Tuesday, December 13, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000/-

நண்பர்கள் அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது. டெரர்கும்மி குழுவின் வலைப்பூ தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். 

பதிவுகளை பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன் அதன்படி அனுப்புங்கள். 

ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை  RS 10000/-




1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
2 . கவிதைகள்
3 . விழிப்புணர்வு
4 . கதைகள்
5 . அனுபவம்/பயணக்கட்டுரை
6 . அரசியல் கட்டுரை
7 . திரை விமர்சனம்
8 . தொழில்நுட்பம்
9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.

மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

நன்றியுடன்
டெரர் கும்மிக்காக,
உங்கள் கோமாளி செல்வா.

நன்றி : கோமாளி செல்வா

பின்குறிப்பு : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா ? இந்தப் பதிவ நான் எழுதல. இவர் எழுதின பதிவு இது. அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம்.

5 comments:

Madhavan Srinivasagopalan said...

பின்குறிப்பு : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா ? இந்தப் பதிவ நான் எழுதல. இவர் எழுதின பதிவு இது. //அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம். //


What non-sense you are talking.. (read it in vadivelu's style)

Mohamed Faaique said...

ஓ!!! நீங்கதான் கோமாளி செல்வா’வா???

Unknown said...

super selva.. kalakkunga..

Suresh Subramanian said...

nice....

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி..

புத்தாண்டு வாழ்த்துகள்..