முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!
1.விரும்பும் 3 விசயங்கள் :
அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.
2.விரும்பாத 3 விசயங்கள் :
அ). சண்டை போடுறது.
ஆ). கேக்காமயே அறிவுரை சொல்லுறது.
இ). எங்கிட்ட கேக்காமலே தேர்தல் வைக்கிறது.
3.பயப்படும் 3 விசயங்கள் :
அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு :(
ஆ). அடுத்து இதுக்கு இன்னொரு பாயிண்ட் எழுதனும்னு பயமா இருக்கு.
இ). முதல்ல நான் எதுக்கு பயந்தேனோ அந்த பயத்துல இது மறந்துபோச்சு.
4.புரியாத 3 விசயங்கள் :
அ). ஒரு தடவ நான் பள்ளிகூடம் போயிட்டிருக்கும்போது
ஆ). பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?
இ). முதல்ல நான் என்ன சொல்லவந்தேன்னு புரில.
5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :
அ). நான் இப்ப ஆபீசுல இருக்கேனா, இது ஆபீஸ் மேசைதானே, அதனால இது என்னோடது ஆகாதுல.அதனால எங்க வீட்டுல இருக்கிற மேசை மேல என்ன இருக்குனு தெரியல.
ஆ). இதுக்கும் பதில் சொல்லனுமா?
இ). வேண்டாம்னா விடுங்க.
6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :
அ). கவுண்டமனி, வடிவேலு நகைச்சுவைகள்.
ஆ). கும்மி மக்களின் பின்னூட்டங்கள்.
இ). ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது.
7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :
அ). ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேங்க.
ஆ). அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்.
இ). கோமாளினு ஒரு ப்ளாக் இருக்குனு சொன்னதால அத தேடிட்டு இருக்கேன்.
8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :
அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதினம் எழுதிடனும்.
ஆ).செல்வா கதைகளை முல்லா கதைகள் அளவுக்கு பிரபலப்படுத்தனும்.
இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்.
9.உங்களால் செய்து முடிக்கக் கூடிய 3 விசயங்கள் :
அ). 8(அ)
ஆ). மொக்கை போடுவது.
இ). செல்வா கதை எழுதுவது.
10.கற்றுக்கொள்ள விரும்பும் 3 விசயங்கள் :
அ). எப்பவும் மொக்கை போட்டு சிரிக்க வைக்கனும்.
ஆ). தமிழ் இலக்கியம்.
இ). இன்னும் கொஞ்சம் தூயதமிழில் எழுத.
11.பிடித்த 3 விசயங்கள் :
அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.
12.கேட்க விரும்பாத மூன்று விசயங்கள் :
அ). இந்தமாதிரி நிறைய கேள்விகள் குடுத்து யாரோ உன்ன தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க அப்படின்னு.
ஆ). நம்பிக்கைத் துரோகம்.
இ).
கார்த்தி இந்த தொடர் பதிவு எழுதிட்டான்னு.
13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :
அ). அன்பே அன்பே கொல்லாதே ( ஜீன்ஸ்)
ஆ). யாரோ என் நெஞ்சைக் கீறியது ( குட்டி)
இ). சிறகுகள் வந்தது ( சர்வம்)
14.பிடித்த 3 படங்கள் :
அ). அன்பே சிவம்.
ஆ). பசங்க.
இ). இங்கிலீசு படம் எதாச்சும் சொல்லனும்களா ? ( அட இதுக்கு ஒன்னு வெட்டியாப்போச்சே )
15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :
அ). பூமி.
ஆ). சூரியன்
இ). நான்.
16.இதை எழுத அழைக்கப்போகும் 3 நபர்கள் :
அ). அதான் அன்னிக்கு ஒருநாள் செத்துப்போச்சுல அந்த எறும்பு. ( பாவம் இதையாச்சும் செய்யலாம்னுதான். )
ஆ). நேத்திக்கு எனக்கு 50 பைசா கொடுக்காத கண்டக்டர்.
இ). உங்க சொந்தக்காரங்க யாராச்சும் இருந்தா சொல்லி எழுத சொல்லுறீங்களா?
பின்குறிப்பு : உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் முதல்ல பின்குறிப்புதான் எழுதினேன். அப்புறம்தான் முன்குறிப்பெல்லாம் எழுதினேன். ஆனா நீங்க முதல்ல இருந்து படிச்சிட்டு வந்து நான் முதல்ல எழுதினத கடைசியா படிக்கிறீங்க :)