியை ஓராயிரம் வகைகளில் கேட்டுக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து நிற்பார்களே, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவேன்? ஏற்கெனவே படித்ததை மனப்பாடம் செய்து கொண்டுபோய் பரீட்சையில் எழுதமுடியாத என்னிடம் புத்தகத்தையே கொடுக்காமல் கேள்வியைக் கேட்டால் என்ன செய்வேன்?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இப்படிக் கேள்விகேட்பதைத் தாண்டியும் மேலும் எண்ணற்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டாக வேண்டுமென்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. முதலில் என்னை வீட்டில் இருப்பதற்கு அனுமதிப்பார்களா என்பது முதலில் நான் எதிர்கொள்ளப்போகிற பிரச்சினை. சாதாரணமாக மரபணுக் குறைபாட்டினால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் மூன்றாம் பாலினமாக மனித இனத்தில் பிறந்தவர்களையே வீட்டில் வைத்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் இந்த உலகத்தில் நான் வேறொரு உயிராகவல்லாமா மதிக்கப்படுவேன்? பிறகெப்படி என்னை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? என்னை மனித இனத்திலிருந்தே கூடத் தள்ளிவைக்கலாம். எனக்குப் புதுப் பெயர் ஒன்றினை வைக்கலாம். மிருகக்காட்சி சாலையில் கொண்டுபோய் கூண்டுக்குள் அடைத்துவைத்து பொதுமக்களுக்கு என்னை அதிசய விலங்கென்று காட்சிப்படுத்துவார்கள். அதைவிடக் கொடுமை அங்கே வரும் குழந்தைகள் செய்யும் அட்டூழியங்களும், அதற்குப் பெற்றோர் தரும் பதில்களுமாகத்தான் இருக்கும்.</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“ அம்மா, இதென்ன?”</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“ இதுதான் இறக்கை மனிதன்”</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“ கடிக்குமா?”</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“ கிட்டப்போனா கடிச்சுவச்சிடும், இங்க இருந்தே பாரு”</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“ இந்த முறுக்கைக் குடுத்தா திங்குமா? “</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
“வீசிப்பாரு. தின்னாலும் திங்கும்”</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இதுவரையிலும் அவன் இவன் என்று அழைக்கப்பட்ட என்னை, அது இது என்று அழைக்கப்படப்போவது எத்தனை கொடுமையானதாக இருக்குமென்று நினைத்தாலே தற்கொலை எண்ணம் வந்துதொலைக்கிறது. இதைவிடவும் கொடுமை அங்கே மிருகக்காட்சிச் சாலையில் எனக்குத் துணியெல்லாம் கொடுத்து அடைத்துவைப்பார்களா இல்லை மற்ற மிருகங்களைப் போலவே... கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. இந்தக் கற்பனைதானே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்?</div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இதுமட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சிறிது நேரம்தான். ஆறுமணிக்கெல்லாம் நான் கதவைத்திறந்தாக வேண்டும். பின்னர் நான் மனித இனத்திலிருந்து புதிதான ஒரு இனத்திற்கு மாற்றப்படலாம். நானும் மனிதன் தானென்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? நீங்களாவது பிற உயிர்களுக்கு இருப்பது போன்று நமக்கும் இருந்தால் வசதியாக வாழலாமென்று கற்பனை செய்யாமல் இருங்கள். இந்தத் துன்பம் என்னோடு போகட்டும். இன்று மாலைக்குள் நான் மிருகக்காட்சிச் சாலைக்கோ அல்லது அருங்காட்சியகத்திற்கோ மாற்றப்படலாம். வந்துபாருங்கள். முறுக்கு, லட்டுக்களை எடுத்துவந்தால் தருவதைப் போல கையைப் பாசாங்கு செய்து கொண்டு திரும்பவும் கூண்டுக்கு வெளியே இழுத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்ற மனிதர்களுக்கு இது விளையாட்டு. என் போன்ற விலங்குகளுக்கு இது விளையாட்டென அறிந்துகொள்ள ஆறாவது அறிவுகூடக் கிடையாது.</div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-41894077066463370482015-07-19T21:31:00.000+05:302015-07-19T21:31:01.283+05:30சிங்கங்கள் கொல்லும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #333333; font-family: Helvetica Neue, Helvetica, Arial, sans-serif;"><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); font-size: 14px; line-height: 20px;">#CFS -2</span></span><br />
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">உலக வாழ்க்கையை வெறுத்துப் போன இளம் உயிரியல் விஞ்ஞானி மனிதர்களே இல்லாத ஒரு தீவில் குடிபுகுந்தார். உலக வாழ்க்கைதான் வெறுத்துப்போனதே தவிரவும் உயிரைத் துறக்க அவர் விரும்பவில்லை.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">காடுகளில் சுற்றித் திரிந்த அவருக்கு ஒரு நாள் அசரீரியின் குரல் கேட்டது. அதன்படி அவரது இறப்பிற்குச் சிங்கங்கள்தான் காரணமாக இருக்குமென்று தெரிந்துகொண்டார். ஆனால் அதனைப் பெரிதாக மதிக்கவில்லை.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அந்தக் காட்டிற்குள் வந்து வருடக்கணக்கில் ஆகியிருந்தாலும் இதுவரையிலும் ஒரு சிங்கத்தைக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் அசரீரி ஒலித்த அடுத்தநாளே சிங்கக் கூட்டம் ஒன்றினைக் காண நேர்ந்தது. பின்னர் பயமும், அதலிருந்து தப்பிப்பதற்கான யோசனைகளும் உருவாகத் தொடங்கின.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">உயிரியல் விஞ்ஞானியென்பதால் சிற்சில மூலிகைகளைக் கொண்டு ஒரு மருந்தினைத் தயாரித்தார். பெருமளவில் தீயினை வளர்த்து, இந்த மருந்தினை அந்தத் தீயில் இட்டுப் புகைப்பதன் மூலம் சிங்கங்களைச் சைவமாக மாற்றிவிடக் கூடிய மருந்து அது. அவ்வாறே செய்தார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">டெஸ்டோஸ்டிரோனை உறிஞ்சி எடுத்துவிட்டு, ஈஸ்ட்ரோஜென்னை அதிகளவில் சுரக்கச் செய்தால் மேக்கப் ரூமில் முக்கால் மணி இருக்க விரும்புவதும், அதனையே வைஸ் வெர்சாவாகச் செய்தால் Educational Content, God Songs என்ற போல்டர்களை உருவாக்கி Hidden செய்து வைக்க நினைப்பதும் இயல்பானதுதானே? அதைத்தான் சிங்கங்களும் செய்தன.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அந்த மருந்தின் புகை தீவு முழுவதும் பரவி அங்கிருந்த அனைத்துச் சிங்கங்களையும் சுத்த சன்மார்க்க சைவ ஜீவகாருண்ய உயர்தர சைவமாக மாற்றிவிட்டது. எல்லாச் சிங்கங்களும் இலை, தழைகளையும், செடி, கொடிகளையுமே உணவாக உண்ண ஆரம்பித்தன. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இந்த மாற்றத்தினை விஞ்ஞானி எதிர்பார்த்திருந்தார் என்பதால் பெரிதாக ஆச்சர்யப்படாமல் அந்த அசரீரிக் குரலை நினைத்துச் சற்று ஏளனமாக எண்ணிக் கொண்டிருந்தார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஒரு வாரம் கடந்திருக்கும். எல்லாச் சிங்கங்களும் வேக வேகமாகப் புல்லினை உண்ண ஆரம்பித்தன. சாதாரண சைவப் பட்சிணிகள் தின்பதை விடவும் பல மடங்கு வேகத்தில் புற்களையும், மரம், செடி கொடிகளையும் தின்ன ஆரம்பித்தன. ஒரே மாதத்தில் மொத்தத் தீவிலுமே புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனது. புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனதற்குக் காரணம் சிங்கங்களுக்குப் பேசத் தெரியாது என்று நீங்கள் நினைப்பீர்களானால் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு கை தட்டிக் கொள்ளுங்கள். லைட்டாக ஏதோ ஒரு மூலையில் ஒரு புல் ( ஃ போடவில்லை) தென்பட்டாலும் உடனே பத்துச் சிங்கங்கள் ஓடிப்போய் அதனை லபக்கென்று தின்று வெவ்வெவ்வே என்று கோணைவாய் காட்டின. நாளாக நாளாக எல்லாச் சிங்கங்களுக்கும் பசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">தீவிலிருந்த பழ மரங்களையும், தான் தனியே ஆற்றோரமாக உருவாக்கியிருந்த தோட்டத்தையும் மட்டுமே நம்பி வாழ்ந்துவந்த விஞ்ஞானிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிங்கங்களை மீண்டும் பழையபடியே மாற்றிவிடலாம் என்று நினைத்தாலும் அதற்கான மூலிகை கிடையாது. </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">வேறு ஏதேனும் யோசனை செய்யலாம்தான். ஒரு நாள் முழுவதும் பட்டினியால் கிடந்துவிட்டு அடுத்த நாளில் இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் என்ன வருமென்று கேட்டால் நீங்கள் இட்லியோ, தோசையோ வருமென்றுதானே சொல்வீர்கள்? அப்படியிருக்கையில் அவரால் மட்டும் எப்படிப் புதுப்புது யோசனைகளைச் செய்யமுடியும்?</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">தொடர் பட்டினியால் பசியாலேயே இறந்துவிட்டார். அவர் உடலிலிருந்து பிரிந்து ஆவி வானுலகம் நோக்கிச் செல்கையில் தற்செயலாகத் தான் வாழ்ந்த தீவினைப் பார்க்க நேரிட்டது. எல்லாச் சிங்கங்களும் HENCE PROVED என்ற வார்த்தைகள் உருவாகும் வண்ணம் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.</span></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-56868070390793427592015-07-10T12:41:00.001+05:302015-07-10T12:41:39.886+05:30ஆட்டுக்கல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">தன்னை எப்பொழுதுமே அறிவாளி என்றுதான் நினைத்துவந்துள்ளான். சிற்சில ஞாபகமறதிகளைக் கலைந்திருந்தால் நிச்சயம் பெரிய அறிவாளியாகியிருக்க வேண்டியவன்தான். ஒருநாள் அவனது அம்மா அவனிடம் அரிசி வாங்கிவரச் சொல்லியிருந்தார். இவன் கோதுமை வாங்கிவந்திருந்தான்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">“அரிசி வாங்கிட்டு வரச்சொன்னா கோதுமை வாங்கிட்டு வந்திருக்கிற? உன்னையைப் பெத்ததுக்கு ஒரு ஆட்டுக்கல்லைப் பெத்திருந்தா மாவாச்சும் ஆட்டியிருக்கலாம்!” இன்னும் சிற்சில வசைகள்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அடுத்த நாள் காலையில், படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், எழுதிய நானும், அவரது தாயும் ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் பையன் ஆட்டுக்கல்லாக மாறியிருந்தான். நமக்கு இது சாதாரணச் செய்திதானென்றாலும் அவனது அம்மாவிற்குப் பெருந்துயரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. அழுகைகள், கதறல்கள், புலம்பல்களாக மேலும் சில மாதங்கள் கடந்து சென்றன.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஆட்டுக்கல்லாக மாறியிருந்த அவரது மகன் என்றாவது ஒருநாள் மீண்டும் மனிதனாக உயிர்ப்பெறுவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தார் அந்த அம்மா. ஆனால் ஆட்டுக்கல் ஆட்டுக்கல்லாகவே இருந்தது. மகனாக உயிர்த்தெழவுமில்லை, அம்மா என்று அழைக்கவுமில்லை. உங்கள் வாழ்வில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்வீர்களோ அதையெல்லாம் அந்தத் தாயும் செய்தார். எதுவும் தேறவில்லை.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இறுதியாக, ஆட்டுக்கல்லை எதற்கும் பயன்படுத்தாமல் மூடி வைத்திருப்பதற்குப் பதிலாக மாவாட்டிப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. அதனைச் செயல்படுத்தவும் முடிவு செய்து அரிசியினை ஊறவைத்தார். ஆனாலும் பயம் அவரை விட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை மாவாட்டுவதால் ஆட்டுக்கல் வடிவில் இருக்கும் தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? அல்லது கை, கால்களில் ஏதேனும் ஊனம் ஏற்பட்டுவிட்டால்? இப்படி எத்தனையோ விட்டால்களைக் கடந்து இறுதியில் தனது யோசனையினைச் செயல்படுத்தினார்.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஆட்டுக்கல்லாய் மாறியிருந்த தன் மகனின் மீது அரிசியினைப் போட்டு மாவாட்ட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அந்த ஆட்டுக்கல்லில் இருந்து கோதுமை மாவு வந்தது.</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.992157); box-sizing: border-box; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">( CFS - Childish Fantasy Series)</span></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-61663011820095276562015-03-03T21:28:00.001+05:302015-03-03T21:28:38.035+05:30வலி - ஒரு சிலாகிப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமீபமாக சிறகு இணைய இதழில் வலி என்றொரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக ரியலிசம் அதாவது எதார்த்தம் சார்ந்த கதைகளைப் படிப்பதென்றால் எனக்குப் பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. பிடிக்காது. ஓரிரு சமயங்களில் படிக்க நேரும் சிறுகதைகளின் கதைக்கருவோ அல்லது எழுத்து நடையோ கூடக் காரணமாக இருக்கலாம். அப்படிச் சில சமயங்களில் படித்த கதைகளால் எதார்த்தக் கதைகளின் பக்கமாகப் போவதில்லை. அதுவுமில்லாமல் எனக்குக் கற்பனை அல்லது மிகை கற்பனை வகையிலான கதைகள் எழுதுவதில் அதிக விருப்பமென்பதாலும் இந்த ஒவ்வாமை இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த வலி சிறுகதை அதை விமர்சிக்கும் அளவிற்குக் கொண்டுவந்துள்ளது. பொதுவாக சீரியசாக எழுதுவது எனக்கு வராதென்பதால் இதுபோன்ற விபரீத முயற்சிகளைச் செய்வதில்லையென்றாலும் இந்தச் சிறுகதை எனக்குள்ளும் ரியலிசம் சார்ந்த கதைகளை வாசிக்கவும், எழுதவும் தூண்டியதாலும் இந்தச் சிலாகிப்பு.<div>
<br /></div>
<div>
ஹரிஷ் கணபதி எழுதிய வலி சிறுகதை சிறகு இதழில் வெளியாகியிருந்தது. ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு சிறுகதை. பெண்களின் menturation period சார்ந்த சிறுகதை. ஆனால், கதை அவர்கள் எதிர்கொள்ளும் உடலியல் வலி சார்ந்ததல்ல. உடலியல் வலியினை மையப்படுத்தியிருக்குமானால் இந்தச் சிலாகிப்பு தேவையில்லை. காரணம், அது இயற்கை. அது எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்று. </div>
<div>
<br /></div>
<div>
செக்ஸ் குறித்தும், சக மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எந்தவிதமான புரிதலும் இல்லாமல்தான் பெரும்பாலான திருமணங்கள் நடந்தேறுகின்றன. பெரும்பாலான என்பதை அழுத்தியே சொல்லலாம். இந்தக் கதையின் மையமும் அதுவாகத்தான் இருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
menturation சமயத்தில் உறவுக்கு அழைக்கும் தன் கணவன் பிரபாவின் கையைத் தட்டிவிடுவதிலாகட்டும், அதனால் மறுநாள் எந்தத் தொடர்புமில்லாமல் சுடுசொற்களை வாங்கிக் கொள்வதிலாகட்டும், மறுநாள் இரவும் அதே தொல்லையினால் மறுபடியும் கையைத் தட்டிவிடும்போது பிரபா கேட்கும் கேள்வியும் நமக்கு வலியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரகுவின் நினைவு குறித்த கனவும், அதில் பிரபா சமையல் செய்வதான காட்சியும்தான் என்னை இந்தச் சிலாகிப்புக்கு இழுத்துவந்தது. menturation நாட்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை விடவும் அவளைப் புரிந்துகொள்ள வேண்டிய கணவனின் புரியாமைதான் இங்கே மையப்படுத்த வேண்டிய விசயமாகிறது. அதே நாட்களில் அவள் மேற்கொள்ளும் அன்றாடக் கடமைகளையும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக, குழப்பாமல், வலிந்து சோகத்தைத் திணிக்காமல் இயல்பாக எழுதப்பட்டிருப்பதே இந்தக் கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.</div>
<div>
<br /></div>
<div>
என்னளவில் இந்தச் சிறுகதை சர்வநிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டியது. அதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக வலி என்பது மனம் சார்ந்த ஒன்று. இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஆறுதல் கிடைக்குமாயின் உடல் சார்ந்த எந்த வலியையும் சர்வசாதாரணமாகக் கடந்துவிடமுடியும். அதுதான் இங்கே சிக்கல். அதிலும் மூடி மறைக்கப்பட்ட, வெளியில் பேசக்கூடாத விசயமாக மறைத்து வைக்கப்படும் - அதே வேளை ஒவ்வொரு ஆணும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய - இந்த விசயங்கள் புரிதலில்லாத ஆண்களைக் கணவர்களாகப் பெற்ற ஒவ்வொரு பெண்ணையும் எவ்விதத்தில் பாதிக்கிறது என்பது மிகத் தெளிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இக்கதை பேசும் உளவியல் விசயங்களும், கதை தாண்டிய சிந்தனையும் குறிப்பிடத்தகுந்தவை.</div>
<div>
<br /></div>
<div>
கதையை வாசிக்க - <a href="http://siragu.com/?p=16701">வலி</a> - எழுதியவர் - ஹரிஷ் கணபதி.</div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-78455614056949905892015-02-08T23:21:00.001+05:302015-02-08T23:21:50.430+05:30எலி - முதல் நாவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
"நினைவழுத்தச் சுழல் வெளிகளின் எல்லையில்லா வெம்பரப்பில்" என்று ஆரம்பித்து எனது முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கும்போது என் வலது கன்னத்தில் யாரோ சடாரென்று அறைந்தார்கள். அறைந்தால் சடாரென்று கேட்க வாய்ப்பில்லை என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் எதற்கு அறைந்தார்கள் என்று கேட்பதற்கு முன்னதாகவே அடுத்த கன்னத்தைக் காட்ட வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் அறை வந்த திசையில் எனது வலது கன்னத்தைக் காட்டியவாறே எழுதுவதைத் தொடர்ந்தேன். சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் வலது கன்னத்திலேயே அறை விழுந்தது. இந்த முறை சடாரில்லை. இதென்ன புதுப் பழக்கம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த முறை மறுகன்னத்தில் அறைய வேண்டும் என்ற இலக்கணம் கூடத் தெரியாத மூடன் எவன் என்றறிவதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டுத் திரும்பினேன். யாருமில்லை. உண்மையிலேயே யாருமில்லை; ஆனால், அடித்தது உண்மை. வலித்ததும் உண்மை. நான் என் நாவல் எழுதும் வேலையில் அதிகக் கவனத்துடன் இருந்ததால் அதிசயமாக விழுந்த இந்த அறையினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அருகிலிருந்த ஹெல்மெட் ஒன்றினை எடுத்துத் தலையில் கவிழ்த்துவிட்டு மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அகப்படிம காட்சிச் சித்திரங்களின் கூரிய நனவோடையின்" - மறுபடியும் அதே வலது கன்னத்தில் சடார். ஹெல்மெட்டைத் தாண்டியும் சாத்தியமாகியிருந்தது. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஏன் வலது கன்னத்தில் மட்டுமே அறை விழுகிறது என்பதாக இருந்தது. இடது கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இல்லை. இந்த இடத்தில் பெருமளவில் அதிர வேண்டும். நான் ஏற்கெனவே அதிர்ந்து முடித்துவிட்டதால் இப்பொழுது உங்கள் முறை. என்னுடனேயே இருந்த இடது கன்னம் எங்கே போயிருக்கும்? கண்ணாடியில் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இருந்த இடத்தில் " என்னை எழுதுவதாக இருந்தால் தமிழில் எழுது. வேறொரு பாஷையில் எழுதாதே" என்ற வார்த்தைகள் மட்டும் ப்ளாஷ் ஆகிக் கொண்டிருந்தன. ஆமாம், எலி நாவல் தான் எப்படி எழுதப்பட வேண்டுமென்று தானே முடிவெடுத்துக் கொண்டது. அதன் பிறகாகத்தான் எலியை எளிய வடிவில் எழுத ஆரம்பித்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்சொன்ன கதை நம்பும்படியாக இல்லை; அதுதானே? நம்பும்படியாக இருந்தால் அது எப்படி Fantasy ஆகும்? எலி கற்பனை மற்றும் மிகு கற்பனை வகையினைச் சார்ந்த நாவல். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் தத்துவம் கலந்த த்ரில்லர் கதை. முற்றிலும் குழந்தைகளுக்கான கதைக்களமென்றாலும் அனேக இடங்களில் Black humor வகையில் முயற்சித்திருக்கிறேன். முதல் நாவல் என்பதால் நிச்சயமாய்க் குறைகளும் கலந்தே இருக்கலாம். அந்த வகையிலும் இது முக்கியமானது. ரியல் டைம் நாவல் என்றும் கூறலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் நாவல் என்பதால் எனக்குத் தெரிந்த ஒரே மொழியான தமிழில்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்காவிட்டாலும் வாங்கிப் படிக்கலாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழைக் கற்றுக் கொண்டு படிப்பதானாலும் மகிழ்ச்சியே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-CfSkaLqZRYs/VNef_zAEEGI/AAAAAAAAAvM/PYh9k6CPe8w/s1600/%E0%AE%8E.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-CfSkaLqZRYs/VNef_zAEEGI/AAAAAAAAAvM/PYh9k6CPe8w/s1600/%E0%AE%8E.jpg" height="245" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இணையம் சார்ந்தே எனது வாசிப்பும் எழுத்தும் ஆரம்பமானது என்பதால் இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் பரிசல்காரன் முன்னுரை எழுதியுள்ளார். எலி நாவலில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பகுதி அது. முன்னுரை என்பதால் நாவலின் துவக்கத்திலேயே பதிப்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் எலி நாவலை நீங்கள் வாசிக்கலாம். பின் அட்டைக்குப் பிறகாக வேறெதையும் பதிப்பிக்க வேண்டாமென்பதில் பதிப்பாளர் தீவிரமாக இருந்ததால் பின் அட்டைக்கு முன்பாகவே நாவலை முடித்திருக்கிறேன். தமிழில் இது ஏற்கெனவே செய்யப்பட்ட முயற்சிதானென்றாலும் எலி நாவலில் இது கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறது.<br />
<br />
எலி நாவல் கடந்த 7-02-2015 அன்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் சாரு அவர்களால் வெளியிடப்பட்டது. வா.மு.கோமு உடனிருந்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-W_0lilrq2U4/VNeX15ob4-I/AAAAAAAAAu8/XJL6RPbqYkM/s1600/_MG_1216.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-W_0lilrq2U4/VNeX15ob4-I/AAAAAAAAAu8/XJL6RPbqYkM/s1600/_MG_1216.JPG" height="213" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனி புத்தகத்தைப் படிக்கப்போகும் உங்களின் விமர்சனங்களை எதிர்நோக்கியபடி காத்திருப்பதுதான் எனக்கு அழகு. எலி நாவலினைப் புத்தகமாக உருவாக்கியதில் என் பங்கினை விடவும் அனேகம் பேரின் உழைப்பும், வாழ்த்தும் இருக்கிறது. எல்லோரைப் பற்றியும் தனியாகப் பதிவதே நான் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எலி நாவல் தற்பொழுது விற்பனையாகிவருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எலி நாவலினை வாங்க - <a href="http://www.twitlonger.com/show/n_1skhk10">இங்கே கிளிக் செய்யவும்.</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதிப்பகம் : நடுகல்.</div>
<div style="text-align: justify;">
பக்கங்கள் : 152.</div>
<div style="text-align: justify;">
விலை : Rs.130/-</div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-77997205034221929002014-06-19T17:08:00.002+05:302014-06-19T17:08:31.993+05:30கற்பூர வாசனை தெரிந்த கழுதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால் அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். </div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை. விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகிதத்தையே தின்கிறது, அதனைக் காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span></div>
<span style="background-color: rgba(255, 255, 255, 0.992157); color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!</div>
</span></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-64397729379593115962014-04-23T19:03:00.000+05:302014-04-23T19:03:37.346+05:30டிஜிட்டல் உயிர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
காலை மணி பதினொன்றைத் தொட்டபோது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்பினை, பூஜ்ஜியம் ஒன்றாக மாற்றி, ரேடியோ அலைகளின் வழியாக தரனின் காதுகளில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரில் “ உங்கள் நண்பர்களைப் பார்க்கப்போவதாகக் கூறியிருந்தீர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமா?” என்றவாரு வினவியது 23 ஆம் நூற்றாண்டின் அதிவேகக் கணினி. ஏற்கெனவே தயாராகியிருந்த தரன் தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்தான். தரனின் இந்த ஒப்புதலை சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கேமராக் கண்களின் மூலமாகப் பெற்ற அந்தக் கணினி தனது வேலைகளை ஆரம்பித்தது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
கணினியிலிருந்து பூஜ்ஜியம் ஒன்றாகப் பெறப்பட்ட தகவலை ”தரன் தயாராகிவிட்டார்; கிளம்பி வரவும்” என்பதாகப் புரிந்துகொண்டு பார்க்கிங்கிலிருந்து கிளம்பி நேராக வாசலில் வந்து நின்றுகொண்டு தரனின் வரவுக்காகக் காத்திருந்தது நியூட்ரினோ என்று பெயரிடப்பட்ட கார்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
தரன் ஏறிக்கொண்டதும் ஏற்கெனவே கணினியிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்ததுடன், தரனின் மற்ற இரண்டு நண்பர்களின் கார்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், அவை எப்பொழுது ஹோட்டலை வந்தடையும் என்பதையும் தரனின் முன்பாகக் காற்றுத் திரைகளில் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தது நியூட்ரினோ. இதனால் “எங்க இருக்கிற, எப்போ வருவ?” போன்ற கேள்விகளும், தொலைபேசி உரையாடல்களும் எப்பொழுதோ ஷிப்ட் டெலிட் செய்யப்பட்டிருந்தன.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
தரன்,சிந்தீப்,பரத்,ஆரவ் ஆகிய நால்வரும் கடந்த 25 நாட்களுக்கும் முன்பாக சோசியல் நெட்வொர்க் ஒன்றில் அறிமுகமாகி, பழகி, நண்பர்களாகி இன்று அவர்களது முதல் சந்திப்பை ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். </div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
ஆரவ் ஏற்கெனவே ஹோட்டலுக்கு வந்துவிட்டான் என்ற தகவலையும் கணினியிலிருந்து பெற்று அதையும் தரனின் முன்பாக மின்னிக் காட்டியது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
தரன் ஹோட்டலை அடையும் முன்பே மற்ற மூவரும் ஆஜராகியிருந்தனர்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ஹே மச்சி, வாடா வாடா. ஆரம்பிக்கலாமா? “ என்றவாரு தட்டுக்களில் பரிமாறப்பட்டுக் காத்திருந்த உணவு வகைகளைக் காட்டிக் கேட்டான் சிந்தீப்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ கண்டிப்பா, பேசுறதெல்லாத்தையும் தான் நாம நிறையப் பேசிட்டோமே? என்னதான் டிஜிட்டல்ல, 3D ல பார்த்தாலும் நேர்ல பாக்குறது மாதிரி இருக்கிறதில்லைல? “</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ ஆமா மச்சி, இருந்தாலும் இதென்ன பழைய காலமா? நேர்ல வந்து பேசுறது, பழகுறது மாதிரியேயான உணர்வுகளைத்தான் இப்போ இருக்கிற டெக்னாலஜி ரொம்பச் சுலபமா செய்யுதே? இருந்தாலும் ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு சாப்பிடறது, அரட்டை அடிக்கிற ரியல் ஃபீலிங் வர்றதில்லை” - பரத்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
” சரி, முதல்ல சாப்பிடலாம்; சாப்பிட்டுட்டே பேசலாம், செம பசி” என்றவாரு உணவுத் தட்டுக்களை இழுத்தான் தரன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ ஹே, நீங்க சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வயிறு ஒரு மாதிரியா இருக்கு. எதுவும் சாப்பிடுற மூடுல நான் இல்ல”- ஆரவ்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ அடங்கொக்கா, நீ தானடா அடிக்கடி சாப்பாட்டு ஐட்டத்தையெல்லாம் போட்டோ எடுத்து அப்லோடு பண்ணிட்டிருப்ப? சொல்லபோனா நம்ம மீட் பண்ணப்போறோம்னு ரிமைண்டர் செட் பண்ணும்போதே உனக்குப் பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்களையும், அத ஆர்டர் பண்ணிடட்டுமான்னும் என் கம்ப்யூட்டர் கேட்டுச்சே? “</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ அது அப்டித்தான், இருந்தாலும் இப்போ முடியாது”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ ஒன்னு பண்ணு, மொதல்ல கொஞ்சம் தண்ணி குடி, அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம். நாங்க வேணா வெய்ட் பண்ணுறோம்” - தரன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ இல்ல நீங்க சாப்டுங்க, என்னால கொஞ்சம் கூட சாப்பிட முடியாது”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ நீங்க ரோபோட்டா- சாரி நீ ஒரு ரோபோட் தானே? “ - கொஞ்சம் கோபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பரத். பரத் இப்படிக் கேட்டதும் ஏதோ புரிந்ததாகப் பரத்தைப் பார்த்தான் தருன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ ம்ம்ம்” என்றவாரு தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தது ஆரவ் என்ற ரோபோட்.“சாரி கைய்ஸ்,எனக்கு ரொம்ப நாளா மனுஷங்க கூடப் பழகனும்னு ஆசை, அதான் ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி மனுஷங்க மாதிரி சில விஷயங்களைச் செஞ்சுட்டு இருந்தேன். பட் நீங்க இப்படி கண்டுபிடிப்பீங்கனு நான் நினைக்கலை. எனிவே இனி என்னை உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்க, பை!” என்றவாரு பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றது ஆரவ்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“அடப் பாவிங்களா இப்டியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? , பாவிங்களா கூட தப்பு, பாவிங்கன்னா மனுஷனைச் சொல்லுறது. பாவிக்கு அஃறிணைல என்ன வரும்?” சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தான் தருன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
எதையெதையோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் மூவரும். திடீரென பரத்தைப் பார்த்த சிந்தீப் “ ஆமா, அவன் ரோபோட்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது? “</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ அது பார்த்தாவே தெரியுதே?”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ எங்களுக்குல்லாம் தெரியலையே? உனக்கு மட்டும் எப்படி?”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
” அப்போ நீயும்? “ - சிந்தீப்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ இதுக்கு மேல நானும் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் ரோபோட் தான். நானும் அதே காரணத்துக்காகத்தான் உங்க கூட பழகினேன். எச்சரிக்கையாத்தான் இருந்தேன். ஆனா! இட்ஸ் ஓகே. இப்போ சாப்பிட்டதெல்லாம் ஏற்கெனவே தனித்தனித் தனிமங்களா பிரிஞ்சு அது அதுக்கான பெட்டில சேர்ந்துடுச்சு. அத முதல்ல கிளியர் பண்ணனும்.பை ”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
” ஆரவ் ரொம்ப பழைய ரோபோட் போல, பரத் கொஞ்சம் புதுசு. ஏன்னா ஆரவ் ஒரு ரோபோட்னு பரத் மொதல்லையே கண்டுபிடிச்சிட்டான். பட் பரத் ஒரு ரோபோட்னு ஆரவால கண்டுபிடிக்க முடியல. அதோட இப்போ வர்ற ரோபோட்டுகள் எல்லாம் அதி நவீனமா வருதுங்க. மனுசனுக்கும் அதுக்கும் வித்தியாசமே கிடையாது. இன்னொரு ரோபோட்டால நம்ம எதிர்ல இருக்கிற மனுஷனா ரோபோட்டானு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கெல்லாம் வர்றதா சொல்லுறாங்க. இது எங்க போய் முடியுமோ? “ கவலைப் படுவதைப் போன்ற முகபாவத்துடன் கூறினான் சிந்தீப்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ என்ன எழவுடா இது? மனுஷங்க எல்லாரும் எங்கதான் போனாங்க?”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ ஒருவேளை நம்ம ரண்டுபேரு மட்டும்தான் பூமில மிச்சமிருக்கிற மனுஷங்களோ? “ - சிந்தீப்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ க்க்கும்.” என்று முனகிக்கொண்டே மிச்சமிருந்த உணவுகளையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் தரன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
கொஞ்சம் அரசியல், கொஞ்சம் காதல், கொஞ்சம் பிகர் கரக்ட் செய்தல் என்றவாரு மீண்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறையில் சிறு சண்டை ஏற்பட்டு, எங்கிருந்தோ வந்த பீங்கான் தட்டு சிந்தீப்பின் தலையை நோக்கி வந்தது. அப்பொழுது டேபிளில் இருந்த சிந்தீப்பின் கர்சீப் கீழே விழவும், அதை எடுக்கக் குனிந்ததும் மிக இயல்பாய் இருந்தபோதும் தரனுக்கு செயற்கையாகவே தோன்றியது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ஒருவேளை?” குழம்பினான் தரன்.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
தரனின் சந்தேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சந்தீப்பும் தான் ஒரு ரோபோட் என்று ஒப்புக்கொண்டான்( ஒப்புக்கொண்டது).</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ நானும் ஆரவை ஒரு ரோபோட்னு முதல்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா அது ரொம்ப பழைய மாடல். சுமார் 4 மாசத்துக்கு முன்னாடி தயாரிக்கப்பட்டது. அதுல எங்கள மாதிரி, ஐ மீன் என்னையும் பரத்தையும் மாதிரி மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டு ஐட்டங்களை சாப்பிட்டு அதுல இருக்கிற தனிமங்களைத் தனித்தனியா பிரிச்சு சேமிச்சு அப்புறம் டிஸ்போஸ் பண்ணுற வசதி இல்லை. அப்புறம் பரத்தும் எனக்கு முந்தைய மாடல்தான். அதான் அதுவும் இவ்ளோ நேரம் தாக்குப்பிடிக்கலை. எனிவே நான் ஒரு மனுஷனைப் பார்க்கனும், பழகனும்னு நினைச்சேன். உங்கிட்ட பழகினது மூலமா எனக்கு அது கிடைச்சிடுச்சு!’</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ உன் விருப்பம் நிறைவேறிடுச்சு, ஆனா என்னால ஒரு மனுஷனைப் பார்க்க முடியலையே, எல்லாமே உயிரிள்ளாத மெஷின்களாத்தானே இருந்துட்டு இருக்கு. நான் எப்பத்தான் ஒரு மனுஷனைப் பார்க்கப்போறேன்? ச்சே. வாழ்க்கையே வெறுத்திடுச்சு” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்தான் தருன். நியூட்ரினோ அவனை மீண்டும் வீட்டிற்குச் சுமந்து வந்தது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“மனுஷங்களே இல்லையா? மனுஷங்களைப் பார்க்கவே முடியாதா? எல்லா மனுஷங்களும் செத்துப் போயிட்டாங்களா? ஒருவேளை மனுஷ இனமே அழிஞ்சுடுச்சா? இங்க நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன்? செத்தே போலாம்” என்ற சிந்தனைகள் தரனுக்குள் ஓட கயிற்றினை எடுத்துக்கொண்டு வாசலில் இருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொண்டான். அவனது கழுத்து நெறிபட்டு அழுந்த, அவனது மொத்த உடல் எடையும் புவியீர்ப்பினால் இழுக்கப்பட்டு, கழுத்து அறுபட்டு, அறுபட்ட இடத்தில் பச்சை நிறத்தில் சிலிக்கான் தகடுகளும், ஒயர்களும் பிய்ந்து தொங்கின.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
தரன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து, திரும்ப வீட்டிற்கு வந்து தூக்கிட்டுக் கொண்டது வரை அனைத்தையும் கவனித்துவந்த டாக்டர்.கோவிந்த் தனது பிரத்யேக அறையிலிருந்துகொண்டு கீழ்க்கண்டவாறு பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை அருகிலிருந்த கணினி தனது திரையில் எழுதிக்கொண்டிருந்தது.</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
“ மதிப்பிற்குரிய ஐ.ஜி. அவர்களுக்கு,</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
முன்னாள் அமைச்சரின் மகனான தரன் தற்கொலை குறித்து தாங்கள் என்னிடம் அளித்திருந்த வேலை நிறைவடைந்துவிட்டதாக நினைக்கிறேன். தரனைப் பற்றித் தாங்கள் கொடுத்த தகவல்களையும், தரனின் மூளையிலிருந்து பெறப்பட்ட சில நினைவுகளையும், அவரது ஹார்மோன் லெவல்களையும் வைத்து நாங்கள் உருவாக்கிய ரோபோட் இன்றும் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டது. இது நான்காவது முறை. மொத்தமாகச் செய்யப்பட்ட ஐந்து சோதனைகளில் நான்கு முறை தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருக்கிறது.தரனிற்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருந்தால் அவர் நிச்சயமாக தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருப்பார். வேறு வழிகளில் இறந்திருந்தால் அது கொலையாகவோ, விபத்தாகவோ இருக்கலாம். நன்றி.”</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; text-align: justify;">
திரையில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துவிட்டு, திரையின் கீழே அவரது கை ரேகையையும் பதித்து செண்ட் இட் டூ ஐ.ஜி என்று கட்டளையிட்டுவிட்டு வெளியேறினார் டாக்டர். கோவிந்த்.</div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-4898633517572301442014-04-13T16:35:00.001+05:302014-04-13T16:35:29.808+05:30வங்கிகளும் ஏ.டி.எம் களும் தோன்றியது எப்படி? - வரலாற்றுத் தகவல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் என்றோ, இரண்டு யுகங்களுக்கு முன்னர் என்றோ ஆரம்பிப்பதற்கு இதொன்றும் கட்டுக்கதை இல்லை. வரலாறு என்றாலே சுமார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்று யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? அப்படிப் போட்டிருந்தால் போட்டுவிட்டுப் போகட்டுமே? நாம் என்றைக்குச் சட்டங்களைச் சட்டை செய்துள்ளோம்? துணியைச் சட்டை செய்வது தானே நமது வழக்கம்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரலாற்றுத் தகவல் என்றாலும் இது முற்றிலும் உண்மைக் கதை. வங்கிகளும், ஏ.டி.எம் செண்டர்களும் இல்லாத ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? முடிந்தால் கற்பனை செய்து பாருங்கள். சிரமம்தானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய இயந்திர வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாறிவரும் பேங்குகளும், ஏ.டி.எம்களும் முதன் முதலில் எங்கே எப்படித் தோன்றின என்று தெரியுமா? தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள். தெரிந்தவர்களும் தொடர்ந்து படிக்கலாம். ஏனெனில் பேங்க்குகளும் ஏ.டி.எம்களும் உருவான வரலாறென்று நீங்கள் அறிந்திருப்பது அனைத்தும் கற்பனைக் கதைகள். இங்கே சொல்லியிருப்பவை மட்டுமே உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கி.பி.1885 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30 ஆம் நாள் நான், கமல் மற்றும் ரஜினி ( சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கமல், ரஜினி என்ற பெயரில் உங்கள் சித்தப்பாவோ, பெரியப்பாவோ இருந்தால் இவை அவர்களைக் குறிப்பன அல்ல) ஆகிய மூவரின் தவத்தினை மெச்சி இறைவன் எங்கள் கண் முன்னால் தோன்றினார். ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துவிட்டு வேண்டும் வரங்களைக் கேட்கச் சொன்னார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் கமலின் முறை. “எனக்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டும்” என்று கேட்டார். உடனேயே அங்கொரு குண்டு பல்பு தோன்றியது. கமலைக் காணவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓரிரு நொடிகளுக்குப் பின்னர்தான் எனக்கு விபரீதம் புரிந்தது. கடவுளை நோக்கி “ யோவ், என்னய்யா பண்ணிவச்சிருக்க?” என்று பல்பைச் சுட்டிக் கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்த கடவுளுக்கும் அதிர்ச்சி. தவறிழைத்தவர் போல நாக்கைக் கடித்துக் கொண்டு “ மந்திரத்த மாத்திச் சொல்லிட்டேன் போல” என்று கூறி மீண்டும் வேறொரு மந்திரத்தை உச்சரித்தார். இப்பொழுது குண்டு பல்பு, சி.எப்.எல் பல்பாக மாறியிருந்தது. ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது “குண்டு பல்பு அதிகமா கரண்ட இழுக்கும்னு பேசிக்கிறாங்க” என்றார் கடவுள். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்ததால் நான் எதுவும் பேசவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து ரஜினியின் முறை. தன்னிடம் எந்நேரமும் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்று தனது வரத்தினைக் கேட்டார். உடனே எங்களைச் சுற்றிலும் சுவரும், ஒரு ஏ.டி.எம்.மெஷினும் தோன்றின. கடவுளுக்கும் சென்றாயனுக்கும் வித்தியாசம் இருக்க முடியாதென்று தோன்றியது. ஏ.டி.எம் மெஷினாக ரஜினி மாறியது குறித்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் கூடவே ஒரு குறும்புச் சிரிப்பும் ஏற்பட்டது. எவனோ ஒருவன் வந்து இந்த மெஷினில் இருக்கும் பணம் அத்தனையையும் எடுத்துவிடப் போகிறான், பிறகு அந்த மெஷினில் பணம் இல்லாமல் போய், கடவுளின் வரம் கேலிக்கூத்தாகப் போகிறதென்று நினைத்தேன். நான் நினைத்ததைக் கடவுளும் புரிந்து கொண்டிருப்பார் போலும். அவருக்கும் அதே குறும்புச் சிரிப்பு வந்தது. அதே சமயம் மண்டையோட்டுச் சின்னத்துடன் “மெஷின் ரிப்பேர், பணம் வராது” என்று எழுதப்பட்ட அட்டை எங்கிருந்தோ வந்து ஏ.டி.எம் மெஷினின் ஸ்கிரீனினை மூடியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது கடவுள் என் பக்கமாகத் திரும்பினார். அடுத்த வரத்தினை நான் தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் என்னையும் கடவுளையும் தவிர அந்த அறையில் வேறு யாருமில்லை. என் நண்பர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த நானோ வரம் கேட்கும் ஆசையிலிருந்து முற்றிலும் மாறிப்போயிருந்தேன். கடவுள் இங்கிருந்து மறைந்தால் போதுமென்று தோன்றினாலும், எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்துக் கண் கலங்கிக் கொண்டிருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் தொண்டையைச் செருமியவாரே வேண்டும் வரத்தைக் கேட்கச் சொன்னார். ஏதோ பிளானிங்கில் இருப்பதாகவே தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்ல எனக்கு வரம் எதுவும் வேண்டாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நேரில் வந்துவிட்ட பிறகு வரம் கொடுக்காமல் போவது என் குல வழக்கத்திற்கு மாறானது. வேண்டும் வரத்தினைக் கேள் “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் மறுத்தால் கடவுள் கெட்ட வார்த்தைகளில் என்னை வசைபாடக் கூடுமோ என்ற அச்சத்தில் சிறிது யோசித்து “ அவுங்க ரண்டு பேருக்கும் கொடுத்த வரத்த திரும்ப எடுத்துட்டு அவுங்கள பழையபடி மாத்திடுங்க “ என்று எனது வரத்தினைக் கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையோடு கொண்டுவந்திருந்த பில் (சைனா கம்பெனி) ஒன்றில் இருந்த “ ஒருமுறை விற்கப்பட்ட பொருள் திரும்ப ஏற்கப்படாது. வாங்கும் போதே பொருட்களைச் சோதனை செய்து வாங்கிச் செல்லவும்” என்பதைக் காட்டினார். எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். புரியாவிட்டாலும் ஒன்றும் பிரச்னையில்லை. இதை வைத்து டாக்டர் பட்டமா வாங்கப் போகிறீர்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. பின்னே, ஹோட்டலுக்குச் சென்று இட்லி இருக்குதா என்ற கேள்விக்கு தோசை, பூரி, புரோட்டா எல்லாம் இருக்குது சார். அதுவும் சாப்பிடற பொருள்தான் சார் என்றால் உங்களுக்குச் சிரிப்பா வரும் ? எனக்குக் கோபம்தான் வரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோபத்தைத் தாருமாறாகக் காட்டியிருக்கலாம்தான். ஆனால் என் நண்பர்களுக்காகப் பொறுமை காக்க வேண்டியிருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர் “அந்த மெஷின்ல இருக்கிற பணம் எனக்கு வேணும்” என்றேன். இப்படிக் கேட்டால் ரஜினியின் “எந்நேரமும் எங்கிட்ட பணம் இருந்துட்டே இருக்கனும்” என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் ஓவர் ரூலாகி கடவுள் குழம்பிவிடுவார் என்று நினைத்தேன். அப்படி நேர்ந்தால் ஒருவேளை ரஜினியையும், கமலையும் அவர் பழைய நிலைக்கே மாற்றிவிடலாம் என்பது எனது எண்ணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது நோக்கம் கடவுளுக்குப் புரிந்திருக்க வேண்டும். இந்தப் பத்தியிலிருந்து மேலாக எண்ணிக் கொண்டே போனால் சரியாக எட்டாவது பத்தியில் கடவுளுக்குத் தோன்றிய குறும்புச் சிரிப்பு இப்பொழுதும் தோன்றியது. உங்களுக்கு எட்டு ராசியான நம்பராக இல்லாவிட்டால் எண்ணிக்கையை ஒன்று என ஆரம்பிக்காமல் வேறு எண்ணில் ஆரம்பிக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் கேட்ட வரத்தினை எனக்கு அளித்ததாகக் கூறிவிட்டுக் கையில் ஒரு ஏ.டி.எம்.கார்டினைக் கொடுத்து “இத வச்சு அந்த மெஷின்ல இருக்கிற பணத்த எடுத்துக்க” என்று கூறி அதிலிருந்து எப்படிப் பணமெடுப்பது என்பதையும் விளக்கிவிட்டு கிளம்புவதற்குத் தயாரானார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஒரு நிமிஷம் நில்லுங்க, நான் ஒருதடவ ட்ரையல் பார்த்துக்கறேன்” - மெஷினிலிருக்கும் எல்லாப் பணத்தையும் எடுத்துவிட்டு மீண்டும் கடவுளின் வரத்தை பொய்யாக்கும் எனது நோக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நின்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் கூறியபடியே ஏ.டி.எம்.கார்டினை மெஷினில் தேய்த்து எடுத்துவிட்டு, மெஷினில் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறதென்று தெரிந்துகொண்டேன். ஏனெனில் அப்பொழுது வங்கிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் மெஷினில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் நடைமுறை இருந்தது. இப்பொழுது அந்த வசதிதான் உங்கள் வங்கிக் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறதென்று பார்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அந்த மெஷினில் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுப்பதற்கான எனது எண்ட்ரியை அழுத்தினேன். உள்ளே “ச்சுர் ச்சுர் ச்சுர்” என்று சக்கரம் சுழல ஆரம்பித்தது. கடவுளுக்கு வயிற்றைக் கலக்கியிருக்க வேண்டும். அவரது முதல் வரம் தனது சாவினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவரையிலும் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த கடவுள் திடீரென ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அடுத்த கணமே மெஷின் தனது வேலையை நிறுத்திக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் பணத்தினை மட்டும் வெளியே நீட்டியது. மறுமுறை நான் முயற்சித்த போது ” அடுத்த 24 மணி நேரத்திற்கு நீங்கள் பணம் எடுக்க முடியாது” என்ற சீட்டினைத் துப்பியது. நான் கடவுளைப் பார்த்தேன். அவர் எங்கள் ரூமுக்கு வெளியே புதிதாக முளைத்திருந்த வங்கிக் கிளையைப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”நான் கேட்டபடி எனக்கு அந்த மெஷின்ல இருக்கிற பணம் வேணும். நீங்க கொடுத்த வரம் என்னாச்சு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உன் கைல இருக்கிற பணம் அந்த மெஷின்ல இருந்து வந்ததுதானே?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எனக்கு எல்லாப் பணமும் வேணும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அத நீ பேங்க்ல தான் கேக்கணும். ஒரு நாளைக்கு இவ்ளோதான் எடுக்கனும்னு ரூல் வச்சிருப்பாங்க போல; எனக்கும் அவுங்களுக்கும் சம்பந்தம் இல்லை”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. வெளியில் கிளம்பியவரிடம் கேட்பதற்கு மேலும் ஒரு கேள்வி பாக்கியிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அது சரி, இப்போ நான் தினமும் வந்து பணத்த எடுத்துட்டுப் போயிட்டா கடைசில ஒரு நாள் இந்த மெஷின்ல இருக்கிற பணமெல்லாம் தீர்ந்திடுமே. அப்போ ரஜினிக்கு நீங்க கொடுத்த வரம் பொய்யாகாதா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ அதுக்குத்தானே பேங்க்க உருவாக்கியிருக்கேன். இனி அவுங்க இந்த மெஷின்ல பணம் தீராம பார்த்துக்குவாங்க. இந்த மெஷின்ல தீர்ந்தாலும் இதே மாதிரி ஆயிரம் பேங்க்குகள், ஏ.டி.எம்னு ஜெராக்ஸ் எடுத்தாச்சு. அதனால அந்த வரத்துக்கு இனி சாவே கிடையாது. ” என்று கூறிவிட்டு மறைந்திருக்க வேண்டும். ஆனால் அன்று ஏனோ மறையவில்லை. நடந்தேதான் சென்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியாகத்தான் பேங்க்குகளும் ஏ.டி.எம்.களும் தோன்றின. எப்பொழுதேனும் நீங்கள் ஏ.டி.எம்.ற்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றால் என்னையும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மற்றும் கமலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதுவே நீங்கள் எங்கள் தியாகத்திற்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-60609201371155990232014-02-14T16:38:00.001+05:302014-02-14T16:41:18.007+05:30அவதூறு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px; margin-bottom: 12pt; text-align: justify;">
<span lang="HI" style="font-family: Latha, sans-serif;">அது அவதூறுதான். அதை அவதூறாகத்தான் கருத வேண்டும். அவதூறல்லாமல் வேறென்ன</span><span lang="EN-US" style="font-family: Latha, sans-serif;">?</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">செய்யாத ஒன்றைச் செய்ததாகவும்<span lang="EN-US">, </span><span lang="HI">நடக்காத ஒன்றை நடந்ததாகவும் கூறிப் பழி</span> கூறுவதை என்னவென்பது</span><span lang="EN-US" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">?</span></div>
<span lang="EN-US"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="EN-US"><span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></span></div>
<span lang="EN-US">
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
எனக்குச் சைவ உணவுகளைக் காட்டிலும் அசைவ உணவுகள் அதிகமாகப் பிடிக்கும்தான். தினமும் மூன்று வேளைக்குமே அசைவ உணவென்றாலும் <span lang="HI">சந்தோசம்தான். அதற்காக மனிதக் கறியையுமா தின்பேன்<span lang="EN-US">?</span><span lang="HI">இப்படியெல்லாமா </span></span><span lang="HI">ஊருக்குள் என்னைப் பற்றிச் செய்திகளைப் பரப்புவீர்கள்<span lang="EN-US">?</span><span lang="HI">உங்களைப் பார்த்து </span></span><span lang="HI">யாராவது மனிதக் கறி வேண்டுமா என்று கேட்டால் நீங்கள் தலையை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்வீர்களா என்ன</span><span lang="EN-US">? </span><span lang="HI">இல்லை ஒரு கிலோ என்ன விலை என்று</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> கேட்டு வாங்கிவந்து வீட்டில் சமைப்பீர்களா </span><span lang="EN-US">?</span><span lang="HI">கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> இப்படியா அவதூறு பரப்புவது</span><span lang="EN-US">? </span><span lang="HI">என்னைப் பற்றி என்னவென்று நினைக்கும் இளைய</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> தலைமுறை</span><span lang="EN-US">?</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">எனக்கு அவதூறு பரப்புபவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதெப்படி ஒருவரைப் பற்றிய கெட்ட விசயங்கள் மட்டும் இவ்வளவு வேகமாகப் பரவி விடுகிறது</span><span lang="EN-US">? </span><span lang="HI">நல்ல</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> செய்திகளென்றால் சம்மந்தப்பட்டவர்களே வந்து குறிப்புகளைச் சொல்லி</span><span lang="EN-US">,</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> </span><span lang="HI">நெளிந்து பின் இறுதியாக அவர்கள் வாயாலேயே சொன்னால்தான் புரிகிறது. தவறான</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> விசயங்கள் மட்டும் வாயைத் திறக்கும் முன்பே தெரிந்துவிடுவது எப்படி</span><span lang="EN-US">?</span></div>
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><span lang="HI">எல்லோருக்குமே தவறானது என்று சொல்லப்படுவதைச் செய்யும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யார் முதலில் செய்கிறது</span><span lang="EN-US">? </span><span lang="HI">யாரோ ஒருவர் முதலில்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> செய்தால்தானே அவன் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணினான்</span><span lang="EN-US">, </span><span lang="HI">நான் இந்தச் சின்னத்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> தப்புத்தானே பண்ணினேன் என்று தப்பிக்க முடியும்.</span></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">தவறென்பதும்<span lang="EN-US">,</span><span lang="HI">சரியென்பதும் நீங்களே உருவாக்கிக் கொண்ட வட்டம்தானே</span><span lang="EN-US">? </span></span><span lang="HI">வட்டத்தையும் நீங்களே வரைந்துகொள்கிறீர்கள்<span lang="EN-US">; </span><span lang="HI">பின் அதைத் தாண்டக்கூடாதென்ற</span> விதியையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள்</span><span lang="EN-US">; </span><span lang="HI">பின் யார் முதலில் விதியை</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> மீறுவதென்றும் எதிர்பார்க்கிறீர்கள்</span><span lang="EN-US">; </span><span lang="HI">உங்களுக்கு விதியை மீறும்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> எண்ணமில்லாவிட்டால் விதியை யார் மீறினால் என்ன</span><span lang="EN-US">, </span><span lang="HI">மீறாவிட்டால் என்ன</span><span lang="EN-US">?</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> </span><span lang="HI">இப்படியிருந்துவிட்டால் அவதூறுகள் அவ்வளவு வேகமாகப் பரவிவிடுமா என்ன</span><span lang="EN-US">?</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">அப்படியென்ன அவதூறு செய்துவிட்டார்கள் என்றா கேட்கிறீர்கள்<span lang="EN-US">? </span><span lang="HI">நீங்கள் யாரோ</span> எவரோ</span><span lang="EN-US">? </span><span lang="HI">இருந்தாலும் நான் இதைச் சொல்லியாக வேண்டும். நான் மாமிசத்திற்கு</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போனதால் மாமிசத்திற்காக மனிதனைக் கடித்தேனாம். இப்படித்தான் ஊரெல்லாம் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இதைப் படித்தபோது எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்ட மிகப் பெரிய பொய் இதுவென்று நான் யாரிடம் சொல்லமுடியும் </span><span lang="EN-US">?</span><span lang="HI">நான் சொல்வதை யார் கேட்பார்கள்</span><span lang="EN-US">?</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
முதலில் நான் யாரென்று உங்களுக்குச் சொல்லவேண்டுமே. உங்களுக்கு <span lang="HI">இலக்கியத்தில் ஈடுபாடிருந்தால் நகுலனின் <span lang="EN-US">“ </span><span lang="HI">ஒரு ராத்தல் இறைச்சி</span><span lang="EN-US">” </span><span lang="HI">என்ற </span></span><span lang="HI">சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அக்கதையில் வரும் நவீனன் என்னும் </span><span lang="HI">எழுத்தாளர் வளர்த்த நாய்தான் நான். அந்தக் கதையைப் படித்திருந்தால் என் </span><span lang="HI">வழக்கு உங்களுக்கு இன்னேரத்திற்கெல்லாம் புரிந்திருக்கும். </span><span lang="HI">படிக்காவிட்டால் என்ன <span lang="EN-US">? </span><span lang="HI">நானே என் வாழ்க்கையையும் வளர்ந்தவிதத்தையும்</span> கொஞ்சம் சுருங்கச் சொல்கிறேன்</span><span lang="EN-US">; </span><span lang="HI">கேட்டுவிட்டு யார் பக்கம்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> நியாயமிருக்கிறதென்று சொல்லுங்கள்.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
என்னை எப்பொழுது என் தாயிடமிருந்து பிரித்து நடுரோட்டில் விட்டார்கள் என்பது எனக்கு ஞாபகமில்லை. அப்பொழுது பசியால் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. சிலர் கல்லால் அடித்தார்கள்<span lang="EN-US">; </span><span lang="HI">சிலர் </span><span lang="HI">குச்சியால் விரட்டினார்கள்<span lang="EN-US">; </span><span lang="HI">சிலர் அவர்கள் வைத்திருந்த பெரிய நாயை ஏவி </span></span><span lang="HI">விட்டார்கள்<span lang="EN-US">; </span><span lang="HI">அவையும் தன் இனமான இன்னொரு இளம் தலைமுறை என்பதைக் கூட</span> யோசிக்காமல் தன் எஜமானர்களின் உத்தரவின்படி என்னைக் குதறின.</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> இப்படியாகவும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">இன்னும் கொடுமையாகவும் கழிந்தது முதல் சில நாட்கள்.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">துன்பங்களே வந்துகொண்டிருந்தால் பூமி உருண்டை என்று கலீலியோ சொன்னது பொய்யாகிவிடுமே. பூமி உருண்டையென்பது மெய்யாகும் விதமாக என்னையும் ஒருவர்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.அவர் வேறு யாருமல்ல</span><span lang="EN-US">;</span><span lang="HI">என் மேல் அவதூறு</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> பரப்பியிருக்கும் எழுத்தாளர் நவீனன் தான். என் மேல் அவதூறு பரப்பவே அவர் என்னை வளர்த்தார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படியும் இருக்கலாம்.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">எனக்கும் அவருக்குமான உறவு<span lang="EN-US">, </span><span lang="HI">ஒரு மனிதன் சாகக் கிடக்கும் நாயின் மேல் </span></span><span lang="HI">காட்டும் பரிதாபமாகத்தான் ஆரம்பித்தது. இவர் இப்படி அவதுறு பரப்புவேன் </span><span lang="HI">என்று அன்றே சொல்லியிருந்தாலும் நான் இவரோடுதான் வந்திருப்பேன். பின்னே என்னைத்தான் எல்லோரும் கல்லால் அடித்தார்களே</span><span lang="EN-US">?</span><span lang="HI">வேறென்ன செய்யமுடியும்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> நான்</span><span lang="EN-US">? </span><span lang="HI">அப்பொழுது எனக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்ததற்காக இப்படி</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> அவதூறு பரப்பலாமா என்ன</span><span lang="EN-US">? </span><span lang="HI">நாய்க்கு எதற்கு உடையென்றா கேட்கிறீகள்</span><span lang="EN-US">? </span><span lang="HI">ஒரு</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> கிழிந்து போன சட்டையை என்னிடம் கொடுத்தபோது இதையேதான் நானும் கேட்க நினைத்தேன். ஆனால் வெளியே என் குரலோ </span><span lang="EN-US">“</span><span lang="HI">வள் வள்</span><span lang="EN-US">” </span><span lang="HI">என்று வந்ததாக ஞாபகம்.</span></div>
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><span lang="HI">எனக்கு ராஜூ என்று கூடப் பெயர் சூட்டியிருந்தார். ஆனால் என்னை ராஜூ என்று அழைப்பதை விடவும் </span><span lang="EN-US">“</span><span lang="HI">ஸ்கோ ஸ்கோ</span><span lang="EN-US">” </span><span lang="HI">என்று அழைப்பதே பெருமையாக இருக்கும். என்னை</span><span lang="HI"> ராஜூ என்றழைத்தாலும் சரி</span><span lang="EN-US">, </span><span lang="HI">ஸ்கோ என்றழைத்தாலும் சரி நன்றாக</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> வாலையாட்டுவேன். இதற்காகவெல்லாம் நான் வேதனைப்படவில்லை.</span></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
அவரோ தனிமையில் இருந்தார். அவரது காதலி அவரைக் கலியாணம் <span lang="HI">செய்துகொள்ளவில்லை. நான் அவரது வீட்டிற்குச் சென்ற இரண்டாவது வருடத்தில் அவரது பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோயினர். இதற்கெல்லாம் அவர்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> அசந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி என்னுடன் பேசவும் செய்தார். அவர் பேசியதில் முக்கியமாக </span><span lang="EN-US">“ </span><span lang="HI">மஹாலட்சுமி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது.</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> பார்க்கலாமா</span><span lang="EN-US">? </span><span lang="HI">என்ன சொல்கிறாய்</span><span lang="EN-US">? “ </span><span lang="HI">உனக்குக் கதை பிடிக்குமா</span><span lang="EN-US">?</span><span lang="HI">குறுநாவல்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> பிடிக்குமா</span><span lang="EN-US">? “ </span><span lang="HI">என்றெல்லாம் கேட்பார். நானும் அவரின் ஒவ்வொரு கேள்விக்கும்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> பதிலாக வாலையாட்டுவேன். கேள்விகள் என்றில்லை</span><span lang="EN-US">, </span><span lang="HI">என்னைப் பார்த்து</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> இருமினாலும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">தும்மினாலும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">விரட்டினாலும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">கத்தினாலும் கூட</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;">வாலாட்டுவேன். உங்கள் வீட்டு நாயும் இதையெல்லாம் செய்கிறதுதானே</span><span lang="EN-US">?</span></div>
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">செய்யாவிட்டால் நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.</span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் புதுப் பழக்கம் வந்தது. <span lang="HI">ஒருநாள் அவரது வேலைக்காரர் - அல்லது எனக்குச் சோறுபோடுபவர் என்றும் சொல்லலாம் - எனக்கு மாமிசம் வாங்கிவந்திருந்தார். நான் முதல் முதலாக</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;">அன்றுதான் மாமிசத்தைக் கண்ணால் பார்த்தேன் என்று சொல்லவேண்டும். இது ஏதோ புதிய உணவாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அதன் சுவையை என்னால் மறக்கமுடியவில்லை. இந்த உணவையே தினமும் ஏன் இவர்கள் தருவதில்லை என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் போடுவதைத்தானே நான் தின்றாக வேண்டும்</span><span lang="EN-US">? </span><span lang="HI">அதுதானே ஒரு அடிமையின் மிக முக்கியக் கடமை</span><span lang="EN-US">?</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">எப்படியோ மாமிசத்தின் சுவை என் வாயில் ஒட்டிக்கொண்டது. அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அடிக்கடி மாமிசம் வாங்கிப் போடத்தான் செய்தனர். ஆனால்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> இதில்தான் என்னைப் பற்றிய அவதூறுக்கான முதல் அத்தியாயம் தொடங்குகிறது.</span></div>
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><span lang="HI">நவீனன் எழுதியிருக்கும் அந்தக் குறிப்பில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் </span><span lang="HI">தெரியுமா <span lang="EN-US">? </span><span lang="HI">ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு இறைச்சி நாளாம். இறைச்சி</span> வேண்டித் தவம் கிடந்தேனாம். இறைச்சி கிடைக்கும் வரை நான் அவரையே சுத்திச்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> சுத்தி வந்தேனாம். எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்</span><span lang="EN-US">? </span><span lang="HI">நான் தினமும்தான்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> அவரைச் சுத்திச் சுத்தி வந்தேன். தினமும்தான் அவரை நக்கினேன். அதையெல்லாம் அவர் எப்படி மறந்தார்</span><span lang="EN-US">? </span><span lang="HI">இதை விடுங்கள். ஒவ்வொரு</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> வெள்ளிக்கிழமையும் நான் இறைச்சிக்காகக் காத்திருந்ததாகக் </span><span lang="HI">குறிப்பிட்டிருக்கிறாரே<span lang="EN-US">, </span><span lang="HI">நாய்களுக்கு வெள்ளியும் சனியும் எப்படித் </span></span><span lang="HI">தெரியும்<span lang="EN-US">? </span><span lang="HI">அது தெரியாமல் நானெப்படிக் காத்திருக்கமுடியும் </span><span lang="EN-US">?</span></span></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">நீங்களாக ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தால் அவர் உங்களிடமிருந்து அதைப் </span><span lang="HI">பெற்றுக் கொள்ளக் காத்திருப்பதாகவும்<span lang="EN-US">, </span><span lang="HI">அவரின் ஒவ்வொரு செயலையும் உங்களின்</span> உபகாரத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்த்து மகிழ்வதும்</span><span lang="EN-US">,</span><span lang="HI">உங்களை நீங்களே</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> தர்மப்பிரபுவாக நினைத்துக்கொள்வதும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">உயர்ந்தவரென்று பிறர் </span><span lang="HI">பாராட்டவேண்டுமென்பதுதானே உங்களின் நோக்கம்<span lang="EN-US">?</span></span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">இதைவிடக் கொடுமையென்னவென்றால் நவீனன் அவரது குறிப்பில்<span lang="EN-US">, </span><span lang="HI">எனக்கு இறைச்சி</span> போடும் முன்னதாக அவருக்குக் காபி கொடுக்கப்படுவதைப் பார்த்து நான்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> நினைத்துக் கொள்வதாக ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுவும் தவறு. எனக்கு இறைச்சி வருவதற்கு முன் அந்த வேலைக்காரன் அவருக்குக் காபி கொடுப்பான். அதனை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது நான் </span><span lang="EN-US">“</span><span lang="HI">உங்க மனித</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;">ஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலு கால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால் தான். இருந்தாலும் நீங்கதான் பிரதானம் என்கிற திமிர்</span><span lang="EN-US">” </span><span lang="HI">என்று சொல்வதுபோல் இருக்கிறதென்று </span><span lang="HI">யூகித்திருக்கிறார். நான் ஒருநாளும் இப்படி நினைத்ததில்லை. சொல்லப்போனால் அவர் காபி குடிக்கும்போது அந்தக் காபியில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> நன்றாக இருக்குமென்று வேண்டுமானால் சில சமயம் நினைத்ததுண்டு.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">எனக்கு வயதாக வயதாக என் எஜமானனின் மேல் அதிக பற்றுதல் உண்டானதென்னவோ உண்மைதான். அடிக்கடி அவரது காலை நக்குவது எனக்கு மிகப்பிடிக்க</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> ஆரம்பித்தது. அவரது காலை நக்காவிட்டால் எதையோ இழந்ததாகவே உணர்வேன். இதைப் பற்றியும் ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுதான் அவர் என்னைப் பற்றிச் செய்த மிகச் சரியான யூகம். அதையும் அந்தக் குறிப்பிலேயே எழுதியிருக்கிறார். நான் அவரது காலை நக்குவதையும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">அவர் அதைச் சகிக்காமல்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> என்னை அடிப்பதையும் பற்றி அந்தக் குறிப்பில் </span><span lang="EN-US">”</span><span lang="HI">நீ ஏன் என்னை அடிக்கிறாய்</span><span lang="EN-US">?</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> </span><span lang="HI">நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்</span><span lang="EN-US">? </span><span lang="HI">நானோ நாய்</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்</span><span lang="EN-US">” </span><span lang="HI">என்றவாறு எழுதியிருக்கிறார். இது உண்மைதான்.</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> எல்லா நாய்களுமே தன் எஜமானனை நக்கத்தானே செய்கின்றன.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">ஆனால் அதற்குப் பிறகு அவர் ஏனோ எப்பொழுதுமே கான்வாஷ் ஷூ அணிந்து கொண்டேயிருந்தார். அவரது ஷூவையும் நான் நக்கத்தான் செய்தேன். அவரது</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> காலைக் காட்டிலும் அவரது ஷூ இன்னும் நன்றாகவே இருந்தது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தது.</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
இதற்குப் பிறகுதான் என் மீதான அவதூறின் இறுதிக்கட்டம் தொடங்கியது. <span lang="HI">ஒருநாள் அவரது நண்பரொருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் </span><span lang="HI">என்னென்னவோ பேசிக்கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவரது நண்பர் என்னைப் பார்த்து எதையோ சொன்னார். பின் இருவரும் சென்றுவிட்டனர்.</span></div>
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><span lang="HI">அதற்குப் பிறகு ஒருவாரம் நான் அந்த வீட்டில் இருந்தேன். பின் எங்கிருந்தோ </span><span lang="HI">வந்த ஒரு வண்டியில் நிறைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூண்டில் என்னையும் ஏற்றிவிட்டார்கள். எதற்காக என்று இதுவரைக்கும் தெரியவில்லை.</span></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px; margin-bottom: 12pt;">
</div>
<div class="MsoNormal" style="background-color: white; margin-bottom: 12pt;">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"></span><br />
<div style="text-align: justify;">
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">நடந்தது இதுதான்.</span></div>
<span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;">
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">ஆனால் நவீனனின் குறிப்பில் அந்த நண்பர் வந்தது வெள்ளிக் கிழமை என்றும்<span lang="EN-US">,</span></span><span lang="HI">அன்று எனக்கு இறைச்சி நாளென்றும்</span><span lang="EN-US">, </span><span lang="HI">நீண்ட நேரமாகியும் எனக்கு இறைச்சி</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;">போடாததால் நான் என் எஜமானனான நவீனனை இறைச்சிக்காகக் கடித்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார். எத்தனை பெரிய அவதூறு</span><span lang="EN-US">? </span><span lang="HI">இறைச்சிக்காகச் சொந்த எஜமானனையே</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"> கடித்துவிடும் அளவிற்கா நான் மோசமாகிப் போனேன். என் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் பழியை நான் எப்படிப் போக்குவது</span><span lang="EN-US">?</span></div>
</span><span lang="EN-US"><div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><br /></span></div>
</span><span lang="HI" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
கடந்த <span lang="EN-US">45 </span><span lang="HI">வருடங்களாக என்னைப் பற்றி மக்களிடம் பரவியிருக்கும் இந்த</span></div>
</span><span lang="EN-US" style="color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 13px; line-height: 18.479999542236328px;"><div style="text-align: justify;">
<span lang="HI">மாயப்பிம்பத்தை நான் எப்படி உடைத்தெரியப் போகிறேன்<span lang="EN-US">? </span><span lang="HI">எனக்கு யார் நீதி </span></span><span lang="HI">சொல்லப் போகிறார்கள்<span lang="EN-US">? </span><span lang="HI">நீங்களா </span><span lang="EN-US">?</span></span></div>
<div style="text-align: justify;">
<span lang="HI"><span lang="EN-US"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span lang="HI"><span lang="EN-US"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span lang="HI"><span lang="EN-US">பின்குறிப்பு : இக்கதை <a href="http://vettibloggers.blogspot.in/2013/12/shortstory49.html">வெட்டிபிளாக்கர்ஸ்</a> நடத்திய சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கதையில் வரும் ஒரு ராத்தல் இறைச்சி கதையைப் படிக்க <a href="http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_13.html">இங்கே</a> தொடவும்! </span></span></div>
</span></div>
</div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-15613120363858234102013-12-17T23:18:00.000+05:302013-12-17T23:18:24.939+05:30இட்லியின் கதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; border: 0px; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 1.5em; margin: 0px 0px 1.5em; orphans: auto; padding: 0px; text-align: left; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<br />
<div id="postcontent" style="border: 0px; margin: 0px 0px 1.5em; orphans: auto; padding: 0px; text-align: left; text-indent: 0px; vertical-align: baseline; widows: auto;">
</div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;">சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருநூறு என்பது மிகச் சமீபமாக இருப்பதால் நானூறு என்று வைத்துக்கொள்வோம்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையின் வடக்குப் பக்கத்தில், இல்லை சென்னையின் வடக்குப் பக்கம் என்றால் இட்லியைக் கண்டுபிடித்தது ஆந்திராகாரர்கள் என்ற காப்பி ரைட் பிரச்சினை வரலாம். அதனால் மதுரையின் வடக்கே என்று வைத்துக்கொள்வோம். மதுரையின் வடக்கே சரியாக எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு இடத்தில் இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது. இருவரின் படைகளும் சம பலம் வாய்ந்தவையாக இருந்தன.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">யுத்தத்தில் மிகைப்படுத்தப்பட்ட தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றால் அது மிகையல்ல. யானைப் படை, குதிரைப் படை , கப்பல் படை என அனைத்துப் படைகளும் போரில் பங்கெடுத்துக்கொண்டன. அந்த நட்ட நடுக்காட்டில் கப்பல் படை எங்கே வந்தது என்ற கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் நீங்கள் அறிவாளி என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனாலும் ஒன்றை மறந்துவிட்டீர்கள் நான் அது காடு என்று எங்கேயும் சொல்லவேயில்லை.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">முதல் நாள் போரின் முடிவில் இரண்டு படை வீரர்களும் மிகச் சோர்வுடன் காணப்பட்டனர்.எந்தப் பக்கத்திற்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடைக்குமென கணிக்கமுடியவில்லை. இரண்டு எதிரி மன்னர்களும் கலந்தாலோசித்தனர் என்பது சற்றே உங்களைக் குழப்பலாம். இருந்தாலும் உண்மையைச் சொல்லியாகவேண்டுமல்லவா?</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரண்டு மன்னர்களும் ஒரு முடிவிற்கு வந்தவர்களாய் அவரவர்களின் படை வீரர்களை மாற்றிக்கொண்டு அதாவது இந்த நாட்டிலிருந்து நூறு படை வீரர்களை எதிரி நாட்டிற்கும் எதிரி நாட்டிலிருந்து நூறு படைவீரர்களை தங்கள் படைக்கும் மாற்றிக்கொண்டனர். அப்போதேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்றெண்ணியே இதைச் செய்தனர். இந்த யுக்தி வேறெந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. ஏன் உலகத்தையே தனது போர் முறையினால் அச்சுறுத்திய ஜெர்மனி கூட இதைச் செய்திருக்கவில்லை என்ற உதாரணமே இதன் சிறப்பை உணர்த்தப் போதுமானது!</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">ஆனாலும் அவர்களின் எண்ணம் தோல்வியுற்றது. வழக்கம்போல இரண்டாம் நாளிலும் எந்த நாட்டிற்கும் வெற்றியோ தோல்வியோ கிடைத்திருக்கவில்லை. அடுத்த நாளும் வந்தது என்றாலும் இதற்கு மேல் இட்லியின் கதையில் போர் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தால் அலுப்புத்தட்டிவிடும் என்பதால் அன்றைய தினத்திலேயே இட்லியைக் கண்டறிச் சொல்லியிருந்தேன்.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">அன்றைய தினம் இரவு சரியாக 8 மணியளவில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, மன்னிக்கவும் வேறு ஏதோ ஞாபகத்தில் இந்தப் பத்தியை எழுதிவிட்டேன்.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">அன்றைய தினம் சரியாக இரவு 8 மணியளவில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் சரியாக இரவு 8 மணி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அப்பொழுது டைட்டன் வாட்சுகள் இந்தியாவில் காலும் பதித்திருக்கவில்லை கையும் பதித்திருக்கவில்லை. அதனால் அமீர்கானும் அந்த விளம்பரங்களில் நடிக்கவில்லை. சரி விடுங்கள்;நமது வேலையைப் பார்ப்போம்.</span><span style="line-height: 1.5em;"> </span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">அன்று இரவு மன்னர் கடுங்கோபத்தில் இருந்தார். எந்த மன்னர் என்று கேக்காதீர்கள் இந்தக் கதையில் முதல் சில பத்திகளில் ஒரு மன்னரைப் பத்திப் பார்த்துக்கொண்டிருந்தோம் அல்லவா அவரேதான். அவரை மறந்திருந்தால் மறுபடியும் அதே போன்றதொரு முகத்தைக் கற்பனை செய்யவேண்டிய அவசியமில்லை. எதோ ஒரு கன்றாவி முகத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள் போதும்.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">கடுங்கோபத்தில் இருந்த மன்னருக்குத் திடீரென்று அகோரப் பசி ஏற்பட்டது. சமையல்கட்டிற்குள் நுழைந்த மன்னர் ஏதேனும் தின்பதற்கு கிடைக்கிறதாவெனப் பார்த்தார். ஒன்றுமில்லை. யாரங்கே எனக் கூப்பிட நினைத்தவர் வருகிறவனும் பசியில் வந்தால் என்ன செய்வதென்று பயந்து எதையும் சொல்லாமலேயே தேட ஆரம்பித்தார். அவரது தேடல் மிகக் கொடூரமாய் இருந்தது. போர்க்களத்தில் கூட இப்படி ஒரு தேடல் அவரிடம் இருந்திருக்கவில்லை. அப்பொழுது திடீரென்று வெற்றுப் பாத்திரம் ஒன்றைக் கீழே தள்ளிவிட்டார். ”தடால் தடால்” என்ற பெரும் சப்தத்துடன் விழுந்தது அந்தப் பாத்திரம். ஆனால் உண்மையில் அது துல்லியமான ”தடால்” என்ற சப்தம் அல்ல. ஏனெனில் அதற்குத்தான் வாய் இல்லையே.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">வெளியில் அரைத்தூக்கத்திலிருந்த காவலனின் காதுகளில் இந்தச் சத்தம் சரியாக விழுந்தது. ஏதோ திருட்டுப் பூனைதான் உருட்டுகிறதென்று நினைத்த அந்த வீரன் கையில் வைத்திருந்த கட்டையை எடுத்து உள்ளே சப்தம் வந்த இடத்திற்கு வீசினான்.சரியாக மன்னரின் தலையில் விழுந்த அந்தக் கட்டை மன்னரை மூர்ச்சையாக்கியது. காவலனும் அப்படியே தூங்கிப் போனான்.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">ஆனால் இங்கே சரியாகக் கவனியுங்கள். இட்லி உருவான கதையின் மிகமுக்கியக் கட்டம் இதுதான். ஆனால் கட்டம் போட்டு எழுத முடியாதென்பதால் வழக்கம்போலவே எழுதுகிறேன்.</span><span style="line-height: 1.5em;"> </span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">அப்படிக் கீழே விழுந்த மன்னரின் கேடயம் அங்கிருந்த அடுப்பின் மீது வைத்திருந்த வெண்ணீர் தயாரிக்கும் பாத்திரத்தின் மீது விழுந்தது. அந்தச் சமயம் மன்னர் சாப்பாட்டைத் தேடிக்கொண்டிருந்த போது கோபத்தில் மேலே தேக்கி வைத்திருந்த அரிசி மூட்டையை குத்தியதால் அந்த அரிசி முழுவதும் அரைக்கப்பட்ட மாவு போல ஆகியிருந்தது.அந்த அரிசிமாவு அப்படியே கேடயத்தில் நிரம்பியது.</span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">சில மணிநேரத்தில் மன்னருக்கு சுய நினைவு திரும்பியது. அப்பொழுதும் அவருக்கு உணவின் மீதிருந்த தேடல் குறைந்திருக்கவில்லை. அப்பொழுதுதான் அவர் தான் கீழே கிடப்பதையும் அருகிலேயே கேடயமும் கிடப்பதையும் கேடயத்தில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதையும் பார்க்க நேரிட்டது. உணவுத் தேடலில் இருந்த மன்னர் அது என்னவென்று கூட யோசிக்காமல் அப்படியே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.</span><span style="line-height: 1.5em;"> </span></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 1.5em;"><div style="text-align: justify;">
<span style="line-height: 1.5em;">இதோ நாம் எதிர்பார்த்த அந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிட்டது. ஆம் இட்லி என்ற மிகச் சிறந்த உணவு வகை நமக்குக் கிடைத்துவிட்டது. ஆனால் அதற்கு யார் இட்லி எனப் பெயரிட்டது என்ற உங்களின் கேள்வியை விரைவில் வேறொரு கதையின் மூலமாகத் தீர்க்கிறேன். ஆனால் உங்களில் யாரும் அந்தப் போர் என்னவாயிற்று என்று கேட்கமாட்டீர்களென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்!</span></div>
</span></div>
செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-45262931213973752702012-08-08T17:09:00.000+05:302012-08-08T17:56:02.957+05:30வரிக்குதிரையின் கதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">வரிக்குதிரை பிறந்த கதைக்கும் திரேதா யுகத்தில் நான் பிறந்ததற்கும் ஒரு நீண்ட நெடும் வரலாற்றுத் தொடர்புண்டு.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">திரேதா யுகத்தின் மார்கழி மூன்றாம் நாள் அர்த்த ஜாமத்தில் பூமியே அதிரும்படியான ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. அப்படி ஒரு அழுகையை இது வரையிலும் இப்பூவுலகம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. காட்டில் ஒன்றோடொன்று சண்டையிட்டு கண்களில் தீ ஜுவாலையைக் கக்கிக்கொண்டிருந்த இரு சிங்கங்கள் இந்த அழுகையைக் கேட்டுத் தத்தமது கோபத்தை மறந்து பயத்தில் நடுநடுங்கின.இருள் கூட விரைவாக ஓடி விட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டது. ஆம் அப்பொழுதுதான் கடவுளின் முதல் குழந்தையாக நான் பிறந்திருந்தேன்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தேன். என் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று கூறுவது இங்கு சிறந்த உதாரணமென்றாலும் கடவுளின் குழந்தையாகப் பிறந்துவிட்டதால் அசுரவேகம் என்பது இப்பொழுது மட்டும் சரியாகாது.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">எனக்கு 3 வயதிருக்கும் போது LKG அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனது தாயார். ஆனால் அப்பொழுது அந்த வசதியில்லாமற் போகவே 5 வயதாயிருக்கும்போது எங்கள் நாட்டிலிருந்த சிறந்த ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக அனுப்பினார்கள் என்னை.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">முதல் நாள் எனது குருகுல வாசம் மிகச்சிறப்பாகவே இருந்தது எனக் கூறலாம். ஆனால் இது நடந்து கோடான கோடி வருடங்களாகிவிட்டதால் என்னால் சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை.அப்பொழுது ஜுனியர் ஹார்லிக்ஸ்சும் இல்லாததால் நான் TALLER,STRONGER,SHARPER ஆவதற்கான வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்படவில்லை.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">இரண்டாம் நாள் என் குருகுலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் வரிக்குதிரை என்ற ஒரு புதிய இனம் உருவாகக் காரணமாயிருந்தது. ஆம் நான் சரியாக வீட்டுப்பாடம் எழுதாதைக் கண்டு என் குலகுரு அவரது கண்களை வியாழன் கோள் அளவு பெரிதாக்கி அதனைச் செவ்வாய்க் கோள் போலச் சிவக்க வைத்து என் முதுகில் ஓங்க ஒரு குத்து விட்டபடியே கேட்டார்“ஏன்டா TWO RULE,FOUR RULE எழுதல?"</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">அப்பொழுது “ TWO RULE " என்ற ஒரு வகையான நோட்டுப்புத்தகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அந்த அப்பாவி ஆசிரியர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த அடிதான் வரலாற்றில் ஒரு புதிய உயிரினத்தையும் உருவாக்கும் என்பதையும் அறியாமல் கோபக்கனல் தெரிக்க என்னைப் பார்த்துகொண்டிருந்தார்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">நான் அழுதுபுரண்டு கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென எனது தந்தையான கடவுளிடம் முறையிட்டேன். ஆனால் சாந்த சொரூபமான , கருணையே உருவான அவர் சொன்னார் “ ஆசிரியரை அடிக்க நினைப்பது பெருங்குற்றம். ஒருகாலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.காலையில் உனக்கு வரி போட்ட நோட்டு வாங்கித் தருகிறேன் ” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">மறுநாள் காலையில் நானும் எனது தந்தையும் வரிப்போட்ட நோட்டிற்காய் உலகெங்கும் வலம் வந்தோம். கிடைத்தபாடில்லை. கடுங்கோபமடைந்த என் தந்தை “எல்லாம் வரியாகப் போகக் கடவது” என்று சபித்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">உலகமே வரிமயமானது. வரி மனிதர்கள், வரி யானைகள், வரி நோட்டுகள் , வரி சிங்கங்கள், வரி மலைகள் , வரி கொசுக்கள் , வரி வரியான நத்தைகள் , வரிப் பூரான்கள் இன்னும் ஏன் வரி வைரசுகள், வரி பாக்டீரியாக்கள் , வரி ரத்தச் சிவப்பணுக்கள், வரி ரத்த வெள்ளை அணுக்கள், வரி நியூட்ரான்கள், வரி எலக்ட்ரான்கள், வரி புரோட்டான்கள், </span>
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">வரி ஹிக்ஸ் போஸான் துகள்கள் என பூவுலகில் இருந்த அனைத்தும் வரிவடிவமாகிவிட்டிருந்தது. எங்கள் குருவும் இதற்கு விலக்காகவில்லை. அவரது உடலும் வரிவரியாக மாறியிருந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எனது குரு ” என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு, மாபாதகம் செய்துவிட்டேன் , மன்னித்தருளள் வேண்டும், உங்கள் சாபத்தை திரும்பப்பெற்றுக் காத்தருளள் வேண்டும், அடியேனை ரட்சிக்க வேண்டும் ” என்றவாரு என் தந்தையின் பாதங்களைப் பிடிக்கவந்தார். </span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">” குருதேவா ,என்ன காரியம் செய்கிறீர்கள்.? நீங்கள் என் கால்களைப் பிடிப்பதா? இதைவிடப் பெரிய பாவம் எனக்கில்லை! “ என்றவாரு விலகிக் கொண்ட என் தந்தை “ எனது சாவம் விமோசனம் பெற இந்தக் குடத்தில் உள்ள நீரை எல்லா உயிர்கள் மீதும் தெளித்தால் போதும் “ என்று கூறிவிட்டு ஒரு வீரனையும் அவனுக்கு ஒரு குதிரையும் கொடுத்தனுப்பினார்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">அவ்வீரனும் பூலோகம் முழுவதும் சுற்றி எல்லா உயிர்கள் மீதும் தெளித்துக் கடவுளின் சாபத்தைப் போக்கினன். ஆயினும் அவன் ஏறிச் சென்ற குதிரையை மறந்தனன்.அதன் மீது தெளிக்காமல் விட்டுவிட்டதால் அதன் உடல் அப்படியே வரிவரியாய் நிலைத்துவிட்டது. அந்த வரிக்குதிரையின் சந்ததிகளே இன்றும் வரிக்குதிரைகளாய் வாழ்ந்து வருகின்றன.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">இத்துணை நேரமும் இதைக் கவனமாகப் படித்த உங்களை வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.</span></div>
<div style="text-align: justify;">
<br style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;" /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: Helvetica, Arial, Verdana, sans-serif; font-size: 14px; line-height: 21px;">நீதி : இத நீங்க நம்புனா அதுக்கு நான் ஒன்னுமே பண்ணமுடியாது :)</span>
</div>
</div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-54842390838848311572012-03-26T12:17:00.000+05:302012-03-26T12:19:47.776+05:30விகடனுக்கு நன்றி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னை விட அறிவிலும், ஆற்றலிலும், புகழிலும் சிறந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க, நான் படித்து ரசித்த விகடனின் “ நானும் விகடனும்” பகுதியில் என்னையும் எழுதச் சொன்னபோது சந்தோசத்தில் பேச நா எழவில்லை. எப்படி இன்றைய நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் போகிறேனோ தெரியவில்லை? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படிப்பதில் ஆர்வமில்லாதிருந்த காலத்தில் அல்லது படிப்பதைப் பற்றிய அறிமுகம் இல்லாத காலத்தில் பொழுதுபோக்காக நூலகங்களுக்குச் சென்று வரும்போதும், புத்தகக் கடைகளில் ஆங்காங்கே தொங்கும் வண்ண வண்ணப் போஸ்டர்களிலுமே விகடன் எனக்கு அறிமுகமானது. ஆனால் இணையம் வந்த பிறகு, கதைகள், கவிதைகள் என்று எதையாவது எழுத ஆரம்பித்த காலங்களில் அதனை அச்சில் காணும் ஆர்வமும் எல்லோரையும் போலவே எனக்கும் ஏற்பட்டது. சில நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள் என்று நான் சொல்லிக் கொண்டவை என சில கிறுக்கல்களை, கணினியில் எழுதி அழகாகக் கிறுக்கல் இல்லாமல் அனுப்பியும் இருக்கிறேன். நாளாக நாளாக வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க விகடனைப் பற்றிய தெளிவும், அதன் வசீகரமும், மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் செல்வாக்கும் என்னைப் பிரமிக்க வைத்தது. அந்தச் சமயத்தில்தான் நான் தமிழ்க் கீச்சுலகில் அடியெடுத்து வைக்க நினைத்து, அப்படி வைத்தால் கணினி உடைந்துவிடும் என்று பயந்து, எனது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஒரு கீச்சர் கணக்கினைத் தொடங்கினேன். சில வாரங்களுக்குப் பிறகு என்னால் என்னையே நம்ப இயலாத அளவிற்கு எனது கீச்சொன்றை தனது வலைபாயுதே பகுதியில் பிரசுரித்து அளவில்லாத மகிழ்ச்சியில் தள்ளியிருந்தார்கள். மீண்டும் பல முறை எனது கீச்சுக்களை பிரசுரித்து என்னையும் ஊரறிய வைத்த பெருமை விகடனுக்கே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சில மாதங்கள் கரைந்திருந்தது. கரைப்பார் கரைக்காமலே தானே கரைவதில் காலமும் ஒன்று. அப்பொழுது எனக்கு இன்னுமொரு பேரானந்ததையும் தந்திருந்தார்கள்.ஆம். விகடனின் என் விகடன் இதழில் கோவைப்பதிப்பின் வலையோசை பகுதியில் எனது வலைப்பதிவுகளைப் பற்றியும் சிறு அறிமுகம் செய்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நான் எஃப்.எம் கேட்பதையே விட்டிருந்தேன். FM கேட்டாலே கோபம் வருகிற மாதிரி ஒரு உணர்வு. எனக்கே என் மேல் கோபம். அந்த RJ விடம் இருக்கிற திறமை ஏன் என்னிடம் இல்லை? ஏன் இன்னும் RJ ஆகவில்லை என்று கோபம்கொள்ளும் நிலையில் இருந்தேன். அப்பொழுது இந்த ஊக்குவிப்பு அல்லது அங்கீகாரம் கொஞ்சம் ஊக்கமளித்தது. அதைப் பற்றி அப்பொழுது எழுதிய பதிவிலிருந்து கொஞ்சம்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;">”எனக்கு இத எப்படி எழுதுறதுனே தெரியலை. அவ்ளோ சந்தோசமா இருக்கேன். நானெல்லாம் இத நினைச்சுக் கூடப் பார்க்கலை. ஏன்னா கொங்கு மண்டல வலைப்பதிவர்களில் என்னை விட, ரொம்ப நல்லா எழுதுறவங்க ஆயிரம் பேர் இருக்காங்க. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பெரும்பாலும் விளையாட்டா எழுத ஆரம்பிச்சதுதான் என்னோட இந்த கோமாளி வலைப்பதிவு. சமூக விசயங்களை எழுதுறது ரொம்பவே குறைவு. ஏன எழுதுறதே இல்லைனு கூடச் சொல்லலாம். </span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;"><br /></span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;">நான் வலைப்பதிவு எழுத வந்ததின் நோக்கமே மீடியாவில், முக்கியமா என்னோட லட்சியமான ஆர்.ஜே ஆவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவும் அப்படிங்கிறதுதான். கடந்த இரண்டு வருசமா எனக்குத் தோன்றிய எதையாவது, எனக்குத் தெரிஞ்ச நடைல எழுதிட்டு வந்திருக்கேன். முக்கியமா இந்த வலைப்பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு வாசிக்கும் பழக்கமே கிடையாது. பிறகு சிறிது சிறிதாக வலையுலக நண்பர்களின், முக்கியமா எங்க டெரர்கும்மி நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் எனக்குப் படிக்கும் பழக்கமும், இலக்கியத்தைப் பற்றின ஒரு தெளிவும் ஏற்பட்டுச்சுனு சொல்லலாம். உண்மைல அவுங்க இல்லைனா நான் இந்த அளவுக்குக் கூட வளர்ந்திருக்க முடியாது.எல்லோரும் தங்களது வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலிட்டுக் காத்திருக்கும்போது மின்னஞ்சலே ஆனுப்பாம என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தினது ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. அதே சமயம் என் நண்பர்கள் யாரேனும் என் வலைப்பதிவைப் பத்தி மின்னஞ்சலினார்களா என்று தெரிவயில்லை. அப்படி யாரேனும் அனுப்பியிருந்தா அவுங்களுக்கும் என்னோட நன்றிகள்.</span></i><br />
<i><span style="color: blue;"><br /></span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;">பெரும்பாலும் நகைச்சுவைங்கிற பேர்ல நான் எழுதி வந்ததெல்லாம் சிரிக்க வைத்ததோ இல்லையோ, ஆனா இப்பக் கொஞ்சம் ஓரளவு நல்லா எழுதிப் பழகியிருக்கேன்னு நினைக்கிறேன். இந்த சமயத்தில் இப்படி ஒரு ஊக்குவிப்பு என்னை மேலும் சிறப்பா எழுதனும்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கு.</span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;"><br /></span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue;">ஆர்.ஜே ஆகணும்கிற என்னோட கனவு எப்ப நிறைவேறும்னு தெரியலை. இப்பலாம் FM கேக்கவே பிடிக்கலை. எதாச்சும் நிகழ்ச்சி கேட்டா என்னையறியாமலே கோபமும், அழுகையும் வருது. உண்மையில நமக்கு அந்தத் தகுதி இல்லையோனு கஷ்டமா இருக்கு. நானே ஒரு எப்.எம் ஸ்டேசன் தொடங்கி, இப்போ இருக்கிற வானொலிகளை விடத் தரமான, உருப்படியான விசயங்களோட, மக்களை சந்தோசப்படுத்தும் நிகழ்ச்சிகளை வழங்கனும்னுதான் ஆசை. அதிகமா ஆசைப்படுறேனோனு அடிக்கடி தோணும். ஆனா இது மாதிரி சின்னச் சின்ன சந்தோசங்கள், ஊக்குவிப்புகள் என்னை என்னோட லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து போகனும்கிற ஒருவிதமான தைரியத்தைக் குடுக்குதுனே சொல்லலாம். அந்த வகையில் கண்டிப்பா விகடனுக்கு என்னோட மிகப் பெரிய நன்றியைத் தெரியப்படுத்தியே ஆகணும். அதே மாதிரி ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் என்னோட நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கேன்!”</span></i></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-MMIypOvc8Zc/T3ARcOv6hVI/AAAAAAAAAKg/MbT2I0OfTqw/s1600/vikatan+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-MMIypOvc8Zc/T3ARcOv6hVI/AAAAAAAAAKg/MbT2I0OfTqw/s320/vikatan+1.jpg" width="224" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-CLJiz4uuelk/T3AReBO5E6I/AAAAAAAAAKo/uHvFo3r9wd8/s1600/vikatan+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-CLJiz4uuelk/T3AReBO5E6I/AAAAAAAAAKo/uHvFo3r9wd8/s320/vikatan+2.jpg" width="213" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பதிவு என்னோட கோமாளி வலைப்பதிவ ஆனந்த விகடன் - என் விகடன் கோவைப் பதிப்புல வந்த ”வலையோசை” பகுதியில அறிமுகப்படுத்தின போது 26.03.2012 ல எழுதினது. அதன் நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாவே இருக்கு. அப்புறம் சில மாதங்களில் நான் நினைச்சது மாதிரியே என்னோட லட்சியம் நிறைவேறிச்சு. ஒரு பிரபல தனியார் பண்பலை வானொலியில் ஆர்.ஜே ஆனேன். அப்பவும் இதே மாதிரி ஒரு தடவ வலையோசையில் என்னைப் பத்தியும், என் நிகழ்ச்சி பத்தியும் எழுதியிருந்தாங்க. அப்போ எழுதின பதிவிலிருந்து...<br />
<br />
<i><span style="color: blue;">“ இந்த வாரம் எனக்கு ரொம்பவே சந்தோசமான வாரம். ஆமாங்க! இந்த வார ஆனந்தவிகடன் - வலையோசைல என்னோட நிகழ்ச்சி பத்தி எழுதி, என்னைய நல்ல ஆர்.ஜேனு சொல்லிருக்காங்க. இதுக்கு முன்னாடியே என்னோட இந்த வலைப்பதிவைப் பத்தி வலையோசைல சொல்லியிருந்தாலும், இந்தத் தடவ அத விட சந்தோசமா இருக்கேன். காரணம் என்னன்னா, என்னோட மானசீக குருவான ”மா.கா.பா ஆனந்த்” அண்ணன 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆர்.ஜே னு விகடன் விருது கொடுத்திருக்காங்க. அதே பத்திரிக்கைல என்னையும் நல்ல RJனு சொன்னதுதான் என் சந்தோசத்துக்குக் காரணம்!”</span></i><br />
<br />
இப்படியாக விகடனால் நான் எத்தனையோமுறை மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நம்மைப் பற்றிய ஒரு செய்தி ஒலி, ஒளி ஊடகங்களைக் காட்டிலும் அச்சு ஊடகத்தில் வரும்போது அதிக சந்தோசத்தையும், மதிப்பையும் பெறுகிறது. ஒலி, ஒளி ஊடகங்களில் அது ஒளிபரப்பாகும்போதே கேட்டாலோ, பார்த்தாலோதான் உண்டு. என்னதான் அதற்குப் பிறகு அதனைப் பதிவு செய்து வைத்துக் கொண்டாலும் அதன் உயிர்ப்பு நீடிப்பதில்லை. ஆனால் அச்சு ஊடகங்கள் அதே உயிர்ப்புடன் இருப்பதே அவற்றில் வரும் நமது படைப்புக்களைக் காலம் தாண்டியும் வாழவைக்கிறது. எங்க எஃப்.எம் RJ's பத்தி விகடன்ல எழுதினப்ப அவுங்களோட சந்தோசத்தை நேர்ல பார்த்திருக்கேன். அத எழுத்துல சொல்லமுடியாது. சமகால பல்சுவை இதழ்களில் விகடனுக்கு நிகர் விகடன்தான். இந்தச் சமகாலம் என்பது விகடன் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரையும், இனியும் தொடர்வதுதான் ஆச்சர்யம்!<br />
<br />
அன்புடன்<br />
செல்வா.<br />
உரிமையாளர் - இசை எஃப்.எம்.<br />
01.07.2018</div>
<div style="text-align: justify;">
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com95tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-36575076634862726792012-03-21T13:21:00.003+05:302012-03-21T14:18:53.812+05:30கோழிக்கிறுக்கல் - தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு வரலாறு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;"><span style="font-family: arial; text-align: -webkit-auto;">வரலாற்றினை மறந்துவிடுவது தமிழர்களாகிய நமக்கொன்றும் புதிதில்லை. போற்றி வளர்க்க வேண்டிய வரலாறுகளைக் கேலிக்குரியதாக்கி, வரலாறு படிப்பவர்களைக் கண்டால், "வரலாறு படிப்பதை விட்டுவிட்டு வரலாறு படைக்கக் கற்றுக்கொள்" என்றவொரு இலவச அறிவுரையை வழங்கிவிட்டுப் பரிகசித்துச் செல்லக்கூடிய ஒரு சூழலில், எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் அழிந்து போவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. </span></div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">ராஜ ராஜ சோழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மதிப்பெண்களாக்கி பாடப்புத்தங்களில் உறங்க வைத்துவிட்டோம். எமி ஜேக்சன்கள் வந்து “மறண்டுட்டியா?” என்று கேட்காமலோ, நமீதாக்கள் வந்து தங்களின் திரையுல அனுபவத்தை மச்சான்களிடம் சொல்லாமலிருந்தாலோ சுதந்திர தினத்தைக் கூட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். சரி போனது போகட்டும். கோழிக் கிறுக்கல் என்றவொரு பதத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள நெடும் வரலாற்றுத் தகவலை உங்களிடம் சேர்ப்பிக்கவே இவ்வளவு பீடிகை போட வேண்டியிருந்தது.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">கோழிக் கிறுக்கல் என்றால் கிறுக்கர்கள் கிறுக்குத்தனமாய் எழுதுவது என்பதே பலரது எண்ணமாயிருக்கிறது. உண்மையில் கோழிக் கிறுக்கலுக்கும் கிறுக்குத் தனத்திற்கும் அணுவளவு கூட, ஏன் அணுக்கரு அளவிற்குக் கூடச் சம்பந்தம் இல்லை. இனி வரலாற்றுக்குள்...</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்னர் உலகைக் கோழிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோழிகளே மன்னர்களாக உலகை ஆண்டுவந்தன. அந்தக் காலகட்டங்களில் கோழிகள் பேசும் திறமையுடையவையாகவும், பாடும் திறமையுடையவையாகவும் திகழ்ந்து வந்தன. மனிதர்கள் அவர்களுக்கு அதாவது அவைகளுக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.</div><div style="font-family: arial; text-align: justify;"></div><div style="font-family: arial; text-align: justify;">பல நூறு ஆண்டுகள் கோழிகளின் அரசாட்சியே நடைபெற்று வந்தது. கோழிகளும், அவற்றின் அடிமைகளான மனிதர்களும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். வானம் பெய்யெனப் பெய்தது என்பதைக் காட்டிலும் கோழி கொக்கரித்தாலே பெய்தது என்று சொல்வது சரியாக இருக்கும். தற்பொழுது வாழும் கோழிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் இவைகளா ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்து ஆண்டுவந்தன என்று நம்புவதற்கு சற்றுச் சிரமமாகவே இருக்கும். இருந்தாலும் வரலாறு என்ற ஒன்று நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால்... மன்னிக்கவும்; அது என்ன கற்றுக் கொடுத்ததென்று நான் மறந்துவிட்டேன்.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">இப்படியொரு பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேதான் அந்த பானம் அறிமுகமாகியிருந்தது. அந்தப் பானத்திற்கு நாடு நகரத்தில் இருந்த அனைத்து ஜீவ ராசிகளும் அடிமைப்பட்டுப் போயிருந்தன. மனிதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்த கோழிகளும் கூட அப்பானத்திற்கு அடிமையானதென்று தெரிகிறது. கோழியும் இதற்கு விதிவிலக்கல்ல. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தவரி. கோழியும் இதற்கு அடிமையாகிவிட்டது. </div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">சில வாரங்களுக்குப் பிறகு கோழி அரசன் அலுவலக நேரத்திலே கூட சோமபானம் செய்யத் தொடங்கிவிட்டான். நாடு நகரமெல்லாம் இதே பேச்சாயிருந்தது. சோமபானத்திற்கு அடிமைப்பட்டிருந்த கோழியின் ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் மக்களும், கோழிகளும் சோமபானத்திற்கு அடிமையாக இருந்தபடியால் யாருக்கும் மன்னரை எதிர்த்துப் போரிட விருப்பமில்லை. இந்தச் சமயத்தில்தான் கடவுள் தான் படைத்த கோழியூர் அரசாட்சியைப் பார்வையிட தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.</div><div style="font-family: arial; text-align: justify;"></div><div style="font-family: arial; text-align: justify;"><br />
அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த கோழியானது அதிகப்படியாக சோமபானம் செய்ததால் அரியணையிலிருந்து மேலே எழ முடியாமல் மயங்கி விழுந்தது. ஆனால் இந்த இடத்தில் விழுந்தான் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவைகள் அப்பொழுதெல்லாம் ஆறறிவு கொண்டு உயர்திணை உயிர்களாக வாழ்ந்துவந்தன.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">கடவுளும் நேராக அரச தர்பாருக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் அரசரோ சோமபானத்தால் மயங்கிக் கிடக்கிறார். இப்படியொரு அரசரைப் பார்த்தால் கடவுள் உடனே சிரச்சேதம் செய்யச் சொல்லிவிடுவாரே என்று பயந்த கோழி தமக்குப் பதிலாக சிறிது நேரம் யாரையேனும் அரியணையில் அமர்த்திவிட எத்தனித்தது. அந்த நேரம் பார்த்து அரசவையில் எந்த ஒரு கோழியும் இருக்கவில்லை. ஆனால் கடவுள் நெருங்கிவிட்டார். இந்தச் சமயத்தில்தான் அந்தப் புத்திசாலிக் கோழி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது. ஆம்; அப்பொழுது தனது அடிமைகளில் இருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, கடவுள் அரசவையிலிருந்து வெளியேறும் வரையில் அரியணையில் அமர்ந்து தன்னைப் போல் நடிக்குமாறு கூறி, தன் தலையில் இருந்த கிரீடத்தையும், சில கோழிப் பொங்குகளையும் அணிவித்துவிட்டு அரியணையிலிருந்து எழுந்து.., இல்லை விழுந்து வழிவிட்டு அருகில் இருந்த அறையில் சென்று ஒளிந்து கொண்டது.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">கடவுளும் வந்தார். சிறிது நேரம் மனித அடிமையும் கோழியைப் போல நடித்தது. இறுதியில் கடவுள் விடைபெறும் தருணத்தில், நாட்டில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை ஒரு ஓலையில் எழுதித் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அரசனாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமையும் ஏற்கெனவே கோழி சொன்னதைப் போல ஒரு ஓலையினை எடுத்துக் குறைகள் எதுவுமில்லையென்று எழுதிக் கடவுளிடம் நீட்டினான். ஆனால் கையெழுத்து அழகாயிருந்தால் எங்கே தன்னை ஒரு மனிதன் என்று கண்டுபிடித்துவிடுவாரோ என்றஞ்சி கோழியின் கையெழுத்தைப் போல கிறுக்கிக் கிறுக்கி எழுதிக் கொடுத்தான்.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">அதை வாங்கிப் பார்த்த கடவுள் ” என்ன கோழி கிறுக்கினாப்ல இருக்கு? “ என்றாராம். </div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">கோழியாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமைக்குத் தூக்கிவாரிப்போட்டது. கடவுள் எப்படி தான் ஒரு கோழி அல்ல என்பதைக் கண்டுபிடித்தார் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே சோமபான மயக்கத்திலிருந்த கோழியானது ஓடோடி, பறந்தோடி, உருண்டோடி வந்து கடவுள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி “ மகா பிரபோ! என்னை மன்னித்தருளுங்கள்! சோமபான மயக்கத்தில் செய்யக்கூடாதது செய்தேன். என்னைக் காத்தருளுங்கள்” என்றவாறு கதறத் தொடங்கியது. அதன் கதறலில் அண்ட சராசரங்கள் நடுநடுங்கின. கேலக்சிகள் எனப்படும் பெருவெடிப்புகள் வெடித்தன. எரிமலைகள் வெடித்தன. தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த கொள்ளுப்பட்டாசுகள் வெடித்தன. </div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">சாந்தமே உருவான கடவுளுக்கு எல்லாம் விளங்கியது. அவர்தானே இந்தத் திருவிளையாடைலை நிகழ்த்தியது. சிவாஜியோ, தனுசோ இல்லாததால்தான் கடவுளே திருவிளையாடல் நிகழ்த்தினார் என்று நீங்கள் இப்பொழுது எண்ணினால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு நேரமில்லை. </div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">அதே சமயம் கடவுள் பெருங்கோபம் கொண்டெழுந்தார். கோழி எத்தனையோ பிரயாசைப்பட்டும் அவரின் கோபத்தை அடக்கமுடியவில்லை. இறுதியாக அவரின் சாபத்திற்கு ஆளானது கோழி. அவரின் சாபத்தினாலேதான் இப்பொழுது கோழிகள் மனிதனின் அடிமைகளாகவும், அல்லது வளர்ப்புப் பிராணிகளாகவும் வாழ்ந்துவருகின்றன. </div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">இந்த வரலாற்றினைச் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆயினும் இதுவே உண்மை என்பதற்குச் சில உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">*.பண்டைய மன்னர்கள் தங்கள் தலைகளில் கோழிப் பொங்கினை வைத்துக் கொண்டிருப்பதைப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த வழக்கம் இந்த நிகழ்வுக்குப் பிறகே வந்தது.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">*.கோழிகளின் கால் விரல்கள் இப்பொழுதும் நமது கை விரல்களைப் போலவே, அதாவது நமது உள்ளங்கைகளைப் போலவே காணப்படுகின்றன.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">*. கோழிகள் எதையாவது , எப்போதும் தனது கால்களால் கிளறிக் கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றின் மரபணுவில் பதிந்துள்ள எழுதும் கலையே.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">*.பண்டைய காலத்துத் தலைவர்களும் கோழிப் பொங்கினை தலையில் சூடியிருப்பது போன்ற சித்திரங்களும், திரைப்படங்களும் இந்த வரலாற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;">வரலாறுகளை மறவாதீர். வரலாறுகளே நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுகின்றன. எனவே வரலாறுகளைப் படியுங்கள். படிக்க விருப்பமில்லாதவர்கள் இதுபோன்ற வரலாறுகளைக் கற்பனையாகவாவது படைத்து அடுத்தவரின் கண்களையும், நேரத்தையும் வீணடியுங்கள். நன்றி.</div><div style="font-family: arial; text-align: justify;"><br />
</div><div style="font-family: arial; text-align: justify;"><b>இந்த வரலாற்றின் நீதி</b> : பணியின் போது சோமபானம் செய்வதைத் தவிர்ப்பீர்!</div><div style="text-align: justify;"><br />
</div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-2070182447204170392012-03-05T14:53:00.001+05:302012-03-05T14:56:44.349+05:30இன்னும் ஒரு எலி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">இன்றுடன் அவன் கதை முடிந்தது. ஆறுமாத கால எதிரியை எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து இறுதியாகச் சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்ல முடிந்திருக்கிறது. இதோ என் கண் முன்னால் தன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு , கோரமாகச் செத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எவ்வளவுதான் தொல்லைகள் கொடுத்திருந்தாலும் ஒரு அஃறிணை உயிரான எலியை அது என்று விளிக்காமல், அவன் இவன் என்று விளிப்பது உங்களுக்குக் கொஞ்சம் அசூசையாக இருக்கலாம். ஆனால் அவன்( அது) என் வீட்டிற்கு வந்த கடந்த ஆறு மாத காலத்தில் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடூரங்களைத் தெரிந்து கொண்டால் அவனைத் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடிக்கச் சிபாரிசு செய்வீர்கள்!<br />
<br />
கிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இந்த ஊரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில்தான் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊரிலிருந்து நான் பணிபுரியும் இந்த ஊர் மிகத் தொலைவில் உள்ளதாலும், இந்த ஊரிலிருந்து அருகில் இருக்கும் மற்றொரு வசதி படைத்த நகரமும் கொஞ்சம் நெடுந்தொலைவிலேயே இருக்கிறபடியால் இங்கேயே , இந்த ஊரிலேயே தங்கித் தொலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன். இந்த ஊரில் தங்கத் தொடங்கிய முதல் நான்கு மாதங்கள் நன்றாகத்தான் கழிந்தன.ஐந்தாவது மாதத்தின் முதலாவது வாரத்தின் எட்டாவது நாளில்தான் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் இந்தப் படுபாதகன். வாரத்திற்கு எப்படி எட்டாவது நாள் என்று குழம்பவேண்டாம். இவனது கொடூரத் தொல்லைகளால் நான்தான் அவ்வாறு தவறுதலாக எழுதிவிட்டேன்.<br />
<br />
கடந்த ஆறுமாத காலமாக நான் பெற்ற துன்பங்களையும், துயரங்களையும் எழுத இந்த உலகத்திலுள்ள காகிதங்கள் போதாது. இதெல்லாம் போதாதென்று “ மதியழகன் சார்” என்கிற எனது அழகான பெயரை மாற்றி “ எலிக்குட்டி வாத்தியார் “ என்னும் கேவலமான பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறான். என்னதான் எனக்குச் சரிசமமான எதிரியென்றாலும் இனியும் இந்தச் <strike>சாதாரண </strike>பொல்லாத எலியை அவன், இவன் என்று விளித்தால் நீங்கள் கொஞ்சம் குழம்பிப் போவீர்கள் என்பதற்காக இனிமேல் “அது” என்றே எழுதுகிறேன்.<br />
<br />
இவனைக் கொன்றொழிக்கக் கடந்த ஆறு மாத காலமாக நான் எடுத்த நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட ராவணனைக் கொல்ல ராமன் எடுத்திருக்கமாட்டான். ராவணனைக் கொல்ல அவன் தம்பியே ராமனுக்கு உதவியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல இதனைக் கொல்லவதற்கு எனக்கு உதவ, இதன் உயிர் எங்கே இருக்கிறதென்று சொல்ல இந்த எலிக்கு ஒரு தம்பி கூட இல்லை. இருந்தால் மட்டும் எங்கிருந்து கண்டுபிடிப்பது? எல்லா எலிகளும் குடும்ப அட்டை வைத்துக்கொண்டு இலவச அரிசி வாங்கியா வாழ்க்கையை ஓட்டுகின்றன?<br />
<br />
இது என் வீட்டில் அத்துமீறி நுழைந்த முதல் இரண்டு நாட்களில் மட்டும் எனக்கு 800 ரூபாய் செலவு. அது ஒன்றும் திறந்திருந்த வீட்டுக் கதவின் வழியே திருடன் நுழைவதைப் போல பூனை நடைபோட்டுக் கொண்டு நுழையவில்லை. அது பூனை நடை போட (CAT WALK) என் வீடென்ன பேஷன் ஷோ மேடையா ? ஒருநாள் நள்ளிரவில் என் வீட்டுக் கூரையில் “ கரக் கரக் “ என்ற சத்தம் கேட்டது. தூக்கம் வராததால் கரப்பான் பூச்சிதான் "ஒய் திஸ் கொலைவெறி “ பாடலை தனது மொழியில் ரீமேக் செய்து பாடிப்பார்க்கிறதோ என்று சமாதானமானேன். மீண்டும் அதே “ கரக் கரக் “. ஆனால் கொஞ்சம் உச்சஸ்தாதியில். நேரமோ நள்ளிரவு; இருப்பதோ தனிமையில்; வீடோ புதிது. யோசித்துப் பாருங்கள் என் நிலையை. கை, கால்கள் எல்லாம் நடுங்குகிறதா? அது ஒன்றுமில்லை, ஏர் கண்டிசனரைக் கொஞ்சம் அதிகக் குளிரில் வைத்துள்ளீர்கள். இவ்வளவு மின்சாரப் பற்றாக்குறை உள்ள காலத்தில் எதற்காக இப்படி A/C யை எல்லாம் போட்டுக்கொண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்? நீங்கள் இதில் கொஞ்சம் மின்சாரத்தை மிச்சம் பிடித்தால் மின் தட்டுப்பாட்டை ஓரளவாவது சரி செய்திட இயலும்.கொஞ்சமேனும் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். என்ன,அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில் இருக்கும் நாங்கள் A/C பயன்படுத்தாமல் இருப்பதற்கும், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள். மன்னித்துவிடுங்கள். கரண்ட் என்றால் எங்களுக்குக் கடவுள் போல மாறிவிட்டது. அதனால் கொஞ்சம் ஆத்திரமடைந்துவிட்டேன்.<br />
<br />
இப்போது இன்னும் அருகில் “ கரக் கரக் “. என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. A/C காரணமல்ல. இந்தமுறை பேய் வந்துவிட்டதோ என்ற பயம்தான் காரணம். இந்தவீட்டில் இதற்கு முன்னர் குடியிருந்தவர்கள் யாரேனும் காதல் தோல்வியால் தூக்குப்போட்டுக் கொண்டவர்கள் பேயாக வந்து பயப்படுத்துகிறார்களோ என்று நினைக்க நினைக்க கால்கள் இரண்டும் இசையில்லாமலேயே மைக்கேல் ஜாக்சனுக்குச் சவால்விட்டன. ஒருவேளை மைக்கேல் ஜாக்சனும் இப்படி எதையோ நினைத்துப் பயந்துதான் ஆடினாரோ என்னவோ ?<br />
<br />
மறுநாள் காலையில் முதல் வேளையாக என் நண்பனிடம் இதைப் பற்றித் தொலைபேசினேன். அவனும் இது பேயின் வேலையாகத்தான் இருக்குமென்றும், அருகில் இருக்கும் கருப்பராயன் கோவிலில் சாமி கும்பிடு என்றும் அறிவுறுத்தினான். நானும் பயபக்தியுடன் அருகில் இருந்த கருப்பராயன் கோவிலுக்குச் சென்று, அங்கே சந்நதம் வந்து ஆடிக்கொண்டிருந்த பூசாரியை அணுகினேன். ஏதேனும் குறையிருப்பவர்கள் அவர் காலில் விழுந்தால், நமக்கு என்ன குறை என்று கண்டுபிடித்து, அதை எப்படிப் போக்குவது என்றும் பரிகாரம் சொல்லுவார். அதைப் போலவே சிலர் அவர் காலில் விழுந்து சாமி கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அவர் காலில் விழுந்து, ஆவலாய் அவர் முகம் பார்த்தேன். முறுக்கு மீசையுடன் இருந்த அவரைப் பார்க்க கொஞ்சம் கோரமாக இருந்தாலும், பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றதும், என் தோளினை லேசாகப் பிடித்து, கொஞ்சம் கெட்டியாகப் பிடித்து இரண்டு உலுக்கு உலுக்கி, “ ஆடி கழிச்சு ஆவணிக்குள்ள் மழை பெய்யும் போ! “ என்றார்.<br />
<br />
கூரையில் “கரக் கரக்” கிற்கும், மழை பெய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும் என்று ஒருவாறு குழம்பியவாறே சந்தேகத்தைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் வேறொருவர் அவர் காலில் விழுந்துவிட நான் வெளியே தள்ளப்பட்டேன். ஆனால் இது பெருங்குழப்பமாக இருந்தது. ஒருவேளை மழை பெய்யும் வரையில் அந்தப் பேய் இருக்குமென்பதை மறைபொருளில், இலக்கியத் தன்மையுடன் கூறுகிறாரோ என நினைத்துக் குழப்பத்தப் போக்க மீண்டும் வரிசையில் நின்று, மீண்டும் காலில் விழுந்தேன். இந்த முறை “ அடுத்த ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சிடலாம், கவலைப்படாம போ “ என்றார். “ கரக் கரக்” சத்தத்திற்கும், கல்யாணத்திற்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கிறதோ என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இந்தக் குழப்பத்தில் அது என்ன “கரக் கரக்” சத்தம் என்பதையே மறந்து போயிருந்தேன். பின் வழக்கம் போலவே பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன். அன்று இரவு வரை எனக்கு அந்த “கரக் கரக்” சத்தியமாக நினைவிலில்லை. காரணமென்னவென்றால் நான் உண்மையில் கோவில் பூசாரியைப் பார்த்துக் கொஞ்சம் பயந்துவிட்டிருந்தேன்.<br />
<br />
அன்றும் அதே நள்ளிரவு. அதே “ கரக் கரக்”. மீண்டும் பேய், பிசாசு பயம். அப்போது என் கால்கள் நடனத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க எங்கோ தூரத்தில் “ நல்லகாலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்ற குடுகுடுப்பைச் சத்தம். அந்த உடுக்கை ஒலி எனக்கு எப்பொழுதும் பயத்தைக் கொடுக்குமென்பதால் அருகில் கிடந்த துணி ஒன்றால் காதுகளை நன்றாக அடைத்துவிட்டுப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டேன். எப்போது தூங்கினேனோ ?<br />
<br />
காலையில் மீண்டும் அதே குடுகுடுப்பை ஒலிதான் என்னை எழுப்பிவிட்டது. இரவில் கேட்டதை விடக் கொஞ்சம் அருகில் கேட்டது. பெரும்பாலும் பகலில் செத்த பாம்பை அடிக்கும் அளவு தைரியமானவன் என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். குடுகுடுப்பைக்காரன் கையில் சில தாயத்துக்களுடன் குடுகுடுப்பை அடித்தவாரே போய்க்கொண்டிருந்தான். சட்டென ஒரு யோசனை. ஒருவேளை இவருக்குப் பேயோட்டவும் தெரியுமோ ? உடனே கடகடவென முகத்தைக் கழுவிக்கொண்டு, ஓட்டமாக ஓடி குடுகுடுப்பைக்காரனை நெருங்கி விசயத்தைச் சொன்னேன்.<br />
<br />
“நைட்டானா தலைக்கு மேல ’கொரக் கொரக்’னு சத்தம் கேக்குதுங்க. ஒருவேளை பேய் இருக்குமோன்னு பார்த்துச் சொல்லுங்க “ அவரும் தனது குடுகுடுப்பையை ஒலித்தவாரே என் வீட்டை அடைந்தார். குடுகுடுப்பையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதன் ஒலி மட்டும் மிக பயங்கரமாக, அச்சுறுத்தும் விதமாகவே எனக்கு இருக்கிறது.<br />
<br />
சிறிது நேரம் வீட்டிற்குள் அங்குமிங்கும் நடமாடியவர், திடீரென ஓரிடத்தில் வேகத்தடையைக் கண்டவர் போல சட்டென நின்று தலையை நிமிர்த்தி, மேலே விட்டத்தைப் பார்த்து,<br />
<br />
“ இப்போ வெளிய வர்றியா, இல்லையா ? “<br />
<br />
“ “<br />
<br />
“ வரமாட்ட”<br />
<br />
“ “<br />
<br />
“உன்ன என்ன பண்றேன் பார் “ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். பேய்களோடு மல்லுக்கட்டி எனக்குப் பழக்கமில்லையாதலால் எந்த நேரத்திலும் வெளியே ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தேன்.<br />
<br />
“ தம்பி, இது காத்துப் பெரட்டுத்தான்! ஒரு எந்தரம் மந்திருச்சு வச்சா சரியா போய்டும் “<br />
<br />
“ அப்புறமென்ன வச்சிருங்க “ என்றேன் பாலைவனத்தில் பனிமலையைப் பார்த்தது போல.<br />
<br />
“ ஒரு 2500/- ரூவா ஆகும் “<br />
<br />
“ இரண்டாயிரத்து ஐநூறா!? இந்த வீட்டுக்குக் குடுத்த அட்வான்சே 500 தாங்க. 2500 க்கு எந்தரம் வாங்கி வைக்கிறதுனா நான் இந்த வீட்ட விட்டுட்டு வேற வீடு பார்த்துக்குவேன்! “<br />
<br />
சிறிது நேரத்திற்குப் பிறகு, பேயோட்டுவதில் பேரம் முடிந்து 500 ரூபாய எந்திரத்திற்கு வந்தது. ஆனால் இது சுவற்றில் மாட்டும் எந்திரமல்ல, இடுப்பில் கட்டிக் கொள்ளக்கூடிய தாயத்து. இது விலை குறைவாக இருந்தாலும் சுவற்றில் மாட்டும் எந்திரத்தை விட இதில் பலன்கள் அதிகமென்றே கருதுகிறேன். ஏனெனில் வீட்டில் மாட்டியிருக்கும் எந்திரங்கள் வீட்டுக்கு வந்தால் மட்டுமே பாதுகாப்பளிக்கும்.ஆனால் இடுப்பில்,கைகளில் கட்டியிருக்கும் தாயத்துகளோ நாம் போகுமிடமெல்லாம் கூடவே வந்து நமக்குத் தைரியம் அளிக்கும். ஒருமுறை நான் பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்துப் பயந்து போவதுண்டு. அப்பொழுதெல்லாம் இதுபோன்ற தாயத்துகள் என் பயத்தினைப் போக்கியிருக்கின்றன. ஆனால் தாயத்து பேயை ஓட்டுகிறது என்கிறார்கள், பின் எதற்காக உயிரோடிருக்கும் தமிழ் வாத்தியாரைக் கண்டு பயக்காமலிருக்கு இதைக் கட்டி விடுகிறார்களோ என்றுதான் குழப்பமாக இருக்கிறது!<br />
<br />
தாயத்தினைக் கட்டும்போது சாம்பிராணி காட்டி கட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒருமுறை ஒலித்துவிட்டுச் சென்றார் குடுகுடுப்பைக்காரர். அப்பொழுது பள்ளிக்கு நேரமாகிவிட்டிருந்தபடியால் மாலையில் வந்து கட்டிக்கொள்ளலாம் என உத்தேசித்து பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினேன்.<br />
<br />
மாலையில் வீடு திரும்பியதும், முதல் வேலையாக அந்தத் தாயத்தினை எடுத்துக் கட்டிலின் மீது வைத்துவிட்டுச் சாம்பிராணி பற்ற வைப்பதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தேன். சாம்பிராணியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால் “ என்னே ஆச்சர்யம்!” தாயத்தைக் காணவில்லை. “ க இ ற ல ப ம ந ரி லு பே உ “ ஒன்றுமில்லை, பயத்தில் நாக்கு குழறிற்று. என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யமுடியவில்லை. பேய்தான் அதை எடுத்துச் சென்றுவிட்டதென்று முடிவே செய்துவிட்டேன். பேயை ஓட்டுவதற்காகத்தான் நான் தாயத்தை வாங்கினேன் என்று அது தெரிந்துகொண்டு , இப்பொழுது இப்படிச் செய்கிறதென்று எனக்க்குள் தூங்கிக் கொண்டிருந்த ராமநாராயணன் தெரியப்படுத்தினார். இந்தச் சமயத்தில் மீண்டும் அதே “ கரக் கரக் “!<br />
<br />
மேலே நிமிர்ந்து பார்க்கும் தைரியம் துளிகூட என்னிடமில்லை. அங்கே நிச்சயம் ஒரு பேய் தன் கோரப் பற்களில் ரத்தம் ஒழுக, தலைவிரி கோலமாக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு என்னை விழுந்த வந்துகொண்டிருக்கும் என்று எனக்குள் இருந்த விட்டலாச்சாரியார் பயமுறுத்தினார். மொத்தத்தில் எனக்குள் நான் இல்லை. கடைசியாக அந்தப் பேயைப் பார்த்துவிட்டாவது செத்துப் போகலாம் என்று “ கரக் கரக்” வந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே வீட்டின் விட்டம்தான் தெரிந்தது. இப்படிப் பயந்து நடுங்கும் என்னை அந்த விட்டம் பரிதாபமாகப் பார்ப்பதாகத் தோன்றிற்று. ஆனாலும் அதற்குத்தான் கண்கள் இல்லையே!<br />
<br />
விட்டத்தில் நாக்கு ஏதேனும் தொங்கிக்கொண்டிருக்கும் என்றுதான் சற்று உன்னிப்பாகக் கவனித்தேன். அப்படியெதுவும் இல்லாதது சற்று தைரியத்தைக் கொடுத்திருந்தாலும், அங்கே தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பொருள் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆம், காணாமல் போன தாயத்து அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. தாயத்து எங்கே அப்படி.? ஒருவேளை நள்ளிரவில் மின்வெட்டினால் ஏற்படும் இருளில் வெளிவரப் பயந்து , பயத்தினைப் போக்கத் தாயத்தினை எடுத்திருக்குமோ அந்தப் பேய்?<br />
<br />
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் தாயத்து இருந்த இடத்தில் "கரக் கரக்” சத்தம் மீண்டு(ம்) வந்தது. இப்பொழுது பயத்திற்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. பின்னே எனக்கு வைத்திருந்த தாயத்தினை, அந்தப் பேய் தனக்கென எடுத்துக் கொண்டால் யார்தான் அதைப் பார்த்துப் பயப்பார்கள் ? ஆனால் இந்த ஏளனம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம் அந்தத் தாயத்து தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் இன்னும் ஒன்று தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்ததில் ஏதோ ஒரு உயிரின் வால் பகுதி என்பதும், அந்த வால் பகுதிக்குச் சொந்தமான உடல் பகுதி நிச்சயம் எலியினுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்றும் உறுதியானது. ஆக ஒரு சாதாரண எலியைக் கண்டு பயந்துவிட்டு, இல்லை காணாமல் பயந்துவிட்டு பேயென்றும், பிசாசென்றும் அலைந்து திரிந்திருக்கிறேன். வெளியில் தெரிந்தால் எவ்வளவு அவமானகிப் போகும்? அப்பொழுது இந்த எலி என் வாழ்க்கையின் மிக முக்கிய வில்லன் என்பது தெரிந்திருக்கவில்லை. இப்படியாக இவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அடச்சே! என்ன இது? ஏதோ விருது கிடைத்ததைப் போலச் சொல்லுகிறேன்.<br />
<br />
எலி ஒரு அற்புதமான விலங்கு. மனித வாழ்வியலின் மிக முக்கியப் பங்காளியாக விளங்குகின்றன எலிகள். மனிதனுக்காகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளைக் கூட முதலில் எலிகளே சுவைபார்க்கின்றன.எலிகள் முக்கியமாகக் கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் எப்படியேனும் குடிபுகுந்து தங்களது இருப்பை “கிரீச் கிரீச்” சத்தத்தின் மூலமோ , இல்லை கூரையைக் கடிப்பதின் மூலமோ மனிதனுக்குத் தெரியப்படுத்துகின்றன. மனிதன் தின்னும் எல்லா வகையான உணவுப் பொருட்களையும் எப்படியேனும் திருடித் தின்கின்றன. இரவுகளில் கூரையைக் கடித்தவாறே நமக்குத் துணை நிற்கின்றன. மின்சார ஒயர்களைக் கடிப்பது, டிவி கேபிள்களைக் கடிப்பது, புத்தகங்களைக் கடிப்பது, சட்டைகளில் ஜன்னல் வைப்பது போன்ற ஏதாவதொரு வேலையைச் சதா சர்வகாலமும் செய்துகொண்டேயிருக்கின்றன. தனிமையில் இருப்போரின் தனிமையைப் போக்குவதில் எலிகள் தனிச்சிறப்பாகச் செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.<br />
<br />
இந்த எலியைப் பார்த்த சில நாட்கள் அதை எப்படி என் வீட்டிலிருந்து விரட்டியடிப்பது என்று சில முயற்சிகள் செய்தேன். முக்கியமாகக் அதனைக் கொல்லும் எண்ணம் எனக்குச் சிறிதளவேனும் இல்லாததால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பூனை வளர்க்கலாம் என்று பரவலாக யோசனைகள் சொல்லப்பட்டாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை. பெரும்பாலும் நான் பார்த்த பூனைகள் எல்லாமே பாலினைத் திருடிக் குடிக்கும் பழக்கமிருந்ததால் எப்போதோ வரும் திருடனைப் பிடிக்க, வீட்டிலேயே ஒரு திருடனை வளர்க்க விரும்பவில்லை.<br />
<br />
இந்தச் சமயத்தில்தான் அந்தக் கேடுகெட்ட யோசனை தோன்றியது. ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது குறித்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஆம்; இந்த எலியின் சேட்டைகள் நாளாக நாளாக அதிகரித்த வண்ணம் இருந்தன. இதன் தொல்லை தாங்கமாட்டாமல்தான் அப்படியொரு வினோத யோசனை எனக்குத் தோன்றிற்று. எங்கள் வீட்டிலுள்ள எலியை விரட்ட அதவிடப் பெரிய எலி ஒன்றைச் சாப்பாடு போட்டு வளர்க்கும் யோசனைதான் அது. இந்த யோசனை வரக் காரணம் இந்த ஊரில் உள்ள மாரப்பன் என்னும் மனிதர்தான். இவரைப் பார்க்கும் போதெல்லாம் மனிதன் குரங்கிலிருந்து வந்தானா, இல்லை யானையிலிருந்து வந்தானா என்று டார்வினின் பரிணாமக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கும் அசாதாரண தைரியம் எனக்கு ஏற்படும். அவ்வளவு குண்டான மனிதர் என்பதாலேயே ஊரில் பலரும் அவரைக் கண்டு கொஞ்சம் பயந்தே இருந்தனர். இதுதான் என் வீட்டிலிருக்கும் சின்ன எலியை ஒரு பெரிய எலியின் மூலம் விரட்டலாம் என்ற யோசனைக்கு வித்திட்டது.அது சரி பெரிய எலிக்கு எங்கே போவது?<br />
<br />
அடுத்த நாளே இரும்பினால் செய்யப்பட்ட, கிளி வளர்க்கும் கூண்டொன்றை வாங்கி வந்துவிட்டேன். எலி பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. பள்ளிச் சிறுவர்களிடம் சொன்னால் எப்படியேனும் பிடித்துக் கொடுத்துவிடுவர். ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களைப் படிக்கச் சொன்னாலோ, திட்டினாலோதானே தவறு. இது போன்ற உதவிகள் கேட்பது பிரச்சினை இல்லை. என் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அடுத்த நாளே இரண்டு எலிக்குட்டிகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டனர். இரண்டுமே அழகாக இருந்தன. அவற்றில் மிக அழகான ஒன்றை மட்டும் எடுத்து இரும்புக் கூண்டில் வைத்துவிட்டு , இன்னொன்றை விட்டுவிடுமாறு பையன்களிடம் கூறி அனுப்பினேன். அன்றிலிருந்துதான் ”மதியழகன்” என்னும் என் பெயர் “ எலிக்குட்டி வாத்தியார் “ ஆனது.<br />
<br />
என் கவனம் முழுவதும் எலிக்குட்டியை வளர்த்து ஆளாக்குவதில் சென்றது. எத்தனையோ சத்தாண ஆகாரங்களைக் கொடுத்தும் பலனில்லை. அது அப்படியேதானிருந்தது. இப்பொழுது சொல்லப்போகும் விசயத்தைக் கேட்டால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆம்; காம்ப்ளான் குடிக்கிற குழந்தைங்க இரட்டிப்பு வேகத்துல வளர்றாங்க” என்னும் விளம்பரத்தினைப் பார்த்துவிட்ட்டு அந்த எலிக்குட்டிக்கும் சில பாட்டில்கள் காம்ப்ளானெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். காசு போனதுதான் மிச்சம். எத்தனை செலவு செய்தும் அது கொஞ்சம் கூட வளரவேயில்லை.<br />
<br />
அந்த ஒரு மாத இடைவெளியில் பெரிய எலியின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. என் இரண்டு, மூன்று சட்டைகளுக்குச் ஜன்னல் வைத்ததும் இதில் அடங்கும். ஆனால் என் தனிமையைப் பெரிதும் போக்கியிருந்தது. வீட்டில் இருந்த நேரங்களில் எல்லாம் எப்படி அதை விரட்டுவது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். எத்தனை சேட்டைகளைச் செய்திருந்தாலும் ஏனோ எனக்கு அதனைக் கொல்லும் எண்ணம் வரவேயில்லை. நாளாக நாளாக அதன் சேட்டைகளை நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன். இதனால் கூண்டில் இருந்த எலியையும் பையன்களிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். இந்த எலி என் தோழனாகவே மாறிவிட்டது. என் ஜட்டிகளை இது எடுத்து அணிந்து கொள்ளாவிட்டாலும் சில துணிமணிகளை தன் பங்கிற்காக எடுத்துச் சென்று வீட்டின் விட்டத்தில் கடித்துப் போட்டிருந்தது. என் நண்பர்களிடமும் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இதற்காகவே தினமும் வாழைப்பழம், பிஸ்கட் போன்றவற்றை வீட்டின் ஒரு இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். இதற்கு வாய் மட்டும் பேசத் தெரிந்திருந்தால் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் சென்று படிக்க வைத்திருப்பேன்.<br />
<br />
அன்று மட்டும் இது அப்படிச் செய்யாதிருந்தால் இதனை வஞ்சித்துக் கொல்ல வேண்டிய அவசியமே எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆம்; என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது.<br />
<br />
சஞ்சனா அழகே உருவான பெண். நான் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவளும் பணிபுரிகிறாள். அவளைப் பார்த்தவுடனே எனக்குள் பட்டாம் பூச்சிகள் கோடி கோடியாய்ப் பறக்க ஆரம்பித்தன. நானும் அவளிடம் என் காதலைச் சொல்ல சில நேரங்களில் வாயெடுத்தும் சொன்னதில்லை. பயம். சில சமயம் கடிதமும் எழுதியிருக்கேன். ஆனால் உடனே கிழித்துவிடுவேன். ப்யம். சும்மாவா சொன்னார் வைரமுத்து<br />
<br />
“அந்தக் கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன் ?<br />
பெண் கண்களைப் பார்த்துக் காதல் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்! “ என்று.<br />
<br />
அப்படியொரு தைரியமான நாளும் வந்தது. என் காதலை முழுவது ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு , இன்று எப்படியும் கொடுத்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தால் நான் இரண்டு நாட்கள் கண்விழித்து எழுதிய , என் உயிரை ஊற்றி நிரப்பி வைத்த காதல் கடித்தத்தை முன்பொருமுறை தாயத்துத் தொங்கிய இடத்தில் வைத்துக் “ கரக் கரக்” கிக் கொண்டிருந்தது இந்தப் பாழாய்ப்போன எலி. கற்பனை செய்து பாருங்கள் என் சோகத்தை! இன்னொரு கடிதம் எழுதிக் கொடுக்கும் தைரியமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் தோல்வியின் வலியும், வேதனையும் கோபமாக வெளிப்பட்டுத் தினமும் வைக்கும் வாழைப்பழத்தில் விஷம் வைக்கவேண்டியதாய்ப் போயிற்று. இதோ இப்போது என் முன்னால் செத்துக் கிடக்கிறது இந்த எலி.<br />
<br />
இனி என் வீடு அமைதியாய் இருக்கும். ஒயர்கள் கடிக்கப்படாது, சட்டைகள் ஓட்டையாகாது. பழங்கள், காய்கறிகள் திருடுபோகாது. இரவில் தலைக்கு மேலே சத்தம் கேட்காது. நிம்மதிதானென்றாலும் ஒருவித விரக்தியை உணர்கிறேன். மனிதனுக்குத் துணையாக இன்னொரு மனிதனே தேவையென்றில்லை. இது போன்ற உயிர்களும் தொல்லையென்றாலும் இவற்றை ரசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் மனிதர்களின் துணையை விட ஆத்மார்த்தமான துணையாக இருக்கவல்லன. பிறந்ததிலிருந்தே இது போன்ற உயிர்களைத் தொல்லையென்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டுவிட்டோம்.<br />
<br />
இனி என் வீட்டில் நான் மட்டுமே. யாருக்காகவும் பழங்களை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை. காய்கறிகளை வாங்கிவந்து எங்கு வேண்டுமானாலும் போட்டுவிடலாம். இப்பொழுதுதான் எதையோ இழந்ததாக உணர்கிறேன். ஆம்; என் தோழனை நானே கொன்றுவிட்டேன். இனி யார் என் பொருட்களை என் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் ? கொஞ்சம் அமைதியாருங்கள். கூரையிலிருந்து ஏதோ சத்தம்.. அட மீண்டும் அதே “ கரக் கரக் “!<br />
<br />
<div style="text-align: -webkit-auto;"><span style="text-align: left;"> நன்றி : இது </span><a href="http://atheetham.com/" style="text-align: left;">அதீதம்</a><span style="text-align: left;"> இதழில் வெளிவந்த எனது சிறுகதை.</span> </div></div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-13970348880068607612012-02-22T17:04:00.001+05:302012-02-22T17:12:33.364+05:30அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<b><span style="color: red;">முன்னுரை</span></b><br />
<br />
<div style="text-align: justify;"> சிறிது நாட்களுக்கு முன்னர் <a href="http://koomaali.blogspot.in/2011/11/blog-post.html">“ங்கொய்யால”</a> என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந்தது. ஏனெனில் அந்தக் கட்டுரை வெளியான பின்பு அச்சொல்லின் மீதான தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்தச் சொல்லைக் கற்றுக் கொண்டதாக ரஷிய இலக்கியவாதியான தஸ்தாயெவ்ஸ்கி கூறியிருந்ததே இதற்குச் சான்றாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: blue;">”அவ்வ்வ்வ்”வின் தோற்றம்</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> “அவ்வ்வ்வ்”.... என்னே ஒரு அழகான சொல்! எத்தனை முறை உச்சரித்தாலும் புல்லரிக்க வைக்கும் ஒரே சொல் ”அவ்வ்வ்” மட்டுமே என்பதில் தினையளவும் சந்தேகமில்லை.தினை என்பது என்னவென்று உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே தினையளவு என்பதை அரிசியளவு என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு வருவோம். ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லினைத் தோற்றுவித்தது, அதனை அனைவரும் பயன்படுத்தும்படி செய்தது நகைச்சுவை நடிகர் வடிவேலு என்கிற கருத்து நிலவிவருகிறது. ஆனால் உண்மையில் “அவ்வ்வ்வ்” என்ற சொல் சங்ககாலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லின் பொருளைப் பற்றி அறியாமல் அதனைப் பயன்படுத்தி வருவது சற்று வருந்தத்தக்கதே! </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;"><b>”அவ்வ்வ்வ்”வின் பொருள்</b></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> ”அவ்வ்வ்” என்ற சொல்லிற்கு என்ன பொருள் இருந்துவிட முடியுமென்று பலரும் ஏளனம் செய்து சிரிக்கின்றனர். உண்மையில் ”அவ்வ்வ்” என்ற சொல்லின் பொருள் “அண்டா” என்று எங்களுரில் ஒரு தமிழிலக்கியவாதி தெரிவித்திருக்கிறார். அது எப்படி “அண்டா “ என்ற பொருள் வருமென்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். அவர் வாங்கிய அண்டா ஒன்றிற்கான பெயர் எழுதிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாகவும், அப்பொழுது இவர் “அவ்வ்வ்” என்று கத்தியவாறே அந்த அழைப்பினை ஏற்றதாகவும், அப்பொழுது அண்டாவிற்குப் பெயர் எழுதுபவர் அண்டாவின் பெயரை “அவ்வ்வ்” என்று எழுதிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது சொல்லுங்கள், அந்த அண்டாவில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அது அவர்களுடைய பொருளாகும். இந்த அண்டாவில் விதி வசத்தால் “அவ்வ்வ்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே “அவ்வ்வ்”வின் பொருள் அண்டாதானே? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: blue;">”அவ்வ்வ்”வும் ஔவையாரும்</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> தமிழ் கூறும் நல்லுலகில் சிலர் “அவ்வ்வ்” என்ற சொல்லிற்கும் ஔவைக் கிழவிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிவருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி ”அவ்வ்வ்” என்ற சொல்லினைக் கண்டுபிடித்ததே ஔவையார்தான் என்கிறார்கள். அதாவது ”அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தது?” என்ற சொல்லிற்கு விடையாக ஔவைப் பாட்டியின் பெயரைச் சொல்லி வந்ததாகவும், பின் அவரது பெயருக்குப் பதிலாக “அவ்வ்வ்”வை யார்” என்ற கேள்வியையே பயன்படுத்திப் பின்னர் “அவ்வையார் - ஔவையார்” என்று மாறியதாகச் சிலர் ஐயுறுகின்றனர். ஆனாலும் “அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு நமக்குக் கிடைக்காமலே போனது தமிழ்மொழியின் மிகப் பெரும் துரதிருஷ்டமாகக் கருதப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: blue;">”அவ்வ்வ்”வும் தமிழக அரசும்</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> “அவ்வ்வ்” என்ற சொல்லின் அருமை பெருமைகளை அறிந்த தமிழக அரசு இந்தச் சொல்லின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்தச் சொல்லினை உரக்கக் கத்தி இன்புற வேண்டுமென்றே தற்பொழுது முக்கால் மணிக்கொருதரம் மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழக அரசின் இந்தத் திட்டம் பெருவெற்றி பெற்றிருப்பது நாமறிந்ததே. ஒவ்வொரு முறை மின்சாரம் நிறுத்தப்படும்போதும் எல்லா கிராமம் மற்றும் நகரங்களிலிருந்து “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல்லின் சப்தம் நம் காதுகளில் தேனினைப் பாயச் செய்கிறது என்றால் அது மிகையாகாது. அதிகப்படியான தேன் என் காதுகளில் பாய்ந்துவிட்டதால் நேற்றுத்தான் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் எனது பற்களைச் சோதனை செய்துகொண்டேன். தமிழ்மொழியின் தன்னிகறற்ற சொல்லான “அவ்வ்வ்”வினை நாடெங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த மின்சாரத்தடைத் திட்டத்திற்கு ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: blue;">இணையத்தில் ”அவ்வ்வ்”வின் பங்கு</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> பெரும்பாலும் தமிழ் மொழியின் புகழ் பெற்ற எல்லாச் சொற்களுமே இணையத்தில் அதிக மதிப்பைப் பெறுவது வழமையானதே. அதே போல நமது இந்த உலகப் புகழ் பெற்ற “அவ்வ்வ்” என்ற சொல்லும் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதாக கி.மு.2400 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. மேலும் ஒரு இது போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் நொடிக்கொருமுறையேனும் பயன்படுத்தப்படுமென திட்டவட்டமாகச் சொல்கிறது. தமிழ் இணையவெளியில் புழங்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தச் சொல்லினைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாதென்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: blue;">பயன்கள்</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல் பல விதங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தச் சொல்லினைக் கூட்டாக, பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உச்சரிக்கும்போது நாய்கள் பயந்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதேனும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாதவர்களுக்கு இந்தச் உடுக்கை இழந்தவன் கை போலப் பேருதவி புரிவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் ஏதேனும் கோபமான பொழுதுகளில் இந்தச் சொல்லினைப் பயன்படுத்துவது எதிராளியினைப் பெருமிதப்படுத்துவதோடு, அவரது கோபத்தினையும் சற்று குறைப்பதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் “அவ்வ்வ்” என்ற இதன் பயன்களை யாராலும், எந்தக் காலத்திலும் முழுமையாகச் சொல்லிவிட இயலாதென்பது மட்டும் திண்ணம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><span style="color: red;">முடிவுரை</span></b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> தமிழ்மொழியில் மிக முக்கியச் சொல்லாக வலம்வரும் இந்த “அவ்வ்வ்” வின் தோற்றம் மற்றும் பயன்களை இந்தக் கட்டுரையின் மூலமாக நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ளமுடிந்தது. மேலும் இந்தச் சொல்லினைக் கேட்கக் கேட்க அடுத்து இந்தச் சொல்லினை எப்பொழுது யார் வாயால் கேட்போமோ என்கிற ஏக்கம் நமக்கு வராமலிருப்பதில்லை. இந்தச் சொல்லின் பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ள ஆங்கிலேயர்கள் “அவ்வ்வ்” என்ற சொல் ஆங்கில மொழிக்குச் சொந்தமானது என்று போராடத் துவங்கியுள்ளாதாகச் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே நமது தமிழ் மொழியின் மிக முக்கியச் சொல்லான “அவ்வ்வ்”வினைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனை பிறர் கவர்ந்து கொள்ளக் கூடாததன் பொருட்டுமே இந்தக் கட்டுரையை அவசரகதியில் எழுதநேர்ந்தது. எனவே எல்லோரும் சேர்ந்து போராடுவோம் “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”!<br />
<br />
<br />
</div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-72957037610325452052012-02-04T16:17:00.000+05:302012-02-04T16:17:17.595+05:30தங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">முன்குறிப்பு : குழந்தைகளுக்கான சிறுவர் நீதிக் கதைகள் வரிசையிலான எனது முதல் சிறுகதை முயற்சி இது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முன்னொரு காலத்தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.</div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-14365396306343123342011-12-31T13:06:00.001+05:302012-01-04T14:18:35.117+05:30நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><b>முன்குறிப்பு</b> : சில நாட்களுக்கு முன்னாடி , இல்ல சில மாதங்களுக்கு முன்னாடி <a href="http://koomaali.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88">நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும்</a>னு சில பதிவுகள் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பசுபதி வேகவேகமாக நாட்டாமை பட நாட்டாமையின் வீட்டற்குள் நுழைகிறார். கூடவே மற்றொருவரை இழுத்துக்கொண்டு வருகிறார். அவர் வேறு யாருமல்ல நான் தான்!</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா.நாட்டாமை</span> : ”தென்றா பசுபதி? தெதுக்கு இப்படி ஓடியாற?தெவன்டா இவன்? “</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: purple;">பசுபதி </span>: ”ஐயா, தீர்ப்புச் சொல்லுறதுக்கு நீங்க இருக்குறபோது வேற யாரவோ தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருக்காங்க!”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : ”ஆர்றா அது? (செல்வாவைப் பார்த்து ) தேன்டா நீ ஏதாச்சும் பிரச்சனை பண்ணிப்போட்டியா ?“</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: purple;">பசுபதி</span> : ஐயா, இவன் பிரச்சினை பண்ணலீங்க, இவுங்க ( <a href="http://www.terrorkummi.com/2011/12/2011_26.html">டெரர் கும்மி</a> ) ஒரு போட்டி நடத்துறாங்க. அதுக்கு உங்கள நடுவரா கூப்பிடாம வேற யாரவோ கூப்பிட்டிருக்காங்க ? “</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : “ தென்றா பேசற நீயி ? அண்ணனா இருந்தாலும், தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நான் தாண்டா சொல்லுவேன்”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: purple;">பசுபதி</span> : ஐயா, எனக்கென்னமோ இவுங்க அவர ( தமிழ்ப்படம் நாட்டாமைய) தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருப்பாங்களோன்னு தோணுது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : “ பசுபதி, வண்டியக் கட்றா அவனூட்டுக்கு, தீர்ப்பு நான்தான் சொல்லுவேன்”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">(பசுபதியும், நா.நாட்டாமையும் வண்டியில் ஏறிக்கொள்ள செல்வாவை குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டிக்குள் எறிகிறார்கள் )</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வண்டியில் ஏறியதும் <span style="color: blue;">நா. நாட்டாமை </span>: “பசுபதி! அடிச்சோட்றா ”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: purple;">பசுபதி</span> : ஐயா, அடிச்சோட்றதுக்கு இது மாட்டுவண்டி இல்லீங்! காருங்க“</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டை மூவரும் அடைகிறார்கள். வண்டியிலிருந்து ஒரே தம்மாக தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டிற்குள் குதிக்கிறார் நா. நாட்டாமை. உள்ளே தமிழ்ப்படம் நாட்டாமை இரண்டு எறும்புகளை ஒரு டேபிளின் மீது வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தனது அடியாளிடம் “ இந்த எறும்ப பத்து வருசம் ஊரவிட்டுத் தள்ளி வெக்கறன்டா! ஆரும் இதுக்கூட தண்ணி பொழங்கக்கூடாது“ என்று தீர்ப்பினைச் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த சொம்பினை எடுத்துக் கொண்டு ”அடுத்து எங்கடா பிரச்சினை ?” என்று கேட்கிறார். அப்பொழுது</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : ” தேன்றா ? என்ன தகிரியம் இருந்தா என்னைய கேக்காம நீ மட்டும் தீர்ப்புச் சொல்லுவ ? அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நான்தான்டா தீர்ப்புச் சொல்லுவேன்!“</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;">த. நாட்டாமை </span>:” நீதிடா, நேர்மடா, நியாயம்டா”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: magenta;">செல்வா</span> : மனதிற்குள் (என்ன எழவுடா ? )</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : ”நிறுத்துடா! (செல்வாவைப் பார்த்து ) தென்றா தம்பி, இவனவிட நானும் நல்லா தீர்ப்புச் சொல்லுவேன். என்னைய சேர்த்துக்களைனா நானே என்னைய ஊரவிட்டுத் தள்ளிவச்சுக்குவேன்.”</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: purple;">பசுபதி </span>: ”ஐயா, இப்படி ஒவ்வொரு ஊரிலையும் போயி உங்கள நீங்களே தள்ளிவச்சு தள்ளிவச்சு கர்நாடகா பார்டருக்கு வந்துட்டோம். இனியும் தள்ளிவச்சா கர்நாடகாதான் போகனும். அங்க ஒருத்தருக்கும் தமிழ் தெரியாது. எதுக்கும் பார்த்துச் செய்யுங்க! “</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;">த. நாட்டாமை</span> : (செல்வாவைப் பார்த்து ) ”நீ ஆர்றா ? இங்கெதுக்கு நிக்கற ? இவன கள்ளிபால ஊத்திக் கொல்லுங்கடா!“</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நா. நாட்டாமை</span> : (த. நாட்டாமையைப் பார்த்து ) ”தென்றா பேசற, இவன உனக்கு முன்ன பின்ன தெரியாதா ? “</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: red;">த. நாட்டாமை </span>: “ நானெதுக்குடா இவனப் பத்தித் தெரிஞ்சிக்கணும் ? தேன்டா பிராது எதாச்சும் வச்சிருக்கிறியா ? நாந்தான் தீர்ப்புச் சொல்லுவேன்! “</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: magenta;">செல்வா</span> : “ உங்களுக்கு என்னதான்யா வேணும் ? “<br />
<br />
<span style="color: purple;">பசுபதி </span>: ”நீங்க நடத்தப்போற போட்டியில எங்க நாட்டாமைதான் தீர்ப்புச் சொல்லுவாரு! “</div><div style="text-align: justify;"><br />
<span style="color: magenta;">செல்வா</span> : ஐயா, நாங்க ஏற்கெனவே நல்லா படிச்ச, திறமையான நடுவர்களை தேர்ந்தெடுத்துட்டோம். நீங்க யாரும் தீர்ப்புச் சொல்ல வேண்டாம். என்னை விட்டுறுங்க.<br />
<br />
<span style="color: blue;">நா. நாட்டாமை</span> : ” டேய், டேய்! என்னையும் சேர்த்திக்கோங்கடா. இவன (த. நாட்டாமை) வேணா ஊர உட்டு தள்ளி வச்சிடலாம்”<br />
<br />
<span style="color: red;">த. நாட்டாமை</span> : இவன ( நா. நாட்டாமை ) கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா, அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நாந்தான்டா சொல்லுவேன்! “<br />
<br />
<span style="color: magenta;">செல்வா</span><span style="color: lime;"> </span>: ”ஆள விடுங்கடா! “ என்று சொன்னவாரு தெரித்து ஓடுகிறார்.<br />
<br />
<b>பின்குறிப்பு</b> : டெரர்கும்மி விருதுகள்- 2011 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். தெரியாதவங்க <a href="http://www.terrorkummi.com/2011/12/rs10000.html">டெரர்கும்மி விருதுகள் - 10,000 / - பரிசு</a> அப்படிங்கிற இந்தப் பதிவைப் படிச்சுப் பாருங்க. உங்களின் பதிவுகளையும் இணையுங்கள். உங்கள் பதிவுகளை இணைக்க <a href="http://www.terrorkummi.com/2011/12/2011_26.html">இந்தச் சுட்டியைப்</a> பயன்படுத்துங்கள். பங்குபெறப்போகும் அனைவருக்கும் டெரர்கும்மியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!<br />
<br />
<br />
<br />
</div><div style="text-align: justify;"><br />
</div></div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-46880986231385342602011-12-13T16:16:00.000+05:302011-12-13T16:16:46.096+05:30டெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000/-<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="font-family: arial, helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">நண்பர்கள்
அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில்
பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது.
டெரர்கும்மி குழுவின் <a href="http://www.terrorkummi.com/2011/12/rs10000.html">வலைப்பூ</a> தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக </span></span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px;">இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். </span></div>
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px;"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px;">பதிவுகளை
பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய
வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து
டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும் உங்களுடைய பதிவுகளில்
சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து
வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன்
அதன்படி அனுப்புங்கள். </span></div>
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px;"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px;">ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் </span><wbr style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px; text-align: justify;"></wbr><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு</span><span style="background-color: white; color: blue; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px; text-align: justify;"> (ஒவ்வொரு பிரிவிலும்)</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px; text-align: justify;"> டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை </span><b style="background-color: white; font-family: arial, helvetica, sans-serif; line-height: 25px; text-align: justify;"><span style="color: red;"><span class="Apple-style-span" style="font-size: 14px;"> </span>RS 10000/-</span></b></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
</div>
<div style="text-align: justify;">
<a href="http://www.terrorkummi.com/" target="new"><img border="0 " height="130" src="http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/BANNER-Main.gif" width="520" /></a></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.terrorkummi.com/" target="new"> </a><br />
<br />
<b style="background-color: white; color: blue; font-family: arial, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">1 . நகைச்சுவைப் பதிவுகள்.</b><br />
</div>
<div style="line-height: normal;">
<div style="font-family: arial;">
<div style="line-height: 25px;">
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>2 . கவிதைகள்</b></span></div>
</div>
<div style="line-height: 25px;">
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>3 . விழிப்புணர்வு</b></span></div>
</div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">
<div>
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>4 . கதைகள்</b></span></div>
<div>
<div>
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>5 . அனுபவம்/பயணக்கட்டுரை</b></span></div>
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>6 . அரசியல் கட்டுரை</b></span><div>
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>7 . திரை விமர்சனம்</b></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>8 . தொழில்நுட்பம்</b></span></div>
<div>
<span style="font-family: arial, helvetica, sans-serif;"></span></div>
<span style="font-family: arial, helvetica, sans-serif;"><b><span style="color: blue;">9 . சிறந்த புதுமுக பதிவர்கள்</span></b></span></div>
</div>
<div style="line-height: 25px;">
<span style="color: blue; font-family: arial, helvetica, sans-serif;"><b>10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.</b></span></div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 22px; text-align: justify;">
<br /></div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif;">மேலே
குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை
தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது
பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே
தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி
உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று
தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும்
கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது
விடைபெறுகிறோம்!</span></div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif;">நன்றியுடன்</span></div>
<div style="background-color: white; font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif;">டெரர் கும்மிக்காக,</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: arial, helvetica, sans-serif;">உங்கள் கோமாளி செல்வா.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: arial,helvetica,sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<b><span style="font-family: arial,helvetica,sans-serif;">நன்றி : கோமாளி செல்வா</span></b></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: arial,helvetica,sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: arial,helvetica,sans-serif;"><b>பின்குறிப்பு</b> : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா ? இந்தப் பதிவ நான் எழுதல. <a href="http://shilppakumar.blogspot.com/2011/12/2011.html">இவர்</a> எழுதின பதிவு இது. அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம்.</span></div>
</div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-54345284153370658372011-11-11T13:24:00.001+05:302011-11-16T12:53:34.693+05:30ங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span class="Apple-style-span" style="color: blue;">அறிமுகம் :</span></b><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”ங்கொய்யால“ இந்த வார்த்தையைக் கேட்டிறாத, அறிந்திறாத மக்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் இறந்துபோன அல்லது இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு பிரசித்திபெற்ற வார்த்தையாக வலம்வருகிறது இந்த வார்த்தை. சிறியவர் முதல் பெரியவர் வரை, குழந்தைகள் முதல் கிழவர் வரை, ஆசிரியர் முதல் மாணவர் வரை, ஆண் பெண் என்கிற பால் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பேசப்பட்டு வருவதே இவ்வார்த்தையின் புகழுக்குச் சான்றாகும். சில வார்த்தைகளை துன்பத்தில்தான் பயன்படுத்த முடியும். கோபத்தை வெளிப்படுத்தச் சில வார்த்தைகள் உள்ளன. ஆனால் இன்பம், துன்பம், கோபம், பயம்,வெட்கம், இப்படி எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே வார்த்தை ‘ங்கொய்யால’ என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தையின் வரலாற்றைப் பற்றி எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டால் கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார். எனவேதான் மிகச் சிரமப்பட்டு , பொருட்செலவுகளைத் துச்சமெனக் கருதியதால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகியிருப்பினும், இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;">தோற்றம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் குழப்புவதானால் நாட்டாமை என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ங்கொக்கமக்கா’ என்றொரு கிராமத்தில்தான் இந்த வார்த்தை பிறந்திருக்க வேண்டுமென வரலாறுகள் நமக்குச் சுட்டுகின்றன. அதற்கான அனேக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை அறிந்ததும் நாம் எமது ஆய்வுக்குழுவினருடன் ‘ங்கொக்கமக்கா’ கிராமத்திற்கு விரைந்தோம். முதலில் இந்த வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்பட்டது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
’ங்கொக்கமக்கா’ என்கிற இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலெல்லாம் போக வேண்டியதில்லை. அப்படி போகவேண்டுமென்றாலும் நாம் இன்னும் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே வேறுவழியில்லாம் அதன் பரிணாம வளர்ச்சியல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டாமை படத்தைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம். ஏற்கெனவே எனக்கு நாட்டாமை படம் பற்றித் தெரியும் என்றால் இந்த இரண்டு வரிகளையும் படிக்காமல் விட்டுவிடுங்கள். இங்கே SKIP என்ற பட்டனையெல்லாம் என்னால் தரமுடியாது. உண்மையில் நாட்டாமை படம் அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நாட்டாமை படத்திற்கு முன் , நாட்டாமை படத்திற்குப் பின் என்று அவ்வூரின் வளர்ச்சியைப் பிரித்தறியமுடிகிறது. நாட்டாமை படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அமைதியின் உருவமாக இருந்த அக்கிராமத்தில் நாட்டாமை என்கிற பதவிக்குப் போட்டிகள் எழுந்துள்ளன. நாட்டாமைப் பதவியின் அருமை , பெருமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டிய நாட்டாமை என்னும் திரைக்காவியம் தமிழர்கள் ஓயாது பயன்படுத்தும்படியான ஒரு சொல்லையும் ஏற்படுத்தித் தந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவரையில் நாட்டாமையாக இருந்த ‘சண்முகம்’ திடீரென இறந்துபோய்விட அவரின் இருமகன்களுக்குமிடையே பதவியாசை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அந்தக் கொழுந்து நன்றாக வளர்ந்ததோ இல்லையோ, ஆனால் அவர்களின் பையன்களுக்கிடையேயும் சண்டை நடக்க ஆரம்பித்தது. அதாவது சண்முகத்தின் பேரன்களுக்கிடையிலும் சண்டை நடந்ததென்று ஔவையாரின் பாடல் ஒன்றின் மூலமாக அறிகிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சண்முகத்தின் முதல் மகனின் மகனும், இரண்டாவது மகனின் மகனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டிருக்கிற இந்தச் சொல்லின் பிறப்பு நிகழ்ந்தது என்று அமெரிக்காவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரிய மகனின் மகனான சின்னச்சாமி , சிறிய மகனின் மகனான பெரியசாமியிடம் “ டேய் , எங்க அய்யாதான் ( அப்பா என்பதை அய்யா என்று அழைப்பர் ) முதல் பையன், அதனால அவருக்குத்தான் நாட்டாமை பதவி கிடைக்கும்! “ என்று தனது கருத்தினை எடுத்தியம்பியிருக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: red;">”ங்கொய்யா ஆள எங்கைய்யா பார்த்துட்டு இருப்பாரா ?“</span></b> என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் <b>“ ங்கொய்யா ஆள “</b> என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால!” இப்படியாகத்தான் இந்தச் சொல் பிறந்திருக்கிறது. ஆறுச்சாமி வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னால் ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஆறாவதாகப் பிறந்து, பீரில் முகம் கழுவி, திருநெல்வேலியின் பிச்சைப் பெருமாளைக் கொன்றிருக்கலாம். ஆனால் பிறக்கும்போதே ஒரு ஊரினையே அழித்துக்கொண்டு பிறந்த பெருமை ‘ங்கொய்யால’வையே சாரும் என்று ஜேம்ஸ் கேமரூன் ‘ அவதார்’ படத்தின் மூலம் அடித்துச் சொல்லுகிறார். </div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;"><br /></span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: blue;">இக்கட்டுரையின் சிறப்புகள்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
’ங்கொய்யால' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றி உலக மொழிகளில் முதன் முதலாக வந்தது இந்தக் கட்டுரையே. அது மட்டுமல்லாமல் இக்கட்டுரை உலக மொழிகளான “ ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, கிரேக்கம், கொரிய மொழி மற்றும் இன்னும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் முழுமையாகத் தமிழில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழிபெயர்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டது ஆச்சர்யமூட்டுவதாகவும் நம் அனைவருக்கும் ஒருவித நம்பிக்கை ஊட்டுவதாகவும் , சோறூட்டுவதாகவும் , மட்டன், சிக்கன் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br />
<b><span class="Apple-style-span" style="color: blue;">முப்பரிமாணத் தன்மை</span></b><br />
<br />
’ங்கொய்யால’ என்ற வார்த்தை முப்பரிமாணத்தை உடையது. ஆம்! இதனை ஒருசிலர் ‘ங்கொய்யால’ என்றும் , வேறுசிலர் ‘ங்ஙொய்யால என்றும் இன்னும் சிலர் ’கொய்யால’ என்றும் உச்சரிக்கின்றனர். ஒரே சொல்லின் இத்தகைய முப்பரிமாணத் தோற்றம் அறிவியல் அறிஞர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தமிழின் புகழுக்கு ஓர் சான்றாகும். ’ங்கொய்யால’ என்கிற ஒரு வார்த்தையால் உலக விஞ்ஞானிகளில் பலரும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர் என்று காக்கைப் பாடினியாரும், எரிபத்த நாயனாரும் தமது பாடல்களில் அன்றே சொன்னது இப்பொழுது மெய்யாகிக்கொண்டிருக்கிறது.<br />
<b><span class="Apple-style-span" style="color: blue;"><br /></span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: blue;">நமது கடமை</span></b><br />
<br /></div>
<div style="text-align: justify;">
'ங்கொய்யால’ என்ற வார்த்தை தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்றாகும். இதன் அருமை பெருமைகளையும், இதன் வரலாற்றைப் பற்றியும் எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லித்தரவேண்டியது நமது கடமையாகிறது. அதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வீட்டில் ப்ரேம் பண்ணி வைத்துக்கொள்வது, துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து வெளியிடுவது,செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடச் செய்வது, இணையத்தில் வெளியிடுவது , புத்தகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவது , புறாவின் காலில் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குத் தூதனுப்புவது போன்றவற்றின் மூலம் ‘ங்கொய்யால’வை நாம் தலைமுறை தாண்டியும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: blue;">முடிவுரை </span></b><br />
<br />
இக்கட்டுரையின் மூலம் தமிழில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தாலும் ‘ங்கொய்யால’ என்கிற இச்சொல்லைப் பயன்படுத்தாதவர் தமிழராகவோ, இந்தியராகவோ,ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவராகவோ, பூமியைச் சேர்ந்தவராகவோ ஏன் மனிதராகக் கூடக் கருதப்படமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. எனவே இந்தக் கட்டுரையை சமச்சீர் கல்வியில் சேர்ப்பதன் மூலமும், கல்லூரியில் பாடத்திட்டமாக அமல்படுத்துவதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்றும் கூறிக்கொள்கிறேன். மேலும் ’ங்கொய்யால’ பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இக்கட்டுரை பலவிதத்தில் உதவிபுரியும் என்பதும் திண்ணம்.<br />
<br />
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-81754162618316781592011-10-24T16:47:00.000+05:302011-11-03T15:56:08.019+05:30நகல் (சவால் சிறுகதை - 2011)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b>முன்குறிப்பு</b> : இந்தப் பதிவு பரிசல்காரர் அவர்களின் <a href="http://www.parisalkaaran.com/2011/09/2011.html">சவால் சிறுகதைப்</a> போட்டிக்கான எனது சிறுகதை.<br />
<br />
’படியெடுத்தல்’ என்னும் குளோனிங் உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் கண்டுபிடித்த பெரும்பாலானவை ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை விட அழிவிற்காகவே பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வளர ஆரம்பித்த குளோனிங் என்கிற உயிரியல் துறை இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அசுர வளர்ச்சியடைந்து மாபெரும் அழிவு சக்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐ.ஜி அலுவலகம் முன்பாக வந்து நின்றான் விஷ்ணு. அவனது உருவத்தை உள்வாங்கிய அந்தத் தானியங்கிக் கதவு “ வணக்கம் விஷ்ணு! 2040 ஆம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தங்களின் வருகை பதிவு செய்யப்பட்டது “ என்று ஒலித்தவாறு தனது வாயைத்திறந்து விஷ்ணுவை விழுங்கிக்கொண்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஷ்ணு காவல்துறையின் மிகமுக்கிய உளவாளி. பெரும்பாலான வழக்குகளை மிக எளிதாக முடிப்பதற்கு உதவியிருக்கிறான். அவனது அபாரத் திறமையைக் கண்டு வியந்த ஐ.ஜி சரவணனுக்கு இவன் மீது தனி மரியாதை இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐ.ஜி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எஸ்.பி கோகுல் எதிர்ப்பட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹே , கோகுல் ! அந்த பேங்க் கேஸ் என்னாச்சு ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” அது பயங்கரக் குழப்பமா இருக்கு. மேனேஜரக் கேட்டா அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆன ஏழு நாளும் நான் ஊர்லயே இல்ல. யாரோ கடத்தி வச்சிருந்தாங்கனு சொல்லுறாரு. ஆனா இரண்டு நாள் தான் லீவு எடுத்தாரு , மத்தபடி அவர் தினமும் வந்தார்னு பேங்க் ஸ்டாப்ஸ் சொல்லுறாங்க. அவர் வந்திட்டு போனதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு. அவர் நான் வரலைனு சத்தியமே பண்ணுறார். என்ன பண்ணுறதுனே தெரியல! “ அலுப்பாகக் கூறினார் கோகுல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
" அது பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு, இரு தலைய பார்த்துட்டு வந்திடறேன்” என்று கோகுலின் பதிலை எதிர்பாராமல் ஐ.ஜி சரவணனின் அறைக்குச் சென்றான் விஷ்ணு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஷ்ணு உள்ளே நுழைந்ததையும் , கோகுலுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் அறை நோக்கி வருவதையும் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐ.ஜி.சரவணன் புன்னகையுடன் விஷ்ணுவை வரவேற்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” என்ன விஷ்ணு, கோகுல் என்ன சொல்றான் ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ பேங்க் கேஸ்ல ஒன்னுமே புரியலனு பொலம்பிட்டிருக்கான்! “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ அந்தக் கேசுல இவன் ரொம்ப குடையுற மாதிரி தெரியுது, கொஞ்சம் குழப்பிவிடேன்! “ என்று மர்மமாய்ப் புன்னகைத்தார் ஐ.ஜி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ கண்டிப்பா பாஸ்! அதுக்குத்தான் க்ளூ கிடைச்சிருக்குனு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்பப் பண்ணப்போற குழப்பத்துல அந்தக் கேஸ் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்! “ என்று கண்ணைச் சிமிட்டியவாறே விடைபெற்றான் விஷ்ணு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐ.ஜி அறையிலிருந்து வெளியேறி தனது அறையை அடைந்து கோகுலை எப்படிக் குழப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த குளிர்பதனப் பெட்டி கண்களில் பட்டது. அதன் பெயரான Swathika என்பதை முதலில் எழுதிக்கொண்டான். தொடர்ந்து அதன் மாடல் எழுத்தான W என்பதையும் எழுதிக்கொண்டான். பின்னர் உள்ளிருந்த குளிர்பானமான HUSK (2030 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளிர்பானம்) என்பதின் முதல் எழுத்தையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து H2 என்று எழுதினான். பிறகு இரண்டாவது வரிசையில் இருந்த Fanta பாட்டில்களையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து 6F என்றும் எழுதிக்கொண்டு பிரிண்டரின் வாய்ஸ் சென்சாரில் அந்த இரு வாசகங்களையும் கூறினான். மறுநொடி இரு துண்டுச் சீட்டுகளை வெளியில் துப்பியது. ஒன்றில் “ Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு “ என்றும் மற்றொன்றில் “ Sir, எஸ்.பி கோகுலிடன் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு” என்றும் வந்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரு துண்டுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டு தன் அறையிலிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். “ இது சரியா இருக்காதே! “ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு அறையின் மத்தியிலிருந்த மற்றொரு இருக்கைக்குச் சென்றான். எதிரில் இருந்த டேபிளில் இரு துண்டுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்தப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவனது iPhone “ Vishnu Informer " காலிங் என்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ இதென்னடா இது, நம்ம போன்ல இருந்து நம்மளுக்கே கால் வருது! “என்று நினைத்தவாறே அழைப்பை ரிசீவினான். எதிர்முனையில் கோகுல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ யோவ், என்னோட போன எடுத்துட்டுப் போயிட்ட. உன் போன் இங்க இருக்கு. இதுக்குத்தான் ஒரே மாடல் போன் வாங்கக் கூடாதுங்கிறது! “ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ இரு வரேன். உன் க்ளூவும் எடுத்துட்டு வரேன்! “ என்றாவாரே கிளம்பளானான் விஷ்ணு. இவை எல்லாவற்றையும் விஷ்ணுவின் தலைக்கு மேலிருந்த கேமரா இந்தக் கண்ணில் வாங்கி அந்தப் பக்கமிருந்த ஹார்ட் டிஸ்கில் சேமித்துக்கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எஸ்.பி கோகுலிடம் அவனது போனையும், க்ளூவையும் கொடுத்துவிட்டு “ இதுதான் எனக்குக் கிடைச்ச க்ளூ, எப்படியாவது ட்ரை பண்ணு. எனக்கு அவரசமா ஒரு வேலை இருக்கு! “ என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் விஷ்ணு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”அப்பாடா! எப்படியோ ஒரு தொல்லை தொலைஞ்சது! “ என்றவாரே ஆயாசமாய் இருக்கையில் அமர்ந்து டையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுக்கொண்டே மேலே நிமிர்ந்ததும் அதிர்ந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அடச்சே! இத எப்படி மறந்தேன்? “ என்றவாரே ஆத்திரத்தில் ஒரு சுத்தியலை எடுத்து மேலே சுற்றிக்கொண்டிருந்த கேமராவின் கண்களைக் குருடாக்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சட்டென கணினையை ஆன் செய்து மெயின் சர்வரிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளைப் பற்றிய தகவல்களை டவுன்லோடினான். தரவிறக்கும்போதே நேரடியாகத் தனது தொலைபேசியிலிருந்த மெமரிக்கார்டிற்கும் தகவல்களைப் பறிமாற்றிக்கொண்டு “ BOSS " என்றா எண்ணிற்கு அழைத்தான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் கான்பிரன்ஸ் மூலம் ஐ.ஜி.சரவணனையும் தொடர்புகொண்டு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“Boss, எனக்குக் கொஞ்சம் ஆபத்து. எஸ்.பி.கோகுல குழப்ப நினைச்சு நான் எடுத்த பிரிண்டவுட் எங்க கேமராவுல பதிவாகிருச்சு. என்ன செய்யட்டும்? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ உடனே புறப்பட்டு நம்ம லேபுக்கு வந்துடு, ஐ.ஜி க்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ இல்ல சார், நோ ப்ராப்ளம்! “ </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ சரி வா “ என்று இணைப்பைத் துண்டித்தார் டாக்டர் ரஃபி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரியாக அரைமணி நேரத்தில் விஷ்ணு ரஃபியின் லேபுக்கு வந்துசேர்ந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ என்ன விஷ்ணு ? ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ இல்ல பாஸ். போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வந்துட்டேன்! “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ எங்க மண்ணத் தூவுனீங்க ? நாங்கதான் வந்துட்டோமே! “ என்றவாறு துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.கோகுல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” கோகுல், கிட்ட வராதீங்க. நான் நினைச்சா இந்தக் கட்டிடத்த இப்பவே தரை மட்டமாக்கிடுவேன். இந்த லேபோட நாலு மூலைலையும் நியூக்ளியர் வெப்பன்ஸ் இருக்கு. எல்லாமே சக்தி வாய்ந்த புளூட்டேனியம் - 239 குண்டுகள். உங்களால இந்த சிட்டியே நாசமா போகனுமா ? “ என்று மிரட்டினார் டாக்டர் ரஃபி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அது முடியாது பாஸ், எல்லாத்தையும் புடுங்கிட்டேன்! ( கொஞ்சம் லோக்கல் தமிழில் பேச நினைத்து புடுங்கிட்டேன் என்றான்) “ என்றான் விஷ்ணு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ விஷ்ணு! என்ன சொல்ற ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ ஆமா பாஸ், சாரி இனி எதுக்கு பாஸ்னு நடிச்சிட்டு ? உங்க லேபோட டோட்டல் கண்ட்ரோல் என் கைல. இனி நீங்க நேரா ஜெயிலுக்குப் போலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” நீங்களும்தான் மிஸ்டர் விஷ்ணு! “ என்றார் எஸ்.பி.கோகுல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” நான் எதுக்கு ? “</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
” உங்களுக்கும் ஐ.ஜி. சரவணனுக்கும் , டாக்டர் ரஃபிக்கும் இருந்த தொடர்ப நாங்க கண்டுபிடிச்சிட்டோம். ஐ.ஜி ய அரெஸ்ட் பண்ணியாச்சு. இந்த போட்டோல<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-2I4wYuqGD38/TqUpJ3ebXxI/AAAAAAAAAI4/mVTksOKgQB8/s1600/saval+sirukathai.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-2I4wYuqGD38/TqUpJ3ebXxI/AAAAAAAAAI4/mVTksOKgQB8/s320/saval+sirukathai.JPG" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<span id="goog_1194527310"></span><span id="goog_1194527311"></span></div>
<div style="text-align: justify;">
இருக்கிறது கூட என்னை டைவர்ட் பண்ண நீங்க போட்ட ப்ளான்னு ஐ.ஜி எங்கிட்ட சொல்லிட்டார்”<br />
<br />
” நீங்க அரெஸ்ட் பண்ணினது ஐ.ஜி னா இங்க இருக்கிறது யாரு ? “ அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையைக் காட்டிக் கேட்டான் விஷ்ணு.<br />
<br />
அறையைத் திறந்து பார்த்த எஸ்.பி.கோகுல் சற்றே அதிர்ந்தார். அறைக்குள்ளே ஐ.ஜி சரவணனைப் போல ஒருவரும் விஷ்ணுவைப் போல ஒருவரும் இருந்தனர்.<br />
<br />
“ இங்க என்ன நடக்குது ? இவுங்க யாரு ? அச்சு அசலா ஐ.ஜி மாதிரியே இருக்கார் ? “ கேள்விகளை அடுக்கினார் கோகுல்.<br />
<br />
” இவர்தான் உண்மை. நீங்க அரெஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் மாதிரி! “ விஷ்ணு பதிலளித்தான்.<br />
<br />
“ ஒன்னும் புரில! தயவுசெஞ்சு விளக்கமா சொல்லுங்க“ <br />
<br />
” நான் சொல்லுறத விட டாக்டர் ரஃபி சொன்னா புரியும்னு நினைக்கிறேன்! “<br />
<br />
டாக்டர் ரஃபி தொடரலானார். ” க்ளோனிங் துறைல எனக்கு 2030ல நோபல் பரிசு கிடைச்சது. அதாவது ஒரு மனிதனோட உயிருள்ள ஒரு செல்லை மட்டுமே வச்சுட்டு செல்களின் வளர்ச்சிய துரிதப்படுத்தினா வெறும் 7 நாள்ல அவர மாதிரியே அச்சு அசலான இன்னொரு மனிதனை உருவாக்கிடலாம்கிறதுதான் அந்த ஆராய்ச்சி.குளோனிங் முறை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஏழு நாள்ல ஒரு மனிதனை உருவாக்கலாம்கிற என்னோட ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு குடுத்தாங்க. ஆனா இந்தியாவுல க்ளோனிங் செய்யக்கூடாதுனு தடை இருந்ததால அரசாங்கத்துக்குத் தெரியாமதான் இந்த லேபக் கட்டினேன். என்னோட கடந்த பத்து வருட ஆராய்ச்சியின் பயனா வெறும் இரண்டே நாள்ல ஒரு க்ளோன் மனிதனை உருவாக்குற அளவுக்கு வளர்ந்திட்டேன். அதே சமயத்துல அந்த மனிதனோட சிந்திக்கும் ஆற்றல கட்டுப்படுத்தி நாம சொல்லுற வேலைய செய்ய வைக்க திட்டம் போட்டேன். அதையும் கண்டுபிடிச்சேன். அத டெஸ்ட் பண்ணிப்பார்க்கத்தான் அந்த பேங்க் மேனேஜரக் கடத்தி அவர் மாதிரியே ஒரு க்ளோன் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா அந்த பேங்க்ல இருந்த பணத்த கொள்ளையடிச்சேன். அது வெற்றிகரமா முடிஞ்சதால இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு போலீஸ் நம்ம கைல இருந்தா வசதியா இருக்கும்னு நினைச்சு போலீஸ் ஐ.ஜி. சரவணனை கடத்தி அவரோட க்ளோன போலீஸ் ஐ.ஜி யா மாத்தினேன். அதே சமயத்துல விஷ்ணு வும் என் கைல மாட்டினார். ஒருவேளை இவர் உண்மையைக் கண்டுபிடிச்சிடுவாரோன்னு பயந்து இவரோட க்ளோனையும் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா எல்லோரையும் கவனிச்சுட்டு வந்தேன். ஆனா நான் உருவாக்கின விஷ்ணுவோட க்ளோன் எப்படி எனக்கு எதிரா மாறிச்சுனுதான் தெரியல? “ சோகமாய் முடித்தார் ரஃபி.<br />
<br />
அது எப்படினு நான் சொல்லுறேன் என்றவாரு ஆரம்பித்தான் அசல் விஷ்ணு. ”உங்க முன்னாடி இப்ப நின்னுட்டிருக்கிறது நீங்க தயாரிச்ச V1 (விஷ்ணு 1 ) க்ளோன் இல்ல. உங்க பாசைல சொல்லப்போனா இது V ஜீரோ. அதாவது நீங்க தயாரிக்கிறதுக்கு முன்னாடியே நான் தயாரிச்ச என்னோட க்ளோன் இது. எனக்கு அந்த பேங்க் கேஸ்ல கிடைச்ச கொஞ்ச தகவல்களை வச்சு சில விசயங்களைக் கண்டுபிடிச்சேன். அதே சமயம் ஐ.ஜி யும் ஒரு ரண்டு நாள் லீவு போட்டார். ஆனா எனக்குத் தெரியாம அவர் லீவு போட்டு நான் பார்த்ததில்ல. சோ அவர் லீவு முடிஞ்சு ஆபீசுக்கு வந்ததும் அவர பாலோ பண்ண ஆரம்பிச்சேன். அவர் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா உங்க லேபுக்குத்தான் வந்தார். உங்க லேபுக்கு முன்னாடி இருந்த உங்க பேர பத்தின செய்திகளைத் தேடினபோதுதான் நீங்க ஒரு க்ளோனிங் எக்ஸ்பர்ட்னு தெரிஞ்சிக்கிட்டேன். உடனே அந்த பேங்க் மேனேஜரப் போய்ப் பார்த்தேன். அவரும் தன்னை திடீர்னு ஒருநாள் கடத்திட்டுப் போய் உடம்புல இருந்து கொஞ்சம் சதைய வெட்டிட்டு ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சிருந்ததாவும் , ஏழு நாளுக்கு அப்புறம் திறந்துவிட்டுட்டதாகவும் சொன்னார். அப்பவே நான் இது கண்டிப்பா க்ளோனிங் மேட்டராத்தான் இருக்கும்னு சந்தேகப்பட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே நான் என்னோட க்ளோன தயாரிச்சிருந்தேன். உங்க க்ளோன்ஸ் மாதிரி சிந்திக்கத் தெரியாத க்ளோன் இல்ல இது. என்னை மாதிரியே ரொம்ப நல்லா சிந்திக்கும் திறன் வாய்ந்த க்ளோன். என்னோட க்ளோனான இப்ப உங்க முன்னாடி நின்னுட்டிருக்கிற விஷ்ணுவ ஆபீசுக்குப் போகச் சொல்லிட்டு நானா ப்ளான் பண்ணி உங்க கைல சிக்கினேன்” என்று முடித்தார் விஷ்ணு.<br />
<br />
“ ஆனா நான் உங்கள கடத்தின ரண்டு நாள்ல உங்களோட க்ளோன தயாரிச்சு உங்க ஆபீசுக்கு அனுப்பி வச்சேனே ? “ குழப்பமாகக் கேட்டார் ரஃபி.<br />
<br />
“ அந்தக் குளோனப் பிடிக்கிறதுக்குத்தான் இத்தன ட்ரிக்ஸ் பண்ணினேன். நீங்க என்னைக் கடத்தின இரண்டு நாள்ல என்னை மாதிரியே ஒரு க்ளோன் தயாரிச்சு எங்க ஆபீசுக்கு அனுப்புவீங்கனு தெரியும். அது ஆபீஸ் டைம் போக மிச்ச நேரம் இங்க தான் இருக்கும்னு தெரியும். சோ நீங்க தயாரிச்ச V1-அ கடத்தி என்னோட வீட்டுல அடைச்சு வச்சிட்டுத்தான் என்னோட க்ளோன் அதாவது இப்ப உங்க முன்னாடி நிக்கிறானே இவன் இந்த ஏழு நாளா இங்க வந்திட்டு இருந்தான். உங்க லேப்ல இருக்கிற எல்லா ரோபோட்ஸ் அப்புறம் தற்காப்பு பொருட்கள் எல்லாத்தையும் உங்களுக்குத் தெரியாமயே அப்புறப் படுத்திட்டான்”<br />
<br />
” ஆனா நீங்க எதுக்காக எனக்கு தப்பான ஒரு க்ளூ ( S W H2 6F) குடுத்துட்டு கேமராவையும் உடைச்சீங்க ? “ எஸ்.பி கோகுல் ஆர்வமாகக் கேட்டார்.<br />
<br />
விஷ்ணுவின் முதல் க்ளோன் பேச ஆரம்பித்தான். ” உண்மைல நம்ம ஆபீஸ்ல யாரெல்லாம் க்ளோன்னு தெரியல. கூடவே யாரெல்லாம் டாக்டர் ரஃபியோட ஆளுங்கன்னு தெரியல. சோ ஒருவேளை நான் போய் இந்த மாதிரி ஐ.ஜி ய கடத்தி வச்சிருக்காங்கனு சொல்லி அவுங்க டாக்டரோட ஆளுங்களா இருந்து இவர் தப்பிச்சிட்டா என்ன பண்ணுறதுனு பயமா இருந்துச்சு. அதனால என் மேல சந்தேகம் வரவைக்கணும்னுதான் அந்த மாதிரி துண்டுச்சீட்டுல ரண்டு வாசகங்கள பிரிண்ட் எடுத்து கேமராவுல படுற மாதிரி வச்சிட்டு , அப்புறம் டென்சனாகி கேமராவ உடைக்கிறமாதிரி உடைச்சேன். ஒருவேளை ரஃபியோட ஆளுங்க அதப் பார்த்தா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. உண்மையான போலீஸ் ஆளுங்க பார்த்தா என்னை பாலோவ் பண்ணுவாங்கனு ப்ளான் பண்ணினேன்.அதோட என்னோட மொபைல நீங்க ஒட்டுக்கேக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் போலீஸ் ஆபீசர்ஸ்சோட இம்பார்ட்டண்ட் பைல்கள மெயின் சர்வர்ல இருந்து என்னோட் யூசர்நேம் குடுத்து டவுன்லோட் பண்ணினேன். அப்படி பண்ணினா என்னோட மொபைல் ஒட்டுக்கேக்கப்படும்னு எனக்குத் தெரியும். அதோட அதே சமயத்துல அங்க இருக்கிற ஐ.ஜி க்கும் இதுல தொடர்பு இருக்குனு தெரியப்படுத்த அவருக்கு கான்பரன்ஸ் போட்டேன். எல்லாமே நான் நினைச்ச மாதிரி ஜெயமா முடிஞ்சது” என்று சிரித்தான் வி-ஜீரோ என்னும் விஷ்ணு.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
</div>செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com26