Friday, June 18, 2010

டிப்ஸ்

சும்மா டிப்ஸ் தரலாம்னு ..

*.கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வராம இருக்க :
 கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வரும்போது "குய்"னு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடி ஒழிஞ்சிக்குங்க. அது பயந்து ஓடிடும் ..!

*.பேலன்சே இல்லாம பேச :
நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்குறீங்களோ அவுங்க வீட்டுக்கு போய்டுங்க . இப்ப அவுங்க கூட எவ்ளோ நேரம் பேசினாலும் உங்க பேலன்சே குறையாது..!

*.கொசுவை சூதானமாக கொல்லுதல் :
தினமும் ஒரு கப் விஷம் சாப்பிடுங்க . உங்களை கடிக்கிற கொசு என்ன பாம்பு கூட செத்திடும்.

*.2 வீலர் லைசென்ஸ் வச்சு 4 வீலர் ட்டணுமா :
ஒரு கார் எடுத்துட்டு அதோட பின்னாடி வீல கழட்டிடுங்க . அதுக்கு பதிலா மாட்டு வண்டியோட 2 சக்கரத்த மாட்டிருங்க. இப்ப நீங்க 2 வீலர் லைசென்ச வச்சு 4 வீலர் ஓட்டலாம்  .  ஏன்னா மாட்டு வண்டி ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லைல..!

*.எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் வராம தடுத்தல் :
ஒரு ஏறும்ப கொலை செஞ்சு அந்த எறும்போட உடம்ப ஒரு கயித்துல கட்டி சர்க்கார டப்பாவுக்கு மேல தொங்க விட்டுருங்க. அதோட கால்ல " சர்க்கார டப்பாவுக்குள்ள வந்தா இப்படிதான் ஆகும்னு " ஒரு அட்டைல எழுதி தொங்க விட்டுருங்க. அத பாக்குற மற்ற எறும்புகள் பயந்திடும்..!

*. கலப்படப் பாலில் உள்ள தண்ணீரையும் பாலையும் தனியாக பிரித்தல் :
 கலப்பட பால்ல இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தி அந்த கலவைய மாதத்துக்கு வச்சிடுங்க . மாடு அதைய குடிச்சிட்டு சுத்தமான பால மட்டும் கொடுக்கும் ..!

*.கனவினை பதிவு செய்தல் :
உங்க பெட் ரூமுக்கு ஒரு வீடியோகிராபர கூட்டிட்டு போங்க. அப்புறம் நீங்க தூங்கிடுங்க. கனவு வந்தா உடனே எழுந்தரிச்சு ஸ்டார்ட் கேமரா அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்து தூங்கிடுங்க. உங்க கனவ அவர் பதிவு செஞ்சிடுவார்.!

*.புகை வராமல் சிகரட் குடித்தல் :
ஒரு பாகெட் சிகரட் வாங்கிக்கிங்க. அதைய அப்படியே ஒரு மிக்சில போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஜூஸ் மாதிரி பண்ணிடுங்க. இப்ப அதைய எடுத்து அப்படியே குடிசின்கன்னா புகை வராது ..!

(எனக்கு எதாவது டிப்ஸ் கொடுக்கணும்னு நினைச்சா பின்னூட்டத்துல கொடுங்க ..!)

18 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//*.கொசுவை சூதானமாக கொல்லுதல் :
தினமும் ஒரு கப் விஷம் சாப்பிடுங்க . உங்களை கடிக்கிற கொசு என்ன பாம்பு கூட செத்திடும்.
//

நீ டெய்லி சாப்புடுரியா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

*.புகை வராமல் சிகரட் குடித்தல் :
ஒரு பாகெட் சிகரட் வாங்கிக்கிங்க. அதைய அப்படியே ஒரு மிக்சில போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஜூஸ் மாதிரி பண்ணிடுங்க. இப்ப அதைய எடுத்து அப்படியே குடிசின்கன்னா புகை வராது ..!
////////

:-)

http://rkguru.blogspot.com/ said...

super பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

சௌந்தர் said...

எல்லாமே சூப்பர் கலக்கல்

வால்பையன் said...

//கரப்பான் பூச்சி உங்க வீட்டுக்குள்ள வரும்போது "குய்"னு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடி ஒழிஞ்சிக்குங்க. அது பயந்து ஓடிடும் ..!//


அது உய்ய்ய்ய்ய்ன்னு சவுண்டு விட்டுகிட்டே என்னை தொரத்துது!

வால்பையன் said...

//நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்குறீங்களோ அவுங்க வீட்டுக்கு போய்டுங்க . இப்ப அவுங்க கூட எவ்ளோ நேரம் பேசினாலும் உங்க பேலன்சே குறையாது..!//

ரொம்ப தூரம் நடந்து கால் பேலன்ஸ் இல்லாம போச்சே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//கொசுவை சூதானமாக கொல்லுதல் :
தினமும் ஒரு கப் விஷம் சாப்பிடுங்க . உங்களை கடிக்கிற கொசு என்ன பாம்பு கூட செத்திடும்.//

நீங்க டெமோ காட்டுங்க தல!

வால்பையன் said...

//மாட்டு வண்டி ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லைல..!//


ஓட்டுறது மாடு அதுனால தேவையில்ல, நாம என்ன மாடா!?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

தயவு செஞ்சி சீக்கிரமா ரேடியோ ஜாக்கி ஆய்டு மகராசா....!

வால்பையன் said...

//எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் வராம தடுத்தல் :
ஒரு ஏறும்ப கொலை செஞ்சு அந்த எறும்போட உடம்ப ஒரு கயித்துல கட்டி சர்க்கார டப்பாவுக்கு மேல தொங்க விட்டுருங்க. அதோட கால்ல " சர்க்கார டப்பாவுக்குள்ள வந்தா இப்படிதான் ஆகும்னு " ஒரு அட்டைல எழுதி தொங்க விட்டுருங்க. அத பாக்குற மற்ற எறும்புகள் பயந்திடும்..!//



ஏன் அவ்வளவு கஷ்டம், சக்கரை டப்பா மேல உப்புன்னு எழுதி ஒட்டி வச்சிட்டா எறும்பு பார்த்துட்டு ஏமாந்துருமே!

அகல்விளக்கு said...

//ஏன் அவ்வளவு கஷ்டம், சக்கரை டப்பா மேல உப்புன்னு எழுதி ஒட்டி வச்சிட்டா எறும்பு பார்த்துட்டு ஏமாந்துருமே! //

'தல'யை வழிமொழிகிறேன்...

Riyas said...

ha..ha...hi...hiiiii...

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

எனக்கு சிப்பே வரலை என்ன செய்யட்டும் :-)
(சும்னாகாச்சும்)

சிக்கிரமே ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

இன்னைக்கு யாரு முகத்தில் முழித்தேனு தெரியல.... எனக்கு நேரம் சரிஇல்லன்னு எங்க அம்மா சொன்னாங்க நான் கேட்கல ....எனக்கு வேணும் ...எனக்கு இன்னமும் வேணும்.... போதும்பா ....போதும்....முடியலை....என்னால முடியல.... இன்னும் எத்தனை பேரு இதை படிக்கபோரங்கனு தெரியலை...... இருந்தாலும்.. சூப்பர் சூப்பர் சூப்பர்......நண்பரே....

Unknown said...

மூக்கு விடைப்பா இருந்தா இப்படித்தான் டிப்ஸ் வரும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Super Sir.

அன்புடன் மலிக்கா said...

சிரிப்பே வரலைங்கன்னு நான் சொல்லலையே!

யாரங்கே!!!!!!!! இப்படி சிரிக்கவச்சு
நம்மை சூதானமாக கொல்ல ஐடியா செய்திருக்கும் இவாளுக்கு
தினமும் இரு கப் விஷம் கொடுங்க..

MANO நாஞ்சில் மனோ said...

பதிவுலகம் நாசமா போச்சு போ.....:]]