Tuesday, August 31, 2010

மொக்கையும் நானும்

எங்கிட்ட நிறைய பேர் கேட்டுட்டாங்க., " ஏன்டா நீ இப்படி மொக்க போட்டு எங்க உயிரை வாங்குற ..?" நான் என்ன வேணும்னா அப்படி செய்யுறேன். நான் ஏன் இப்படி மொக்க போடுறேன். நிச்சயமா உங்களுக்கு சொல்லியே ஆகணும். சரி வாங்க என்னோட STDகுள்ள போலாம்.

நான் அப்ப இரண்டாவது படிச்சிட்டிருந்தேன். ஒரு நாள் கனவுல ரொம்ப பயங்கரமான உருவம் ஒண்ணு வந்தது. எனக்கு ரொம்ப பயமா போச்சு.
 " யார் நீ " அப்படின்னு கேட்டேன்.
" நான் தான் மொக்கை , இப்ப உன்ன பிடிக்கப் போறேன் " அப்படின்னான்..
 உடனே நான் " தயவு செய்து என்னை பிடிச்சிடாத , எனக்குப் பயமா இருக்கு , விட்டுடு " அப்படின்னு சொல்லிட்டே கட்டில்ல நகர்ந்து படுத்தேன். ஆனா கீழே விழுந்துட்டேன். அப்புறம் அப்படியே மயங்கிப்போயிட்டேன்.
அடுத்த நாள் காலைல யாரோ எழுந்தரிசுப் பாக்குறப்போ என்னோட கால்ல பலமா கட்டி வச்சிருந்தாங்க. என்னனு கேட்டேன் .
" நேத்து நீ கட்டில்ல இருந்து கீழ விழுந்துட்ட , அதனால உன்னோட கால் உடைஞ்சு போச்சு" அப்படின்னாங்க. சரி அப்படின்னு விட்டுட்டேன். அப்ப என்னோட கை மேல ஒரு கொசு வந்து உட்கார்ந்தது. அத பார்த்த உடனே எங்க அம்மா கொசு வர்த்தி சுருள் எடுத்து பத்த வச்சா போய்டும் அப்படின்னு சொன்னாங்க.
ஆனா நான் சொன்னேன் " அம்மா ,' கொசுக்களுக்கு அனுமதியில்லை ' அப்படின்னு ஒரு பேப்பர்ல  எழுதி தொங்க விட்டா கொசு உள்ள வராதுல " அப்படின்னு சொன்னேன்.
 இத கேட்டதுமே எங்க அம்மா அடடா பையன் கீழ விழுந்ததுல பயந்துட்டான் போல அப்படின்னு என்னை கூட்டிட்டுப் போய் தாயத்து கட்டி விட்டாங்க.
வீட்டுக்குள்ள வந்ததுமே நான் சொன்னேன் " அம்மா நான் சொன்னது தப்புத்தான் , பேப்பர்ல எழுதி வச்சாலும் கொசு உள்ள வந்திரும் "அப்படின்னேன்.
இத கேட்ட உடனே எங்க அம்மாவுக்கு சந்தோசம்.
நான் மறுபடியும் சொன்னேன் " படிக்காத கொசுவா இருந்தா உள்ள வந்திடும்ல !" இத கேட்டதும் எங்க அம்மாவுக்கு மறுபடியும் டென்ஷன். ஏன்னா நான் அதுவரைக்கும் அவ்வளவு அறிவாளியா(!?!) பேசினது இல்ல. அப்புறம் அப்படியே அந்த நாள் ஓடிப்போச்சு.

அந்த அன்னிக்கு மறுபடியும் ஒரு கனவு. அதுல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தாங்க . அவுங்க கிட்ட கேட்டேன் " யார்க்கா நீங்க ..? "
" நான்தான் மொக்கை " அப்படின்னாங்க. அத கேட்ட உடனே எனக்கு ஒரே சிரிப்பு .
" கி கி (சிரிப்பு) போங்க்கா. மொக்கை அவன் குண்டா பன்னி மாதிரி பேயாட்டமா இருப்பான் , நீங்க பொய் சொல்லுறீங்க ."
அதுக்கு அவுங்க சொன்னாங்க " இல்லப்பா நான் ஒருத்தர பிடிக்கர வரைக்கும் அப்படித்தான் தெரிவேன் , ஆனா பிடிச்சிட்டா இப்படி அழகா தெரிவேன் " அப்படின்னாங்க. நான் சொன்னேன் " ஆனா நீங்கதான் என்னை பிடிக்கவே இல்லையே ..? "
" நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க.

நாட்கள் நகர்ந்தன.நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டிருந்தேன். என் மொக்கை போடும் திறமையும் கூடவே வளர்ந்தது.அடிக்கடி நான் மொக்கை போடுவது அதனால் நான் வாங்கிக்கட்டிகொள்வதும் , கனவில் அவன் அல்லது அவள் ( மொக்கை ) வருவதும் வழக்கமானது. நான் 5 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்ப எங்க வாத்தியார் மழை எப்படிப் பெய்யுது அப்படின்னு பாடம் நடத்திட்டிருந்தார். ஆனா நானும் இன்னொரு பையனும் பேசிட்டிருந்ததப் பார்த்த அவர் " டேய் என்னடா பேசுறீங்க " அப்படின்னார்.
" சார் மழை சாமி கும்பிடறதால தான் பெய்யுது அப்படின்னு சொல்றான் சார் " அப்படின்னு என்னோட பிரென்ட் போட்டுக்கொடுத்திட்டான்.
" எப்படிடா சாமி கும்பிட்டா மழை வரும் " அப்படின்னு என்னை மிரட்டினார்.
"சார் சாமி வானத்துக்கு மேல ட்ரம்ல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க.நாம சாமி கும்பிடும் போது அவுங்க ட்ரம்ல இருக்குற தண்ணிய ஊத்துவாங்க. அதுதான் மழை. அப்புறம் தண்ணி இருக்குற ட்ரம் தீர்ந்ததும் அதைய உருட்டி விட்டுருவாங்க. அப்படி உருட்டி விடுற ட்ரம் மோதுறதுதான் இடி ,அது இரும்பு ட்ரம்மா இருந்தா அது மோதும் போது தீப்பொறி வரும்ல அதுதான் மின்னல் " அப்படின்னு நான் முடிச்சதும் என் முதுகுல இடி விழுந்தது.
வேற யாரு வாத்தியார்தான் " நான் இங்க காட்டு கத்து காத்திட்டிருக்கேன் , நீ இங்க கதை சொல்லிட்டிருக்கியா ..? " அப்படினார்.ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.

 அப்புறம் 8 வகுப்பு படிக்கும்போது .... ( போதுமா ..? ) சரி விடுங்க. இன்னிக்கு இது போதும். ஆனா நான் என்னோட கதைய தொடர்ந்து சொல்லுவேன்.  அப்புறமா இந்த பதிவிற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு அது என்னனா ,
நம்ம ஜீவன்பென்னி அண்ணா இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தார். " மொக்கையப் போட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே பாவம் அத விட்டுடுங்க ......புண்ணியமாப்போகும் " . இந்த கம்மெண்ட படிச்சதுமே எனக்கு பல்பு எரிஞ்சது. மொக்கை அப்படின்னு தனியா ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்.? அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்.

83 comments:

ஜில்தண்ணி said...

me the 1st

ஜில்தண்ணி said...

படிச்சிட்டு வாரேன் :)

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuuuuuu

அகல்விளக்கு said...

மொக்கை மன்னா....

ஏன் இப்படி???

ஜில்தண்ணி said...

harini said...

me the firstuuuuuuuuuuuuu /////////


தொப்பி தொப்பி ஹீ ஹீ

சௌந்தர் said...

நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க./////

மலையாள பகவதி....மலையாள பகவதி இந்த பையனை பிடித்து இருக்கும் மொக்கையை உடனே ஓட்ட வேண்டும்.....

சௌந்தர் said...

@@@harini me the firstuuuuuuuuuuuuu///

மொக்கை மொக்கை

வினோ said...

thambi mudiyala.. ayyo ayyo.. ivvanukka yaaraavathu solla koodaathaa?

ஜில்தண்ணி said...

ஆஹா மச்சி அந்த ஃபிகர் புண்ணியத்தாலதான் நாம மொக்க போடுற மேட்டர லீக் பண்ணிட்டியே ராசா :)

இன்னக்கி நைட்டே அந்த உருவம் தெரியுதான்னு நிறைய பேரு தேடிகிட்டு திரியுவாங்க பாரு

சௌந்தர் said...

கிறுக்கியது ப.செல்வக்குமார்////

உண்மைதான்...இது கி... கி.. கி.. தான்

ஜில்தண்ணி said...

@சௌந்தர்

/// மலையாள பகவதி....மலையாள பகவதி இந்த பையனை பிடித்து இருக்கும் மொக்கையை உடனே ஓட்ட வேண்டும்.... ///

ஹலோ தல, மொக்க வந்து எங்களோட லவ்வர்

நாங்க அவள(அத) லவ் பண்றோம்,அத ஓட்டிடுவீங்களா ஓட்டி

வினோ said...

jillu Pyei kooda azhaka thaan irukkum.. example : mokkai...

ஜில்தண்ணி said...

@@@ வினோ said...

/// jillu Pyei kooda azhaka thaan irukkum.. example : mokkai... ///

அவரவர்க்கு அவரவர் காதலி தேவதை

Jey said...

//" அம்மா ,' கொசுக்களுக்கு அனுமதியில்லை ' அப்படின்னு ஒரு பேப்பர்ல எழுதி தொங்க விட்டா கொசு உள்ள வராதுல " அப்படின்னு சொன்னேன்.//

எப்பா...முடியல...

செல்வா said...

@ ஜில்தண்ணி - யோகேஷ்
//இன்னக்கி நைட்டே அந்த உருவம் தெரியுதான்னு நிறைய பேரு தேடிகிட்டு திரியுவாங்க பாரு //

ஆனா அது நம்மளுக்கு மட்டும்தான் மாப்பி தெரியும் .. நீ கவலைப்படாதே ..

எஸ்.கே said...

மொக்கைகளை எழுத அதிக அறிவு தேவை. ஏனெனில் ஒன்றுமில்லாத விசயத்தை டெவலப் செய்து எழுதுவது எளிதல்ல. அதையும் ரசிக்கும்படி சொல்வது கடினம். எனவே தங்களைப் போன்று மொக்கைகள் எழுதுபவர்கள் நிச்சயம் யோசிக்க தெரிந்த அறிவாளிகள்.

செல்வா said...

//மொக்கைகளை எழுத அதிக அறிவு தேவை. ஏனெனில் ஒன்றுமில்லாத விசயத்தை டெவலப் செய்து எழுதுவது எளிதல்ல. அதையும் ரசிக்கும்படி சொல்வது கடினம். எனவே தங்களைப் போன்று மொக்கைகள் எழுதுபவர்கள் நிச்சயம் யோசிக்க தெரிந்த அறிவாளிகள். ///

ஆஹா , என்னை கூட பாராட்டுறாங்க .. உங்களுக்குப் புரியுது , ஆனா மத்தவங்களுக்குப் புரிய மாட்டேங்குதே..

எஸ்.கே said...

உண்மையில் மொக்கை என்று ஒன்றுமே இல்லை. அதிகம் கவனிக்கப்படாத விசயத்தை (அ) தெரிந்த விசயத்தை எழுதுவதையே இப்படி சொல்கிறார்கள்.

விஜய் said...

அய்யயோ ,
//அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்///.????????

இன்னும் வரபோகுதா?...ஹ அஹ அஹ ஆஹா

தம்பி, முடியலப்பா, உட்கார்ந்து யோசிபியா...நல்ல முயற்சி

ஜீவன்பென்னி said...

தெரியாத்தனமா ஒரு கமெத்ந் போட்டுட்டேன்பா.... அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா உன்னோட பொறுப்ப நினைச்சா மெய் சிலிர்க்குது. அடிச்சு ஆடு....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஸ்சு.. ஸ்சு.. யாரவது இந்த ஈய தொரத்துங்கப்பா... தாங்க முடியல..

அருண் பிரசாத் said...

தம்பி மழை கதை சூப்பர்! உன் முதுகுல வாத்தியார் இடி கொடுத்திருக்க கூடாது, மின்னல் வெட்டி இருக்கனும். நாங்க தப்பிச்சு இருப்போம்....

Unknown said...

இத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சுட்டு பக்கத்துலையே உக்காந்துக்க..!
உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் பார்த்து, படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க..!!

அ.சந்தர் சிங். said...

ayya sami ennala mudiale.

venaam,venaam appuram naan

azhuthuruven.

அ.சந்தர் சிங். said...

naan oora vitte poren.

varatta?...................

அ.சந்தர் சிங். said...

naan oora vitte poren.

varatta?...................

ஜெயந்த் கிருஷ்ணா said...

cs said...

naan oora vitte poren.

varatta?...................

//

இவனையும் கூட்டிட்டு போயிருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மொக்கை அப்படின்னு தனியா ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்.? அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்//

நல்லாவே யோசிக்கிறீங்க..உங்களுக்கு சீக்கிரமே ரேடியோ
ஜாக்கிவேலை கிடைச்சிடும்ன்னு நினைக்கிறேன்..:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட கூட்டு சேர வைக்கிற?

என்னது நானு யாரா? said...

தம்பி மொக்க ராசா! நீயெல்லாம் இருக்கிறதால தான் நாட்டில எவ்வளவு குழப்பம், குளறுபடின்னு இருந்தா கூட சிரிச்சி சமாளிக்க முடியுது

கொசு காமெடி சூப்பர்!

வாழ்க உன் மொக்கை சேவை

செல்வாவின் மொக்கை சேவை
எல்லோருக்கும் தேவை!


தம்பி கொடுத்த காசுக்கு கரெக்டா கூவிட்டேனா?

sakthi said...

சார் சாமி வானத்துக்கு மேல ட்ரம்ல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க.நாம சாமி கும்பிடும் போது அவுங்க ட்ரம்ல இருக்குற தண்ணிய ஊத்துவாங்க. அதுதான் மழை. அப்புறம் தண்ணி இருக்குற ட்ரம் தீர்ந்ததும் அதைய உருட்டி விட்டுருவாங்க. அப்படி உருட்டி விடுற ட்ரம் மோதுறதுதான் இடி ,அது இரும்பு ட்ரம்மா இருந்தா அது மோதும் போது தீப்பொறி வரும்ல அதுதான் மின்னல்

என்ன ஒரு கற்பனை வளம்

வாழ்க

அனு said...

//நான் அப்ப இரண்டாவது படிச்சிட்டிருந்தேன்//

அப்பவேவா??

உங்க வீட்டுல இருக்கிறவங்களை நினைச்சா எனக்கு பாவமா தான் இருக்கு!!

Chitra said...

:-) என்ன மொக்கை இது!!!

Riyas said...

அப்பபபா.. இது அப்பவேயிருந்து இருக்கா...

வாழ்க வாழ்க வாழ்க மொக்கை மகாராசா..

அதுசரி கட்டிலிலிருந்து விழுந்து காலுடைந்தா கட்டில் வீட்டுக்கூரையிலயா இருக்கு..ஹா ஹா

அன்பரசன் said...

ஒரே மொக்கையா இருக்குபா சீ சக்கையா இருக்குபா..

வெங்கட் said...

யப்பா.. நீ பெரிய ஆளுதான்..
ஒரு வரி கமெண்ட்டுக்கு
ஒரு கதை சொல்லிட்டியே..!!

senthil velayuthan said...

mokai mokai nu solliyae ennrou mokka pathiva pottuiyae da mokka

Mohamed Faaique said...

///ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.///

சரியாக கில்லாமல் விட்டு விட்டார்.. அவருக்கு எம் கண்டனங்கள் ..

Ramesh said...

நேத்து ஒருத்தர் தெரு லைட் கம்பத்துல முட்டி மண்டைய ஒடைச்சுக்கிட்டு இருந்தார்....இது என்னடா இது அவர் மண்டைய அவரே ஒடைச்சுக்கறாரே..யாருன்னு பக்கத்துல போய் பாக்கறேன்....

இனிமே இப்படி யாருக்கிட்டயாவது சொல்லுவியா நீ சொல்லுவியா நீன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே முட்டிக்கிட்டு இருந்தாரு.....

இது என்னடா இது கரெண்ட் கம்பம் யாருக்கிட்ட போய் என்னத்த சொல்லிருக்க போவுது....இவரு ஏன் இவ்லோ ஆத்தரப்பட்டு...இவரு மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லைன்னு...அத முட்டிக்கிட்டு இருக்காரேன்னு நினைச்சேன்....

போய் விலக்கிப் பாத்தா..அது நம்ம ஜீவன்பென்னி.....

அச்சச்சோ.... என்னது இது.....இப்படி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டேன்...அந்த மொக்கை என்னையும் புடிச்சிக்கிச்சோ....ஓ...ஓ...ஓ...ஓ...ஓ

மதன் said...

நமக்கு தேவையானதுயெல்லாம் கனவுல வந்த பிகர் நல்லா இருந்துதா?????????

Unknown said...

//போய் விலக்கிப் பாத்தா..அது நம்ம ஜீவன்பென்னி.....//

ungalukku naan than kidaichenaa... koiyala innaikkunnu parthu aani irukku....

கருடன் said...

//ஒரு நாள் கனவுல ரொம்ப பயங்கரமான உருவம் ஒண்ணு வந்தது. //

தூங்கரதுக்கு முன்னாடி உன் போட்டோ பக்காத சொன்னா கேக்கனும்... இப்பொ பாரு கனவுல வருது...

கருடன் said...

//அடுத்த நாள் காலைல யாரோ எழுந்தரிசுப் பாக்குறப்போ என்னோட கால்ல பலமா கட்டி வச்சிருந்தாங்க//

யாரோ எழுந்து பாக்குறப்போ உன் கால்ல என் கட்டு போட்டாங்க? தூக்கத்துல நடக்கர வியாதியா? எங்கயும் போகாம கட்டி வச்சிட்டாங்க....

கருடன் said...

//அப்ப என்னோட கை மேல ஒரு கொசு வந்து உட்கார்ந்தது. //

கொசு வந்து நின்னுச்சா இல்ல கால் எல்லாம் மடக்கி உக்காந்துச்சா? கரெக்டா சொல்லு...

கருடன் said...
This comment has been removed by the author.
செல்வா said...

அது வந்து உட்கார்ந்துச்சு .. நாலு கால் இருந்துச்சு .. பறந்து வந்தது நிக்கவே இல்ல .. மேலேயே கால மடக்க்கிட்டுத்தான் வந்துச்சு ..

கருடன் said...

//" நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க.//

அதான் நீ கீழே விழுந்தது அவங்க பிடிச்சிடாங்களே அப்புறம் எப்படி கால் ஒடிஞ்சிது?

கருடன் said...

நீ உன் கை மேல நாற்காலி போட்டு வச்சி இருந்தியா? அது என் அங்க உக்காந்துச்சி??

சௌந்தர் said...

மொக்ககு பதில் இப்போ உன்னை terror புடிக்க போகுது

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னப்பா சத்தம் அங்க...

செல்வா said...

/// அதான் நீ கீழே விழுந்தது அவங்க பிடிச்சிடாங்களே அப்புறம் எப்படி கால் ஒடிஞ்சிது? //
அவுங்க பிடிச்சது கொசுவ .. என்னை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ..

கருடன் said...

50

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

மொக்ககு பதில் இப்போ உன்னை terror புடிக்க போகுது

//
மொக்க இப்போ டெரர புடிசிச்சா.... ஐயையோ இனி ஒண்ணும் பண்ண முடியாதே...

சௌந்தர் said...

மொகைக்கு பதில் இப்போ உன்னை terror புடிக்க போகுது

செல்வா said...

/// நீ உன் கை மேல நாற்காலி போட்டு வச்சி இருந்தியா? அது என் அங்க உக்காந்துச்சி?? ///
இல்ல அண்ணா ..இப்ப இருக்கிற கொசுக்கள் தான் நாற்காலி கேக்கும் . அப்ப இருந்தது எல்லாம் சும்மாவே உட்கார்ந்திடும் ..

கருடன் said...

//அவுங்க பிடிச்சது கொசுவ .. என்னை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் .//

டாய் பொய் சொல்லாத... இந்தா சீன்ல கொசு வரல கொசு இரண்டாவது ரீல்லதான் எண்ட்ரி... கரெக்டா பதில் சொல்லு...

சௌந்தர் said...

யோவ் ஏதோ டேர்றோர் திருந்தி விட்டதா சொன்னாங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

50

//

யோவ் என்னய்யா இது சின்ன புள்ள தனமா.. நம்பர் போட்டு விளையாடிகிட்டு இருக்க...

செல்வா said...

//மொகைக்கு பதில் இப்போ உன்னை terror புடிக்க போகுது//
ரெண்டுபேரையுமே மொக்கை பிடிச்சிருக்கு ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

டாய் பொய் சொல்லாத... இந்தா சீன்ல கொசு வரல கொசு இரண்டாவது ரீல்லதான் எண்ட்ரி... கரெக்டா பதில் சொல்லு...

//

இப்ப இதில யாருயா கொசு...

கருடன் said...

//அவுங்க பிடிச்சது கொசுவ .. என்னை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் .//


அப்போ கொசுதான மொக்கா போடனும்... நீ என் மொக்கா போடற??

செல்வா said...

///டாய் பொய் சொல்லாத... இந்தா சீன்ல கொசு வரல கொசு இரண்டாவது ரீல்லதான் எண்ட்ரி... கரெக்டா பதில் சொல்லு...///
ஓ , தப்பாயிடுதோ...?

கருடன் said...

@வெறும்பய said...

வா மச்சி!! நாலுபேர இந்த மொக்ககிட்ட இருந்து காப்பாத்த நாம மொக்க போட்டாலூம் தப்பு இல்ல

(நாயகன் மிஜிக்...)

செல்வா said...

///அப்போ கொசுதான மொக்கா போடனும்... நீ என் மொக்கா போடற??///
இல்லை , கொசுவை பிடிச்சது எங்க அம்மா ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய said...

வா மச்சி!! நாலுபேர இந்த மொக்ககிட்ட இருந்து காப்பாத்த நாம மொக்க போட்டாலூம் தப்பு இல்ல

//

வந்திட்டேன் மாமா.. அன்னைக்கு வெளியூர்காரன் தொரத்தினதினால மனசொடஞ்சு காசிக்கு போய் இப்ப தான் திரும்பி வரேன்..

சௌந்தர் said...

வா மச்சி!! நாலுபேர இந்த மொக்ககிட்ட இருந்து காப்பாத்த நாம மொக்க போட்டாலூம் தப்பு இல்ல///

@@@@வெறும்பய நீங்க நல்லவரா கெட்டவரா

கருடன் said...

//வந்திட்டேன் மாமா.. அன்னைக்கு வெளியூர்காரன் தொரத்தினதினால மனசொடஞ்சு காசிக்கு போய் இப்ப தான் திரும்பி வரேன்.//

நீ பீலிங் ஆகத மச்சி... நான் பயல கூப்டு நல்லா மிரட்டி விட்டேன்... இப்போ நீ தைரியாமா போய் கும்மு.... நான் நேத்தே அங்க கும்மிடேன்... உன்னா கூட பாராட்டி பேசி இருந்தேன்... ஹி ஹி ஹி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

@@@@வெறும்பய நீங்க நல்லவரா கெட்டவரா

//

தெரியலையே ராசா...(நாயகன் மிஜிக்...)

கருடன் said...

@சௌந்தர்

நான் ஒரு கேடு கெட்டவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

நீ பீலிங் ஆகத மச்சி... நான் பயல கூப்டு நல்லா மிரட்டி விட்டேன்... இப்போ நீ தைரியாமா போய் கும்மு.... நான் நேத்தே அங்க கும்மிடேன்... உன்னா கூட பாராட்டி பேசி இருந்தேன்... ஹி ஹி ஹி..

//

நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்... இப்ப சொல்லு யாரப் போட்டு தள்ளனும்...

கருடன் said...

செல்வா
//இல்லை , கொசுவை பிடிச்சது எங்க அம்மா .//

அப்போ உன்ன யாரு பிடிச்சா?

செல்வா said...

///அப்போ உன்ன யாரு பிடிச்சா?///
என்னை யாரும் பிடிக்காததால தான் கீழே விழுந்திட்டேன் ..

கருடன் said...

http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post.html

புது ஆடு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

அப்போ உன்ன யாரு பிடிச்சா?

//

அது தான் சொன்னனே.. வாத்தியாரு பிடிச்சு செம மாத்து மத்தினாருன்னு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post.html

புது ஆடு...

//

வந்திட்டேன்...

கருடன் said...

//என்னை யாரும் பிடிக்காததால தான் கீழே விழுந்திட்டேன் ..//

அப்போ மொக்க பிடிச்சிது சொன்ன??

செல்வா said...

///அப்போ மொக்க பிடிச்சிது சொன்ன?? ///
அப்போ யாரும் பிடிக்கல ...?
அதுக்கு அப்புறம் தான் மொக்க பிடிச்சது ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விருது குடுக்கல... வந்து என்னான்னு கேளுங்கையா...

கருடன் said...

//அதுக்கு அப்புறம் தான் மொக்க பிடிச்சது ..//

அதுக்கு அப்புறம்தான் நீ கீழ விழுந்துடியே... விழுந்த அப்புறம் என் பிடிக்கனும்??

செல்வா said...

///விருது குடுக்கல... வந்து என்னான்னு கேளுங்கையா.
///
உங்களுக்கு விருது இல்லாமயா...? கொடுக்கறேன்னு சொன்னாரு .. ஆனா அதுக்குள்ள கரண்ட் போய்டுச்சு .. அதான் ..

ஜில்தண்ணி said...

என்னாது இங்க பெரிய மேட்டர் ஓடிருக்கு :)

அடிக்கடி மீஜிக் வேற போடுறாயிங்க ? என்ன ஆச்சு ?

Anonymous said...

கால்கட்டுப்போட்டுட்டாங்களா

Anonymous said...

ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.//-;))