Wednesday, July 14, 2010

கவிதையும் கழிதையும்

                                            
                                                       கவிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..
அன்றொரு நாள் அழகிய நந்தவனத்தில் நுழைந்து
அன்றலர்ந்த மலர்களைத் தழுவி வரும் பூந்தென்றல் காற்றாய்
என் மனதை பறித்துச் சென்றாய்..! மனமெங்கும் பூவாசம்..!

நீயும் நானும் சேர வேண்டி
இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
ஒவ்வொரு முறை நான் கடவுளை வேண்டும்போதெல்லாம்
அவரும் உன்மேல் காதல் கொண்டு எனக்கு போட்டியாய் வருகிறார் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் காதல் வயப்படாத ஒரு கடவுளை..!

நீதான் இந்திரன் சபையில் இருக்கும் மேனகையோ
இல்லை ஆதாம் காலத்து ஏவாளோ..?
குழம்பித்தான் போகிறேனடி நானும்..
என்னை குழப்பிய உன்னிடம் நான் எப்போதடி என் காதலை சொல்வது..
பௌர்ணமி நிலவை போன்ற உன் ஒளியில் மயங்கி விடுகிறேன்..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
வார்த்தைகளும் உன்னை காதலிக்கிறதோ...

                                                        கழிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..?
அன்றொரு நாள் நான் நிம்மதியாய் டீ கடையில் நின்றுகொண்டிருந்த போது
கூவம் ஆற்றில் குளித்து வந்தது போல் என் மனதை நாரடித்தாய்..!

உன்னை மீண்டும் நான் பார்க்க கூடாதென வேண்டி

இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
அவர்களுக்கு என்ன பயமோ உன்னை என் தலையில் காட்ட பார்க்கிறார்கள் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும் ஒரு கடவுளை.. அந்த தேடல் முடிவதற்குள் என்னை நீ முடித்து விடுவாய் போலும் ..

நீ எமனின் வாகனமோ ..
இல்லை அந்த கால ராட்சசிகளின் தலைவியோ ..
நடுங்கித்தான் போகிறேனடி நானும் ..
உன் முகமென்னும் பேயுருவத்தில் பயந்து மயங்கிவிட்டேனடி..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
அவைகளும் உன்னை பார்த்து பயந்து விடுகின்றன ..

மொக்கை 1 : பாம்புக்கு காது இருக்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கணுமா..?
ஒரு பாம்ப பிடிச்சுக்குங்க , அப்புறம் உங்களோட முகத்துகிட்ட கொண்டுவந்து " எனக்கு ஒரு முத்தம் கொடு " அப்படின்னு சொல்லுங்க .. அதுக்கு காது இருந்த முத்தம் கொடுக்கும் .. அப்ப கண்டுபிடிச்சிடலாம் ..!!

மொக்கை 2 : இந்த மசுர கட்டி மலைய இழுப்போம் , வந்தா மலை போனா மயிர் அப்படிங்கறாங்களே அப்படி போனா அந்த மயிர் எங்க போகும் ...?

மொக்கை 3 : நமது இந்த முதல் கவிதை இந்த ஆண்டிற்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நமது கழிதை இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான  நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

41 comments:

dheva said...

துபாய்ல வெயிலு ரொம்ப ஜாஸ்திப்பா... அந்தப்பக்கம் செளந்தர் இந்தப் பக்கம் நீ... ஏண்டா இப்படி மொக்கையை போட்டு கொல்றீங்க.... நான் என்னடா பாவம் செஞ்சேன்....?

தம்பி...பாம்பு.... ஜோக் ... நிஜமாவெ...கில்மா மொக்கை...ஹா....ஹா...ஹா...!

சௌந்தர் said...

பாம்புக்கு காது இருக்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கணுமா..?
ஒரு பாம்ப பிடிச்சுக்குங்க , அப்புறம் உங்களோட முகத்துகிட்ட கொண்டுவந்து " எனக்கு ஒரு முத்தம் கொடு " அப்படின்னு சொல்லுங்க .. அதுக்கு காது இருந்த முத்தம் கொடுக்கும் .. அப்ப கண்டுபிடிச்சிடலாம் ..///


நீங்க முதல் செய்து காட்டுங்கள் நான் செய்கிறேன்

dheva said...

செளந்தர்.....@ இவன் அதுக்கு மேல..மொக்கைக்கு கோனார் நோட்ஸ்....ஹையோ...ஹையோ...!

விஜய் said...

தம்பி

நீ கலக்குற, நிஜமா நிறையா யோசிக்கிற, நிறையா சிரிக்க வைக்கிற, நீ சீக்கிரம் ரேடியோ அலுவலகத்துல சேர்ந்துடுப்பா
உன் சேவை இந்த தமிழ் நாட்டுக்கு தேவைப்பா
..

நல்லா யோசிக்கிற...சீக்கிரம் முயற்சி செய்து ஒரு சீட்ட பிடி ...
எனது வாழ்த்துக்கள் தம்பி

விஜய் said...

தேவா அண்ணா கமெண்ட் படிக்றப்ப தான் சிரிப்பு நிக்காம வருது ...நன்றி தேவா அண்ணா

சௌந்தர் said...

dheva@@@ நீங்கள் சென்று வெளியே வெயிலில் நின்றாலும் உங்களை விடுவதாக இல்லை இப்படி மொக்கை தொடரும்.......

விஜய் said...

//துபாய்ல வெயிலு ரொம்ப ஜாஸ்திப்பா... அந்தப்பக்கம் செளந்தர் இந்தப் பக்கம் நீ... ஏண்டா இப்படி மொக்கையை போட்டு கொல்றீங்க.... நான் என்னடா பாவம் செஞ்சேன்....?//

ஹ ஹ அஹ அஹ ஆஹா ஹ எ ...முடியல தேவா அண்ணா ....நீங்க நல்லா ஜோக் பண்றீங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொக்கை 3 : நமது இந்த முதல் கவிதை இந்த ஆண்டிற்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நமது கழிதை இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

///

யோவ் என்னய்யா இது...
இதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்...
எல்லாம் ப.மு.க இளைஞர் அணி தலைவர் பதிவில இருக்கிற ஆணவம்...

சௌந்தர் said...

சௌந்தர் said...
இந்த மொக்கை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளியில் கட்டய படமாக வைப்போம்

இப்படிக்கு ப.மு.க.

சௌந்தர் said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...
இந்த மொக்கை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளியில் கட்டய படமாக வைப்போம்///


இதை நான் ரூட்மொழிகிறேன்

அ.சந்தர் சிங். said...

ayya sami ennaala mudiyale.

ethukku intha kolaiveri?

அருண் பிரசாத் said...

உங்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசைவிட, உங்கள் மொக்கைக்கான் ‘NO'பல் பரிசு தான் உங்களுக்கு சரியா இருக்கும்

Unknown said...

தம்பி செல்வகுமார், கவிதை, கழிதை இரண்டுமே சூப்பர்..
எப்படி ஐயா இந்தமாதிரி யோசிக்கிறீங்க...

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
தம்பி செல்வகுமார், கவிதை, கழிதை இரண்டுமே சூப்பர்..
எப்படி ஐயா இந்தமாதிரி யோசிக்கிறீங்க//

நாங்க எல்லாம் ஒரே குருப்.......

dheva said...

ப.மு.க. பிரமுகர்களை வருக வருக என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...!

மொக்கை அரசர்கள்னு ஒரு தனி குருப் நம்ம கட்சிக்குள்ள இருக்கு... நம்ம கட்சியோட + அதான்....!

எல் கே said...

தனி அணியா. மொத்த கட்சியே அதானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ சீக்கிரம் ரேடியோ அலுவலகத்துல சேர்ந்துடுப்பா. mudiyala

dheva said...

LK @ காலைல இருந்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது.... நீங்க வேற....வந்து இன்னும் சிரிக்க வைக்கிறீங்க...

காமெடி ....பாஸ்!

dheva said...

என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்...

" அட சங்கத்து ஆளே தான்யா அடிக்கிறான்... மொக்கையா கொட்டுறான்க..." இந்த மொக்கைக்களுக்கு கமெண்ட் போடுற கை தம்பி விஜய் பதிவுக்கு இன்னும் போடல.. கேட்டா படிச்சு ஆற அமர போடணுமாம்...

மொக்கைன்னா நம்மள சொல்லுப் பேச்சு கேக்காம டைப் பண்ணுது கை...பார்றா....!

dheva said...

கோமாளி.......

ஆணி இருக்கு ஆணி இருக்குன்னு சொல்றான்....ஆனா எல்லாருக்கும் ஆணி அடிக்கிறான் எப்படி? ம்ம்ம்ம் ஓண்ணும் புரியலையே....!

dheva said...

இப்போ கூட பாருங்க...உலக மொக்கையைப் போட்டுடு.... கண்டுக்காத மாதிரி போய்ட்டான்...

கோமாளி.....கோமாளியிய்ய்ய்ய்ய்...கோமா.....

தூங்கிட்டானோ....!

dheva said...

அப்பு வாங்கப்பு..... 10 வோட்டு விழுந்துருக்கு...!

அகல்விளக்கு said...

வாவ்...

கவிதை... கழித... இரண்டையுமே ரசிச்சேன் பாஸ்...

அந்த முதல் மொக்கை....

ஹாஹாஹாஹா..... சூப்பர்...

dheva said...
This comment has been removed by the author.
dheva said...

//மொக்கை 2 : இந்த மசுர கட்டி மலைய இழுப்போம் , வந்தா மலை போனா மயிர் அப்படிங்கறாங்களே அப்படி போனா அந்த மயிர் எங்க போகும் ...?///

இதுக்கு ஆஸ்கார் அவார் தான்டா கொடுக்கணும்...!

dheva said...

பதிவு எழுதுறதுண்ணா என்னனே மறந்து போச்சுடா...தம்பி..!

dheva said...

ஆண்டவா...என்னோட அடுத்த பதிவு மொக்கையா இல்லாம நல்லவரணும் காப்பாத்து...! அந்த அளவுக்கு இருக்கு கோமாளி...செளந்தர் இவிங்களோட எஃபக்ட்ட்டு!

Praveenkumar said...

ஹ..ஹா...ஹா.. அசத்தலான மொக்கைகள் தொடரட்டும்..!

Jeyamaran said...

*/இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும் ஒரு கடவுளை.. அந்த தேடல் முடிவதற்குள் என்னை நீ முடித்து விடுவாய் போலும் ../*
ஹலோ பாஸ் இந்த மாதிரியான வரிகளை நான் யோசிகலன்னு உங்க மேல பொறாமையாவும் இருக்கு அப்பறம் நண்பர்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு மிஸ்டர் கோமாளி ஹஹா செல்வா............

Riyas said...

//நீ எமனின் வாகனமோ ..
இல்லை அந்த கால ராட்சசிகளின் தலைவியோ ..
நடுங்கித்தான் போகிறேனடி நானும் ..
உன் முகமென்னும் பேயுருவத்தில் பயந்து மயங்கிவிட்டேனடி..!//

ஆஹா அசத்துரிங்க..

smart said...

சில பதிவுலக சண்டியருக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் ஆப்பு வைக்கணும் மேலதிக தகவலுக்கு இங்க வாங்கண்ணே

ஜீவன்பென்னி said...

//இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும் ஒரு கடவுளை.. அந்த தேடல் முடிவதற்குள் என்னை நீ முடித்து விடுவாய் போலும்//
நல்லாத்தான் இருக்கு.
இரண்டாம் கழிதைய முழுமையா எண்ணால ரசிக்கமுடியல. கோபம்தான் வந்துச்சு. மொக்கைக்காக எழுதியிருந்தாலும் எனது கண்டனங்கள்.

செல்வா said...

//யோவ் என்னய்யா இது...

இதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்...
எல்லாம் ப.மு.க இளைஞர் அணி தலைவர் பதிவில இருக்கிற ஆணவம்..//
எனக்கு நமது ப.மு.க சார்பாக மொக்கயரசர் காலத்தில் சிறந்து விளங்கிய " மொக்கை வளர்ப்பு சங்கம் என்கிற அமைப்பினை ஏற்படுத்தி அதில் ஏதேனும் பதவியை தருமாறு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

ஜீவன்பென்னி said...

செல்வா இதப்படிச்சுட்டு வந்தக்கோபத்துலதான் இன்னைக்கு பதிவே போட்டிருக்கேன்.

Jey said...

எழுதி... கிழிச்சிருகீக...( எப்படி எப்படியெல்லாம் டார்ச்சர் பன்றானுக...)

மங்குனி அமைச்சர் said...

இந்த முதலைக்கு காத்து கேட்குதான்னு எப்படி டெஸ்ட் பண்றது ?

வால்பையன் said...

//இந்த மசுர கட்டி மலைய இழுப்போம் , வந்தா மலை போனா மயிர் அப்படிங்கறாங்களே அப்படி போனா அந்த மயிர் எங்க போகும் ...?//


தலையை விட்டு போகும்!
போன பிறகு எங்கே போனா என்ன!?

ஜில்தண்ணி said...

கழித கண்ட மேனிக்கு ஓதக்கிது போ...

யோவ் இப்டியெல்லாமா யோசிப்ப...இதுக்கு ஏலக்கிய நோபல் கொடுக்குறது சரி தான்

அடிச்சி நவுத்து..

ஜில்தண்ணி said...

@செல்வகுமார்

//மொக்கை வளர்ப்பு சங்கம் என்கிற அமைப்பினை ஏற்படுத்தி அதில் ஏதேனும் பதவியை தருமாறு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. //

தலைவர் பதவிக்கே உம்மை பரிந்துரைக்கிறேன் :)

பெசொவி said...

//அப்புறம் உங்களோட முகத்துகிட்ட கொண்டுவந்து " எனக்கு ஒரு முத்தம் கொடு " அப்படின்னு சொல்லுங்க .. அதுக்கு காது இருந்த முத்தம் கொடுக்கும் .. அப்ப கண்டுபிடிச்சிடலாம் ..!!//

அப்படியே பாம்புக்கு தமிழ் தெரியுங்கறதையும் கண்டுபிடிச்சுடலாம்!