Friday, December 31, 2010

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு : எல்லோரும் கண்டிப்பா போன் வச்சிருப்போம். அதுல நிறைய அப்ளிகேசன்ஸ் வச்சிருப்போம். சிலது நமக்கு தெரிஞ்சிருக்கும் , சிலது தெரிஞ்சிருக்காது. இங்க நான் பயன்படுத்துற சில பயனுள்ள அப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருக்கேன் பாருங்க .!

முதல்ல பிரவுசர் பத்தி பார்க்கலாம் 

*.Opera Mini : இது பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துற ஒரு உலவி, பெரும்பாலும் நோக்கியா மொபைல்ல கூடவே வருது.!

*.Bolt Browser : இதுவும் ஒரு நல்ல உலவிதான். இதுல யுடியூப் வீடியோக்கள தரவிறக்கம் செய்யாம பார்க்கலாம்.!

*.UC Browser : இதுவும் ஒரு உலவிதான். இருந்தாலும் ஒபேரா அளவுக்கு வராது.!

மின்னரட்டை  ( சாட்டிங் ) :

*.e-Buddy : பெரும்பாலோர் பயன்படுத்துற அப்ளிகேசன் இதுதான். இதுல சாட் பண்ணுறது சுலபமா இருக்கும்.

Nimbuzz : இதுவும் ஒரு அருமையான அப்ளிகேசன் தான். இதுல நம்ம மொபைல்ல இருந்து போட்டோஸ் கூட சாட்டிங் போதே அனுப்ப முடியும். e-Buddy ய விட எனக்கு இது சிறப்பா தெரியுது.

இது தவிர mig33 , MGtalk, Palringo,RocketTalk, WeBuzz இப்படி எக்கச்சக்க அப்ளிகேசன்ஸ் இருக்கு. இது எல்லாத்திலையும் எனக்கு ரொம்ப பிடிச்சது Nimbuzz தான்.!

Dictionary :
நமக்கு நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாம இருக்கும் . அதுக்காக நிறைய Dictionary's இருக்கு.இங்க எனக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப வாய்ப்பே இல்லாத ஒரு Dictionary பத்தி சொல்லுறேன்.

AROMA : அரோமா அப்படின்னு ஒரு Dictionary இருக்குங்க. உண்மைலேயே வாய்ப்பே இல்ல. அவ்ளோ நல்லா இருக்கு. அதில நிறைய விசயங்கள் இருக்கு .அதுல இருக்குற அதாவது ஒரே அப்ளிகேசன்ல இருக்குற விசயங்கள் என்னனு பார்த்தா  Jokes , Wikipedia , Local , Funstuff , Lifestyle இப்படி எல்லா விஷயங்களுமே இருக்கு . இதுல Local அப்படிங்கிற Tab ல நம்ம லோக்கல்ல இருக்குற எல்லா விசயங்களையும் அதாவது Pizza கடை எங்க இருக்குது அப்படின்னு கூட தேட முடியும் . உண்மைலேயே ரொம்ப கலக்கலா அப்ளிகேசன் இது . அதே மாதிரி Funstuff அப்படிங்கிற Tab ல Quotes, Facts, Proverbs, Story இப்படி நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கு . அதுவும் On this Day அப்படின்னு ஒண்ணு இருக்கு , அதுல போய் பார்த்தீங்க அப்படின்னா வரலாற்றுல அந்த தினத்துல நடந்த விசயங்கள சேர்த்து வச்சிருக்காங்க. சரி இன்றைய தினத்தோட சிறப்பு என்னனு பார்க்கலாம்னு பார்த்தேன் , கி.பி 600 ல ஆரம்பிச்சு ஒரு 26 நிகழ்வுகள் இருந்துச்சு.! ஆனா இந்த அப்ளிகேசனோட ஒரே பிரச்சினை என்னனா இது ஒரு ஆன்லைன் அப்ளிகேசன்.!

*.Dictionary v3.1 : இது ஒரு offline dictionary . உண்மைலேயே இது ரொம்ப நல்லா இருக்கு . ஆனா அரோமா ல இருக்குற அளவுக்கு நிறைய விசயங்கள் இல்லனா கூட ஒரு Dictionary அப்படிங்கிற அளவுக்கு பயனுள்ளதா இருக்கு. அது உருவாகினது கூட Vikrant Prakash Chavan அப்படின்கிற மகராஷ்டிரா காரர்.!

*.Window XP : என்னடா இது WindowsXp அப்படின்னு பார்க்காதீங்க , அப்படி ஒரு அப்ளிகேசன் இருக்கு. அத ஓபன் பண்ணினா நம்ம WindowsXp கம்பியூட்டர்ல எப்படி தெரியுதோ அதே மாதிரி உங்க மொபைல்ல தெரியும். ஆனா இது எதுக்கு பயன்படுதுன்னு தெரியல . ஒரு அழகுக்காக வச்சிக்கலாம்.!

சரி இவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருக்கே இதெல்லாம் எங்க போய் வாங்குறது அப்படின்னு கேக்காதீங்க , Getjar.com , Sharejar.com இங்க போய் வேணும்கிற அப்ளிகேசன்ஸ் இலவசமா டவுன்லோட் பண்ணிகோங்க.!


நீதி : எவ்ளோ அப்ளிகேசன்ஸ் இருந்தாலும் நோக்கியா 1100 ல பயன்படுத்த முடியாது.!

சந்தேகம் : இதுக்குப் பேர்தான் நல்லா பதிவா ..?


பின்குறிப்பு : என்னடா கோமாளி கூட நல்லா பதிவு எழுதிருக்கானே திருந்திட்டானோ அப்படின்னு நினைக்க வேண்டாம் .. 2011 வாழ்த்து சொல்லுறதுக்காக ஒரு உருப்படியான பதிவு போடணும்னு நினைச்சேன்.. அதான்.. நீங்க இனிமேல் எப்பவுமே மகிழ்ச்சியாகவே இருக்கப்போறீங்க , வரப்போற ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் அப்படின்னு சொல்லி எனது உரையை அட ச்சே , எனது பதிவை முடித்துக்கொள்கிறேன்.!

Wednesday, December 29, 2010

நாட்டமையும் தமிழ்படம் நாட்டாமையும் பகுதி - 4

முன்குறிப்பு : நாட்டமையும் தமிழ்படம் நாட்டமையும் பதிவோட முந்தய பதிவுகள படிக்கணும்னு நினைக்கிறவங்க இங்க போய் படிச்சுகோங்க.!

இடம் : எமலோகம். நாட்டாமையும் தமிழ்படம் நாட்டாமையும் எமனின் முன்னால் நிற்கின்றனர்.!

எமன் : என்ன சித்திரகுப்தா இன்று ஒரு ஆள்தானே நமது கணக்கு , இரண்டு பேர் இருக்கின்றனர்.?

சித்திர குப்தன் :  யார் நாட்டாமைனு கேட்டா இரண்டுபேருமே நாந்தான்னு சொன்னாங்க அதான் குழப்பத்துல ரண்டுபேரையும் பிடிச்சிட்டு வந்திட்டேன்.

எமன் : சரி விடு , நான் விசாரிக்கிறேன் ..! உங்க ரண்டுபேர்ல யாருயா உண்மையான நாட்டாமை..?

நாட்டாமை பட நாட்டாமை : இதுல என்றா சந்தேகம் உனக்கு , நான் தாண்டா நாட்டமை , இவன் சும்மா டூப்பு.. தென்றா பசுபதி சொல்றா இவன் கிட்ட.!

சி.குப்தன் : யோவ் என்னப் பார்த்தா பசுபதி மாதிரியா தெரியுது , நான் பசுபதி இல்ல . அவன் இன்னும் பூமிலதான் இருக்கான்.!

தமிழ்ப்படம் நாட்டாமை : நீ மொதல்ல நிறுத்துரா , நான் தாண்டா இப்ப நாட்டமை  ,இவன்தான் செத்துப்போய்ட்டானே.! 


நா.நாட்டாமை : தென்றா பேசற நீயி , பசுபதி இல்லீனா நாங்க எப்பர்றா நாலு எடத்துக்குப் போயி தீர்ப்பு சொல்லுறது..? போ போயி பசுபதிய கூட்டிட்டு வா. 


த.நாட்டாமை : அப்பிடியே , அந்த சொம்ப எடுத்துட்டு வாடா.!

நா.நாட்டாமை : ( த.நாட்டமையைப் பார்த்து ) டேய் , டேய் அங்க ஒரு ஆல மரம் இருக்குடா , அத நான்தான் மொதல்ல பார்த்தேன் , அதனால நான் தான் மொதல்ல தீர்ப்பு சொல்லுவேன்.!

த.நாட்டாமை : தென்றா பேசற , மொதல்ல ஆளுக்குப் பாதியா பிரிக்கோனும் , அப்புறம் தீர்ப்பு சொல்லுவோம்.! (இருவரும் ஆல மரத்தடிக்கு ஓடுகின்றனர்.!)

சி.குப்தன் : யோவ் , நில்லுங்கய்யா , இங்க வந்து தீர்ப்பெல்லாம் சொல்லவேண்டாம் , இது எமலோகம்.! இங்க எமன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லுவார்.

த.நாட்டாமை : உனக்கு வேணா எமன் பெருசா இருக்கலாம் , ஆனா தீர்ப்பு நம்பட கைல.!

எமன் : யோவ் , இரண்டுபேருமே செத்துப் போய்த்தான் இங்க வந்திருக்கீங்க..!

நா.நாட்டாமை : தென்றா லூசாட்டமா பேசுற , நான் செத்துப்போயட்டா ஆர்ரா தீர்ப்பு சொல்லுறது.? 

த.நாட்டாமை : நான் சொல்லுவண்டா.!

எமன் : யோவ் , லூசுகலாயா நீங்க , இரண்டுபேருமே செத்துத்தான் இங்க வந்திருக்கீங்க.!

நா.நாட்டாமை : தென்றா மறுக்காலும் மறுக்காலும் அப்படியே சொல்லிட்டிருக்கற , இவன் பதினெட்டு வருஷம் தள்ளி வெக்கரண்டா , இவனோட ஆரும் பேச கூடாது , தண்ணி பொழங்ககூடாது. இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு.!

த.நாட்டாமை : செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக்  கொன்னுபோடுங்கடா..! தெங்கடா பசுபதி , வந்ததும் அடிசொட்ட சொல்றா.!

சி.குத்தன் : யோவ் , எமனவே கொல்லச்சொன்ன ஆளு நீதான்யா ..? உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!

எமன் : ஐயா சாமி , இவனுகள பிடிச்ச இடத்துலேயே கொண்டு போய் விட்டுரு என்று கூறியவாறே மயங்கி விழுகிறார்.!

பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!


Monday, December 27, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க ,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?

                                       பதிவர் சந்திப்பில் செல்வா 

  நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வா மத்திய உணவு இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்றார். இவர் சைவம் என்பதால் சைவ உணவு வழங்கப்பட்ட பந்திக்கு சென்று அமர்து கொண்டார்.

  சிறிது நேரத்தில் பந்தி பரிமாறுபவர் கையில் உணவுடன் வந்தார். செல்வாவின் அருகில் வந்த அவர் " கையை எடுங்க " என்றார். 

அதற்கு செல்வா " கையை எடுத்தா சாப்பிட முடியாதுங்க " என்றார் அப்பாவியாக.

" இலைல இருந்து கையை எடுங்க , சாப்பாடு வைக்கணும்.! "

" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.

" ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வழிந்து கொண்டே கையை எடுத்தார்.! 

                                       கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா 

      ஒரு முறை செல்வாவின் வீட்டில் அவரது பெற்றோர் அவரை கணிப்பொறி கற்றுக்கொள் என்று கூறி அவரை ஒரு கணினி மையத்தில் சேர்த்தனர். அதற்கு முன்னர் அவருக்கு கணிப்பொறியில் சில விசயங்கள் தெரியும் என்று அங்கே பெருமையாக கூறிக்கொண்டார்.

  கணிப்பொறி கற்றுக்கொடுக்க வந்தவர் அவரிடம் சில விசயங்களை கூறிவிட்டு இத சேவ் பண்ணிடுங்க என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிதுநேரம் சமாளித்து விட்டு தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

  வீட்டில் சென்றதும் அவரது பெற்றோர் ஏன் நேரத்திலேயே வந்துட்ட என்று கேட்டனர். அதற்கு செல்வா அங்க என்னைய சேவ் பண்ண சொன்னாங்க , நான் ஷேவிங் ரேசர் எடுக்காம போயிட்டேன் , அதான் உடம்பு சரியில்லைன்னு வந்திட்டேன் என்றார் பெருமை பொங்க.!

நீதி : கதைகள் இரண்டும் மொக்கை , ஒன்று மொக்கை ஒன்று சிரிப்பு , இரண்டும் சிரிப்பு ( உங்கள் விருப்பத்தில் நீதி )

நன்றி : ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை சிறந்த முறையில் நடத்திய குழும உறுப்பினர்களுக்கு நன்றி .!


பின்குறிப்பு : நான் தான் சைடுல வடிவேலு படம் போட்டு ஒண்ணு சொல்லிருக்கேனே , அத படிக்காம இத படிச்சிட்டு அழுதா நான் என்னங்க பண்ண முடியும் .?

Wednesday, December 22, 2010

என்னத்த சொல்லுறது.?

முன்குறிப்பு : எல்லோரும் கவிதை எழுதுறாங்க , சரி நாமளும் முயற்சி பண்ணி பாக்கலாம்னு வந்தேன்.! இத படிச்சு உங்க உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.!

எங்கிருக்கிறாய் என்னவளே.!
பேருந்து நிறுத்தங்களிலும் , கல்லூரி ஓரங்களிலும்
திருவிழாக் கோவில்களிலும் தேடிக்களைத்து விட்டேன்.!
இனியும் தேடத் திராணி இல்லை..

ஒவ்வொருமுறை விக்கல் வரும்போதும் உன் நியாபகம் .
நீதான் நினைக்கிறாய் என்கிறது மனது.!
அறிவியல் வளர்ந்தென்ன பயன்..?
யார் எங்கிருந்து நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாமல்.!

"அவ கூப்பிடறா மச்சி " என்றவாறே செல்போனை எடுத்துக்கொண்டு
தனியாகப் போகும் நண்பனைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமைப்படுகிறேன் அவன் ஒன்றும் அவ்வளவு அழகில்லை.!

ஏனோ தெரியவில்லை என் அத்தை மாமாக்களுக்கு என் வயதொத்த
பெண் குழந்தைகளே இல்லை.! இருந்தாலாவது பயமில்லாமல் காதலித்திருப்பேன்.

இப்பொழுதெல்லாம் பூரியை விட பூரிக்கட்டை
சண்டைகளே என்னை அதிகம் கவர்கின்றது.!
எப்பொழுது நீ என் மீது வீசப்போகிறாய்.?

தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன் தலைவனைப் பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
என்ற வைரமுத்துவின் வரிகளில்தான் எத்தனை உண்மை.?!

என்னைப்போல ஏழு மணிவரை தூங்குவாயோ இல்லை
EARLY MORNING எழுந்தரிப்பாயோ நானறியேன்..?

அழகான பெண்களைக் கடக்கையில் மட்டும்
அது நீதானா என சத்தமிடும் மனது
நான் உனக்காக தாஜ்மகால் கட்டப்போவதில்லை ,
நாமிருவர் நமக்கிருவராய் வாழ அழகிய வீடு கட்டுவேன்.!
 
இரண்டு முழ கூந்தல் வைத்திருப்பாயோ இல்லை
பாப் கட்டிங் செய்திருப்பாயோ தெரியவில்லை ,
எப்படி இருந்தாலும் என் தேவதை நீ தான்.!

உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்வேனா ,
இல்லை கல்யாணம் செய்து காதலிப்பேனா தெரியவில்லை.!
நீ சைவமோ அசைவமோ தெரியவில்லை.!
சிரிக்கையில் கன்னத்தில் குழிவிழுமோ தெரியவில்லை.!
இருந்தாலும் உன்னைக் காணாமலே நித்தமும் ஒரு கற்பனையில்
காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .!

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : நீயெல்லாம் கவிதை எழுதலைன்னு யார் அழுதா.?

நீதி : கூகுள்ல ப்ளாக் எழுதுறது இலவசமா இருக்குற வரைக்கும் இந்த மாதிரி மொக்கைகள் வந்துதான் தீரும் ..!

பின்குறிப்பு : நான் வேணா இன்னொரு கவிதை எழுதவா ..?

Monday, December 20, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : போன வாரத்துல முல்லா கதைகள் சில படிக்க நேர்ந்தது. சில இல்ல , ஒண்ணு தான். அதுவும் வலைச்சரத்துல நம்ம எஸ்.கே அண்ணன் போட்டது. அவர்கிட்ட கேட்டு முல்லா கதைகள் இருக்குற ப்ளாக் அட்ரஸ் வாங்கினேன். ஆனா ஆணித் தொல்லை காரணமா படிக்க முடியல. இருந்தா கூட அதுக்கு முன்னாடி சில முல்லா கதைகள் , ஜென் கதைகள் படிச்சிருக்கேன். ரொம்ப சிறுசா , ரசிக்கும் படியா இருக்கும். நானும் ரோசிச்சேன் , எத்துன நாளைக்கு முல்லா கதைகள் படிக்கிறது ,அதனால என்னோட மொக்கைகள் சிலத பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி முல்லா கதைகள் மாதிரி சிறுசா ரசிக்கும் படியா ( அங்க என்ன சிரிப்பு ) நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி எழுதப் போறேன். அதோட முதல் இரண்டு கதைகள் தான் இங்க இருக்குறது.

                                                  அறிவாளி செல்வா

 ஒரு நாள் செல்வா தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

   சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு  போனை கட் செய்தவர் முகத்தில் சந்தோஷ அலை வீசியது. தன் வீட்டில் இருந்து மின்சார வயர்களை எடுத்து தன்மீது போட்டுகொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினார். 

   மறு வினாடியே மின்சாரத்தால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நண்பருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

    அவரைக்காண வந்த அந்த நண்பர் என்ன ஆனது என்று விசாரித்தார். அதற்கு செல்வா " நீதான நேத்து போன் பண்ணும் போது நான் சரியான டியூப் லைட் அப்படின்னு சொன்ன , அதான் வெளிச்சம் வருதா அப்படின்னு டெஸ்ட் பண்ணலாம்னு கரென்ட் கொடுத்தேன். வெளிச்சம் வரவே இல்ல " என்றார் சந்தோசமாக.!

**********************************************************************************************

                                           கடல் மீன் 

ஒரு நாள் செல்வா தன் வீட்டு மாடியில் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் . அங்கே வந்த அவரது தாயார் " என்ன ஆச்சு , ஏன் சோகமா இருக்க..? " என்றார்.

  அதற்கு செல்வா நேத்து கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " 

"ஆமா , அத வளர்க்கலாம்னு சொன்னே , அதான் கொழம்பு வைக்கல , ஏன் கொழம்பு வைக்கணுமா..?" என்றார்.

" இல்ல அது கடல் மீன் தான , அதனால அதுக்கு தொட்டில நீச்சல் தெரியாதுல , நீச்சல் தெரியாம தண்ணில மூழ்கி செத்துடுட்சுனா என்ன பண்ணுறது அப்படின்னு நான் நீச்சல் பழகும் போது வாங்கின டியூப் எடுத்து அது நீச்சல் பழக வரைக்கும் இருக்கட்டும் அப்படின்னு அதோட முதுகுல கட்டி வச்சேன் .! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.

நீதி : என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! 

பின்குறிப்பு : இனிமேல் நான் சிறுகதை எழுதுறேன் அப்படின்னு சொல்லி நாவல் மாதிரி பெருங்கதைகள எழுதி உங்க உயிரை வாங்குவது கொஞ்சம் குறையலாம். ஏன்னா இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.

Thursday, December 16, 2010

ரெஸ்ட் எப்படி எடுக்குறது..?


முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி சொல்லப்பட தினம் ஒரு மொக்கையின் நீட்சி இது.!

    ஒரு வாரம் முன்னாடி எனக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லாம் இருந்துச்சு. அப்போ என்னோட நண்பன் ஒருத்தன் என்னப் பாக்குறதுக்காக வந்தான்.அவனும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " சரி மச்சி , கிளம்புறேன் , ஒடம்ப பார்த்துக்க , ரெஸ்ட் எடுத்துக்க.! " அப்படின்னு சொன்னான். நானும் " எதுக்கு வீனா செலவு பண்ணுற , அதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வர்ற.? " அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவன் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு " சரி கிளம்புறேன் " அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.

   அவன் போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்க அம்மா எனக்கு டீ கொண்டு வந்தாங்க., வாங்கி குடிச்சிட்டிருந்த போது அவன் நியாபகம் வந்தது. அவன் என்னமோ எடுத்துக்க அப்படின்னு சொன்னான்ல..? நான் ரொம்ப நேரம் அந்த ரூம் முழுசா தேடினேன்.ரெஸ்ட் கிடைக்கல. மறுபடி அவனுக்குப் போன் போட்டேன். " மச்சி , ரெஸ்ட்ட நீயே எடுத்துட்டுப் போயிட்டியா.? " அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவன் " என்னடா ஒளர்ர, நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து ரெஸ்ட் எடுக்கணும்..?" நீதான மச்சி "ரெஸ்ட் எடுத்துக்க அப்படின்னு சொன்ன., நான் ரூம் புல்லா தேடினேன் ஆனா கிடைக்கல , அதான் நீயே மறந்தாப்ல வாங்கிட்டு வந்த ரெஸட கைய்யோட எடுத்துட்டுப் போயிட்டியோன்னு கூப்பிட்டேன்." அப்படின்னு நான் முடிக்கறக்கு முன்னாடி லைன் கட் பண்ணிட்டான்.! அப்பத்தான் எனக்கு புரிஞ்சது அவனேதான் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போய்ட்டான் அப்படிங்கிறது.! அப்புறம் அப்படியே எனக்கு குணம் ஆச்சு.!

    கொஞ்ச நாளுக்கு அப்புறம் அதே நண்பனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு, நாம போய் பார்க்கலாம் அப்படின்னு கிளம்பினேன். அப்பத்தான் எனக்கு அவன் நியாபகம் வந்துச்சு ., ரெஸ்ட் வாங்கிட்டு வந்திட்டு திருப்பி எடுத்துட்டு போயட்டான்ல அதைய அவனுக்கு உணர வைக்கணும். அதனால நாமளும் ரெஸ்ட் வாங்கிட்டு போலாம் அப்படின்னு முடிவு பண்ணினேன்.! ஆனா இதுக்கு முன்னாடி ரெஸ்ட் எப்படி இருக்கும்னு பார்த்ததில்லையே.. சரி கடைல கேட்டுப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு மளிகைக்கடைலே கேட்டேன்.

நான் : அண்ணா ரெஸ்ட் இருந்தா ஒரு அரைகிலோ கொடுங்க .!

கடைக்காரர் : நாங்க ரெஸ்ட் இருந்ததா உனக்கு எப்படி தர முடியும் ..? சரி என்ன வேணும்னு சொல்லு..? 

நான் : அண்ணே , அதான் ரெஸ்ட் தான் வேணும்..! கிலோ எவ்ளோ..?

கடைக்காரர் : ரெஸ்ட்டா , ரஸ்டடா ..? சரியா சொல்லுப்பா..!

நான் : அண்ணே , ரெஸ்ட் தான்.. என் பிரண்ட் ஒருத்தனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்ல , அவன பாக்க போறேன் ..அதான் அவனுக்காக் ரெஸ்ட் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். அப்படின்னு சொன்னது கடைக்காரர் என்ன ஒரு மாதிரியாப் பார்த்துட்டு அதெல்லாம் இங்க விக்குறது இல்ல., பக்கத்துல துணிக்கடை இருக்குது அங்க கேட்டுப்பாருங்க அப்படின்னு சொன்னனர்.! சரிங்க அப்படின்னு சொல்லிட்டு துணிக்கடைக்குள்ள போனேன். முன்னாடி நின்னுட்டிருந்தவங்க என்னை ரொம்ப மரியாதையா கூப்பிட்டு 

சேல்ஸ்மேன் : என்ன எடுக்கணும் சார்..?

நான் : என் நண்பனோட தம்பிக்கு..? முடிக்கறதுக்குள்ள..

சேல்ஸ்மேன் : பார்க்கலாம் சார் , என்ன வயசு இருக்கு , ஜீன்ஸ் , டீ சர்ட் பாக்குறீங்களா  சார்..! 

நான் : இல்ல , அவனுக்கு ஒடம்பு சரியில்ல , அதான் அவன பக்க போகணும் , ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்.!

சேல்ஸ்மேன் : எனக்கு புரியலை சார் ..! ரெஸ்ட் இங்க எப்படி எடுக்க முடியும்..? வீட்டுலதானே எடுக்க முடியும்..!

நான் : பக்கத்துக்கடைல சொன்னாங்க , இங்க போனா ரெஸ்ட் எடுக்கலாம்னு அதான் வந்தேன் .!

சேல்ஸ்மேன் : இங்க ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது ., ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு , துணிக்கடைல வந்து ரெஸ்ட் எடுக்கரக்கு இது என்ன சத்திரமா ..? அப்படின்னு கண்டபடி திட்டினார். எனக்கு செம டென்சன் ஆகிடுச்சு. ரெஸ்ட் எங்கயுமே கிடைக்காது போல. சரி இரண்டு ஆப்பிள் வாங்கிட்டு அவன் வீட்டுக்குப் போனேன்.! அங்க போய் அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " மச்சி ரெஸ்ட் வாங்கலாம்னு கடைல கேட்டேன் , எங்கயுமே கிடைக்கல..துணிக்கடைக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன் , அங்கயும் கொடுக்கல ..அப்படின்னு சொன்னேன் .. அதுக்கு அவன். " நீ எதுக்கு ரெஸ்ட் எடுக்குற , என் தம்பிக்கு ஒடம்பு சரியில்ல அவன் ரெஸ்ட் எடுக்குறான் .! " அப்படின்னு சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியல ..!!நீங்களாவது சொல்லுங்க ரெஸ்ட் எடுக்குறதுன என்ன ..? அது எப்படி இருக்கும் .? அத எப்படி எடுக்குறது ..?

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!

பின்குறிப்பு : உங்க ப்ளாக்ல ரெஸ்ட் கிடைக்கும்களா , கிடைக்கும்னா சொல்லுங்க . உங்க ப்ளோக்ல வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன் ..!!


Wednesday, December 8, 2010

மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத்தகவல்.!

முன்குறிப்பு : மொக்கை என்பது சாதாரணமான , கேவலமான விசயமாக பதிவுலகில் பார்க்கப்படுகிறது.! ஆனால் மொக்கையின் பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதால் மொக்கையின் ஆற்றல் விளங்கும். மொக்கை வெறுக்கப்படக்கூடியது அல்ல. அது வரவேற்கப்பட வேண்டியது , போற்றப்பட வேண்டியது.!

பனி படர்ந்திருந்த பின்னிரவு வேளை. நிலா தனது முழு  முகத்துடன் இரவையும் பகலாக்குவேன் என்று சபதமிட்டது போல ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது அன்று பூரண அமாவாசை என்பதை கட்டியம் கூறிற்று.! அப்பொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தேறியது. நரிகளின் ஊழைச் சத்தத்தில் ஊரே கதிகலங்கியது. நரிச்சத்துடன் நாய்களும் சேர்ந்து கொண்டதால் பெரும் விபரீதம் நடக்கபோகிறது என்பதை குளிரில் நடுக்கியபடியே முனகிய 98 வயதுக்கிழவியின் வார்த்தைகள் சற்று அச்சத்தை ஏற்ப்படுத்தியது. 
          
    ஆந்தைகளும் வவ்வால்களும் ஏற்படுத்திய சத்தத்தில் அச்சமுற்ற ஆட்டுக்குட்டி தனது நான்கு கால்களையும் மைல்கல்லின் மேல் வைக்கும் சாதனையை நிறுத்திக்கொண்டு உடலை சிலிர்த்துகொண்டது.! எதிர்பாராத விதமாக மின்னல் வெட்டி இடி இடித்து மழை கொட்டத்தொடங்கியது.!

            இந்த அத்தனை நிகழ்வுகளையும் புரட்டிப்போட்டது அந்தக் குழந்தையின் அழுகுரல். ஆம் இதோ ஒரு கர்ப்பிணிப் பெண் பத்து மாதம் சுமந்த குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள். அதுதான் மொக்கையா என்று நீங்கள் வினவுவது கேட்கின்றது. தமிழ் திரைப்படத்தின் பல கதாநாயகர்கள் இதுபோன்று பிறந்து விட்டனர். இது போல சப்பயாகப் பிறப்பதற்கு மொக்கை என்ன தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறதா என்ன.? இப்பொழுது பிறந்த அந்தக் குழந்தை ஒரு சாதாரணக் குழந்தைதான்.

         மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுத மகாபாரதத்தை தனது தும்பிக்கையை முறித்து எழுதிய விநாயகரால் கூட இயலாது. அப்படியே அவரது இரண்டு தும்பிக்கைகளையும் முறித்து அவை தேயும் வரை எழுதினாலும் மொக்கையின் பிறப்பில் 0.000000001 என்ற அளவுதான் முடியும். ஆதலால் தோழர்களே எனது கனவில் தோன்றிய மொக்கையரசர் மொக்கையின் பிறப்பைப் பற்றிய சில வரிகளை எழுதுக என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரது கட்டளையின் படியும்  எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் மொக்கையின் பிறப்பைப் பற்றி எழுதும் பாக்கியத்தை அடியேன் பெற்றேன்.!

     மொக்கையின் பிறப்பைப் பற்றி சொல்லவேண்டுமானால் நாம் கற்காலத்திற்கு செல்ல வேண்டும். ஆம் மொழிகளும் , மதங்களும் இல்லாத அந்தக் காலத்திற்கு முன்னதாகவே மொக்கை தோன்றியது. கற்காலத்திலிருந்து சுமார் 2145 வருடங்களுக்கு முன்னாள் மொக்கை என்னும் ஒளி பொருந்திய அற்புதப் படைப்பு புவியில் அவதரித்தது. இது விஷ்ணுவின் முதல் அவதாரத்திற்கு மூன்றாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. அப்பொழுது ஒரு நாள் காட்டில் மிருகங்களை வேட்டயாடிகொண்டிருந்த மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.

      இதோ ஒரு அசரீரி ஒலித்தது. மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். அதுவரையில் மிருகங்களைப் போலவே கத்திகொண்டிருந்த மனிதர்கள் அந்த அசரீரி குரலை ஒரு சேர உச்சரித்தனர். அந்த அசரீரி ஒலி " மொக்கை " . இதோ மனிதன் பேசத்துவங்கிவிட்டான். அப்பொழுது கரையை நோக்கி வீசிகொண்டிருந்த கடல் அலைகள் உள்வாங்கின. மேலிருந்து கொட்ட வேண்டிய மழை பூமியிலிருந்து மேல் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சூரியனைச் சுற்றிகொண்டிருந்த பூமி தனது எதிர்திசையில் சுற்ற ஆரம்பித்தது. பூமியின் ஈர்ப்பு விசை அதிகரித்தது. இதனால் அண்ட சராசரங்கள் பூமியை வளம் வந்தன.
  
      விலங்குகளும் மொக்கை என்ற சொல்லை உச்சரித்தன. ஆம் மனிதன் , விலங்கு என்று பிரித்துப்பார்க்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்டதல்ல மொக்கை. மொக்கைப் பொறுத்த வரையில் உயிர்களெல்லாம் ஒன்றே. புல் , பூண்டு , எறும்பு , வைரஸ், பாக்டீரியா என அனைத்தும் பேச ஆரம்பித்தன. உண்மையில் இது ஒரு மாபெரும் புரட்சியே. அதே சமயம் மனிதனைக் கண்டு அஞ்சிய விலங்குகள் இப்பொழுது சமத்துவம் பேசின.!

      வெப்பத்தையே தந்துகொண்டிருந்த சூரியன் குளிரில் நடுங்கியது. இதுவரை " டப் லப் " என்று துடித்துகொண்டிருந்த இருதயம் அப்பொழுதிருந்து " லப் டப் " என்று துடிக்க ஆரம்பித்தது. ஆம் மொக்கை பிறந்து விட்டது. அனைத்து மனிதர்களும் இனம் ,நாடு ,மொழி என்ற பேதம் இன்றி முதன் முதலில் மனிதனால் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை மட்டமே என்று அமெரிக்க இலக்கியவாதி " பாரக் ஒபாமா " சிலப்பதிகாரத்தின் 163 வது அதிகாரத்தில் பாடியுள்ளது நாம் அறிந்ததே.!

  ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தேவர்களும் முனிவர்களும் இறைவனிடம் முறையிட்டனர். முக்கடவுளர்கலான சிவன் , அல்லா , இயேசு ஆகியோர் இந்தப் பிரச்சினையின் வீரியத்தை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க பூமிக்கு விரைந்தனர். அவர்களால் இரண்டு பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முடிந்தது. ஒன்று பூமி வழக்கம் போல சூரியனை சுற்றச் செய்தனர். மற்றொன்று மனிதர்களையும் விலங்குகளையும் வித்தியாசப் படுத்தினர். ஆனால் இதயத் துடிப்பின் சத்தத்தை மாற்ற இயலவில்லை. இப்பொழுது புரிகிறதா இதயம் ஏன் " லப் டப் " என்று துடிக்கிறது என்று. ஆம் மொக்கை நமது இதயத் துடிப்பாக இருக்கிறது.!

இங்கே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் மொக்கையின் பிறப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுக்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் அளவே என்பதையும் மொக்கையின் பிறப்பினை யாராலும் முழுவதுமாக எழுதிவிட முடியாது என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.மொக்கையின் பிறப்பால் நாம் பெற்ற பயன்கள் சிலவற்றைப் பட்டியளிடவேண்டியது எனது தலையாய கடமை ஆகும். உலக மொழியியல் வரலாற்றில் முதல் முதலில் உச்சரிக்கப்பட்ட சொல் மொக்கை , மனிதன் முதன் முதலாகப் பேச வைத்தது மொக்கையின் பிறப்பே. இதயம் லப் டப் எனத் துடிக்கக் காரணம் மொக்கை. இன்னும் எண்ணற்ற பயன்கள் உள்ளன.!

    இவ்வாறு சர்வ வல்லமை படைத்த மொக்கினை யாரும் துச்சமாக கருத்த வேண்டாவெனவும் , தங்களால் இயன்ற அளவு மொக்கை போட்டு மொக்கையின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டுமாயும் கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். மேலும் இதே வரிசையில் நான் இதற்கு முன்னர் மொக்கையும் அதன் வரலாறும் என்ற கட்டுரை படைத்துள்ளேன் என்பதையும் நினைவுபடுத்துவதுடன் , இனி வரும் காலங்களில் மொக்கை பற்றிய ஆராய்சிகள் தொடரும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.!


நீதி : மொக்கயுடையான் பதிவிற்கு அஞ்சான்.!

பின்குறிப்பு : இந்தப் பதிவுல வர்ணிப்புகள் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதனால படிச்சுப்பார்த்துட்டு சிரிப்பு வந்தா சிரிப்பு வந்தது அப்படின்னு சொல்லுங்க , சிரிப்பு வரலைனா வரலைன்னு சொல்லுங்க.! அது என் வளர்ச்சிக்கு உதவும்.!


Monday, December 6, 2010

சமகாலக் கல்வி

முன்குறிப்பு : சமகாலக் கல்வி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்த நம்ம தேவா , எஸ்.கே மற்றும் பாபு அண்ணன்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் கூறியிருப்பது அனைத்தும் இன்றைய கல்வியின் நிலையைப் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்.!

இன்றைய காலகட்டங்களில் கல்வி என்பது மதிப்பெண்களாலேயே மதிப்பிடப்படுகிறது.
LKG முதல் PG வரை என அனைத்து நிலைகளிலும் மதிப்பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிக மதிப்பெண் வாங்குபவரே அறிவாளி என்ற என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. மதிப்பெண் பெறுவதென்பது அவரவர் நியாபக சக்தியைப் பொறுத்தே அமைகிறது.மேலும் செய்முறைத் தேர்வுகள் பெரும்பாலும் கற்றுத்தரப்படாமல்   அநேக பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய உபகரணங்கள் இல்லாமை மற்றொரு காரணமாகும்.!

  பள்ளிக்கல்வியைப் பற்றிப் பார்க்கலாம். பள்ளிக்கல்வியைப் பொறுத்த வரையில் தற்பொழுது தனியார் பள்ளி மோகம் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும் என்ற எண்ணம் பரவிவருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஒருவித மிரட்டலுக்கு உட்பட்டே பாடங்களை  மனப்பாடம் செய்கின்றனர். பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலேயே எடுப்பதும் , பனிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினொன்றாம் வகுப்பிலிருந்து எடுப்பதும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரே பாடங்களை இரண்டு வருடம் போதித்து மாணவர்களை மனப்பாட இயந்திரமாக மாற்றவும் தயங்குவதில்லை.!

  பொதுவிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இதுதான் உனது வாழ்க்கை , இந்தத் தேர்வுகள்தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர். பெரும்பாலும் மாணவர்கள் தேர்வுகளில் தோற்றுப்போவதற்கும் இது போன்ற அறிவுரைகள் காரணமாக அமைந்து விடுகிறது. ஏனென்றால் இது போன்ற அறிவுரைகள் அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன. மேலும் தங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் தெருவிலோ அல்லது விளையாடுவதையோ பார்த்தால் " உனக்கு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் , படிக்கறத விட்டுட்டு இங்க என்ன பண்ணுற " என்று அந்த மாணவர்களை எங்கு பார்த்தாலும் அறிவுரை மழை பொழிவதை தவிர்த்தாலே அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.!

  தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டும் அக்கறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை காலை 4 மணிக்கே எழுப்பி படிக்க சொல்லுவதும் , இரவு 11 மணிவரை படிக்கச் சொல்வதும் பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு படிக்கும் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் மனமுடைந்து போகின்றனர். இவர்கள் மாணவர்களிடம் உள்ள அக்கறை காரணமாக இருப்பதைக் காட்டிலும் இந்த வருடம் எங்கள் பள்ளியில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று விளம்பரம் செய்வதற்கே அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் சேர்வதற்கே ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே சேர்த்துக்கொள்கின்றனர். அப்பாடி மதிப்பெண்கள் இல்லாத மாணவர்களிடம் லட்சக்கணக்கில் உதவித்தொகை பெறுவதும் சில பள்ளிகளில் இருப்பதாக செவிவழி செய்தி.! பள்ளிப்படிப்பிற்கே இவ்வளவு நன்கொடையை என்று சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது.

  தனியார் பள்ளிகளை குற்றம் சொல்லுவதை விட இன்றைய பெற்றோர்களின் தவறை நாம் பார்த்தால் போதுமானது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகனோ அல்லது மகளோ குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படிக்கின்றனர் என்று கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களது பெருமைக்காக தங்களது பிள்ளைகளை மனப்பாட இயந்திரமாக மாற்றும் பள்ளிகளைத் தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலங்களில் அரசுப் பள்ளிகள் நிச்சயம் சிறந்த கல்வியினை அளிக்கக்கூடியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வரப்போவது தற்போதுள்ள இளைஞர்களே.! நிச்சயம் இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்பட்டே இருக்கும்.!

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
  சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 2.5 வயதிலேயே PRE KG என்ற வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். சிலரைக் கேட்டால் இப்பொழுதிருந்தே பள்ளிக்குச் சென்றால்தான் படித்துப்பழகுவர்கள் என்கின்றனர். இன்னும் சிலர் வீட்டில் செய்யும் குறும்புகளுக்காகவே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்கின்றனர். பொதுவாகவே இந்த வயதில் நிச்சயம் பள்ளிக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. இதிலே சில நல்ல விஷயங்களாகத் தோன்றினாலும் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திருக்குறளை ஒப்பிக்கின்றனர் என்று பெருமைப் பட்டுகொள்வதும் உண்டு. அதைப் பார்த்து சிலர் தங்களது குழந்தைகளையும் திருக்குறள் போன்ற விசயங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதும் அதற்காக தனிப்பயிற்சி அனுப்புவதும் காணப்படுகிறது. பொதுவாகவே திருக்குறளை ஒப்புவிப்பதிலோ அல்லது வேறு சிலவற்றை மனனம் செய்வதிலோ குழந்தைகளின் அறிவுத்திறனோடு ஒப்பிடாதீர்கள். அதே போல உங்களது பெருமைக்காக சில பெயர்பெற்ற பள்ளிகளில் சேர்ப்பதும் ,  விடுதியில் விடுவதையும் முடிந்த அளவு தவிர்க்கப்பாருங்கள்.மொத்தத்தில் ஏட்டுக்கல்வியை விட உங்கள் வாழ்கைக்கல்வியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்களை விடச் சிறந்த ஆசியர்கள் இருக்க முடியாது.!  

நீதி : நானும் என்னால முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ட்ரை பண்ணிப் பார்த்தேங்க , முடியல.! 

பதிவின் முடிவு : இங்க சமகாலக் கல்வி பத்தி எழுத சொன்னாங்க ., ஆனா நான் பள்ளிக்கல்வியப் பத்தி மட்டுமே எழுதிருக்கேன். அதனால இது பற்றி நம்ம எஸ்.கே அண்ணனும் பாபு அண்ணனும் என்னை விட ரொம்ப ரொம்ப நல்லா எழுதிருக்காங்க.போய் பார்த்துகோங்க. இந்தப் பதிவினைத் தொடர மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்களை அழைக்கிறேன் .!

பின்குறிப்பு : எனது ஐம்பதாவது பதிவில் வெறும் பத்து எழுத்துக்களை மட்டுமே கொண்டு நான் செய்த அறிய முயற்சியைப் பார்த்து நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை. ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் சில நல்ல(?)  பதிவுகள் எழுதலாம் என்று எண்ணத்தில் இருந்தேன். ஆயினும் எனது கனவில் தோன்றிய மொக்கயரசர் அவ்வாறு எழுதுதல் கூடாது என்றும் , வேண்டுமானால் ஒரு நல்ல பதிவு எழுதிக்கொள் என்று அனுமதி வழங்கியதுடன் ஒரு பொன்மொழியும் அருளிசென்றார். அவர் அருளிய பொன் மொழிதான் மேலே உள்ளது என்பதையும் தெரிவிக்கக்  கடமைப்பட்டுள்ளேன்.! மேலும் அவரது வேண்டுகோளுக்கினங்க அடுத்த பதிவாக மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத் தகவல் என்ற பதிவு வரும் என்பதையும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துகொள்கிறேன்.!

இதையும் படிங்க : 

Wednesday, December 1, 2010

Monday, November 29, 2010

வெளியூர்க்குப் போறேன்.!

முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக., கவிதை மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.! கவிதை வரலைனா திட்டாதீங்க.! ஏன்னா நான் மொக்கை எழுதினாலே மொக்கயாத்தான் வருது.!

தெளிவான சாலைகள் , தெளிவில்லாத எங்கள் உள்ளம்
கணவனும் மனைவியும் ஒன்றாகச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளூரில் ஆடு மேய்த்தாவது வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.!

எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;
பால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது
வேண்ட நினைக்கையில் வெளிநாட்டில்.!

பால்குடம் எடுக்கும்போது பத்துப் பேர்மீது வரும் செல்லாத்தா
இங்க ஏனோ ஒருத்தர் மேல கூட வர்றதில்ல.!
புலிகளைக் காப்போம் திட்டத்தில் வாகனம் போய்விட்டதா .?

ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,
இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.!

வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்
தடுத்த அப்பா மீது கோபம் வந்தது
இப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை
அறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.!

கோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது
கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,
அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.!

படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,
பணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.!
பணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.!

சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,
பெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.!
சித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.?

மாமா பையனுக்கு மொட்டை அடிக்க விடுமுறை  ,
அத்தை பொண்ணுக்கு காது குத்த விடுமுறை ,
எதிர்த்த வீட்டுக் கல்யாணத்துக்கு விடுமுறை ,
இப்படி எத்தனை விடுமுறைகள் எடுத்திருப்போம் ,
இங்கே எந்தக் காரணமும் எடுபடுவதில்லை.!

வருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழாவிற்கு
உண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம்
வெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும் போது கிடைப்பதில்லை.!

உள்ளூரில் செருப்புத் தைப்பவனுக்கு எங்கள் கார் மீது பொறாமை ,
எங்களுக்கு அவன் மீது பொறாமை .! இரண்டுநாளில் கிளம்பவேண்டுமே.!
சொந்தங்களும் சொந்த மண்ணும் தரும் சந்தோசத்தை AC கார்களும்
Bank Balanceம் தருவதில்லை எங்களுக்கு .!

சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,
அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.!

தீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்
பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.!
பணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,
இப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.!

வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்
மிசினுக்கும் ஏது வித்தியாசம்?


நீதி : எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க ., நல்ல கவிதை படிக்கணும்னு நினைச்சா
நம்ம கலாநேசன் , பாலாஜி சரவணா , தமிழ்க்காதலன் ஆகிய ப்ளாக்ல போய் படிச்சுகோங்க.! ஹி ஹி ஹி .!

பின்குறிப்பு : உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .!

Saturday, November 27, 2010

Happeeeeeeeeeeeeeeee..!!!!!!

முன்குறிப்பு : எனக்கு இத எப்படி ஆரம்பிக்குறது அப்படின்னு தெரியல , அவ்வளவு சந்தோசமா இருக்கேன். அப்படி என்ன சந்தோசம் அப்படின்னு கேக்குறீங்களா.? அதுக்கு என்னோட கூகுள் SMS CHANNEL பத்தி தெரிஞ்சிக்கணும்., சொல்லுறேன் இருங்க.!

Google Sms Channels : 
Google Sms Channels கூகுள் இந்தியா லேப்ஸ் ன்   ஒரு பிரிவு. இது ஒரு இலவச சேவை. நீங்க கூட ஒரு sms channel தொடங்கி sms அனுப்பலாம். ஆனா நீங்க அதுல யாரெல்லாம் இணைஞ்சிருக்காங்க அப்படின்னு பார்க்க முடியாது. சரி அத விடுங்க நம்ம விசயத்துக்கு வருவோம்.! நான் எப்படி ஒரு சேனல் தொடங்குனேன் அதுல அப்படி என்ன சந்தோசமான விஷயம் நேத்திக்கு நடந்துச்சு அப்படின்னு பார்க்கலாம்.! ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல ரிலையன்ஸ் வீட்டு போன் வாங்கினோம். அதுல அப்ப free  sms இருந்துச்சு. ஆனா அதுல 80 கேரக்டர் மட்டும்தான் எழுதமுடியும். இருந்தாலும் கூட நான் என்னோட நண்பர்கள் 5 பேருக்கு அவுங்களோட மொபைலுக்கு அதிலிருந்து தினமும் dictionary பார்த்து ஒரு வார்த்தையோட மீனிங் அனுப்பிட்டிருந்தேன். அது ஒரு ஆறு மாசம் அனுப்பினேன். அப்புறமா நான் மொபைல் Nokia 1200 வாங்கினேன். அதுல 160 character எழுதலாம். அதோட Distribution List இருக்கும். சரி இத வச்சு எதாவது நல்ல விஷயம் பண்ணலாம் அப்படின்னு என் நண்பர்கள்கிட்ட நான் தினமும் எல்லோருக்கும் sms அனுப்பப்போறேன். அதனால உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி அவுங்கள என் மொபைலுக்கு ஒரு sms அனுப்பி Register பண்ணிக்க சொல்லுங்க அப்படின்னு சொன்னேன்.!

TBTS :
என் நண்பர்கள் கிட்ட சொல்லிட்டு அதுக்கு ஒரு பேரு இருந்ததானே நல்லா இருக்கும் அப்படின்னு நான் என்னோட சேவைக்கு (ஹி ஹி ஹி ) தமிழ் பாரதி தகவல் சுரங்கம் (TBTS)  அப்படின்னு பேரு வச்சேன். அப்புறம் என்னோட நண்பர்கள் வேற வேற கல்லூரில படிச்சாங்க . அவுங்க மூலமா எனக்கு நிறைய நண்பர்களோட எண்கள் கிடைச்சுது. அப்புறம் அவுங்களுக்கு sms அனுப்ப ஆரம்பிச்சேன். ஆனா கொஞ்ச நாள்லயே என்னோட List Space முடிஞ்சு போச்சு . அப்புறம் வேற வழிகள தேட ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல தான் எனக்கு கூகுள் sms channels பத்தி தெரிய வந்துச்சு.!

QUIZFROMTBTS :
     Google sms channels ல என்னோட சேனல் பேரு quizfromtbts. இதுல இப்போ வரைக்கும் 4300 பயனாளிகள் இந்தியா முழுவதும் இருக்காங்க. அது எப்படி வெறும் நாலு பேருக்கு sms அனுப்பி நாலாயிரம் பேர் வந்தாங்க அப்படின்னு நீங்க கேக்கலாம். முதல்ல என்னோட நண்பர்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். அப்புறம் மொபைல்ல ஆரம்பிச்ச TBTS ல இருந்தவங்கள இதுக்கு வாங்க அப்படின்னு சொல்லி இதுல வந்தாங்க. அப்புறம் ஒரே சிந்தனயுடயவங்க அப்படிங்கிற மாதிரி எனக்கு இந்த சேனல் மூலமா கோயம்புத்தூர்ல பாலகிருஷ்ணன் அப்படிங்கிற நண்பர் கிடைச்சார். அவருக்கு என்னோட பிளான் பிடிச்சிருந்ததால அவுங்க கல்லூரில இருந்து நிறைய பேர என்னோட சேனல்ல சேர வச்சார். அப்படியே 300 , 400 , 500 அப்படின்னு போச்சு. கூகுள் sms channels ல editors pick அப்படின்னு ஒண்ணு இருக்கு . அதுல நல்ல சேனல்ஸ் தேர்ந்தெடுத்து அவுங்களோட முன்னாடி பக்கத்துல வைப்பாங்க. அப்படி என்னோட சேனல் கூட ஒருதடவ தேர்ந்தெடுக்கப்பட்டதால நிறைய பேர் என்னோட Subscriber ஆனாங்க.!இப்போ வரைக்கும் 4300 பேர் ( ஐ ஜாலி ) எங்களோட  சேனல்ல இருக்காங்க.!சரி இது எல்லாம் சரி, இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.? சொல்லுறேன்.!

இதுல என்ன சந்தோசம் :
என்னோட சேனல்ல நான் போது அறிவு சம்பந்தமான விசயங்கள மட்டுமே அனுப்பிட்டிருந்தேன். நிறைய பிரிவுகளில் அனுப்புவேன் . கூடவே Employment News கூட அனுப்புவேன். இப்படி அனுப்பிட்டிருக்கும்போது நேத்து பாலா கூப்பிட்டார். அவரும் நானும் அடிக்கடி பேசுவோம். அவர் நிறைய விசயங்கள் சொல்லுவர். அதே மாதிரி நேத்து எங்கிட்ட ஒருத்தருக்கு B+ ரத்தம் இன்னிக்கு 6 மணிக்கு முன்னாடி தேவைப்படுது , அத நம்ம சேனல்ல போஸ்ட் பண்ணி விட்டா யாரவது உதவுவாங்க அப்படின்னு சொன்னார். நானும் கண்டிப்பா போஸ்ட் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு sms போஸ்ட் பண்ணினேன். அடுத்த ஒரு மணிநேரம் கழிச்சு மறுபடியும் பாலா போன் பண்ணினார். நம்ம sms பார்த்துட்டு ஒருத்தர் ரத்தம் தர்றேன் அப்படின்னு சொல்லிருக்கார், அப்படின்னார் .. என்னால நம்பவே முடியல. எனக்கு பயங்கர சந்தோசம் ஆகிடுச்சு. இதென்ன பெரிய விஷயம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்தப் பதிவே அந்த ரத்தம் கொடுக்க வந்த நண்பருக்காகத்தான்.

                  அவர் Hindustan காலேஜ் ல MCA படிக்கிறார். அவரோட பேர் மணிகண்டன். நான் உங்க சார்பாவும் என் சார்பாவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்காகத்தான் இந்தப் பதிவே.! இது எங்களோட முதல் வெற்றி அப்படின்னு சொல்லலாம். ஏன்னா எனக்கு ரத்தம் கொடுத்தவரையும் தெரியாது , வாங்கிக்கிட்டவங்களையும் தெரியாது.! ஆனா இனிமேல் பழக்கம் ஆகிடுவோம். இத படிச்சதுமே நான் பண்ணினது சப்ப மேட்டர் இதுக்கு எதுக்கு இவ்ளோ அலப்பற அப்படின்னு நீங்க நினைக்கலாம் .இருந்தாலும் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின sms சேனல் மூலமா நேரடியா ஒருத்தர் பயனடைந்திருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது பயங்கர சந்தோசமா இருக்கு. பால கிருஷ்ணன் அண்ணனுக்கும் இதுல பங்கு இருக்கு. மணிகண்டன் அவர்களுக்கு  மறுபடியும் எங்களோட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.! அதே மாதிரி போஸ்ட் போட்டதும் வேற மாநிலங்களில் இருந்து கூட சில அழைப்புகள் வந்துச்சு அப்படின்னு பாலா சொன்னார். இந்த அளவுக்கு எங்கள் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு தலைவணங்குகிறோம்.!

நான் இதுக்காக ஒரு ரண்டுவருஷம் முன்னாடி எழுதின ஒரு ப்ளாக் : http://www.ourtbts.blogspot.com

என்னோட sms  சேனலின் இணைப்பு இங்கே : http://labs.google.co.in/smschannels/subscribe/quizfromtbts

நீதி : கோமாளி ப்ளாக்ல வந்து முதல் உருப்படியான பதிவு அப்படின்னு நினைக்கிறேன். ஆனா இனி மொக்கைகள் தான்.!

பின்குறிப்பு : sms channel பற்றி நிறைய சொல்லனும்னு நினைச்சேன்., ஆனா அதுல இருக்குற லிங்க் போய் படிச்சு தெரிஞ்சிகோங்க. அதே மாதிரி எதுக்கு இங்கிலீஸ் தலைப்பு அப்படின்னு நீங்க கேக்கலாம்., அந்த சேனல்ல இங்கிலீஸ்ல தான் sms அனுப்புறேன்.!  (ஹி ஹி ஹி) இந்தப் பதிவு திரு.மணிகண்டன் அவர்களுக்கு சமர்ப்பணம்.!  

Monday, November 22, 2010

இதுவரை வாங்கிய வடைகள்

முன்குறிப்பு : நான் வாங்கிய வடைகள் பலவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். மேலும் இந்த வடை வாங்கும் போராட்டத்தில் எத்தனை சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்ச்சிப் பதிவு.! 15 .11 .2010 முதல் வாங்கிய வடைகள் மட்டுமே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

*.முதல் வடை : 15.10.2010 அன்று 2.30 மணியளவில் வெறும்பய ப்ளாக்கில் இந்தப் பட்டியலுக்கான முதல் வடை பெறப்பட்டது.! அதே தினத்தில் அதே பதிவில் karthikkumar உடன் கடுமையான சண்டை போட்டு 100 வது கமெண்ட் போட்டதால் எனக்கு மற்றும் ஒரு வடை பரிசளிக்கப்பட்டது. ஆனால் 98 என்ற என்னை காணவில்லை என மேல்முறையீடு செய்து karthikumar அவர்களுக்கு வடை மட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் கணக்கு எனது பெயரில் எழுதப்பட்டதால் இனி மூன்றாவது வடை பெற்றதைப் பார்ப்போம்.!

*.மூன்றாவது வடை சிரிப்புப்போலீசின் இந்தப் பதிவில் பெறப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்க்கு இந்தப் பின்னூட்டம் ஆதாரம் //பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?/// ஆனால் அந்தப் பதிவில் ஊசிப்போன வடைகள் தருவதாக நமது ரகசிய வடை திருடும் காக்கைகள் கூறியதால் நாம் அந்தப் பதிவில் வடை வாங்கும் எண்ணம் கைவிடப்பட்டது. சரி மூன்றாவது வடை பெற்ற கதையைக் காண்போம். 16.11.2010 அன்று சிரிப்புப் போலீசின் இந்தப் பதிவில் 96 கம்மேன்ட்டுகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாலும் முதல் வடை வாங்கிய நமது சங்கத்தின் TERROR அவர்கள் வடை மிகவும் சுவையுடன் இருப்பதாகக் கூறியதை அடுத்து நானும் 96 இல் இருந்த எண்ணிக்கையை மிகவும் சிரமப்பட்டு 100 வரை போட்டு வடை பெற்றுக்கொண்டேன்.! அவர்கள் தெரிவித்தது போன்றே அந்த வடை மிகவும் சுவையுடன் இருந்தது கூடுதல் செய்தி.!


*.நான்காவது வடையானது 18.11.2010 அன்று ஜீவன்பென்னி அவர்களது ப்ளோகில் இந்தப் பதிவில் கிடைத்தது. இந்த வடை பெற்றது மிகவும் சுவாரஸ்யமான தகவலாகும். ஏனெனில் நான் அலுவலகம் வந்து Google Reader இல் பார்க்கும்போது இவரது பதிவு இருந்தது. ஆதலால் இந்தப் பதிவில் வடை கிடைக்காது என்று நினைத்துகொண்டு பிறகு படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு நமது தேவா அவர்கள் இந்தப் பதிவின் இணைப்பினை மின்னரட்டையில் கொடுத்தார். நானும் சரி படிக்கிறேன் என்று அங்கு சென்று பார்த்தால் வடை யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆதாலால் நான் மிகவும் மகிழ்வுடன் அந்த வடயைப்பெற்றுக்கொண்டேன்.!

*.ஐந்தாவது வடை மீண்டும் சிரிப்புபோலீஸ் அவர்களது வலைப்பூவில் பெறப்பட்டது.அவரது இந்தப் பதிவு 48 பின்னூட்டங்கள் பெற்றிருந்தது . நான் வழக்கம் போல மிகவும் சிரமப்பட்டு 49    மற்றும் 50 ஆகிய எங்களை பின்னூட்டமாக இட்டு வடையைத் தட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

*.ஆறாவது வடை 19.11.2010 அன்று மறுபடியும் சிரிப்பு போலீஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. அவரது இந்தப் பதிவில் முதல் பின்னூட்டம் போட்டதற்காக பெற்றுக்கொண்டேன். மேலும் அதே பதிவில் மொக்கராசா அவர்கள் எனக்காக 50 பின்னூட்டம் போடும் போது எனக்கு வடையை விட்டுக்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரே வடையை எடுத்துச் சென்றது பெருத்த ஏமாற்றம் அளித்தது. சரி ஏழாவது வடையப் பற்றிப் பார்ப்போம்.!

*.ஏழாவது வடையும் 19.11.2010 அன்று நமது பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் அவர்களது வலைப்பூவில் 100 வது பின்னூட்டம் இட்டதற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த வடையைப் பெற்றது மிகவும் சுவாரஸ்யமான விசயமாகும். அவர் பதிவினைப் பார்க்கும் போது முதல் பின்னூட்டம் போட்டு வடையினைத் தட்டிப்பறிக்கலாம் என்று ஓடினேன். ஆயினும் எஸ்.கே அவர்கள் வடையைப் பெற்றுக்கொண்டதாக முறையான அறிவிப்பு வந்தது. அதனால் எனக்கு கொஞ்சம் ஆணிகள் வந்துவிட்ட படியால் சில ஆணிகளைப் பிடுங்கிவிட்டு 50 வது பின்னூட்டம் இட்டு வடை பெறலாம் என்று சிறிது நேரத்திற்குப் பிறகு சென்று பார்த்தேன். ஆனால் அங்கே 82 பின்னூட்டங்கள் வந்திருந்தது. ஒரு 6 அல்லது 7 நண்பர்கள் வடயைக்கைப்பற்ற போராடிக்கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிந்தது. இதனால் நானு சென்று பின்னூட்டம் இட்டால் அவர்கள் விளித்துக்கொள்ளக்கூடும் என்று 98 பின்னூட்டங்கள் வருவரை F5 என்ற பட்டனை மட்டும் அழுத்திக்கொன்டிருந்தேன்.பின்னர் 100 வது பின்னூட்டத்தை இட்டு வடயைக்கைப்பற்றியது என்னை அளவில்லா மகிழ்ச்சியில்  தள்ளியது .!

*.எட்டாவது வடை நமது சிவா அண்ணனது ப்ளாக்கில் 20.11.2010 அன்று இந்தப் பதிவுல பெறப்பட்டது. இதுல ஒரு விசேசம் என்ன அப்படின்னு பார்த்தா அவரே முதல் கமெண்ட் போட்டு டெஸ்ட் பண்ணிட்டிருந்தார். அப்புறம் போய் நம்ம வடை வாங்கும் கொள்கைகள் குறித்து அவருக்கு விளக்கி அவருடைய பின்னூட்டம் செல்லாது அப்படின்னு சொல்லி என்னோட பின்னூட்டத்துக்கு வடை பெற்றுக்கொண்டேன்.

*.ஒன்பதாவது வடை நம்ம terror அண்ணனோட இந்தப் பதிவுல நம்ம பாபு அண்ணன் வடை வாங்கிட்டார். இருந்தாலும் தேவா அண்ணன் வந்து செல்வா சின்னப் பானா இருக்கான் அவனுக்கு கொடுத்துடு அப்படின்னா பாபு அண்ணன் கிட்ட சொன்னதும் அவரும் மனமுவந்து கொடுத்தார்.

*.பத்தாவது வடை இன்று நமது சுற்றுலாவிரும்பியில் கிடைக்கப்பெற்றது.! மேலும் நமது பன்னிக்குட்டிராமசாமி அண்ணனது ப்ளாக்இல் இன்று இன்னொரு வடை பெற்றுக்கொண்டது மகிழ்வளிக்கிறது.

வடைக்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் : எனக்கு சரி சமமாக வடைக்குப் போட்டியிடுபவர் நமது சிரிப்புப்போலீஸ் ஆவார். சில சமயம் எஸ்.கே , ஹரீஸ் , Arunprasad , மாதவன் அண்ணன் ,அருண் அண்ணன் போன்றோர் பெற்றுவிடுவது என்னை கொஞ்சம் முகம் வாடச்செயகிறது. இருந்த போதிலும் எனது வடைக்கான தேடல் தொடரும்.

வடை கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றியவர் : நமது அருண் அண்ணன் அவர்கள் இந்தப் பதிவில் பதிவிடுவதற்கு முன்னரே என்னிடம் தனிப்பட்ட முறையில் உனக்கு வடை தருகிறேன் என்று வாக்கு அளித்திருந்தார். ஆனால் நான் அலுவலகம் வரும் முன்னரே அவர் பதிவிட்டு எனக்கு கொடுக்க வேண்டிய வடையை வேறொருவருக்கு கொடுத்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வடை வாங்குதலின் லட்சியம் : இத்தனை இடங்களில் வடை வாங்கிய போதும் தேவா அண்ணனின் ப்ளாக்கிலும் , எங்கள் தலைவர் கோகுலத்தில் சூரியனிலும் வடை வாங்குவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன்.!

நீதி : இதெல்லாம் எங்க பாஸ் உருப்படப்போகுது..? போய் ஆணி  இருந்தாப்  பாருங்க .!

பின்குறிப்பு :  இந்தப் பதிவில் 50 வடைகள் பெற்றதைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். இருந்தபோதிலும் பதிவுலகின் நன்மை கருதி இத்துடன் இந்தப் பதிவினை முடித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.!

Friday, November 19, 2010

இன்றைய செய்திகள்

தினத்தந்தி , தினமலர் போன்ற இதழ்களில் தெரிந்துகொள்ளவும்.! நன்றி.!

Thursday, November 18, 2010

TOP TEN ரஜினி படங்கள் ஒரு கமல் ரசிகனின் பார்வையில்.!

 முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அளித்த தேவா அண்ணன் அவர்களுக்கு முதல்ல நன்றி தெரிவித்துகொள்கிறேன்.! அப்புறம் இந்தப் பதிவோட தலைப்புப் பத்தி மட்டும் இல்ல , பொதுவாவே எங்க போனாலும் கமல் ரசிகர் கமல் ரசிகர் அப்படின்னு சொல்லுறேனே , அதனால எல்லா கமல் படமும் பார்ப்பேன் அதுவும் முதல்நாள் முதல் ஷோ ல பார்ப்பேன் அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். நான் பார்த்த கமல் படங்கள் ஒரு 20 கூட இருக்காது.

              ரஜினி படங்களும் அவ்வளவே. அதே மாதிரி நான் தியேட்டர்ல பார்த்த கமல் படங்கள் இரண்டே இரண்டுதான். தசாவதாரம் & உன்னைப்போல் ஒருவன். அதே மாதிரி ரஜினி படம் ஒண்ணுதான் எந்திரன் மட்டும்தான் தியேட்டர்ல பார்த்தேன். அப்புறம் எதுக்கு கமல் ரசிகர் கமல் ரசிகர்னு சொல்லிட்டு திரியுற அப்படின்னு யாரும் கேக்கவேண்டாம். எனக்கு கமல் பிடிக்கும்., அவ்ளோதான் . அதுக்காக மற்ற நடிகர்களா பிடிக்காதா அப்படின்னு சொல்லமுடியாது. சொல்லப்போனா எனக்கு சின்னவயசுல கமல் டிவில கமல் படம் போட்டாலே ஓடிப்போயடுவேன். எனக்கு முதல் முதலா ரொம்ப பிடிச்ச கமல் படம் அப்படின்னு பார்த்தா " அன்பே சிவம் " . அந்தப் படத்துல வர்ற வரிக்கு வரி காமெடி எனக்கு ரொம்ப பிடிச்சு போய் கமலோட மற்ற காமெடிப் படங்கள் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

              அதனால எனக்கு கமல் பிடிக்கும்.ஆனா நான் அதிக முறை பார்த்த படம் அப்படின்னு பார்த்தா அது சந்தோஷ் சுப்பிரமணியம் தான். இந்தப் படத்த சுமார் 20 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னமும் மாதம் ஒரு முறையாவது இந்தப்படத்தைப் பார்ப்பேன். எனக்கு கமல் படம் அப்படின்னு கிடையாது , எந்தப்படதுல காமெடி அதிகமா இருக்குதோ அந்தப் படத்தைதான் பார்ப்பேன். நான் படம் பார்ப்பதே காமெடிக்காக மட்டுமே. அதனாலதான் எனக்கு பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். கமல் படங்கள விட பாக்யராஜ் படங்கள்தான் அதிகமா பார்த்திருக்கேன். அவரோட வேட்டிய மடிச்சுக்கட்டு , இது நம்ம ஆளு , சுந்தர காண்டம் இந்த மாதிரியான படங்கள் வாய்ப்பே இல்ல , சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் ..அதே மாதிரி எனக்குப் பிடிச்ச ரஜினி படங்கள் என்ன என்ன அப்படிங்கறதயும் பார்க்கலாம் வாங்க.!

10.நினைத்தாலே இனிக்கும் :
இந்தப் படத்துல ரஜினி நிறைய காமெடி பண்ணிருப்பார். அதிலும் கர்சிப் திருடுறது இந்த மாதிரி காமெடிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

9.ராஜாதி ராஜா : 
இந்தப் படத்துல ரஜினி இரட்டை வேடத்துல நடிசிருப்பாருனு நினைக்கிறேன் . ஒருத்தர் பயந்துக்குவார் .,இன்னொருத்தர் தைரியசாலியா இருப்பார் . எனக்கு பயந்த ரஜினியைத்தான் பிடிக்கும் .. ஏன்னா அவருதான் ரொம்ப காமெடி பண்ணுவார்.

8.சிவாஜி :
இந்தப் படத்துல வர்ற காமெடிகள் பிடிக்கும். அதிலும் பழகலாம் வாங்க அப்படின்னு பண்ணுற காமெடிகள் செமையா இருக்கும் .!

7.பில்லா :
இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் அந்த நல்ல ரஜினி பில்லாவா மாறும்போது செம காமெடியா இருக்கும்.!

6.தில்லு முள்ளு :
இந்தப் படத்துல கொஞ்சம் நான் பார்த்திருக்கேன் . அதுவும் செம காமெடியா இருந்துச்சு . எப்பவோ ஒரு பாட்டு பார்த்தா நியாபகம். அதோட ஒருத்தரே இரண்டு பேரா மீசை இருக்கறவர் பேர் சந்திரன்னு நினைக்கிறேன் .. அப்புறம் மீசை இல்லாத மாதிரி நடிப்பார். எனக்கு மறந்திருச்சு .ஆனா படம் செம காமெடியா இருக்கும்.

5.வீரா :
இந்தப் படத்துலயும் ஒருத்தரே இரண்டு பேரு மாதிரி நடிப்பார். அதுல கொஞ்சம் காமெடியா இருக்கும்.

4.அருணாசலம் :
இந்தப் படத்துல முப்பது நாளுல முப்பது லட்சம் செலவலிக்கனும்னு சொல்லி ஒரு போட்டி வரும் .அப்போ வில்லன்கள் இவரு எது பண்ணினாலும் பணம் வர்ற மாதிரி பண்ணுறது செம காமெடியா இருக்கும்.

3 .முத்து :
இந்தப் படத்துலயும் காமெடி எனக்குப் பிடிக்கும். ஆனா இந்தப் படத்துல கொஞ்சம் மறந்து போச்சு. ஆனா நல்லா இருக்கும்.

2.பாட்ஷா :
இந்தப் படத்துல உண்மைலேயே ஸ்டைல் நல்லா இருக்கும் . அதோட பஞ்ச வசனங்களும் அருமையா இருக்கும்.! இந்தப் படமும் நான் சில தடவை பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா படம்.

1.படையப்பா : 
இந்தப்படம் நான் ஒரு 5 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இன்னும் எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம். எனக்கு இந்தப் படம்தான் எப்பவும் முதல். இதுல காமெடியும் இருக்கும் , ஸ்டைல் இருக்கும் , இசையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும்.

இந்த வரிசைல எதவாது தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. எனக்கு எப்பவுமே சண்டைப் படமோ , இல்ல அழுமூஞ்சிப் படமோ பிடிக்கவே பிடிக்காது. எனக்குப் பிடிச்சது காமெடிப் படங்கள் மட்டும்தான். அதே மாதிரி இப்ப டிவி ல அடிக்கடி ஹாலிவுட் படங்கள் போடுறாங்க. அப்படிப் போட்டதுல The Terminal அப்படின்னு ஒரு படம் . எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி Born To be  wild அப்படின்னு ஒரு படம் அதுவும் பிடிக்கும். பொதுவா நான் கமல் ரசிகரா இருந்தாலும் கமெடிப்படங்களின் தீவிர ரசிகர்.! அதனால்தான் எனக்கு சிவா படங்கள் பிடிக்கும். அதனால இப்போதைக்கு என்னோட Favourite இயக்குனர் பசங்க பட பண்டிராஜ் தான்.!    

Thursday, November 11, 2010

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாராவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?

முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!

Tuesday, November 9, 2010

காதலிக்க தாடி வளர்.!

முன்குறிப்பு : வழக்கம் போலவே சிறுகதை எழுத ஆரம்பிச்சு , பெருங்கதைல போய் முடிஞ்சிருச்சு , அதனால பாவம் நீங்க .!!

வானத்தில் சில மேகக்கூட்டங்கள் மாலை 4 மணிக்கே சூரியனைச் சூழ்ந்துகொண்டு  இருளினை அழைத்துக்கொண்டிருந்தன. செல்வாவும் ரமேசும் ஏதோ விவாதித்த படியே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

" மச்சி நான் கேட்டதுல என்ன தப்பு .? ஏன் அவன் முறைச்சு முறைச்சுப் பார்த்தான்.? " என்றான் செல்வா.

" ஏன்டா உனக்கு எப்படி பேசனும்னே தெரியாதா , நீ எதுக்கு சந்தோசம் அப்படின்னு அவன்கிட்ட சொன்ன..? " என்றான் ரமேஷ் சற்றே கோபத்துடன்.

"அதிகமா பழக்கம் இல்லாதவங்க எதவாது சொன்ன சந்தோசம் அப்படின்னு சொல்லுனு எங்க அப்பா சொன்னார்., அதான் சொன்னேன். இதிலென்ன தப்பு இருக்கு..? அதுக்கு எதுக்கு முறைச்சான்.?" என்றான் செல்வா.

" கிழிச்ச , அதுக்காக உடம்புக்கு சரியில்லை அப்படின்னு சொல்லுரவன்கிட்ட சந்தோசம்னு சொன்னா கொஞ்சுவானா..? " என்றான் ரமேஷ்.

" சரி விடு மச்சி இனிமேல் மாத்திக்கலாம்., உடம்பு சரியில்லன்னு யாரவது சொன்னா என்ன கேக்கணும்..? "

" யாராவது உடம்பு சரியில்லைன்னு சொன்னா " இப்ப பரவால்லையா..?" அப்படின்னு கேக்கணும்., இது கூடவா தெரியாது .? " என்று தலையில் அடித்துக்கொண்டான் ரமேஷ்.

" அப்போ மண்டைய போட்டுட்டாங்க அப்படின்னு சொன்னா என்ன கேக்கணும் மச்சி.? " என்றான் செல்வா.

ரமேஷ் ஒருமுறை முறைத்துவிட்டு " சாரிங்க " அப்படின்னு சொல்லு போதும் என்று சொன்னவன் ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தினான்.

" இரண்டு டீ போடுங்க , ஒண்ணு ஆத்தாம " என்று ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரமேசின் நண்பன் பிரவீன் எதேச்சையாக அங்கு வந்தான். செல்வாவிற்கு அதிகப்பழக்கம் இல்லையானாலும் கொஞ்சம் பழக்கமிருந்தது. சிறிதுநேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். செல்வா பிரவீன் வீட்டிலுள்லோரின் நலத்தினை விசாரித்துக் கொண்டிருந்தான்." பாட்டி நல்லா இருக்காங்களா..? " என்றான் செல்வா பிரவீனிடம்.

பிரவீன் சற்று வாட்டத்துடன் " அவுங்க இறந்த்துட்டாங்க , உடம்பு சரியில்லாம இருந்தாங்க.? " என்றான்.

இதைக்கேட்ட செல்வா " ஓ , சாரி , இப்ப பரவால்லையா..? " என்றான்.

பிரவீன் ரமேசை முறைத்தவாரே " சரி பார்க்கலாம் " என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். அவன் அகன்றதும் ரமேஷ் செல்வாவை எரித்துவிடுவது போன்று பார்த்தான்.

" ஏன்டா உனக்கு எந்த நேரத்துல எப்படிப் பேசுறதுனே தெரியாதா.? ஏன்டா என்னோட உயிரை வாங்குற..? " என்று கத்தினான் ரமேஷ்.

" ஏன் மச்சி , நான் சரியாத்தானே சொன்னேன்.? " என்று குழம்பியவாறே கேட்டான் செல்வா.

" கோவத்தக் கிளப்பாத , அவனே அவுங்க பாட்டி செத்திட்டாங்க அப்படின்னு சொல்லுறான் , அப்புறம் எதுக்கு இப்ப பரவால்லையா அப்படின்னு கேட்ட..? "

" நீதானே மச்சி சொன்ன , உடம்பு சரியில்லன்னு யாராவது சொன்னா " பரவால்லையா " அப்படின்னு கேக்கணும் , இறந்துட்டாங்க அப்படின்னு சொன்னா " சாரி " சொல்லனும்னு. அதான் அவன் பட்டி இருந்துட்டாங்க அப்படின்னு முதல்ல சொன்னான் , அதுக்கு சாரி சொன்னேன் . அப்புறம் உடம்புசரியில்லாம இருந்தாங்க அப்படின்னு சொன்னான் அதனால " பரவால்லையா " அப்படின்னு கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு ..? "

" சத்தியமா உன்னயெல்லாம் திருத்தவே முடியாதுடா , எனக்கு இதவிட பெரிய சந்தேகம் என்ன அப்படின்னா உன்னையும் ஒருத்தி காதலிக்கிறா அப்படின்னு சொல்லுறியே அதான். நீயே ஒரு அரை லூசு , உன்ன லவ் பண்ணுரவ முக்கா லூசாத்தான் இருப்பா..? எப்படியோ போய்த் தொலைங்க..! " என்றவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தான் ரமேஷ்.

******************************************************************************************

இரண்டுநாள் கழிந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மணி 8 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல் படுத்திருந்த ரமேஷை அவனது மொபைல் selva calling என்று  எழுப்பியது.

" சொல்டா.."

" மச்சி , அவ ஏமாத்திட்டாடா..! " என்று தழுதழுத்தான் செல்வா.

" டேய் , என்ன சொல்லுற..? என்னால நம்பவே முடியல..?! " என்றான் விறுவிறுப்பானான் ரமேஷ்.

" ஆமாண்டா , எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல , செத்துப்போலாம் போல இருக்கு..?! " என்று அழுதே விட்டான்.

" டேய் டேய் , என்ன இது லூசாட்டமா பேசுற , இரு 10 நிமிசத்துல வரேன்.! " என்று கட் செய்துவிட்டு வேகவேகமாக செல்வாவின் வீட்டிருக்கு விரைந்தான் ரமேஷ்.

செல்வாவின் வீட்டை அடைந்ததும் செல்வா அழுதுகொண்டிருந்தது தெரிந்தது. ரமேஷ் சிறிது நேரம் செல்வாவிற்கு ஆறுதல் கூறிப்பார்த்தான். ஆனாலும் செல்வா அழுகையை விடுவதாகத் தெரியவில்லை.

" சரி , கிளம்புடா , ஒரு பக்கம் போலாம்..! " என்று செல்வாவை வலுக்கட்டாயமாக TASMAC என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றான் ரமேஷ்.

" இங்கயா ..?!" என்றான் செல்வா சற்றே தயக்கத்துடன்.

" ஆமாண்டா , ஒரு ரண்டு ரவுண்டு விட்டா எல்லாத்தையும் மறந்திடுவ..! " என்று பேசிக்கொண்டு உள்ளே செல்ல முற்படுகையில் சண்முகம் அங்கே வந்து சேர்ந்தான்(ள் ).

( சண்முகம் ஒரு திருநங்கை. இருந்தாலும் பெற்றோரின் ஆதரவு இருப்பதால் அவளுக்கு தனியாக செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ரமேஷ் , செல்வா , சண்முகம் மூவரும் ஒரே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தனர். வெளியிலும் பள்ளியும் ஏற்பட்ட அவமானங்களால் எட்டாம் வகுப்பிலேயே படிப்பினை நிறுத்திவிட்டான் சண்முகம். பின்னர் சண்முகம் தனது பெயரை சண்முகி என்று மாற்றிக்கொண்டான். செல்வா , ரமேஷ் இருவரும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதால் மூவரும் நல்ல நண்பர்களாக விளங்கினர்.!)

" இங்க என்னடா பண்ணுறீங்க.?" என்று கேட்டவாறே இவர்களை நெருங்கினாள் சண்முகி.

" இல்ல , சும்மா .! " என்று சாமாளிக்கப்பார்த்தான் ரமேஷ்.

" டாஸ்மாக்ல சும்மா என்ன வேலை ..? ஒழுங்கா சொல்லிடுங்க..! " என்று அதட்டலாகக் கேட்டாள் சண்முகி.

" இவனோட லவ்வர் , இவன லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா அதான் ஒரு ரவுண்டு அடிச்சா சரியாய்டும் அப்படின்னு கூட்டிட்டு வந்தேன்..!" என்றான் ரமேஷ்.

" தண்ணி அடிச்சா , சரியாயிடுமா..? "  என்றாள் சண்முகி.

" என்னோட பீலிங் உனக்குத் தெரியாது..! " என்று சற்றே கோபமாக கூறினான் செல்வா.

" ஆமா , எல்லோரும் அப்படித்தானே நினைக்கிறீங்க , நீங்களாவது பரவா இல்ல. இன்னும் சிலர் இருக்காங்க , எங்கள அவன் , அவள் அப்படின்னு கூட கூப்பிடறதில்லை அது அப்படின்னு சொல்லுறாங்க. அப்பவெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா.? இதெல்லாம் தாண்டி வாழவேண்டியிருக்கு..! சரி அத விடு.! உன்னோட கதைய சொல்லு." என்று முடித்தாள் சண்முகி.

" எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு குடிவந்தது. நல்லாத்தான் பழகுச்சு. என்னைய எங்க பார்த்தாலும் சிரிக்கும் ., எங்க தெருவிலேயே என்கூடத்தான் நல்லாப் பேசுவா.., எல்லோருமே அவ என்னைய லவ் பண்ணுறா அப்படின்னு சொன்னாங்க. எனக்கும் தெரியும் அவ என்ன லவ் பண்ணுறா அப்படின்னு. அதனால ரொம்ப சந்தோசமா இருந்தேன். சரி நான் லவ் பண்ணுறத எப்படியாவது அவ கிட்ட சொல்லணும் அப்படின்னு இன்னிக்கு காலைல போய் அவகிட்ட சொன்னேன் . அதுக்கு அவ " நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல , நல்ல நண்பனாகத்தான் நினைச்சேன்.." அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு அப்படியே செத்துப்போகணும் போல இருந்துச்சு தெரியுமா..?! " என்று அழுது புலம்பினான் செல்வா.

" விடு மச்சி , இந்தப் பொண்ணுகளே இப்படித்தான் ,  ஏமாத்துறதுல அவுங்கள மிஞ்ச முடியாது..!" என்று ஆறுதல் கூறினான் ரமேஷ்.

" சொல்லுவீங்கடா , யாரோ சொன்னாங்க அப்படின்னு பொண்ணுக பின்னாடி சுத்த வேண்டியது , அப்புறம் காதலிக்கலை ஏமாத்திட்டா அப்படின்னு பொண்ணுக எல்லோருமே ஏமாத்துறாங்க அப்படின்னு திரியவேண்டியது. இதிலையும் உன்ன மாதிரி சில தறுதலைகள் சேர்ந்துட்டு சோகத்தைப் போக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு தண்ணி அடிக்க வேண்டியது அப்புறம் இருக்குற காசு எல்லாத்துக்கும் தண்ணியப் போட்டுட்டு சேவிங் பண்ண காசு இல்லாம தாடி வச்சிட்டு கேட்டா காதல் தோல்வி அதான் தாடி வச்சிட்டேன் அப்படின்னு சொல்ல வேண்டியது. மொதல்ல உங்களை மாதிரி ஆளுகள ??..! " என்று பிரிந்து தள்ளினால் சண்முகி.

" நிறுத்து , நாங்களாவது காதல் தோல்விக்கு இத்தன பண்ணுறோம் , எதாவது ஒரு பொண்ணாவது தண்ணி போட்டுட்டு அவுங்களோட வாழ்க்கைய காதலுக்காக தியாகம் பண்ணிருக்காங்களா..? என்றான் செல்வா.

" உன் மனசாட்சியத் தொட்டு யோசிச்சுப்பாரு ஒரு பொண்ணு தண்ணி அடிச்சிட்டு ரோடுல போனா விட்டுருவீங்களா..? அவள பேசிப் பேசியே கொன்னுட மாட்டீங்க., இல்ல கல்யாணம் ஆகாம வீட்டுல இருந்தான் விட்டுருவீங்களா..? அவளுக்கு என்னமோ பிரச்சினை அது இதுன்னு எத்தனையோ பட்டம்கட்டி அவள மட்டும் இல்ல அவ குடும்பத்தையே மானத்த வாங்குவீங்களே..! அப்புறம் பொண்ணுக்கு தாஜ்மகால் கட்டினாங்க ஏதாவது ஒரு பொண்ணாவது ஆணுக்காக ஏதாவது செஞ்சால அப்படின்னு சொல்லவேண்டியது.. நான் தெரியாமத்தான் கேக்குறேன் தாஜ்மகால் கட்டின காலத்துல இருந்து இதுவரைக்கும் பொருளாதார அடிப்படையில பொண்ணுங்க சுதந்திரமா இருக்காங்களா.? கல்யாணத்துக்கு முன்னாடி அப்பாவையும் , கல்யாணத்துக்கு அப்புறமா புருசனையும் , அப்புறம் மகனையோ மகளையோ சார்ந்து இருக்குற மாதிரியான சமூக அமைப்புல அவுங்களால என்ன செஞ்சிட முடியும்..? பண்ணுறதெல்லாம் நீங்க , பழி  மட்டும் அவுங்க மேலயா..? நல்லா இருக்குடா உங்க நியாயம்..! உங்களுக்கு காதல் தோல்வி அப்படின்னா தண்ணி அடிக்க வேண்டியது , தாடி வளர்க்க வேண்டியதுனு சுத்துரீங்க , ஆனா அவுங்களால அதைய அப்படியெல்லாம் காட்டிக்க முடியாம மனசுக்குள்ளயே அழுத்தி வச்சுட்டு , குடும்ப சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணி போனா என்னைய ஏமாத்திட்டு போறா , பொண்ணுங்களே இப்படித்தான் அப்படின்னு சொல்லுறது.! உங்களுக்கு காதல் தோல்வில எத்தனை வலி இருக்கோ அதே அளவு வலி பொண்ணுகளுக்கும் இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சிக்கோங்க.! " என்று முடித்தாள் சண்முகி.

" ஓ ,சாரி , தெரியாம பண்ணிட்டேன்.! இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..! " என்று மன்னிப்புக் கேட்டான் செல்வா.

" ஆமா மச்சி , நானும் கொஞ்சம் உன்ன உசுப்பி விட்டுட்டேன் , தண்ணி அடிச்ச சோகம் போய்டும் அப்படின்னு சொன்னது என்னோட தப்புத்தான்..! என்னையும் மன்னிச்சிரு.." என்றான் ரமேஷ்.

" சரி விடுங்க , அப்புறம் அந்தப் பொண்ணு கடைசில நண்பன்னு நினைச்சு பழகினேன்னு தானே சொல்லுச்சு ., அதனால ஒண்ணும் பயப்படாத எத்தனையோ நண்பர்கள் காதலர்களா மாறிருக்காங்க..! அதனால சந்தோசமா போ..! சரி எனக்கு நேரம் ஆச்சு , நான் கிளம்புறேன் " என்று கூறிவிட்டு சென்றாள் சண்முகி.

செல்வாவும் , ரமேஷும் சந்தோசமாக பைக்கினை ஸ்டார்ட் செய்தனர். போகும் வழியில் செல்வா ரமேசிடம் " மச்சி , ஒரு சந்தேகம் ..? "

" சொல்லு .., "

" தண்ணி அடிக்கிறது அப்படின்னு சொன்னீல , அத எப்படி அடிக்கிறது..? அடிச்சா அதுக்கு வலிக்காதா..? "

" வீட்டுக்குப் போக வரைக்கும் ஒழுங்கு மரியாதையா வாய வச்சிட்டு வந்திடு.!! " என்று சிரிததவாறே சொன்னான் ரமேஷ்.!

நீதி : லட்சம் தடவ காதல்ல தோற்றாலும் பொண்ணுகளுக்கு தாடி வளராது. அதனால தாடி வளர்த்துட்டேன் எனக்குத்தான் சோகம் , பொண்ணுக தாடி வளர்க்கரதில்லை அதனால அவுங்களுக்கு சோகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு திறியாதீங்க..!

நீதி 2 : ஒழுங்கு மரியாதையா மொக்கையே போட்டிருக்கலாமோ ..?!
ஒரு அறிமுகம் : நான் இந்தக் கதைல திருநங்கைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு நினைச்சேன் , ஆனா கதையின் நீளம் அதிகமா போய்டும் அப்படிங்கிறதால சொல்லமுடியல. ஆனா அதுக்காக சில பதிவுகளப் படிச்சேன். அந்த சமயத்துல தான் நம்ம லக்கிலுக் அண்ணன் புதிய தலைமுறைல ஒரு திருநங்கயோட வலைப்பக்கத்த பத்தி சொல்லிருந்தார்.அங்க நானும் சில பதிவுகள் படிச்சேன் .. உண்மைலேயே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உங்களுக்கு நேரம் இருந்தா நீங்களும் படிச்சு பாருங்க.! அந்த வலைப்பக்கம் இதோ http://livingsmile.blogspot.com ..

பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் செல்வா கோமாளியயோ, ரமேஷ் ரொம்ப நல்லவனையோ அல்லது பிரியமுடன் ரமேசையோ குறிப்பிடுவன அல்ல.!!

Tuesday, November 2, 2010

சருகு.! (தேவா ஸ்டைல்)

முன்குறிப்பு : நம்ம தேவா அண்ணன் ஸ்டைல்ல ஒரு பதிவு எழுதலாம் அப்படின்னு ஒரு சின்ன முயற்சி. அதனால தயவுசெஞ்சு இந்தப் பதிவுல யாரும் சிரிக்காதீங்க.! நான் காமெடி பண்ணலாம்னு முடிவு பண்ணினா சிரிப்பு வரமாட்டேங்குது. சரி ஒரு பதிவுல தத்துவம் சொல்லிப்பார்க்கலாம்னு வந்தேன்.!

சூரியன் தனது ஒளிக்கற்றைகளை செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது மாலைநேரம் வந்துவிட்டது எனக் கட்டியம் கூறிற்று. நான் எதுவும் தோன்றாதவனாய் மரத்தடியில் அமர்ந்துகொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த சருகினைக் கவனித்துக்கொண்டிருந்தேன். சருகின் நுனியில் இருந்த சிறிய கரப்பான் பூச்சியொன்று மேலே செல்லப் போராடிக்கொண்டிருந்தது. இருந்தாலும் காற்றின் வேகத்தில் சருகின் ஆட்டத்தில் மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்தது. அதனில் இருந்த உயிர்ப்பயம் என்னை ஈர்த்ததால் நான் அதனை மரத்தில் ஏற்றிவிட்டேன்.! இந்தக்கணத்தில் என்னுள் ஒரு மாற்றம்.!

      இப்பொழுது நான் அந்த்தப் பூச்சியைக் காப்பற்றியதம் மூலம் நான் சிறந்தவனா.? இல்லை காப்பாற்றாமல் விட்டிருந்தால் நான் கெட்டவனா .? காப்பாற்றியதால் சிறந்தவன் என்றால் இப்பொழுது நான் காப்பாற்றியதன் மூலம் அது பூமியில் நிலைத்திருக்குமா.? அவ்வாறு நிலைத்திருந்தால் மட்டுமே நான் காப்பாற்றியது உண்மையாகும். ஆனால் அது இன்றோ நாளையோ இறந்து விடும் என்றால் நான் காப்பாற்றியது பொய்யா.?

    நாம் சந்திக்கும் மனிதரிடத்து நமது பெருமைகளையும் சாதனைகளையும் பேசுகிறோமே , நமது பெருமைகள் நிலையானதா.? ஒரு பிச்சைக்காரருக்கும் செல்வந்தருக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. பிச்சைக்காரறது உருவத்தாலும் அவரது தொழிலாலும் அவமானப்படுத்தப்படுகிறார். எனினும் இங்கே அவமானப்படுத்தப்படுவது அவரது உருவமே.! அதே போல செல்வந்தரும் பாராட்டப்படுகிறார். இங்கே பாராட்டப்படுவது அவரது உருவமே ( உடலே ).! ஆக இரண்டுமே பயனற்றதே. ஒருவருடைய பாராட்டைப் பெறுவதோ திட்டுக்களைப் பெறுவதோ அனைத்தும் உடல்சார்ந்ததாகவே உள்ளது.!
 
   இரண்டுமே பயனற்றது எனில் பயனுள்ளது எது என்ற கேள்வி எழலாம்.! சொல்லப்போனால் இங்கே பயனுள்ளது என்று எதுவுமே இல்லை. ஒருவனை நீங்கள் விபத்தில் இருந்து காப்பாற்றி விட்டு நான் உன்னைக்காப்பற்றி விட்டேன் என்று சொல்வதும் பொய்யானதே , எவ்வாறெனில் அவனை நீங்கள் இறப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றியுள்ளீர்களே ஒழிய நிரந்தரமாக காப்பாற்றவில்லை.! நிச்சயம் ஒரு நாள் அவன் இறந்து விடுவான்.அப்பொழுது நான் உன்னை இறப்பிலிருந்து உன்னைக்காப்பாற்றிவிட்டேன் என்ற உங்கள் கூற்று பொய்யாய்ப்போகும்.! இன்பமோ , துன்பமோ , வலியோ வேதனையோ அது அழிந்துவிடும் இந்த உடலினை மையப்படுத்தியே இருக்கிறது. எனில் இந்த உடல்தான் நானா..? இங்கே கிடைக்கும் உறவுகளோ நட்புகளோ அனைத்தும் அதனின் நினைவுகளும் இந்த உடலுடனே முடிந்து விடுகிறது.! உடலினைத்தாண்டி வருவது எதுவும் உண்டா..?

  இங்கே கடவுள் பற்றி இரு கூற்றுகள் உண்டு. சிலர் கடவுள் என்ற ஒன்று உண்டு என்றும் சிலர் இல்லையென்றும் கூறுகின்றனர். கடவுள் உண்டென்போரின் கருத்துப்படி கடவுளே உலகைப் படைத்தவர் என்றும் நமக்கு துன்பங்கள் வரும்போது அவர் நம்மை காப்பவர் என்றும் நம்புகின்றனர். எனில் கடவுள் ஏன் துன்பமில்லா உலகைப்படைக்கவில்லை.? துன்பங்களைப் படைத்தது அது தீர அவரை வணங்க வேண்டும் என்பது அவரது எண்ணமா ..? என்றால் நாம் அவரது அடிமைகளா..? இது கடவுளை நம்பாதவர்களின் கேளிவிகள்.!

    கடவுள் என்பவர் யாருடைய துன்பத்திற்கோ , இன்பத்திற்கோ காரணமாக அமைவதில்லை. மேலே சொன்னது போல இது ஒரு நிலையில்லாத உலகம். எனில் இங்கே நமது வாழ்க்கையும் நிலையில்லை. இப்படி நிலையில்லாத ஒரு வாழ்க்கைக்கு கடவுள் ஏன் உதவ வேண்டும்.? இங்கே நீங்கள் காண்பதும் , சொந்தம் கொண்டாடுவதும் உங்களின் உடல் உள்ளவரை மட்டும் தானே.! இங்கே நீங்கள் அறிவாளியாகவோ முட்டாளாகவோ இருப்பதும் இந்த உடல் உள்ளவரைதான். ஆக நீங்கள் நான் பெரிய அறிவாளி என்று ஆணவம் கொள்வதும் நான் பெரிய செல்வந்தர் என்று செருக்கு கொள்வதும் நிலைக்கப் போவதில்லை.!

    பொய்யான இந்த வாழ்க்கைக்கு கடவுள் உதவுவார் என்று நினைப்பதும் உதவவில்லை என்றால் கடவுளே இல்லை என்று நினைப்பதும் அவரவர் விருப்பமே.நாத்திக வாதிகளின் கூற்றுப்படி கடவுள் உலகைப் படைத்திருந்தால் படைக்கும் போதே அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் படைத்திருக்கலாமே , ஏன் இவ்வளவு கொடுமைகளைப் படைத்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. சொல்லப்போனால் கடவுள் தான் உலகைப்படைத்தவர் என்ற கூற்றிலேயே அதற்க்கான விளக்கமும் இருக்கிறது. உயிர்களெல்லாம் சமம் என்று கொள்வோமேயானால் இங்கே மனித உயிரும் எறும்பின் உயிரும் சமமே. எனில் எறும்பின் மீது காட்டப்படும் கருணைதானே மனிதன்மீதும் காட்டப்படும்.!

   இன்பமோ துன்பமோ ,வாழ்வோ சாவோ , மகிழ்ச்சியோ வேதனையோ அது அடுத்தவரையோ கடவுளையோ சார்ந்தது அல்ல. நம்மை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. உங்களுக்கு எத்தனை பெரிய துன்பங்கள் வந்தபோதும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள்  " இது நிலையானது அல்ல " . யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அது அழிந்துவிடும் உடலையே குறிக்கிறது. உங்களை அல்ல. இந்தக்கட்டுரையின் முடிவில் ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..! உடல் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார்..?


சிறு உதவி : திருநங்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த லிங்க் இருந்தால் குடுங்க. அடுத்த கதைக்கு தேவைப்படுது.!

நீதி : உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.! அது மாதிரி கோமாளி போராளி ஆக முடியாது.!!

என்புத்தி எனக்கு கூறிய அறிவுரை : ( சத்தியமா எனக்கு புத்தி இருக்குதுங்க , போன வாரம் தான் தீபாவளி தள்ளுபடில வாங்கினேன் ., 2 கிலோ, 200 ரூபாய் சொன்னாங்க நான் 50 ரூபாய் தள்ளுபடி பண்ணி 250 க்கு வாங்கினேன் )  உனக்கெல்லாம் எதுக்கு இந்த ஆராய்ச்சி.? உன் லெவலுக்கு கொசுவுக்கு கொம்பு இருக்குதா , எலிக்கு ஏன் வால் இருக்குது அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே..!
  
பின்குறிப்பு : இந்த சில விசயங்கள் எழுதரக்கே எனக்கு ஒரு வாரம் ஆச்சு. ஆனா தேவா அண்ணன் எப்படித்தான் இவ்ளோ எழுதராரோ..? சத்தியமா தேவா அண்ணா நீங்க GREAT தான்.!

Monday, October 25, 2010

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி 3 )

முன்குறிப்பு : நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் இந்தப் பதிவோட முதல் இரண்டு பகுதிகள படிக்கணும்னா லேபிள்ல பொய் நாட்டாமை அப்படிங்கிறத கிளிக் பண்ணி படிங்க.!

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ஒரு சுடுகாட்டுல நின்னுட்டிருக்காங்க. அங்க இரண்டுபேர் ஒரு குழில இருந்து பொணத்த தோண்டி எடுத்திட்டு இருக்காங்க. இன்னிக்கு பசுபதி லீவ். அதனால பசுபதிக்குப்பதிலா நம்ம இம்சைஅரசன் பாபு  அண்ணன் போறாரு. இனி அங்க நடந்தப் பார்கலாம்.!

நாட்டாமை பட நாட்டாமை : தோன்றா தோன்றா., நல்லா தோண்டு ., நாந்தே தீர்ப்பு சொல்லுவேன்.!

தமிழ்ப்பட நாட்டாமை : தென்றா பேசுற ., நான்தான் சொல்லுவேன்.!

நா.நாட்டாமை : டேய் , நீ தானடா இவன கள்ளிப்பால ஊத்தி கொல்ல சொல்லி தீர்ப்பு சொன்ன., இந்த தடவ நான்தாண்டா சொல்லுவேன்.!

இம்சை பாபு  : இப்ப எதுக்கு இங்க வந்து இதைய தோண்டிட்டு இருக்கீங்க..?

நா.நாட்டாமை : இவன் ஒரு தப்புப் பண்ணிடாண்டா., அதான் தீர்ப்பு சொல்லலாம்னு வந்தோம்.!

இம்சை பாபு : அப்படி என்ன தப்பு பண்ணுனான்..?

த.நாட்டாமை : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு அப்படின்னு கேட்டதுக்கு பல் வெள்ளையா இருக்கு அதனால தயிரும் வெள்ளையா இருக்கு அப்படின்னு தப்பா சொன்னதால இவன கள்ளிப்பால் ஊத்தி கொல்ல சொல்லிட்டேன்.!

இம்சை பாபு : சரியாத்தான மக்கா சொல்லிருக்கான்..!

த.நாட்டாமை : தென்றா பேசுற , அப்படின்னா பால்ல இருந்து வர்ற நெய் மட்டும் எப்பர்ரா மஞ்சளா இருக்கு...?

நா.நாட்டாமை : அப்டி கேள்றா..?

இம்சை பாபு : சரி இப்ப இவன எடுத்து என்ன பண்ண போறீங்க..?

நா.நாட்டாமை : எங்களுக்கு வேலை இல்லைடா, அதான் பழைய தீர்ப்பஎல்லாம் மறுபடி பஞ்சாயத்து வச்சு தீர்ப்பு சொல்லப்போறோம்.!

இம்சை பாபு : ஆனா இவன்தான் செத்துட்டானே .?

த.நாட்டாமை : செதவனா இருந்தாலும் உசுரோட இருகரவனா இருந்தாலும் நியாயம் நியாம்தண்டா..!

( அந்த குழிக்குள்ள இருந்து ஒரு எலும்புக்கூட்ட எடுக்குறாங்க., அத பார்த்த உடனே )

த.நாட்டாமை : என்னடா இவன் இன்னும் அப்படியேதான் இருக்கான். வளரவே இல்லையா .?

இம்சை பாபு : செத்ததுக்கு அப்புறமா எப்படிங்க வளருவான்..?

த.நாட்டாமை : அவனுக்கு நான் தினமும் சோறு அனுப்பிட்டு இருந்தன்லடா..? பசுபதி கூட சோறு நல்லா தின்கிரான்னு எங்கிட்ட சொல்லி அடிக்கடி காசு வான்குவான்ல. இப்ப என்னடா வளராம அப்படியே இருக்கறான். இந்த நாத்தம் அடிக்கிது ., தண்ணி கூட வாக்கலையா ..?

நா.நாட்டாமை : நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.!

இம்சை பாபு : இந்த நேரத்துலயும் நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்னு சொல்லுறானே , என்ன கொடுமைடா சாமி ..?

த.நாட்டாமை : தீர்ப்பு அப்புறம் சொல்லிக்கலாம் , முதல்ல பசுபதி கிட்ட கேளுடா .? இவன் ஏன் வளரலைன்னு..?

நா.நாட்டாமை : தென்றா பாபு , போன போடுறா பசுபதிக்கு..!

(பாபு பசுபதிக்கு போன் போட்டு த.நாட்டாமையிடம் தருகிறார்.)

த.நாட்டாமை : தென்றா பசுபதி , அன்னிக்கு ஒருத்தனுக்கு கள்ளிப்பால ஊத்திக்  கொன்னதுக்கு அப்புறம் அவனுக்கு சோறு குடுத்துட்டு இருந்தீள , அவன் வளரவே இல்லையேடா..?

பசுபதி : யாருக்கு கள்ளிப்பால் ஊத்துனீங்க..? உங்களுக்கு யார் வேணும் .? எனக்கு ஒண்ணும் புரியலையே..?

நா.நாட்டாமை : தென்றா பசுபதி , நீ நம்பட பையந்தான. என்ன கூடவா மறந்திட்ட..?

பசுபதி : ஐயோ , நானே ஒச்சாயி படம் ஓடிட்டு இருக்குற தியேட்டர்ல இருக்கேன் ., அப்புறமா கூப்பிடுங்க..! ( போனை கட் செய்து விட்டார் )

நா.நாட்டாமை : தென்றா பாபு , நீ ஆருக்குடா போன் போட்ட ..?

இம்சை பாபு : நடிகர் பசுபதிக்கு தான் போட்டேன்..

நா.நாட்டாமை : அவருக்கு எதுக்குடா போட்ட , நம்பட பையன் பசுபதிக்கு போட வேண்டியதுதானே..!

இம்சை பாபு : அது எவன்டா உம்பட பையன் பசுபதி ..?

நா.நாட்டமை : நீ நாட்டாமை படம் பார்த்தியா இல்லையா .?

இம்சை பாபு :உன்னைய பாக்குறதே பெருசு , அத வேற பாக்கணுமா..?

த.நாட்டாமை : என்னது நாட்டாமை படம் பாக்கலையா ., தென்றா பேசுற ..? இவன புடிச்சு கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா ..?

நா.நாட்டாமை : செல்லாது செல்லாது ., நான்தான் தீர்ப்பு சொல்லுவேன்.! இவன ஊர விட்டு தள்ளி வெக்கறேண்டா .! ஆரும் இவன்கூட பேசப்படாது.!

இம்சை பாபு : ( லூசா இருப்பானோ , இந்த ஊர்லையே ஒருத்தரும் இல்லைன்னு தான் பொணத்த எடுத்து தீர்ப்பு சொல்லிடு திரியுதுக , என்ன கொடுமையோ , நான் தப்பிச்சேன்.!!)

பின்குறிப்பு : காமெடி பண்ணனுனு ஆரம்பிச்சு மொக்கைல வந்து முடிஞ்சிடுச்சு ..!!

சிறிய எச்சரிக்கை : அடுத்த பதிவு சருகு.!(தேவா ஸ்டைல்)

நீதி : பாவம் நீங்க ..!

Thursday, October 21, 2010

பானைய வச்சு சம்பாரிக்கணுமா.?

முன்குறிப்பு : மொக்கை எங்கள் தெய்வம்.!

இதுல என்னங்க தப்பு இருக்கு:
ஒரு வாரம் முன்னாடி எங்க பக்கத்து வீட்டுக்காரர் எங்கிட்ட சொன்னார் . " என்னோட பைக் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது., அது என்ன ஆச்சுனு தெரியல..? நான் செக் பண்ணினதுல எல்லாமே சரியாத்தான் இருக்கு ., எனக்கு பெட்ரோல்ல தான் சந்தேகமா இருக்கு. அதனால அதுல இருந்த பெட்ரோல தனியா இந்த பாட்டில்ல எடுத்துட்டு வந்திருக்கேன் ., உன்னோட பைக் ல ஊத்தி டெஸ்ட் பண்ணி பார்க்கணும் " அப்படின்னார்.
சரி அதனால என்ன ஆகிடப்போகுது அப்படின்னு நினைச்சிட்டு " சரி குடுங்க., டெஸ்ட் பண்ணலாம்னு " வாங்கி என்னோட வண்டில ஊத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.. ஸ்டார்ட் ஆகிடுச்சு. அத பார்த்த அவருக்கு சந்தோசம். " எதுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடு.! " அப்படின்னார். சரி கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணலாம் அப்படின்னு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தேன். நல்லாத்தான் போச்சு.. ஆனா இதுக்கு அப்புறம் இருக்குற பெட்ரோல்ல பிரபலம் இருந்தா என்ன பண்ணுறது..? சரி எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிடலாம் அப்படின்னு அந்த 2 லிட்டர் பெட்ரோல் தீர வரைக்கும் ஒரு 3 மணிநேரம் டெஸ்ட் பண்ணினேன்.அப்புறம் வீட்டுக்கு வந்ததும் பெட்ரோல்ல பிரச்சினை இல்லைங்க.. நான் புல்லா டெஸ்ட் பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னேன்.அத சொனதுமே அவருக்கு செம கோவம் வந்துடுச்சுங்க. இருந்ததே 2 லிட்டர் தான். அத்தனையும் முடிச்சிட்டியே.? அப்படின்னு கண்டபடி திட்டினார். நீங்களே சொல்லுங்க நான் என்ன தப்பு செஞ்சுட்டேன் அப்படின்னு இவ்ளோ கோவப்படுராறு..? நல்லதுக்கே காலம் இல்லைங்க..!!

பானைய வச்சு சம்பாரிக்க :
*.ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல  "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

எங்கள் சங்கத்திற்கான(VAS) கவிதை ஒன்று :
வானத்து சூரியனுக்கும் உண்டு ஓய்வு 
எங்கள் வலையுலக சூரியனுக்கு இல்லை ஓய்வு ;
சூரியக் கதிர்வீச்சில் பனித்துளிகள் மறைந்துவிடும் 
எங்கள் சூரியக்கதிரில் பணிச்சுமைகள் குறுகிவிடும் ;
சூரியனால் ஒளிர்கிறது நிலவு 
எங்கள் சூரியனால் மிளிர்கிறது ப்ளாகர்;
சூரியன் தெரிவது 12 மணி நேரம் 
எங்கள் சூரியன் தெரிவது 24*7.!
(போல்ஸ்கார் & அருண் அண்ணா இதுக்கு என்ன சொல்லப் போறீங்க..?) 

மொக்கயரசன் வரலாற்றிலிருந்து மொக்கை பற்றிய சில வரிகள் :
மொக்கை இது மூன்றெழுத்து மந்திரம். ஒரு சொல் வாக்கியம். ஒற்றைச்சொல் கவிதை.மொக்கையே எங்களின் வாழ்க்கை. மொக்கயில்லையேல் உலகம் இல்லை. எங்கள் கனவுகளில் மொக்கை ., நினைவுகளில் மொக்கை , வார்த்தையில் மொக்கை.. மொத்தத்தில் நானே மொக்கை ., மொக்கையே நான் .! எங்களை வாழ வைப்பது மொக்கை ., நாங்கள் வாழ்வதும் மொக்கைக்காகவே.! ஆதலின் மானுடரே மொக்கையைப் படிப்பீர். மொக்கையாய் வாழ்வீர்.!!

தீபாவளி வருது. அதுக்காக என்னோட பழைய மொக்கை ஒண்ணு :
சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்கணுமா..?
பட்டாசு வெடிக்கும்போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க.! சத்தம் வராது.!

ஒரு சின்ன சந்தேகம் :
மாம்பழத்துக்குள்ள மாங்கொட்டை இருக்கு;
பேரிச்சம் பழத்துக்குள்ள பேரிச்சன்கொட்டை இருக்கு ;
அப்படின்னா வாழைப்பழத்துக்குள்ள வாழைக்கொட்டை ஏன் இல்லை..?


ஒரு சின்ன கண்டுபிடிப்பு : 
காதல் எதுல ஆரம்பிச்சு எதுல முடியுதுன்னு தெரியுமா ..?
"கா"வுல ஆரம்பிச்சு "ல்"ல முடியுது.!


நீதி :இந்தப் பதிவப் படிச்சு உங்க நேரத்த வீணாக்குனதுக்கு நன்றி.!


பின்குறிப்பு : என்னாலையும் சின்னப்பதிவு எழுத முடியும் .!!


Tuesday, October 19, 2010

கி.பி.2060-௦௦ல் உலகம்

முன்குறிப்பு : 2060 ல உலகம் எப்படி இருக்கும் அப்படின்னு என்னோட கற்பனைங்க.! இது என்னோட கற்பனை மட்டும் இல்லை ., விருப்பமும் கூட.!

*.சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறத்தலாக இருக்கும் கண்ணாடிப்பைகளுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு மக்காத இந்தக் கண்ணாடிப்பைகள் ( POLY PACKS ) அறவே ஒழிக்கப்பட்டன.!

*.இரண்டாம் வகுப்புப் பாடத்தில் பிச்சைக்காரர்கள் அப்படின்னு ஒரு பாடம் வச்சு அதுல " பிச்சைக்காரர்கள் அப்படின்னு சிலர் இருந்தாங்க." என்று படத்தைக் காட்டி வரலாற்றுப்பாடம் நடத்திட்டு இருக்காங்க.!

*.அரசியல் என்பது ஒரு தொழிலாக இல்லாமல் சேவையாக செய்யப்பட்டது. மக்களின் அடிப்படித் தேவைகள் அனைத்தும் நிறைவேறியிருந்ததால் சேவை என்பது கூட தேவை இல்லாமல் போனது. ஆதலால் நாடுகளுக்கான பிரதமர்களும் , முதலமைச்சர்களும் வேலைவாய்ப்பு அலுவகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.!

*.மக்களின் நாகரீகப் பழக்கங்களால் சாலைகளில் எச்சில் துப்புவது , சிறுநீர் கழிப்பது போன்ற தவறுகள் அறவே இல்லாமல் சாலைகள் அழகாகவும் , சுத்தமானதாகவும் காட்சி அளிக்கிறது.!

*.சுத்தமான சூழல் , மக்களின் தூய்மையான பழக்க வழக்கங்களால் நோய்களே இல்லாத சமுதாயம் உருவானது. இதனால் காலப்போக்கில் மருத்துவமனைகளும் , மருந்துக்கடைகளும் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.


*.மதுவினால் ஏற்படும் தீங்கினை மக்கள் புரிந்து கொண்டதால் நாடெங்கிலும் இருந்த மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன.!


*.புகையிலை , பீடி , சிகரெட் போன்ற போதைப்பொருட்களை  மக்கள் முழுவதுமாக கைவிட்டிருந்தனர்.!


*.உலகத்தீவிரவாத இயக்கங்கள் அமைதி வழிக்குத் திரும்பியதால் பாகிஸ்தான் , பாலஸ்தீனம் , ஈரான் , ஈராக் போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.!


*.தீவிரவாத அச்சுறத்தல்கள் இல்லாததால் உலகநாடுகளில் ராணுவம் மற்றும் காவல்துறைகளுக்கு செலவிடும் பெரும்பாலான தொகை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டதால் சாலை வசதிகளும் இதர அத்தியாவசிய தேவைகளும் எளிதாக நிறைவேற்றப்பட்டன.!


*.சுவர்களில் சுவரொட்டிகள் என்பது எங்கேயும் கிடையாது. மேலும் இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர் , மீறினால் தண்டிக்கப்படுவீர் என்கின்ற வாசங்களும் எந்த சுவற்றிலும் எழுதப்படவில்லை.!

*.இலங்கையில் பேரமைதி நிலவி வருகிறது. தமிழன் ,சிங்களவன் என்கின்ற மொழிப்பிரசினைகள் அறவே நீங்க அனைவரும் மனித குலத்தவர் என்கின்ற ஒற்றுமை வளர்ந்ததால் அனைவரும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.!

*.பெரும்பாலும் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக அதிக தீங்கு விளைவிக்காத எதிர்ப்புப் பொருட்களை பயன்படுத்துவதால் புதிய புதிய நோய்கள் எதுவும் பரவுவதில்லை.!

*.மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது , தொலைபேசியில் பேசியபடியே ஓட்டுவது மற்றும் கவனக்குறைவுடன் வாகனகளை இயக்குவது  போன்ற தவறுகளை விடுத்து மக்கள் அனைவரும் சாலை விதிகளை மதிப்பதால் சாலை விபத்துகள் பெரும்பாலும் குறைந்து விட்டன.!

*.உலக நாடுகளில் இருந்த அனைத்து அணு ஆயுதங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உலக அமைதி நிலைநிறுத்தப்பட்டது.!


*.ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் விவசாயத்திற்கு பெரும் ஊறு விளைவித்த வெட்டுக்கிளிகள் முழுவது அழிக்கப்பட்டு , மழை அதிகம் பெய்ததால் விவசாயம் செழித்து பசி , பட்டினி என்கிற வார்த்தைகளே இல்லாமல் மகிச்சியாக இருக்கின்றனர்.!


*." அவன் கூப்ட்டாலும் இலவசம்தான்., ஆனா கூட மிஸ்டு விடுறான்.! " என்ற படியே போய்க்கொண்டிருதார் ஒரு இளைஞர்.!


*.வட கொரியா , தென் கொரியா எல்லைப்பிரச்சினைகள் தீர்ந்து இரு நாடுகளும் நட்பு நாடுகளாகின.!


*.இந்திய நதிகள் இணைக்கப்பட்டதால் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்ட கிராமங்கள் பயனடைந்தன. மேலும் அக்கிராமங்களில் விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது.!


*.உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வல்லரசாக மற்றம் கண்டிருந்தன.! 


*.தொலைக்காட்சிகள் முழுநேர பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்ற நிலை மாறி சில நல்ல நிகழ்சிகளும் வழங்கப்பட்டன. திரைப்படங்களில் வெட்டுவதும் குத்துவதும் அறவே இல்லாமல் நகைச்சுவைத் திரைப்படங்களும் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் பெருமளவில் தயாரிக்கபடுகின்றன.!


*.இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்ததும் வேலை தேடிச் செல்லாமல் விவசாயம் செய்வது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.!


*."நல்லபடியா போய் சேர்ந்துட்டியா.? " என்று ஒரு தாய் செவ்வாய்க்கு வேலைக்குச் சென்ற தனது மகனிடம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.!


*.உலக அளவில் புகழ்பெற்ற பிரபல ரேடியோ ஜாக்கி செல்வா தனது கோமாளி ப்ளாக்கிற்காக மொக்கையும் நானும் என்ற பதிவினை எழுதிவிட்டு உறங்கச்சென்றவர் படுக்கையிலேயே உயிரிழந்தார். இருந்த போதிலும் " உயிர் மீட்பு " என்கிற தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் உயிர்பெற்று எழுந்தார். உயிர்பெற்று எழுந்தவுடன் " இயற்கைக்கு எதிராக எதுவும் செய்திடவேண்டாம்.! " என்று கேட்டுக்கொண்டதால் அந்த தொழில்நுட்பம் திரும்பப்பெறப்பட்டு உயிரிழந்தார். அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.!




இப்படி ஒரு சின்ன கற்பனை பண்ணி பாருங்களேன் . கற்பனைதான் காசா பணமா பண்ணி பாருங்க : 
பாலிதீன் குப்பைகள் இல்லாத , சுவர்களில் ஒட்டப்பட்டு பாதி கிழிந்த நிலையில் இருக்கும் சுவரொட்டிகள் இல்லாத , தெருவோரங்களில் சிறுநீர் , எச்சில் துப்பாத தூய்மையான ஒரு நகர்த்த கற்பனை பண்ணி பாருங்க. அதுல நீங்க காலைல எந்திரிச்சு பேப்பர் படிக்கும் போது ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு , நைஜீரியாவில் பசிக்கொடுமையால் 8 பேர் உயிரிழப்பு , இந்தியா எல்லை ஓரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் இது மாதிரியான செய்திகள் இல்லாம பேப்பர் படிக்கிறீங்க. அப்புறம் வேலைக்கு கிளம்புறீங்க. உங்க பக்கத்துல இந்தியப் பிரதமர் அதே பஸ்சுல வர்றார்.அவர பார்த்து கூட நீங்க எதுவுமே சொல்லல. அப்ப உங்க மனசுல ஒரு பழைய காட்சி வருது., அது என்னன்னா லோக்கல் MLA ஒருத்தர் ஒரு கார்ல போறாரு , அவருக்கு முன்னாடி 10 காரு , பின்னாடி 10 காரு." இந்த காட்சிக்கும் இப்ப நீங்க பாக்குறதுக்கும் இருக்குற வித்தியாசத்த நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறீங்க.! நீங்க போற வழில இருக்குற TASMAC கடைகள் மூடப்பட்டு இருக்கு., கடைகளில் சிகரட் மற்றும் இதர புகயிலைப்பொருட்கள் வாங்குவதற்கு ஆள் இல்லாம தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. டிராபிக் சிக்னல்ல போலீசோ இல்ல இதர ஆட்களோ இல்லாம இருந்தாலும் எல்லோரும் அமைதியா சிக்னல் பார்த்து வண்டி ஓட்டுறாங்க. அப்படியே வேலைக்குப் போறீங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது அப்படியே கோவில்பக்கம் போறீங்க , அங்க பிச்சைக்காரகள் இல்ல. நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரீங்க. வீட்டுக்கு வந்து டிவி போட்டதும் தொடர்கள் எதுவும் இல்லாம சில நல்ல நிகழ்சிகள் பாக்குறீங்க.. நிம்மதியா படுத்து தூங்குறீங்க.! எப்படி இருக்கு ..? சூப்பரா இருக்குள்ள ..?!

நீதி : நம்பிக்கையே வாழ்க்கை; நல்லதே நினைப்போம் , நல்லதே செய்வோம் , நல்லதே நடக்கும்.!௦


பின்குறிப்பு : இந்த மாற்றங்கள் எல்லாம் 2040 லயே வரணும்னு எழுதினேன். ஆனா கடைசி பத்தி எழுதிட்டு பார்த்தேன் 2040 ல எனக்கு 53 வயசு தான் ஆகிருந்தது. அதனால ஒரு 73 வரைக்குமாவது இருக்கணும்னு 2060 அப்படின்னு எழுத வேண்டியதா போச்சுங்க.! ஹி ஹி ஹி..