Showing posts with label பஞ்ச். Show all posts
Showing posts with label பஞ்ச். Show all posts

Tuesday, June 15, 2010

பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

(இந்தப் பதிவில் இருக்கும் அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கோமாளிக்கு இல்லை.யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )


*."நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :
அப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..??

*.ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :
ஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா ...??

*.என் வழி தனி வழி :
ஒன் வே ரோடு மாதிரியா ...??

*.தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;
அதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..?

*.மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :
அப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..??

*.நீங்க நல்லவரா கெட்டவரா..?
பஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;

*.வரும் ஆனா வராது ;
இதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..?

*.ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?

*.கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??

*.நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;
உங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..

*.சும்மா அதிருதுள்ள;
மொபைல் வைபரேட் அலெர்ட் வச்ச அதிராம மயிரா பண்ணும் .!

(உங்களுக்கு பிடித்த பஞ்ச் களையும் பின்னூட்டத்தில் பஞ்சராக்குங்கள்..!!)