Wednesday, December 29, 2010

நாட்டமையும் தமிழ்படம் நாட்டாமையும் பகுதி - 4

முன்குறிப்பு : நாட்டமையும் தமிழ்படம் நாட்டமையும் பதிவோட முந்தய பதிவுகள படிக்கணும்னு நினைக்கிறவங்க இங்க போய் படிச்சுகோங்க.!

இடம் : எமலோகம். நாட்டாமையும் தமிழ்படம் நாட்டாமையும் எமனின் முன்னால் நிற்கின்றனர்.!

எமன் : என்ன சித்திரகுப்தா இன்று ஒரு ஆள்தானே நமது கணக்கு , இரண்டு பேர் இருக்கின்றனர்.?

சித்திர குப்தன் :  யார் நாட்டாமைனு கேட்டா இரண்டுபேருமே நாந்தான்னு சொன்னாங்க அதான் குழப்பத்துல ரண்டுபேரையும் பிடிச்சிட்டு வந்திட்டேன்.

எமன் : சரி விடு , நான் விசாரிக்கிறேன் ..! உங்க ரண்டுபேர்ல யாருயா உண்மையான நாட்டாமை..?

நாட்டாமை பட நாட்டாமை : இதுல என்றா சந்தேகம் உனக்கு , நான் தாண்டா நாட்டமை , இவன் சும்மா டூப்பு.. தென்றா பசுபதி சொல்றா இவன் கிட்ட.!

சி.குப்தன் : யோவ் என்னப் பார்த்தா பசுபதி மாதிரியா தெரியுது , நான் பசுபதி இல்ல . அவன் இன்னும் பூமிலதான் இருக்கான்.!

தமிழ்ப்படம் நாட்டாமை : நீ மொதல்ல நிறுத்துரா , நான் தாண்டா இப்ப நாட்டமை  ,இவன்தான் செத்துப்போய்ட்டானே.! 


நா.நாட்டாமை : தென்றா பேசற நீயி , பசுபதி இல்லீனா நாங்க எப்பர்றா நாலு எடத்துக்குப் போயி தீர்ப்பு சொல்லுறது..? போ போயி பசுபதிய கூட்டிட்டு வா. 


த.நாட்டாமை : அப்பிடியே , அந்த சொம்ப எடுத்துட்டு வாடா.!

நா.நாட்டாமை : ( த.நாட்டமையைப் பார்த்து ) டேய் , டேய் அங்க ஒரு ஆல மரம் இருக்குடா , அத நான்தான் மொதல்ல பார்த்தேன் , அதனால நான் தான் மொதல்ல தீர்ப்பு சொல்லுவேன்.!

த.நாட்டாமை : தென்றா பேசற , மொதல்ல ஆளுக்குப் பாதியா பிரிக்கோனும் , அப்புறம் தீர்ப்பு சொல்லுவோம்.! (இருவரும் ஆல மரத்தடிக்கு ஓடுகின்றனர்.!)

சி.குப்தன் : யோவ் , நில்லுங்கய்யா , இங்க வந்து தீர்ப்பெல்லாம் சொல்லவேண்டாம் , இது எமலோகம்.! இங்க எமன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லுவார்.

த.நாட்டாமை : உனக்கு வேணா எமன் பெருசா இருக்கலாம் , ஆனா தீர்ப்பு நம்பட கைல.!

எமன் : யோவ் , இரண்டுபேருமே செத்துப் போய்த்தான் இங்க வந்திருக்கீங்க..!

நா.நாட்டாமை : தென்றா லூசாட்டமா பேசுற , நான் செத்துப்போயட்டா ஆர்ரா தீர்ப்பு சொல்லுறது.? 

த.நாட்டாமை : நான் சொல்லுவண்டா.!

எமன் : யோவ் , லூசுகலாயா நீங்க , இரண்டுபேருமே செத்துத்தான் இங்க வந்திருக்கீங்க.!

நா.நாட்டாமை : தென்றா மறுக்காலும் மறுக்காலும் அப்படியே சொல்லிட்டிருக்கற , இவன் பதினெட்டு வருஷம் தள்ளி வெக்கரண்டா , இவனோட ஆரும் பேச கூடாது , தண்ணி பொழங்ககூடாது. இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு.!

த.நாட்டாமை : செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக்  கொன்னுபோடுங்கடா..! தெங்கடா பசுபதி , வந்ததும் அடிசொட்ட சொல்றா.!

சி.குத்தன் : யோவ் , எமனவே கொல்லச்சொன்ன ஆளு நீதான்யா ..? உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!

எமன் : ஐயா சாமி , இவனுகள பிடிச்ச இடத்துலேயே கொண்டு போய் விட்டுரு என்று கூறியவாறே மயங்கி விழுகிறார்.!

பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!


45 comments:

karthikkumar said...

vadai

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

TERROR-PANDIYAN(VAS) said...

// செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக் கொன்னுபோடுங்கடா..//


:)))

karthikkumar said...

பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!///

ஒரு பொண்ணு நல்லதே நெனச்சா மண்ணுவீடும் மாளிகையாயிரும், அவளே மாத்தி நெனச்சா அந்த மாளிகையும் மண்ணாயிரும்..

நீதி : இப்ப நீ என்ன நெனைக்கிற?......

இம்சைஅரசன் பாபு.. said...

//சின்னப் பதிவா போச்சுல //

ஆமா.....ஆமா ரொம்ப சின்ன பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாட்டாமைன்னா விஜயகுமார் தான பன்னி சார் இவனுக்கு தோசை பார்சல்

Ramesh said...

:-)

Praveenkumar said...

ஹா....ஹா...ஹா.. மக்கா..!! கலக்கலா.. இருக்கு..!!! ஹி..ஹி..ஹி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!

Praveenkumar said...

//சி.குத்தன் : யோவ் , எமனவே கொல்லச்சொன்ன ஆளு நீதான்யா ..? உன்னைய மொதல்ல எண்ணச்சட்டில போட்டு வறுக்கணும்..!//

சித்தர(வதை) ”குப்ப”தரே..!! அப்படியெ.. இந்த செல்வா பயலையும் கொஞ்சம் வறுத்தெடுங்க..! மொக்கைன்ற பேர்ல பல பேரை காலி பண்ணிக்கிட்டு இருக்கான்..!!
ஹி..ஹி..ஹி..!!

Unknown said...

நாட்டாமை
தீர்ப்பை மாத்தி சொல்லு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தென்றா இது, நான் ஒரு நாட்டாமை இங்க குத்துக் கல்லாட்டம் குத்த வெச்சி உக்கார்ந்திருக்கேன், அங்க யார்ரா அந்த பயலுக.....? பசுபதி ஒரு எட்டுப் போயி எனனென்னு பாத்துட்டு வந்துர்ரா..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாட்டாமைன்னா விஜயகுமார் தான பன்னி சார் இவனுக்கு தோசை பார்சல்/////

சுட்ட தோசையா, சுடாத தோசையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எமன் : சரி விடு , நான் விசாரிக்கிறேன் ..! உங்க ரண்டுபேர்ல யாருயா உண்மையான நாட்டாமை..?//////


நம்பட நாட்டாம நான்தாண்டா.... தென்றா பசுபதி, எடுத்துச் சொல்லி புரிய வெச்சிக் கூட்டிட்டு வாடா ....

செல்வா said...

//நம்பட நாட்டாம நான்தாண்டா.... தென்றா பசுபதி, எடுத்துச் சொல்லி புரிய வெச்சிக் கூட்டிட்டு வாடா ....////

நீங்க தான் அந்த நாட்டாமையா ..?

r.v.saravanan said...

நாட்டாமை
தீர்ப்பை மாத்தி சொல்லு

சௌந்தர் said...

இவங்க செத்தும் அங்க போய் சண்டை போடுராங்களா...சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!//////

என்றா.. இது சிறுசா போனா என்னடா, நான் திர்ப்பச் சொல்லி மாத்திடுறேண்டா.... நாளைக்கு பதினெட்டுப் பட்டியவும் கூட்டிட்டு வந்துர்ரா......!

செல்வா said...

//என்றா.. இது சிறுசா போனா என்னடா, நான் திர்ப்பச் சொல்லி மாத்திடுறேண்டா.... நாளைக்கு பதினெட்டுப் பட்டியவும் கூட்டிட்டு வந்துர்ரா......! /

நீங்க வேற தீர்ப்பு சொல்ல போறீங்களா .?

அருண் பிரசாத் said...

என்றா கடைசி வரைக்கு அந்த சொம்பு என்ன ஆச்சுனு சொல்லவே இல்ல.... மேலோகத்துக்கு வந்துச்சா?

அருண் பிரசாத் said...

சிரிச்சி மாளல செல்வா... சபாஷ்

எஸ்.கே said...

வாய் விட்டு சிரிச்சேன் செல்வா!

logu.. said...

ha..ha... semma kalakkal..

எஸ்.கே said...

வாய் விட்டு சிரிக்கிற மாதிரி எழுதறது கஷ்டம்! you have done a very god job!

எஸ்.கே said...

மிக்க மகிழ்ச்சி!

எஸ்.கே said...

மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

சின்ன பதிவாக இருந்தாலும் சூப்பர்! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!

Anonymous said...

//இவன கள்ளிப்பால் ஊத்திக் கொன்னுபோடுங்கடா..//


அத தாங்க நாங்களும் சொல்றோம்.

Sathish said...

பேசாம நாட்டமை part-2 நீ டைரக்ட் பண்ணு தம்பி ... K.S.ரவிக்குமார் குப்புற கவுந்து அழ போறார்

arasan said...

கலக்கல்

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
// செல்லாது செல்லாது ,நீ யார்ரா தீர்ப்பு சொல்லுறதுக்கு , நான் தான்டா இங்க நாட்டாமை , நம்பட தீர்ப்புத்தாண்டா செல்லும். இவன கள்ளிப்பால் ஊத்திக் கொன்னுபோடுங்கடா..//


:))) (((:

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!//////

என்றா.. இது சிறுசா போனா என்னடா, நான் திர்ப்பச் சொல்லி மாத்திடுறேண்டா.... நாளைக்கு பதினெட்டுப் பட்டியவும் கூட்டிட்டு வந்துர்ரா......//////

டீச்சர் வருவாங்களா?!!#டவுட்டு

வைகை said...

எஸ்.கே said...
வாய் விட்டு சிரிச்சேன் செல்வா/////


திரும்ப எடுத்திகளா இல்லையா?!!#டவுட்டு

எஸ்.கே said...

//எஸ்.கே said...
வாய் விட்டு சிரிச்சேன் செல்வா/////


திரும்ப எடுத்திகளா இல்லையா?!!#டவுட்டு //

எடுத்தேன் அடுத்த பதிவுக்காக!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பின்குறிப்பு : ரொம்ப சின்னப் பதிவா போச்சுல .!//////

என்றா.. இது சிறுசா போனா என்னடா, நான் திர்ப்பச் சொல்லி மாத்திடுறேண்டா.... நாளைக்கு பதினெட்டுப் பட்டியவும் கூட்டிட்டு வந்துர்ரா......//////

டீச்சர் வருவாங்களா?!!#டவுட்டு////

தம்பி வேற நல்ல பஞ்சாயத்து இருந்தா போயி டீச்சரப் பத்தி பிராது கொடுங்க,இதெல்லாம் ஒரு பஞ்சாயத்துன்னு இங்க வந்து வேடிக்கை பாத்துக்கிட்டு ..... போங்க போங்க...

அஞ்சா சிங்கம் said...

சொம்ம்பு இல்லாம என்ன பாஸ் நாட்டமை ..............

பெசொவி said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//என்றா.. இது சிறுசா போனா என்னடா, நான் திர்ப்பச் சொல்லி மாத்திடுறேண்டா.... நாளைக்கு பதினெட்டுப் பட்டியவும் கூட்டிட்டு வந்துர்ரா......!
//

தென்றா சொல்லிப் போட்ட நீயி? பதினெட்டு பட்டியையும் கூட்டினா குப்பைதான்றா சேரும், அத்தினி குப்பைய வச்சிக்கிட்டு என்றா பண்ணுவ நீயி?

ஆர்வா said...

ரேடியோ ஜாக்கி ஆகிறதுக்கு உண்டான எல்லா தகுதியும் உங்களுக்கு வந்திடுச்சி பாஸு.. மொக்கை மிரட்டுது....

மங்குனி அமைச்சர் said...

எமன் சார் , எமன் சார் .......... இங்க கோமாளின்னு ஒரு கொலைபாதகன் இருக்கான் ........அவன இங்கயே லைட்டா ஏதாவது தண்டினை குடுக்க வழி இருக்கா எமன் சார்

sathishsangkavi.blogspot.com said...

Super...

Unknown said...

நல்லா இருக்குங்க,, செம காமெடி ...

Unknown said...

அடுத்த பாகத்துல தெலுங்கு பெத்தராயுடு வருவாரா?

Unknown said...

மலோகம் வரைக்கும் போன நாட்டமைக்கு அவங்க வீட்டு பிரச்சனைய தீர்க்க முடியாம போச்சே...

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha ,send it to rani weekly 1096 periyar e v r high road, chennai

சி.பி.செந்தில்குமார் said...

comedy kalakkal